Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்தில் ஒரு ஈழத்தமிழர் புராதன அருங்காட்சி சாலை

யாழ்ப்பாண உலாத்தலில் எமது நூதனசாலைக்கும் ஒரு எட்டுப் போய் அங்கேயிருக்கும் அரும்பொருட்களைக் காண்பதோடு கமராவில் அள்ளிவரலாம் என்ற நோக்கில் ஒரு நாட்காலை நல்லூர் நோக்கிப் பயணப்பட்டேன். நல்லூரில் நாவலர் றோட்டில் இந்த நூதனசாலை இருக்கு என்பது மட்டும் தெளிவாகத் தெரியும். ஏனென்றால் முன்பும் ஒரு தடவை இந்த இடத்துக்கு வந்திருக்கின்றேன். ஆனால் பலவருஷங்கள் கழிந்த நிலையில் நாவலர் றோட்டின் தார் வீதியைத் தவிர எல்லாம் மாறியிருக்கும் நிலையில் என் பஞ்சகல்யாணி லுமாலா சைக்கிள் தன் பாட்டில் பயணிக்க நானோ வீதியின் இருமருங்கையும் கண்களால் அளந்தேன். இப்படியே நல்லூர் தாண்டி ,ே.கே.எஸ் வீதி யாழ்ப்பாண முகப்பு வரைக்கும் நாவலர் வீதி வந்து விட்டது ஆனால் நூதனசாலை தான் என் கண்ணில் படவில்லை. இடையில் எங்கோ என் கண்களில் இருந்து விலகிவிட்டது போல. மீண்டும் றோட்டின் மறு அந்தத்தில் இருந்து நல்லூர் நோக்கிய நாவலர் றோட்டை நோக்கி மெல்ல நடை பழகியது லுமாலா சைக்கிள்.

வழியில் பருத்திப்புடவையோடு வயதான அம்மா, எட்டி என் சைக்கிளை அவருக்கு முன்னால் கொண்டுபோய்

"அம்மா!
நூதனசாலை எந்தப்பக்கம் தெரியுமோ"
"என்ன மேனை அது?"
"மியூசியம் அம்மா மியூசியம்"
"எனக்குத் தெரியாது மேனை" கையை விரிச்சுக் கொண்டே தன் நடையைக் கட்டினார் அவர்.


கால்களுக்கு குழாய்க்காற்சட்டை அணிந்த இன்னொரு நாற்பதுகளின் ஒருவர் தன் வீட்டுக்கு முன்னால் நின்றார்.

"அண்ணை! இந்த நூதனசாலை, மியூசியம் இந்த றோட்டில தானாம் தெரியுமோ"
"எனக்குத் தெரியாது தம்பி நாங்கள் இடம்பெயர்ந்த சனம் இந்த ஊர் அவ்வளவு விளப்பமில்லை"

இனி நானே ஒரு கை பார்த்து விடுவோம் என்று வீதியின் வலப்பக்கமாகக் கண்களை வைத்துக் கொண்டு பயணித்தேன். ஆகா அதோ வந்து விட்டது நாவலர் கலாச்சார மண்டபம், இந்தக் கலாச்சார மண்டபத்துக்குப் பின்னால் தானே அந்த நூதனசாலை என் தலைக்கு மேலாய் கொசுவர்த்திச் சுருளாய் இந்த இடத்திற்கு வந்த பழைய நினைவுகள் துளிர்க்க உள்ளே போகிறேன்.

இந்த நாவலர் மணிமண்டபத்திற்கு நான் கடைசியாக வந்தது 90 ஆம் ஆண்டு. அப்போது எங்கள் லைப்ரரி சேர் தனபாலசிங்கம் தான் என்னை இழுத்து வந்தார். அந்த நாள், தமிழகத்தின் சுபமங்களா ஆசிரியராக இருந்த எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன் ஈழத்துக்கு வந்து இந்த மண்டபத்தில் தான் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார். நாவலர் மண்டபமே முட்டி வழிஞ்சது அப்போது. கோமலின் பேச்சு முடிந்ததும் கேள்வி நேரம். கோமலை பலரும் கேள்வி கேட்க மேடையில் ஏறுகின்றார்கள்.

