Contact us at: sooddram@gmail.com

 

இதுதான் தன்மானமா? சுயமரியாதையா?

(கே.வரதராசன்)

தமிழினத்தின் தன்மானம், சுயமரி யாதை காக்கப்பட திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று திருச்சி யில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கூறினார். பல் வேறு கூட்டங்களிலும் இதே கோரிக் கையை முன்வைத்துள்ளார். பெரியார், அண்ணா போன்றவர்கள் வலியுறுத்திய சுயமரியாதைக்கும் இன் றைக்கு கருணாநிதி தேர்தல் களத்தில் பேசுகிற சுயமரியாதைக்கும் அடிப்படை யில் வித்தியாசம் உண்டு. அன்றைக்கு சொல்லப்பட்ட சுயமரியாதை, தன்மானம் போன்றவை பொதுநலத்தை அடிப்படை யாகக் கொண்டது. இன்றைக்கு இவர் பேசும் தன்மானம் முழுக்க முழுக்க சுயநலத்தை அடிப்படையாகக் கொண் டது. இவர் சொல்லும் தன்மானமும் சுயமரியாதையும் தனது தேவைக்கேற்ப பேசப்படும் ஏமாற்று வித்தையாகும்.

இன்றைக்கு திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது கொள்கைப் போராட்டத்திற்காக நடந்த சிறைவாசம் அல்ல. மாறாக, மக்களின் பணத்தை கொள்ளையடித்ததாக தொடுக் கப்பட்ட வழக்கில் நடந்த சிறைப் பிரவேசமாகும். தமிழன் என்று சொன் னாலே இன்றைக்கு அகில இந்திய அள வில் தலைகுனிவை ஏற்படுத்தும் வகை யில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுக சம்பந் தப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுக தலைவர் கலைஞரின் குடும்ப உறுப்பினர் கள் உட்பட விசாரிக்கப்பட்டது, அவர்க ளுக்கு சொந்தமான கலைஞர் தொலைக் காட்சியில் சோதனை நடத்தப்பட்டது ஏன் என்று கேட்டதற்கு, ஊடகங்கள் இதை தொடர்ந்து பெரிதாக்கிக்கொண்டே இருந்ததால் இந்த சோதனைக்கு அனு மதித்ததாக கருணாநிதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்படியென்றால் இந்த சோதனை ஊழல் புகாரின் அடிப்படை யில் உண்மையில் நடத்தப்பட்டதா அல் லது காங்கிரஸ்- திமுக நடத்திய நாடகமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதி லளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய புல னாய்வுத்துறைக்கு உண்டு.

1967ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி களோடு திமுக ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியின் அடிப்படையில் காங் கிரஸ் ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற் றப்பட்டது. ஆனால் இன்றைக்கு தமிழகத் தில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதி களை திமுக தூக்கித் தந்துள்ளது. இது வும் தமிழர்களின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் பாதுகாக்க நடந்த ஏற்பாடுதானா?

தமிழகத்தின் நலன்களை, தமிழக மக்களின் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனையோ நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தபோதெல்லாம் திமுக கண்டுகொள்ளவில்லை. பதவி சுகமே பெரிதென்று மவுனம் சாதித்தது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ, திமுக வையே சுற்றிச்சுற்றி வந்த நிலையில், குறிப்பாக முதல்வர் குடும்பத்தினரின் பெயர் அடிபட்ட நிலையில், மத்திய அரசிலிருந்து விலகப்போவதாக திமுக அறிவித்தது.

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூடி, காங்கிரசுக்கு 60 இடங்கள் வரை தர ஒப்புக்கொண்டதாகவும் 63 தொகுதி களை தரவேண்டும் என்றும் அதுவும் தாங்கள் குறிப்பிடும் தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்துவதால் மத்திய அரசிலிருந்து திமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

மு.க.அழகிரி, தயாநிதிமாறன் உள்ளிட் டோர் ராஜினாமா கடிதங்களுடன் தன் மானத்தோடும், சுயமரியாதையோடும் தலைநகர் தில்லி நோக்கி புறப்பட்டனர். ராஜினாமா கடிதங்களை அளிக்காமல் திரும்ப மாட்டார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் கட்சி கருணைக் காக காத்துக்கிடந்தனர். கடைசியில் காங்கிரஸ் மிரட்டிக்கேட்டபடி 63 இடங் களை அதுவும் அவர்கள் கேட்டபடி ஒதுக்க ஒப்புக்கொண்டு திரும்பினர். சொந்தக் கட்சியின் தன்மானத்தையும், சுயமரியா தையையும் பாதுகாக்க முடியாத தலை வர், அந்தக் காங்கிரசும் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தான் சுயமரியாதையையும், தன்மானத் தையும் பாதுகாக்க முடியும் என்று கூறு வது வேடிக்கையிலும் வேடிக்கை இல் லையா?

