Contact us at: sooddram@gmail.com

 

சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் தடுப்பதில் மிகுந்த அவதானம் அவசியம்

சிறுநீரக நோய் தற்போது பாரிய பிரச்சினையாக பரிமாணமடைந்துள்ளது. இந்நோய் நாட்டில் தற்போது மிகவும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வட மத்திய மாகாணத்தில் காணப்பட்ட இந்நோய் தற்போது ஊவா, கிழக்கு, வடக்கு, தெற்கு மாகாணங்களிலும் பரவியுள்ளது. 8000க்கும் மேற்பட்டோருக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளிக் கப்படுகிறது. இந்நோய் ஐந்து நிலைகளில் காணப்படும். எனினும் முற்றிய மற்றும் குணப்படுத்த முடியாத கடுமையான நான்காம் ஐந்தாம் நிலைகளிலேயே அதிகமான சிறுநீரக நோயாளர்கள் இனம் காணப்படு கின்றனர். சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஐம்பது சதவீதமானது சிறுநீரக நோய் சிகிச்சைக்காகச் செலவிடப் படுகிறது. இந்நோய் காரணமாக இலங்கையில் தினமும் சராசரி ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறது.

அனுராதபுரம், பொலநறுவை, மதவாச்சி போன்ற பிரதேசங்களில் மட்டும் ஏராளமானோர் நிரந்தர சிறுநீரக செயல் இழப்புக் காரணமாக கடந்த சில வருடங்களில் இறந்துள்ளனர். மேலும் நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வதாகவும் சுகாதாரப் பணிப்பாளரின் அறிக்கை மூலம் அறியக்கிடைக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு தோறும் உலக சிறுநீரக தினம் பங்குனி மாதம் 8ம் திகதி அனுஷ் டிக்கப்படுகிறது. சிறுநீரக நோய் மிக வேகமாக அதிகரிப்பதற்குக் காரணம் இந்நோய் பற்றிய போதிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடையே காணப்படாமை ஆகும். சிறுநீரக நோய் தடுக்கக் கூடிய தொன்றாகும். சிறுநீரகம், அதன் செயற்பாடு, அதன் செயற்பாட்டைப் பாதிக்கும் காரணிகள், சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகள் தாமதியாது சிகிச்சை பெறல் போன்றவற்றை அறிவுறுத்தி மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல் மிகவும் அவசியமாகும்.

சிறுநீரகம் உடலின் மிகவும் முக்கிய உறுப்பாகும். அவரை விதை வடிவைக் கொண்ட நமது கைபிடி அளவிலான இரண்டு சிறுநீரகங்கள் முதுகுத் தண்டின் இரு பக்கங்களிலும் வயிற்றின் மேல் பகுதியில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நான்கு அங்குல நீளமும் இரண்டரை அங்குல அகலமும் ஒன்றரை அங்குலப் பருமனும் கொண்ட வையாகும். இவை உடலின் பல செயற்பாடுகளை மேற்கொண்டு உடலின் ஆரோக்கியத்தைப் பேணு கின்றன. இவை பாரிய கழிவு அகற் றும் தொழிற்சாலை போன்று செயற் பட்டு உடலில் ஏற்படும் கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அகற்றி உடல் ஆரோக்கியத்தைப் பேணும் பாரிய பணியை ஆற்றுகின்றன.

இரத்தம் தூய்மையாகவும் இரசாயனங்கள், திரவங்கள் சமநிலையிலும் இருக்க சிறுநீரகம் அரும் பாடுபடுகிறது. தினமும் இரு சிறுநீரகங்களும் இரு நூறு குவார்ட் இரத்தத்தை வடிகட்டி சுமார் இரண்டு கழிவுப் பொருட்க ளையும் தேவைக்கு அதிகமான நீரையும் சேகரிக்கின்றன. இவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்தினுள்ளும் சுமார் ஒரு மில்லியன் நுண்ணிய வடிகட்டிகள் (Nephrons) உள்ளன. இவ்வாறு சிறு நீரகம் கழிவுப் பொருட்களை அகற் றாவிடில் கழிவுகள் இரத்தத்தில் தேங்கி உடலுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், சிறுநீரகம் இரத்தத்தில் சோடியம், பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்ற இரசாயனங்களின் சமநிலை யைப் பேணவும் உதவும். சிறுநீரகத்தால் சுரக்கப்படும் ரெனின் என்ற பதார்த்தம் குருதி அழுத்தம் எப்போதும் கட்டுப் பாட்டில் இருக்க உதவும். சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் இரித்திரோபோயிடின் என்ற பொருள் சிவப்பு குருதி அணுக்க ளின் உற்பத்தியை ஊக்குவிக்கும். எலும்பின் ஆரோக்கியத்திற்குத் தேவை யான திறன்மிக்க விற்றமின் டீயையும் சிறுநீரகம் உற்பத்தியாக்குகிறது. இவ் வாறு உழைக்கும் சிறுநீரகங்கள் பற் றிய அறிவை மக்களிடையே ஏற்ப டுத்தினால் அவர்கள் அவற்றைப் பேணிப்பது காப்பார்கள்.

நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் அதிகரித்த உடற்பருமன் அறுபதுக்கு மேற்பட்ட வயது, பரம்பரை, புகை பிடித்தல், இருதயநோய், பக்கவாதம், எயிட்ஸ் போன்றவை சிறுநீரகத்தின் செயற்பாட்டைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும். நீண்ட கால மருந்துகள் பாவனை மற்றும் வலி நிவாரணிகள் நஞ்சு அடங்கிய உணவுகள், சிறுநீரகத்தில் பலமான அடிவிழுதல் போன்றவையும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரகக் குழாயில் கல் அடைத்தல், தொற்று நோய்களின் தாக்கம், புரஸ்பேட் சுரப்பியில் வீக்கம், உலோ கம், விவசாய இரசாயனப் பூச்சிக் கொல்லிகள், பசளைகள் போன்றன காரணமாகவும் சிறுநீரகத்தில் நோய் ஏற்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கை யில் சிறுநீரக செயலிழப்பு அதிகரித் துள்ளமைக்கான காரணி இனம் காணப்பட்டது. சிறுநீரகச் செயலிழப்பு காணப்படும் பிரதேசத்தில் உள்ள சுகதேகிகளின் சிறுநீர்ப் பரிசோதனையில் நச்சுப் பொருளான ஆசனிக் கலந்திருப்பது காணப்பட்டது. விவசாய நடவடிக்கை களில் ஈடுபடுவோர் இரசாணப் பூச்சிக் கொல்லிகள் மற்றும் பசளையை உற்பத்தியைப் பெருக்கப் பாவிக்கப்படு கின்றன. இவற்றில் ஆசனிக் என்ற இரசாயனமும் அடங்கியுள்ளது. அனும திக்கப்பட்ட அளவைக் கொண்ட ஆசனிக்கால் கேடுவிளைவதில்லை. மேலும் இவற்றில் கட்மியம், ஈயம் போன்ற உலோகங்களும் ஏனைய இரசாயனங்களும் அடங்கியுள்ளன. இல ங்கையில் சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆசனிக்கே முக்கிய காரணமாக இரு ப்பது தெரியவந்துள்ளது. எனினும் கட்மி யம், ஈயம், இரசாயனங்கள் போன்ற வையும் சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாகவுள்ளன.

விவசாயிகள் பாவிக்கும் மேற்படி பூச்சிக்கொல்லிகள் மற்றும் பசளையில் அடங்கியுள்ள நச்சுத்தன்மை கொண்ட ஆசனிக் நிலத்தடி நீரில் கலந்து கிண ற்று நீரை மாசுபடுத்துகிறது. இந்நீரைப் பருகுவோர் சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் நாட்டில் தொற்றாநோய்கள் அதிகரித்துள்ளமைக்கும் ஆசனிக் முதன்மைக் காரணி என்றும் தெரியவந்துள்ளது.

மேற்படி பூச்சிக் கொல்லி மற்றும் பசளை இறக்குமதி செய்து விநியோ கிப்போரிடையே வியாபாரத்தைப் பெருக்கப் பலத்த போட்டி இடம்பெறு கிறது. இதற்காக இவர்கள் அளவுக்கு அதிகமாக ஆசனிக்கைக் கலந்து அவர்களின் பொருட்களின் வீரியத்தை அதிகரிக்கின்றனர். சிறுநீரகச் செயலிழப்பு என்பது தற்காலிக செயலிழப்பு, நாள்பட்ட நிரந்தரமான செயலிழப்பு என இரண்டு வகைப்படும். சிறுநீர் பிரிதல் திடீரென நிற்றல், வழமைக்கு மாறான குறைந்த அளவிலான சிறுநீர், திடீரென இரத்த வாந்தி, சிறுநீரில் இரத்தம், இடைவிடா விக்கல், உடம்பு பெருத்தல் போன்றவை தற்காலிக சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகளாகும்.

இவற்றை இனம் கண்டு உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொண்டால் நிரந்தரமான செயலிழப்பைத் தடுக்க முடியும். வெளிறிய முகம், சிறுநீரின் அளவு குறைதல், முகம் வயிறு, கை கால் போன்றவற்றில் வீக்கம், இருதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு, படபடப்பு, நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கண் கீழ் இமையில் வீக்கம், முதுகுவலி, கோப்பி நிறமான சிறுநீர், சோம்பல், அசதி, வாந்தி, குடற்புண், இரத்தச்சோகை, வாய்வுத் தொல்லை, அஜீரணம், குறைந்த அல்லது உயர் குருதி அழுத்தம், கண் பார்வை மங்குதல், தோல் வியாதி, பகலில் தூக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாமை, பக்கவாதம், உடல்வலி, இடுப்புவலி, நரம்பு வியாதி போன்றவை நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகளாகும்.

சிறுநீரகம் செயலிழந்தால் எல்லா உறுப்புக்களும் பாதிக்கப்படும். ஆகவே உடனடியாகத் தகுந்த விசேட வைத்திய நிபுணரின் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதனால் நோய் முற்றிய நிலையை அடைந்து இயந்திரத்தின் மூலம் இரத்தத்தைச் சுத்திகரித்தல் மற்றும் சத்திர சிகிச்சை மூலம் சிறுநீரக மாற்றம் செய்தல் போன்றவற்றைத் தடுக்கலாம் அல்லது பின்போடலாம்.

சிறுநீரகம் செயலிழந்த நோயாளர்கள் மிகக் குறைந்த புரதம், உப்பு, கொழுப்பு அடங்கிய உணவுகளையே உட்கொள்ளல் மிக அவசியம். பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழம், இளநீர், யானைக்கொய்யா, உலர் பழவர்க்கங் கள், புளிப்பு அதிகம் அடங்கிய தோடம்பழம், எலுமிச்சை பசளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உயர் குருதி அழுத்தம் உயர் கொலஸ்ரோல், நீரிழிவு, இரத்தசோகை போன்ற நோய்களுக்குத் தகுந்த சிகிச்சை மேற்கொண்டு அவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுப் பெருந்தொகை பணம் விரயம் செய்து சிகிச்சை அளிப்பதை விடுத்து இந்நோய் தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com