மேடைக்குப் நின்ற லைப்ரரி சேர் மறுகரையில் நின்ற என்னைக் கண்டு
"ஏறும் ஏறும்" என்று கண்களாலேயே ஜாடை சொல்லி என்னை மேடைக்கு அனுப்புகின்றார்.


ஏதோ ஒரு துணிவில் மேடையில் ஏறி கோமலைக் கேட்கின்றேன். "திரைப்படங்கள் சமூக நாடகங்களுக்கு சாபக்கேடு என்றீர்கள், நீங்கள் கூட "ஒரு இந்தியக் கனவு", "தண்ணீர் தண்ணீர்" கதாசிரியர், நீங்கள் எதிர்பார்க்கும் சினிமாவை நீங்களே தொடர்ந்து செய்யலாமே" என்று ஏதோ ஒரு வேகத்தில் மேடையில் ஏறிய நான் கேட்கின்றேன். அவரின் பதிலோடு மேடையில் இருந்து இறங்கிய என்னைத் தட்டிக் கொடுக்கின்றார் லைப்ரரி சேர். அந்த நினைவுகள் மீண்டும் கிளறுப்பட்டுத் தணிய என் சைக்கிளை இளைப்பாற்ற ஒரு மர நிழலில் நிறுத்தி விட்டு நாவலர் மணி மண்டபத்துக்குப் பின்னால் போகின்றேன். அங்கே தானே இருக்கு எமது நூதனசாலை.

எத்தனை எத்தனை வீரபுருஷர்கள் மாமன்னர்களாய் ஆண்ட தேசம் இந்த யாழ்ப்பாண இராச்சியம். அந்த அரசாட்சிகளின் சுவடுகளைக் காவல்காக்கும் கலா நிலையமான நூதனசாலையின் கோலத்தைப் பாருங்கள். சாயமிழந்த நூற்சேலை பிச்சைக்காரியின் உடலை மறைப்பது போல ஒரு கட்டிடம். அதுவும் நாவலர் மணிமண்டபத்துக்குப் பின்புறமாக, கழிப்பறை போல ஏனோ தானோவென்ற அங்கீகாரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை என்ற கல்விப்பீடம் மூலம் அறிஞர்கள் பலரை உருவாக்கி அங்கீகரிக்கக் காரணமாகவும் இருந்த இந்தக் கலைக்களஞ்சியங்கள் கடைசிக்காலத்தில் தம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் போல இருக்கும் நூதனசாலை இல்லையில்லை நூதனமான அறை இதுதான். உள்ளே போகிறேன்.

அங்கே இரண்டு பெண்களும் ஒரு வயதானவரும் மேசை போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நுழைவுக் கட்டணம் ஏதாவது கட்டிப் போவதுதானே எல்லா நூதனசாலைகளிலும் வழக்கம் என்ற எண்ணத்தில் கேட்கிறேன்,
"கட்டணம் எவ்வளவு"
"அப்படி எதுவும் ஒன்றுமில்லை, உள்ளே போய் வடிவாப் பாருங்கோ" சிரித்தவாறே ஒரு பெண் சொல்கிறார்.

உள்ளே ஏற்கனவே வந்து குழுமிய தென்னிலங்கை சிங்களவர்கள் ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டியாகப் பார்த்துத் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டே போகின்றார்கள். ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டிகளிலும் ஏனோ தானோவென்று உட்கார்ந்திருக்கின்றன பண்டையகாலத்தில் மவுசுடன் இருந்த செல்வங்கள். பல பெட்டகங்களில் எந்தவிதமான குறிப்புக்களும் இல்லை. இருக்கும் சில பெட்டகங்களில் இருக்கும் குறிப்புக்களும் ஒற்றைவார்த்தையில் இது சங்கு, இது சட்டி என்று சொல்கின்றன். இவையெல்லாம் எப்போது யாரால் எந்தக்காலகட்டத்தில் பயன்ப்படுத்தப்பட்டன என்று எந்தவிதமான தகவல்களும் இல்லை. என்னைச் சுற்றி அந்த அறையில் எந்தத் தமிழரும் பார்வையாளராக வரவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

