Contact us at: sooddram@gmail.com

 

யாழ் பத்திரிகையின் தரம் தார்மீகம் பற்றிய ஒரு பார்வை

(தம்பா)

இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் கருத்து 29  ம் திகதி யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையில் வெளியானது. 236 சொற்களையும் ஐந்து சிறிய பத்திகளையும் கொண்ட இந்த எழுத்துசொல்லும் செய்தி என்ன? இச்செய்தி வாசிப்பவருக்கு ஏற்படுத்த விளையும்  உணர்வுகள் என்ன? என்பதை  விளங்கிக்கொள்ள முயற்சிப்பதே இந்தக்குறிப்பினது       நோக்கமாகும்.  முதலில் இந்த எழுத்து சுருக்கமாக இருப்பினும் வாசகருக்கு ஒரு  கருத்துப்படிமத்தையும்       சில உணர்வுகளையும்    ஏற்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆசிரியர்  சொல்ல விரும்பும் கருத்து என்னவாசகருக்கு என்ன விதமான  உணர்வு  ஏற்ட்படுத்தப்பட  வேண்டும்  என  ஆசிரியர் எதிர்பார்க்கிறார்?  

இவ்வாறான எழுத்து முறை யாழ் ஊடகங்களிலும் மற்றும் 'தமிழ் தேசிய' டகங்கள் என்று கூறிக்கொள்ளும் டகங்கள் மத்தியிலும் பரவலாக காணப்படுவதால், இந்த ஆசிரியர் கருத்தின் உள்ளடக்கம் பற்றி சற்று நிதானமாக பாப்போம். 

முதலில் ஆசிரியர் கருத்தை ஆறுதலாக வாசியுங்கள்.  வாசிக்கும் போதே நீங்கள் கிரகித்துக்கொள்ளும் விடயங்களை மனதுக்குள் குறித்துக்கொள்ளுங்கள். இந்தக்கருத்தை சொல்லியிருக்கும் ஆசிரியரின் மனநிலை, தார்மீக நெறிமுறைகள் பற்றி என்ன அபிப்பிராயம் உங்களுக்கு ஏற்படுகின்றது என்பதையும் மனக்குறிப்பில் இட்டுக்கொள்ளுங்கள்.  சரி இனி ஆசிரியர் குறிப்பை வாசியுங்கள்.

வன் செயலைத் தடுக்கலாம் அவன் செயலை என்ன செய்யலாம்?

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். வன்னி யுத்தத்தின்போது, இராணுவத் தளபதியாக விருந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிவிட் டுத்தான செய்தியை சலூட் அடித்து ஜனாதிபதிக்கு உத்தி யோகபூர்வமாக அறிவித்தவர் அவர். ஆனால் இராணுவ நீதிமன்றம் அவருக்கு வழங் கிய தீர்ப்பின் பிரகாரம் அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இராணுவ நீதிமன்றம் சட்டப்படியானதல்ல.

அதன் தீர்ப்பு ஏற்புடையதும் அல்ல எனக் கூறி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவுக்கு இராணுவ நீதிமன்றம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டதுஎன்ற தீர்ப்பை மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் மூலம் சரத் பொன்சேகாவின் எதிர்காலம் மிக மோசமானதாக இருக்கும் என ஆரூடம் கூறுவதற்குத் தயங்க வேண்டிய தேவையில்லை. அதேநேரம் சரத் பொன்சேகாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது என அவர் தரப்பு கூறிவருகிறது. அதில் உண்மை இருக்கவும் செய்கிறது.

சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனராம். கடவுளே! வன்னி யுத்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் நடத்தி அதில் வெற்றி கண்ட இராணுவத் தளபதிக்கு எதிர்ப்புச் சக்தி குறைகிறது என்ன செய்ய முடியும்! படைத்தரப்பின் எதிர்ப்புச் சக்தி குறைந்தால் சீனாவிடம் ஆயுதம் வேண்டலாம். பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கலாம். படைத்தரப்பின் வலிமை குறைவிற்கான காரணம் என்னவென்று ஆராய்ச்சி நடத்த ஆணைக்குழு நியமித்து அதற்கு ஏற்ற பரிகாரம் தேடலாம்.

