Contact us at: sooddram@gmail.com

 

தனியார்மயம்

அமெரிக்கா சொல்லும் பாடம்

(கே.வரதராசன்)

அனைத்திற்கும் அருமருந்து தனி யார்மயம்: இந்தியா வல்லரசு ஆக தனியார் மயம், தாராளமயம், உலகமயமே வாய்ப்பு வாசல் என இந்தியாவில் இருக்கும் முத லாளித்துவ கட்சிகளும், ஊடகங்களும் வாய் ஓயாது அலறி வருகின்றன. அதற்கு சாட்சியாக அமெரிக்காவை சுட்டிக்காட்டு கின்றனர். ஆனால் உலகமயம், தாராள மயம், தனியார் மயம் மூலம் நேரடியாக பாதிப்பிற்காளான இந்திய விவசாயிகள், சாதாரண மக்கள் ஆகியோருக்கு அமெ ரிக்கா என்றால் மான்சாண்டோ, வால் மார்ட் நிறுவனங்கள் கண்முன் தோன்றும், பயமுறுத்தும். தனியார் மயம் முழுவீச்சில் செயல்பட்ட பின்னணியில் இன்றைக்கு அமெரிக்க அனுபவம் வெளிச்சம் போட்டுக்காட்டியிருப்பது எது தெரியுமா?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வால் ஸ்டீரீட்டில் பல்லாயிரக் கணக்கானோர் முற்றுகையிட்டு, டென்ட் அடித்துஒரு சதவிகிதம் பேர் சுகபோக வாழ்க்கைக்காக 99 சதவிகிதம் பேர் வாழ்க்கையை இழப்பதா?’’ எனக் கேட்டுப் போராடினர். ஏன் தெரியுமா? அமெரிக்க அரசாங்கம் திவாலான பல வங்கிகளை மீட்டெடுக்க பல பில்லியன் (நூறு கோடி) டாலர்களை அரசு கஜானா விலிருந்து மீட்புப் பணமாக வாரி வழங்கி யுள்ளது. இந்த வங்கிகள் கொள்ளை லாபம் அடிக்கும் பேராசையின் காரணமாக தவறான வங்கி நடவடிக்கைகள் மூலமே திவாலாகின. ஆனால் இந்த கார்ப்பரேட் வங்கி முதலாளிகளை பாதுகாத்த அமெரிக்க அரசு, சமூக நலத்திட்டங்களை வெட்டிச்சுருக்கி அதன்மூலம் பலரை வேலையிழக்கச் செய்தது - அதன் விளைவே வால் ஸ்டீரீட் போராட்டம்.

கல்விக்கூடங்கள், அவசர சேவைப் பிரிவுகள், தண்ணீர், போக்குவரத்து, சுகாதாரம், ஓய்வூதியம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு அரசு உதவி புரிந்த தன் பயனை அடைந்த சாதாரண

மக்கள் தனியார்மயம் வந்த பின்பு அடைந்த பாதிப்பு குறித்து அமெரிக்கா வில் ஒரு நடுநிலை ஸ்தாபனம் நடத்திய ஆய்வில் கண்டறிந்த செய்திகள் பின் வருமாற :

தனியார்மயத்தினால் உருவான செல் வம் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப் படவில்லை. ஆனால் தனியார்மயம் மிகப்பெரிய லாபத்தை புதிய முதலாளி களுக்கு வாரி வழங்கியுள்ளது.

தனியார்மயத்தின் வாயிலாக பெறப் படும் பயன்களைவிட கூடுதல் காண்ட்ராக்ட் செலவுகள், சுயநலச் செயல்பாடு போன்றவைகளே மேலோங்கியிருக்கிறது.

பெரும்பாலான தனியார்மயத் திட்டங் கள் சொத்துப் பங்கீடு, வருவாய்ப் பங்கீடு இவைகளில் மோசமாகச் செயல்பட்டுள்ளது.

மேலும் தனியார்மயம் அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்ட பின்னர் மக்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர் படும்பாடு பற்றிப் பார்ப்போமா?

அமெரிக்காவில் நெஸ்லே நிறுவனம் ஒரு காலன் தண்ணீரை 0.0008 அமெரிக்க டாலருக்கு (ரூ.0.0045. அதாவது 100 காலன் தண்ணீர் 45 பைசா) வாங்கி அதைப் போல ஒரு லட்சத்து 27 ஆயிரம் மடங்கு விலைக்கு விற்றுள்ளது. இதை நமது ரூபாய்க் கணக்கில் பார்த்தால் நமது தலைசுற்றும். இது தனியார் மயத்தின் உண்மை சொரூபம். இது மட்டுமா? இன்னும் கேளுங்கள் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவுகளை.

அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியா மற்றும் கலிபோர்னியா நகர தண்ணீர் விநியோகம் அமெரிக்க வாட்டர் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த வுடன் 70 சதவிகிதம் தண்ணீருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது.

அதேபோல மற்றொரு தனியார் நிறு வனமான யுனெடெட் வாட்டர் சர்வீசஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் - தரம் மோசம் என்று புகார் எழுந்த போதிலும், அட்லாண்டா நகர்மன்றத்திடம் கூடுத லாக தண்ணீருக்கு பணம் கோரியது.

