Contact us at: sooddram@gmail.com

 

கிரிக்கட்

2011 - பத்தாவது உலகக் கோப்பை

அன்று தொல்லையாகக் கருதப்பட்ட இயற்கையின் விளையாட்டால் உருவான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் பரிணாம வளர்ச்சியின் பலனாகக் கிடைத்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் பத்தாவது உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு முயற்சியில் வரும் பிப்ரவரி முதல் இம்மூன்று நாடுகளில் நடைபெறவுள்ளன.

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பாகிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகளிலும் போட்டிகளை நடத்துவதென்று 2006 ஏப்ரல் 30ல் நடந்த சர்வதேச கிரிக்கெட் குழுவில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் பயங்கரவாதம் கிரிக்கெட்டையும் விட்டுவைக்கவில்லை. 2009ம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அதையடுத்து போட்டியை நடத்தும் நாடுகளில் இருந்து பாகிஸ்தானை ஐசிஐ கழட்டிவிட்டது. லாகூரில் இருந்த உலகக் கோப்பை தலைமையகம் மும்பைக்கு மாற்றப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஒரு அரை இறுதி ஆட்டம் உள்ளிட்ட14 போட்டிகளில் எட்டு ஆட்டங்கள் இந்தியாவுக்கும், நான்கு ஆட்டங்கள் இலங்கைக்கும் இரண்டு ஆட்டங்கள் வங்கதேசத்துக்கும் பிரித்து அளிக்கப்பட்டது.

வடிவமாற்றம்

2007ம் ஆண்டில் போட்டிகளின் வடிவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அதையடுத்து போட்டிகளின் வடிவத்தை மாற்ற ஐசிசி தீர்மானித்தது. 1996ம் ஆண்டில் நடத்தப்பட்ட வடிவம் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 1996ல் பன்னிரண்டு நாடுகள் பங்கேற்றன. 2011ல் பதினான்கு நாடுகள் பங்கேற்கின்றன. பதினான்கு அணிகளும் இரு குழுக்களாகச் சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டம் சுழல்முறையிலும் இரண்டாம் கட்டம் நாக் அவுட் முறையிலும் நடத்தப்படும் ஒவ்வொரு குழுவிலும் சுழல் ஆட்டங்களில் முதல் நான்கிடம் பெறும் அணிகள் நாக் அவுட் முறையிலான காலிறுதிக்கு முன்னேறும்.

இந்தப் பதினான்கு அணிகளின் தேர்வு எப்படி? டெஸ்ட் தகுதிபெற்ற பத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு நேரடி தகுதி பெற்றன. அவையாவன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகும். இவற்றில் ஜிம்பாப்வேயின் டெஸ்ட் தகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற நான்கு இடங்களும் இணை உறுப்பு நாடுகளுக்கென ஒதுக்கப்பட்டன. அதற்கான தகுதிப் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றன. 2007 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை வெளியேற்றிய அயர்லாந்து அணி தகுதிப் போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றது. போட்டிகளில் வெற்றிக்கு முயன்ற கனடாவும், அரை இறுதியில் தோற்று, மூன்றாவது, நான்காவது இடங்களை முறையே பிடித்த நெதர்லாந்தும், கென்யாவும் மீதமுள்ள மூன்று இடங்களை நிரப்பின.

பாகிஸ்தானின் இழப்பு

பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்த உலகக் கோப்பை போட்டிகள் மற்ற மூன்று நாடுகளுக்கும் மாற்றப்பட்டதால் பாகிஸ்தானுக்கு ஒரு கோடியே ஐந்து லட்சம் டாலர் இழப்பு ஏற்படும். இத்தொகையும் கூட ஐசிசி உறுதி அளித்துள்ள போட்டிக் கட்டணம் மட்டுமே. ஆனால், பாகிஸ்தானின் ஒட்டுமொத்த இழப்பு, பெரும் அளவில் இருக்கும். போட்டிகளை வேறு நாடுகளுக்கு மாற்றியதற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது. ஆனால், இன்னமும் பாகிஸ்தான் கூட்டு நடத்துனர்தான் என்று ஐசிசி அறிவித்துவிட்டது.