ஆனால்,
இதுவோ முன்னாள் இராணுவத் தளபதியின் உடல் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. என்ன செய்ய முடியும். எல்லாம் அவன் செயல் என்று நினைப்பதைத் தவிர வேறு வழியேதும் தெரியவில்லை. வன்செயலைத் தடுக்கலாம்.  ஆனால் அவன் செயலை தடுப்பது முடியாத காரியம் என்பதையே சரத் பொன்சேகாவின் உடல் எதிர்ப்புச் சக்திக் குறைவு நிரூபிக்கிறது.

பார்த்தீர்களா? மிகப் பெரும் யுத்தம். ஐயா... அம்மா... காப்பாற்றுங்கள் என்ற அவலக் குரல். இவை ஒலித்து ஒருவருடம் நிறைவதற்குள் யாரோ ஒருவர் சரத் பொன்சேகாவின் வெண்குருதிச் சிறு துணிக்கைகளுடன் போரில் ஈடுபட்டுள்ளார். அவர் யார்? அவர் சரத் பொன்சேகாவுடன் மட்டும்தான் போர் நடத்துவாரா? இப்படியான கேள்விகளை எங்களுக்குள் கேட்பது எம் ஆன்மிக வாழ்வுக்கும் பிறருக்குத் தீங்கெண்ணா பெரு வாழ்வுக்கும் உதவியாக அமையும்…

 ஆன்மீக வாழ்வு , பிறருக்கு தீங்கு எண்ணாத பெரு வாழ்வுஅடே அப்பா ஆசிரியர் குறிப்பின் முடிவு   ஏதோ ஆசிரியர் விடயங்களை தார்மீக நெறிமுறைகளின் அடிப்படையில் அடித்து கூறுகிறார்  என்ற  தொனியை தருகின்றது. பொன்சேகா விற்கு அடுத்தது வேறு யாருக்கு தீராத நோய்கள் வரும் என்று எங்களுக்குள் கேள்விகள் கேட்பதுவும் எமது ஆன்மீக வாழ்வுக்கு உதவியாக இருக்குமாம்.

தலையங்கத்தில்  ஏதோ அவன் செயல் என்று தொடங்கியிருப்பதுவும் தான் பின்வரும் பத்திகளில் கூறப்போகும் விடயங்களில் உள்ள தர்க்க நியாயங்களுக்கு அப்பால்   பிழை விட்டவர்களுக்கு கடவுள் பாடம் படிப்பிப்பார் என்ற மன நிலையில் வாழ்பவர்களின்  சஞ்சலங்களை நம்பியே ஆசிரியர் கருத்து எழுதப்பட்டிருக்கின்றது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, விடய தானங்களை கவனிப்போம்.

நடந்து முடிந்த யுத்தத்தின் வெற்றியை சல்யூட்  அடித்து கூறியவர்  சரத். பாதிக்கப்பட்ட மக்களின் ஜயா ..அம்மா .. ..காப்பாற்றுங்கள் ..என்ற அவலக்குரல்களுக்கு காரணமானவர் அவர்.   அவருக்கு தீராத நோய் ஏற்பட்டுள்ளது, அதாவது எங்களை, தமிழர்களை, தோற்கடித்தவருக்கு  அதாவது 'எம்மை வென்றவர்களின்  குறியீடாக இருந்தவருக்கு, கடவுள் பாடம் படிப்பித்து விட்டார். இந்த யுத்தத்தில், ஈடுபட்ட எதிர்த்தரப்பின் மற்றவர்களுக்கும் இ வ்வாறே தீராத நோய் ஏதும் 'அவன்' செயலால் வரும், வரவேண்டும். அதற்கு அவன் ஏற்ட்பாடு செய்வான் என்ற எதிர்பார்க்கை புரிகிறது.

இராணுவ நீதிமன்றம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டது என்று கூறிய மேல் நீதிமன்றத்தீர்ப்பு கூட சமூக நீதியானது என்ற கருத்தை அல்லவா சொல்லாமல் சொல்லி வைத்திருக்கின்றது. 

சீனாவினதும் பாகிஸ்தானினதும் உதவியுடன் தான் 'நாங்கள்' தோற்கடிக்கப்பட்டோம் என்று சொல்ல முயல்வதின் மூலம் எமது 'வீரம்' பற்றிய மாயையை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் இருப்பதும்அந்நிய  உதவிகள் எதிரிக்கு கிடைக்காமல் விட்டிருந்தால்  இன்றும் யுத்தத்தை  தொடர்ந்திருக்கலாமே   என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் அல்லவா  தெரிகின்றது

மொத்தத்தில் பழி வாங்கும் மனோபாவம், போலியான வீரம் பற்றிய மாயை, நீதித்துறையின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு கூட எமக்கு அனுகூலமாக இருக்கின்றதே என்பதை  அங்கீகரிக்கும் போக்கும், எல்லாம் அவன் செயல் என்று சொல்வதுவும், பிறருக்கு தீங்கு                  எண்ணாத வாழ்வு என்றுசிலாகிப்பதுவும்   முரண்பாடாக இருப்பது தெரியவில்லையா?                                                                                                                      இது                                     அறியாமையின்   வெளிப்பாடா   அல்லது    வாசகரின் பொது                    அறிவை அவமதிக்கும் நோக்கமா?

