Contact us at: sooddram@gmail.com

 

தமிழராய்ப் பிறந்ததே குற்றமா? தப்பவே முடியாதா?

(மறவன்புலவு சச்சிதானந்தன்)

152 அகதிகள் கொல்லம் கடற்கரையிலிருந்து புறப்பட்டனர். புறப்படுகையில், கேரள அரசின் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. ஈழத்து அகதிகளுக்கு இந்தியாவில் வாழ்வுரிமை இல்லை. மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற முகாம்களுள் 30 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறார்கள். அல்லது தடுப்பு முகாம்களுள் கேட்பாரின்றி வாடுகிறார்கள். ஏறத்தாழ 70 ஆயிரம் அகதிகள், 112 முகாம்கள், 200 சதுர அடிக் கூடுகளுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாழ்க்கை. இவர்களைத் தவிர தடுப்பு முகாம்களில் தனிமையில் வாடுவோர் நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள். ஓராண்டு அன்று ஈராண்டுகள் அல்ல, பல ஆண்டுகள் வழக்கு எதுவும் இல்லாமல், உணவு, உறையுள் மட்டுமே கிடைக்கின்ற வாழ்க்கை. இவ்வாறு எவ்வளவு காலம் தொடர்வது? ஏன் பிறந்தோம்? ஏன் வளர்ந்தோம்? என்ன வாழ்க்கை இது? தமிழராய்ப் பிறந்ததே இழிவா? அகதிகள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுவன இவ்வினாக்கள். இத்தகைய துயரத்துள் மாழும் எவருக்கும் இத்தகைய ஏக்கம் எழுவது இயற்கை.

அரசியல் பேச முடியாது, தொழிலுக்குப் போக முடியாது, உயர்கல்விக்கு இருந்த ஒதுக்கீடுகளும் பறிக்கப்பட்டன. எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாது. வேறு என்ன செய்யலாம் என்ற வினா எழும்போது, தப்பியோடுவதைத் தவிர வேறு வழி?

1983லிருந்து தமிழகத்தைத் தளமாகக் கொண்டு, மனிதக் கடத்தல் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு ஐரோப்பாவில், வட அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில், புகலிடம் தேடியோருள் 30-40 விழுக்காட்டினர் வரை தமிழகத்தைத் தளமாகக் கொண்டு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அகதிகளே.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மேற்கே கிறிஸ்துமஸ் தீவில் ஐந்து படகுகள் கரை ஒதுங்கின. அனைத்திலும் புகலிடம் தேடி வந்த ஈழத்தமிழர்கள்.

சில வாரங்களுக்கு முன்பு, காக்கிநாடாக் கரையோரத்தில் இருந்து ஒரு படகு ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள். புறப்பட்ட யாவரையும் ஆந்திரக் காவல்துறை கைது செய்தது.

இலங்கையில் நீர்கொழும்பு, அம்பாந்தோட்டை, கல்முனை ஆகிய கரையோரங்களில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பெரும் படகுகளில் ஈழத்தமிழர் புறப்பட்டுச் செல்கையில் இலங்கை அரசு அவர்களைக் கைது செய்கிறது.

ந்தக் கைதுகளை மீறி, மாதந்தோறும் 8 அல்லது 10 படகுகளில் ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவைச் சென்றடைகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் ஒன்றில் 400க்கும் அதிகமான ஈழத்தமிழர் கனடாவின் மேற்குக் கரையோரமான வான்கூவரைச் சென்றடைந்தனர்.

இத்தகைய அகதிப் படகுகள் பல, வளர்ச்சியடைந்த நாடுகளின் கரைகளை அடைகின்றன. சில படகுகள் புறப்படும் போதே கைதாகின்றன. சில படகுகள் வழியிலேயே கவிழ்வதால் ஈழத்தமிழருக்குக் கடலே சமாதியாகின்றது.

காலத்தின் கோலம் இது. தமிழனாகப் பிறந்ததற்காக வெட்கப்படுகின்ற காலம் இது. தமிழ்நாட்டை விட்டு ஓடிவிட வேண்டும், இலங்கையைவிட்டு ஓடிவிட வேண்டும் என ஈழத்தமிழருள் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் மட்டும் படகுகளில் ஏறுகிறார்கள்.

விமானங்களில் சென்றவர்களுள் சிலர் ஆப்பிரிக்க நாடுகளின் விமான நிலையங்களிலும் அங்குள்ள சிறைகளிலும் இருக்கிறார்கள். விமானங்களில் செல்பவர்களுள் 10 விழுக்காட்டினர் சிறைகளில் இருக்கிறார்கள். 90 விழுக்காட்டினர் புகலிடம் தேடும் நாட்டைச் சென்றடைந்து விடுகிறார்கள்.

கடலில் மூழ்கிச் சாவோம், வழியில் சிறைகளில் அடைக்கப்படுவோம் என்று தெரிந்தபின்புதான் இவர்கள் விமானங்களிலும், படகுகளிலும் ஏறுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையம், இவ்வாறு புகலிடம் தேடுவோரின் புள்ளிவிவரங்களைத் தொகுக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் தேடுவோரின் மொத்த எண்ணிக்கையுள் ஈழத்தமிழர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் எட்டாவது இடத்திலாம்!

ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்காள தேசம், மாலை தீவு ஆகிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த புகலிடம் தேடும் மக்களின் எண்ணிக்கையைவிட, பல மடங்கு எண்ணிக்கையாக ஈழத்தமிழர்களே இருக்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம், இலங்கை அரசின் தொடர்ச்சியான தமிழின ஒழிப்புக் கொள்கை.

இந்திய நடுவண் அரசும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க முயலுவதில்லை. தமிழகத்தின் குரல் தில்லியில் கேட்பதில்லை. தில்லியில் காதைச் செவிடாக்கிக் கொள்கிறார்கள், கண்களைக் குருடாக்கிக் கொள்கிறார்கள், வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளாக வாழ்வுரிமை இல்லாமல், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, தொடர்ச்சியாக முள்வேலிக்குள், முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதை விட, உயிர் போனாலும் பரவாயில்லை, சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை, கொடுமைகளை விட்டு வெளியேறுவோம் என ஈழத்தமிழ் அகதிகள் எண்ணுவது வியப்பன்று.

இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்குக் கொடுக்கப்படும் வசதிகளை ஈழத்தமிழ் அகதிகள் அறியாதவர்கள் அல்ல. நாடுகடந்த அரசு ஒன்றை அமைத்துக் கொண்டு, ஒவ்வொரு அகதிக்கும் பயண ஆவணத்தைக் கொடுத்து, இந்திய அரசின் துணையோடு திபெத்தியர்களின் நலன்களைப் பேணுகின்றார் தலாய்லாமா.

ஆப்கானிஸ்தான் அகதிகள் இந்தியாவிற்குள் வந்த உடனேயே தில்லியில் மையம் கொண்டுள்ள ஐநாவின் அகதிகள் ஆணைய அலுவலகம் அவர்களுக்கு, மாதத் தொகை கொடுக்கிறது, பயண ஆவணம் கொடுக்கிறது. சுதந்திரமாக நடமாட, இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்கிறது. வேற்று நாடுகளில் புகலிடம் தேடிக்கொடுக்கிறது.

வங்காள தேசத்திலிருந்து ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு இலட்சம் வங்காள அகதிகள் அசாமுக்குள் புகுந்தனர். பல மாவட்டங்களில் மக்கள் தொகுப்பு விகிதாச்சாரத்தை மாற்றினர். இந்தியக் குடியுரிமையும், வாக்குரிமையும் பெற்றனர். இத்தகைய வாழ்வுக்கு இந்திய அரசு துணை போகிறது. அசாமியர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, அவர்களை வாக்கு வங்கிகளாக அரசியல் கட்சிகள் பார்க்கின்றன.

ஐநா அகதிகள் ஆணையம் விதித்தவற்றை ஏற்றுக் கொண்டு, வளர்ச்சியடைந்த ஐரோப்பிய, வட அமெரிக்க, பசிபிக் நாடுகள் புகலிடம் தேடி வந்த மூன்றாண்டுகளுக்குள் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குகிறது.

மாநகராட்சி உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்தந்த நாடுகளில் ஈழ அகதிகள் அரசியல் உரிமை பெற்றிருக்கிறார்கள். தாம் விரும்பிய தொழிலைத் தேடுகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி வாய்ப்பைத் தடையின்றி வழங்குகிறார்கள். எங்கு விரும்பினாலும் பயணிக்கிறார்கள். வறுமை நீங்கிய வாழ்வு வாழ்வது மட்டுமல்ல, ஈழத்திலும் தமிழகத்திலும் வாழும் சொந்த பந்தங்களுக்குப் பொருளாதார உதவியும் வழங்குகிறார்கள்.

இலங்கையில் இன ஒழிப்பு, இந்தியாவில் மனித உரிமை மறுப்பு, உயர்கல்வி ஒதுக்கீடு பறிப்பு, வாழ்வுரிமை ஒழிப்பு, வறுமைக்கோட்டின் கீழுள்ள வாழ்வாதார வழங்கல், வாடகைக்கு வீடு கொடுத்தாலே வீட்டு உரிமையாளருக்குக் காவல்துறை உறுத்தல், தொழில் கொடுத்தால் தொழிலதிபருக்கு உறுத்தல் என்பதால் ஈழத்தமிழருக்கு வாடகைக்கு வீடு கொடுக்கவோ தொழில் கொடுக்கவோ மறுக்கும் தமிழகம், அரசியல் உரிமை அற்ற 30 ஆண்டுகாலத் தொடர்ச்சி, என்ன செய்வார்கள்? உயிரைப் பணயம் வைத்து, வாழ்கின்ற எஞ்சிய ஒவ்வொரு நாளும் மனிதர்களாக வாழ ஆசைப்படுகின்றவர்கள் படகுகளில் ஏறுகிறார்கள்.

அவர்களைத் தடுப்பது மனித நேயமன்று.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com