மொத்தம் உள்ள 49 போட்டிகளில் இந்தியாவின் எட்டு மையங்களில் ஒன்பது போட்டிகளும், இலங்கையில் மூன்று மையங்களில் 12 போட்டிகளும், வங்கதேசத்தின் இரண்டு மையங்களில் எட்டு போட்டிகளும் நடைபெறும். போட்டிகளின் தொடக்கவிழா பிப்ரவரி 17 அன்று டாக்காவில் நடைபெறும். இந்தியாவும், வங்கதேசமும் மோதும் முதல் போட்டி பிப்ரவரி 19 அன்று அங்கு நடைபெறுகிறது. இந்தியாவில் ஒரு அரை இறுதியும், இறுதி ஆட்டமும் நடைபெறும். இலங்கையில் மற்றொரு அரை இறுதி நடைபெறும்.

அனுமதிச் சீட்டுகள் விற்பனை அதிகாரப்பூர்வமான மூன்று நாடுகளிலும் தொடங்கிவிட்டன. கொல்கத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானம் போட்டிகளை நடத்தும் தகுதியில் இல்லை என்று ஐசிசி மேற்பார்வை குழு அறிவித்துவிட்டது. அதன் விளைவாக அங்கு பிப்ரவரி 27ல் நடைபெற வேண்டிய இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் பெங்களூருக்கு மாற்றப்பட்டுவிட்டது. மற்ற மூன்று போட்டிகள் அங்கு நடைபெறுமா என்று பிப்ரவரி 7ல் நடைபெறும் மேற்பார்வைக்குழுவின் கணிப்புக்குப் பின் தெரியவரும்.

போட்டிகளின் தூதர் சச்சின்

2011 ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளின் அதிகாரப்பூர்வ தூதுவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளின் முனைப்பிற்கும், வளர்ச்சிக்கும் உரிய பல்வேறு நிகழ்ச்சிகளில் சச்சின் பங்கேற்கிறார்.

ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சர்வதேச விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனங்களான இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 200 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஐசிசி விற்றுள்ளது. 220 நாடுகளில் இப்போட்டிகள் ஒளிபரப்பாகின்றன.

ஐசிசி உலகக் கோப்பை ஒரு சுழல் கோப்பையாகும். 1999 முதல் வழங்கப் பட்டு வரும் இக்கோப்பையை பிரிட் டிஷ் மன்னர்களின் கிரீடம் தயாரிக்கும் கேரார்ட் அண்ட் கோ நிறுவனம் தயாரித் துள்ளது. இக்கோப்பை துபாயில் உள்ள ஐசிசி நிறுவனத்தில் நிரந்தரமாக வைக் கப்பட்டிருக்கும். 11 கிலோ எடையுள்ள இதில் கிரிக்கெட்டின் முக்கிய அம்சங் களான பேட்டிங், பவுலிங், பீல்டிங் இடம் பெற்றிருக்கும். வெற்றி பெறும் அணிக்கு இக்கோப்பையின் நகல் மட்டுமே வழங்கப்படும். உண்மையான கோப்பையில் உலகக் கோப்பை போட் டிகளின் சாம்பியன் அணியின் பெயர் பொறிக்கப்படும்.

வெற்றி பெறும் அணிக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்களும், வெற்றிக்கு முயன்ற அணிக்கு 15 லட்சம் அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும். 2015 உலகக் கோப்பை முதல் வெகுமதிகளை ஒரு கோடி அமெரிக்க டாலர்களாக உயர்த்த ஐசிசி தீர்மானித்துள்ளது.

கிரிக்கெட் உலகக் கோப்பையை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து இதுவரை வென்றதில்லை. 1996 உலகக் கோப்பையை கூட்டாக நடத்திய இலங்கை வென்றது. அதற்கு முன்பும், பின்பும் போட்டியை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை. இதை இந்திய அணி முறியடிக்கும் என்ற நம்பிக்கை நாட்டில் நிலவுகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com