இந்தத் தேர்தலில் வெற்றிபெற திமுக மேற்கொள்ளும் இழிவான அணுகுமுறை மிகவும் கேவலமாக உள்ளது. தமிழர்கள் குறித்து பெருமைகொள்ள எத்தனையோ விசயம் உண்டு. ஆனால் மத்திய அமைச் சர் மு.க.அழகிரி, திருமங்கலம் பார் முலாவை கண்டுபிடித்து, அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார். இந்தத் தேர்தலிலும் கூட, முதல்வர் தொகுதி உட்பட பண விநியோகம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன. இது தமிழர்களின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் பெருமை சேர்க்கக்கூடிய காரியமா?

தா.கிருஷ்ணன் படுகொலை, தினக ரன் நாளிதழ் எரிப்பு, மூன்று ஊழியர்கள் படுகொலை போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் மு.க.அழகிரி. அவருடைய ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்கள் மிகப்பெரிய தாதாக் களாகவும், ரவுடிகளாகவும் வலம் வருகின் றனர். ஆனால் தன்னுடைய மகனின் இத்தகைய செயல்களை அடக்கி வைக்க வேண்டிய முதல்வர், மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்று கூறும்போது தமக்கு புல்லரிப்பதாக கூறி உசுப்பேற்றி விட்டுள்ளார். தன்மானத்தையும், சுயமரி யாதையையும் பாதுகாக்கும் அளவுக்கு மு.க.அழகிரி ஆற்றிய நற்பணிகள் என்ன என்பதை பட்டியலிட முதல்வர் தயாரா?

இன்றைக்கு திமுகவின் பிரதான பிரச்சார பீரங்கிகளாக விளங்குபவர்கள் குஷ்பு, வடிவேலு போன்றவர்கள்தான். சொன்னதையும் செய்தோம், சொல்லாத தையும் செய்தோம் என்று கூறும் திமுக, இந்த சாதனைகளை கூறி வாக்கு கேட் காமல், திரைப்படக் கலைஞர்களை பயன்படுத்தி கூட்டம் சேர்ப்பது எத்த கைய தன்மானம் என்று தெரியவில்லை.

இன்றைக்கு திமுக என்பது திராவிட முன்னேற்றக்கழகமாக இல்லை. அது ககுமுக-வாக மாறிவிட்டது. அதாவது, கருணாநிதி குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. வீடு எப்படியோ நாடும் அப்படியே என்றார் அண்ணா. ஆனால் இன்றைக்கு கருணாநிதி தனது வீட்டை மட்டும் பலப்படுத்திக்கொண்டு நாடும் அப்படியே இருப்பதாக மக்களை நம்பவைக்க முயல்கிறார். அனைத்துத் துறைகளிலும் முதல்வர் குடும்பத்தின ரின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்கிறது. கேபிள் டி.வி. துவங்கி திரையரங்குகள் வரை, திரைப்படத் தயாரிப்பு தொடங்கி விமான கம்பெனிகள் வரை முதல்வர் குடும்பத்தினர் வளைக்காத துறை யில்லை. இத்தகைய தன்மானத்தையும், சுயமரியாதையையும் மேலும் வளர்ப்பதற் காகவா திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கருணா நிதி எதிர்பார்க்கிறார்.

ஒருகாலத்தில் மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்று திமுக முழக் கமிட்டது. ஆனால் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசினால் மாநில அதி காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக் கப்பட்டபோது கடிதம் எழுதியதைத் தவிர சுயாட்சியை வலுப்படுத்த திமுக செய்தது எதுவும் இல்லை. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் முதல் வர் கடிதம்தான் எழுதிக்கொண்டிருந்தார். இவரது கடிதங்களுக்கு மத்திய அரசு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை.

இப்போது கூட சோனியா காந்தி முன் னிலையில் தமிழை மத்திய ஆட்சிமொழி யாக்கவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை மாற்றவும்உதவ வேண்டுமென கருணாநிதி கோரிக்கை விடுத்தார். ஆனால் சோனியா காந்தி எந்த பதிலையும் தரவில்லை. இந்த கூட்டணி வெற்றிபெற்றால்தான் தமிழர்க ளின் சுயமரியாதையும், தன்மானமும் பாதுகாக்கப்படும் என்று கதைவிடுகிறார்.

உண்மையில் சொல்லப்போனால் தமிழர்களின் தன்மானமும், சுயமரியா தையும் பாதுகாக்கப்படவேண்டுமானால் திமுக-காங்கிரஸ் கூட்டணி முறியடிக் கப்படவேண்டும். அந்த மகத்தான பணியை சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வாக்காளர்கள் நிறைவேற்றுவார் கள் என்பது உறுதி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com