நாங்கள் இந்த எழுத்து முறைகளில் இருந்து வெளியே வர வேண்டும்.  தமிழ் மக்களுக்கு உசுப்பு ஏத்தி, அவர்கள் மனதில் போலியான நச்சுக்கருத்துக்களை  விதைப்பதன்  மூலம்  எமது சமூகத்துக்கு சாதித்ததுதான் என்ன? என்பதை இந்த பத்திரிகையாளர்கள்  புரிந்து கொள்ள முயலவேண்டும்.

நடைபெற்று முடிந்த யுத்தம் பொன்சேகாவிற்கும் பிரபாகரனுக்குமிடையே நடந்த மல்யுத்தப்போட்டியுமல்ல அழிக்கப்பட்ட  புலிகளின் தலைமைக்கும்  அரச இராணுவத்தினர்க்கும் இடையே மாத்திரம் நடைபெற்ற தர்ம யுத்தமும் அல்ல.   

இந்த யுத்தம் உக்கிரமாக தொடர வேண்டும் என்று அணிவகுத்து நின்றவர்களை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.  இழப்புக்களுக்கு ஏதோவிதத்தில் அவர்களும் பொறுப்பல்லவா? குறிப்பாக கடந்த இருபது வருடங்களாக யாழ் பத்திரிகைகளில் இந்த போக்கு புரையோடிப்போய் இருந்ததை காணலாம். 

 இந்த பொறுப்பற்ற   போக்கே எல்லாளன் படைபொங்குதமிழ் போராட்ட வீரர்கள், இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் போன்ற வகையறாக்கள் புனிதர்கள் என்ற எண்ணப்படிமத்தையும்; மறுதலையாக ஒட்டுக்குழுக்கள், கூலிப்படைகள், துரோகிகள் கொன்று ஒழிக்கப்பட  வேண்டியவர்கள்  என்ற சிந்தனைப்போக்கையும்   நியாயப்படுத்திசமூகத்தை இருகூறுகளாக்கி  அதில் விளைந்த வன்மத்தில் தங்களை வளர்த்துக்கொண்டவர்கள்.

நடந்து முடிந்த இந்த யுத்தத்தில் இந்த பத்திரிகைகளும் ஒரு கன்னையில் அணிவகுத்து நின்றவர்கள் என்ற வகையில் யுத்தம் ஏற்படுத்திய விளைவுகளுக்கான தார்மீகப்பொறுப்பு அவர்களுக்கும் உண்டு.

எமது சமூகம் இன்றுள்ள கையறு நிலையிலிருந்து தார்மீக வலுவுள்ள நேர்மையான சமுதாயமாக எழுச்சி பெற வேண்டுமாயின் பொறுப்புள்ள சமூக தலைவர்களும், பத்திரிகையாளர்களும்       குறிப்பாக இளைய       தலைமுறையினரும் பழிவாங்குதல்,      வன்மம் பேசுதல், போலிவீரம் காட்டுதல், நேர்மையின்மை   போன்ற போக்குகளை புறம்தள்ள வேண்டும். 

 'வலியோரை   வாழ்த்தி எளியோரை தாழ்த்தும்'  ோழைத்தனம்-  கௌரவமான மனிதர்களினால் அருவருத்து ஒதுக்கப்பட வேண்டும்.

பத்திரிக்கை துறையினுள் புரையோடிப்போயிருக்கும்  இந்த குரூரமான எழுத்து முறைகள் நிராகரிக்கப்படல் வேண்டும்.  

சாதாரண மனிதத்தன்மையுடன் விடயங்களை சிந்திப்பதற்கும்அனுகுவதற்குமே    இவ்வளவு கடினமாகவுள்ளபோது பிறருக்கு தீங்கு எண்ணா பெருவாழ்வு பற்றி கனவு காண்பது எப்படி?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com