தாங்களாகவே ஊகித்து ஒவ்வொரு பொருட்களையும் பார்த்துக் கூட வந்தவர்களோடு அவற்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போகிறார்கள் வந்திருக்கும் தென்னிலங்கையர். ஒரு கண்ணாடிப்பெட்டகம் முன்னால் நின்று இந்தப் பொருள் என்னவாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் ஒரு பெண் குரல். ஒரு சிங்களப்பெண்மணி சிங்களத்தில் எனக்கு ஏதோ விளங்கப்படுத்துகிறார் என்பது மட்டும் தெரிகிறது. மதராசப்பட்டணம் படத்தில் வெள்ளைக்காரிக்கு முன்னால் நிற்கும் ஆர்யா போல ஏதோ அவரை ஆமோதித்துச் சமாளிக்கிறேன். நானும் அவர்களைப் போல வந்த ஒரு தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணி என்று நினைத்து விட்டார் போல.

ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டகங்களையும் கமராவில் சிறைப்படுத்திக் கொண்டு மெல்ல நகர்ந்தேன். உள்ளே சுற்றுச் சுற்றி மீளவும் முகப்பு இடத்துக்கு வருகிறேன். மேசையில் இருக்கும் பெண்களும் அந்த வயதானவரும் ஏதோ ஒரு கண்ணாடிப்பெட்டகத்தில் இருக்கும் பொருளுக்குரிய பெயரை எழுத முனைந்து கொண்டிருந்தார்கள். கையில் பேனையும் ஒரு துண்டுப் பேப்பரும்.

சங்கிலியனின் வீரவாள் மழுங்கியது போல நூதனசாலைக்குப் போய் விட்டு வெளியேறும் போது என் மனநிலை. அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளில் ஒரு ஐம்பது வருஷம் பழமையான கல்லைக் கண்டாலே சுற்றவரை கொங்கிறீற் போட்டு இது என்னமாதிரியான கல், இதன் முக்கியத்துவம் என்ன என்னுமளவுக்கு அவர்களது வரலாற்றுச் சுவடுகளைத் தேடிப் பேணிப் பாதுகாக்கின்றார்கள். நமது சமூகமோ நல்ல நிலையில் இருக்கும் கோயிலை இடித்து நான்கு ஐந்து அடுக்குகளைக் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்துவதிலும் இருக்கும் முனைப்பு இப்படியான அரும்பெரும் வரலாற்றுச் சுவடுகளில் காட்டுவதில்லையே. இந்த ஆண்டு நல்லூர்த் திருவிழாவுக்கு பல அடுக்குகள் கொண்ட பக்தர்கள் செருப்பு வைக்கும் பீடங்களை விழுந்தடித்துச் செய்யும் நிலையில் இருக்கும் யாழ் மாநகராட்சி சபை, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்த நூதனசாலையை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு மாற்றலாமே, கூடவே இங்கே இருக்கும் அரும்பொருட்களுக்கு முறையான தெளிவான வரலாற்றுக் குறிப்புக்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கூடப் பொறிக்கலாமே?

ஏதோ காயலான்கடைச் சரக்கு மாதிரி உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரலாற்று எச்சங்களைக் காண தென்னிலங்கை யாத்திரிகர்கள் படையெடுத்து வரும் போது, "இங்கே பாருங்கள் இப்படியெல்லாம் ஆண்ட சமூகம் இது" என்று காட்டக் கூட ஒரு முன்மாதிரியாக இவற்றை முறையாகப் பயன்படுத்தலாமே?

எஞ்சிய எம் வரலாற்று எச்சங்கள் கையேந்துகின்றன இன்றைய அரசியல் அநாதைகளான நம் தமிழரைப் போல.....

(எல்லாளன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com