இதைவிடக் கொடுமை வறட்சி மாநில மான டெக்சாஸ் நகரில் பெரிய எண்ணெய் நிறுவனமான டி.பூன் பிக்கன்ஸ், அந்நக ரில் உள்ள நிலத்தடி நீரை டேங்கரில் உறிஞ்சி எடுத்து, அதனை மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றது. ஷெல் கம்பெனியோ கொலராடோ நகர நிலத்தடி நீரை உறிஞ்ச உரிமை பெற்றுள்ளது. இதுதான் தனியார் மயம்.

புட் அண்டு வாட்டர் வாட்ச் (குடிடின யனே றுயவநச றுயவஉா) என்ற நிறுவனம் 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் தண்ணீர் விநி யோகம் மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. தனியார் நிறுவனங்கள் தண்ணீருக்கு 80 சத விகிதம் கூடுதல் கட்டணம் வசூலிப்ப தாகவும், கழிவு நீர் வெளியேற்ற 100 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிப்ப தாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தனியார்மயம் தண்ணீரோடு விட்டு விடவில்லை. தனது ஆக்டோபஸ் கரங் களை இதர சேவைத்துறைகளிலும் நீட்டி யுள்ளது.

சிகாகோ நகர மன்றம் வாகன நிறுத்த வசதிக்காக அரசு இடத்தை 75 ஆண்டு களுக்கு குத்தகைக்கு பெற்ற தனியார் நிறு வனம் ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் வாகன நிறுத்த வாடகையை இரு மடங்கு உயர்த் தியது.

சாலை வசதியை மேம்படுத்தும் வேலையை தனியார் நிறுவனத்திடம் ஒப் படைத்ததன் விளைவாக கலிபோர் னியா கூடுதல் செலவைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மக்களின் கடும் கோபத்தை எதிர்கொண்டது: நகர்மன்றம் திவால் ஆனது.

பென்சில்வேனியாவில் பள்ளிக்கூடப் பேருந்துகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், “கீ ஸ்டோன் ரிசர்ச் சென்டர் (முநலளவடிநே சுநளநயசஉா ஊநவேசந)’’ நடத்திய ஆய்வு கீழ்க் காணும் முடிவிற்கு வந்தது.

தனியாருக்கு காண்ட்ராக்ட் விடு வதன் விளைவாக போக்குவரத்து சேவை களுக்கு அரசு செய்திடும் செலவு கூடுத லாக ஆகிறது’’.

தனியார் பள்ளிகளில் கற்கும் மாணவர் கள் சிறப்பானவர்களாக, வெற்றி வாய்ப் பை எளிதில் பெறுபவர்களாக உள்ளார் கள் என்று இந்திய ஊடகங்களும், சில அறிவுஜீவிகளும் பிரச்சாரம் செய்கின் றனரே. அமெரிக்க நிலைமையை இதோ கீழே தந்துள்ளோம்.

ஸ்டோன் போர்ட் பல்கலைக்கழகம்’’ நடத்திய ஆய்வில் அவர்கள் கண்ட முடிவு, தனியார் பள்ளிகளில் படித்து தேர் வெழுதும் மாணவர்கள் பொதுப்பள்ளி களில் படித்து தேர்வெழுதும் மாணவர் களை விட சிறப்பாகச் செய்திடவில்லை என்பதாகும்.

மாணவர்களின் சிறப்பான செயல் திறன், நடவடிக்கை, பள்ளிக்கூட முன் னேற்றம் போன்றவைகளில் பொதுப் பள்ளிகளோடு ஒப்பிட்டால் தனியார் பள்ளிகள் சமமாகவே உள்ளதாக அமெ ரிக்க அரசின் கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனியார் பள்ளிகள் அரசின் நிதியுதவி பெறுகின்றன. குறைந்த அனுபவம் கொண்ட ஆசிரியர்களையே போதிக்க நியமிக்கிறது. அதிக லாபம் அடைகிறது. இதுவே அமெரிக்க அனுபவம். முத்தாய்ப் பாக ஐ.நா. சர்வதேச கொள்கை மையம் தெரிவித்திருக்கும் கருத்த :

பல முனைகளிலும் தனியார் மயம் தோல்வியடைந்துள்ளது... போட்ட முத லீட்டை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்ட முதலீட்டாளர்களால் சமூக நோக்கங்களான வறுமை குறைப்பு, சமத்துவம் நோக்கி முன்னேறுதல் ஆகிய வற்றை எட்ட முடியாது’’.

அமெரிக்க அனுபவம் காட்டுவது தனி யார் மயம், தாராளமயம், உலகமயம் ஒரு நாளும் சாதாரண உழைப்பாளி, நடுத்தர, விவசாய மக்கள் வாழ்வில் ஒளியேற்றாது. ஆட்சிகள் மாறினாலும் தனியார் மயத்தின் பின் செல்லும் போக்கு ஆட்சியாளர் களால் தொடரவே செய்கிறது. சாதாரண ஏழை, பாட்டாளி, விவசாயிகளின் வாழ் வில் விடியல் காண மாற்றுக் கொள்கை தான் தேவை.

மாற்றுக்கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக போராட்டத்தை அயர் வின்றி நடத்துவோம். தனியார்மய நாசத் திலிருந்து தேசத்தை காப்பாற்றுவோம்.

ஆதாரம :கிசான் ஆவாஜ்’’ என்ற புத்தகத்தில்பால் புக் ஹீட்’’
கட்டுரை

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com