Contact us at: sooddram@gmail.com

 

"அடுத்த தலைமுறையும் போராடும் நிர்பந்தம்!”

(ஈழ நிதர்சனம்)

செயற்கைக் கால்களைப் பெறும் பொருட்டு நீண்டிருந்த வரிசையில் நின்றிருந்த இளம் தாய், கால் கருகிய சிறுவனைத் தன் இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ...’ என்று கைகளை நீட்டியபடி அவள் கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான தீபச்செல்வன், இப்போது சென்னைப் பல்கலைக்கழக மாணவர். ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' எனும் தீபச்செல்வன், தன் எழுத்துகள் மூலம் ஈழ மக்களின் இப்போதைய வாழ்க்கைப்பாடுகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருகிறார்.  

'' 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்என்ற நூல் எதைப் பற்றியது?''

''போர் முடிந்த பின்னர் கிளிநொச்சிக்கு மீண்டும் திரும்பும்போது என்னுடைய நண்பர்கள், உறவினர்களைத் தேடிச் சென்ற அனுபவங்களைத் தான் இந்த நூலில் எழுதியிருக்கிறேன். நான் படித்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குள் போரில் காலை இழந்த அப்பண்ணா என்ற அண்ணாஒருவரைத் தேடும்போது என்னைப் பாதித்த நிகழ்வுகள்தான், நூலின் முதல் பகுதியை எழுதத் தூண்டின. உண்மையில் கால்களை இழந்த அப்பண்ணாக்களின் நகரமாக கிளிநொச்சி மாறியிருந்தது!''

''ஈழ மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்?''

''எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். பாரம்பரிய வாழ்விடங்களில் வாழ்ந்த மக்களை, வனாந்தரங்களில் வீசிச் சென்றிருக்கிறது போர். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை ராணுவம் எடுத்துக்கொண்டது. எங்கள் மக்களின் பூர்வீக நிலங்களில் தென்னிலங்கைச் சிங்களர்களைக் குடியேற்றுகிறார்கள். பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பதாகச் சொல்லி, 2007-ல் சம்பூரைக் கைக்கொண்டது இலங்கை ராணுவம். ஆனால், இப்போது போர் முடிந்த பிறகும் வளம் கொழிக்கும் சம்பூரை மக்களுக்குக் கிடையாது என அறிவித்துவிட்டது இலங்கை அரசு. இதுபோல யாழ்ப் பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற கிராமங்களின் பகுதிகளையும் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கவில்லை. எங்கள் நிலப் பகுதி மீது படையெடுக்கும் இலங்கை அரசு, 'பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்கிறோம்என்று சொல்லி அந்த நிலங்களைக் கையகப்படுத்தி சிங்களவர்களைக் குடியமர்த்திக் கொள்கிறது. தனது தேவைக்கும் அரசியலுக்கும் ஏற்ப சூழலை மாற்றி மாற்றிப் பேசும் இலங்கை அரசின் பொய்ப் புரட்டுக்களைத்தான் இப்போது உலகமும் கேட்டுக்கொண்டு இருக்கிறது!''

''முகாம்களை மூடிவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறதே?''

''இல்லை. உலகின் கண்களுக்குக் காட்டிய முகாம்களை மூடிவிட்டு, வன்னிப் பெரு நிலப்பரப்பையே பிரமாண்ட திறந்தவெளி முகாமாக மாற்றிவிட்டார்கள். மெனிக்பாம் முகாம் இப்போது இல்லை. ஆனால், கேப்பாப்புலாவு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் புதிய முகாம்களை உருவாக்கியிருக்கிறார்கள். தவிர, விசாரணை முகாம்கள், ரகசியத் தடுப்பு முகாம்கள் என விதவிதமான முகாம்கள் அங்கு உள்ளன. ஈழம்பற்றிப் பேசக்கூடியவர்களைக் கொன்றுவிட்டு, எஞ்சியவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 50 பேர் வாழக்கூடிய இடங்களில் 150 பேரைக் குடிவைத்துவிட்டு மீள் குடியேற்றம் செய்துவிட்டோம் என்கிறது இலங்கை. கண்ணிவெடியைக் காரணம் காட்டியே ராணுவம் மக்கள் நிலங்களை அபகரித்து அங்கு முகாமிட்டுஇருக்கிறது!''

''ஜெனிவா தீர்மானத்தை அந்த மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?''

''ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராகத் தமிழ் மக்கள் போராடுவது போன்று காட்ட யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் போராட்ட நாடகம் ஒன்றை நடத்தியுள்ளனர். வவுனியாவில் அப்பாவி மக்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். மீள்குடியேற்றம், நிலம், அச்சமற்ற வாழ்வு, சுதந்திரமான நடமாட்டம் இதிலேனும் ஒரு முன்னேற்றத்தை ஐ.நா. கொடுக்குமா என்பதுதான் ஈழ மக்களின் எதிர்பார்ப்பு. இந்தப் போரின் மீதும் இனப்படுகொலையின் மீதும் உலகம் ஒரு சிறிய பார்வையைக்கூட செலுத்தத் தவறியிருக்கிறது. போர்க் குற்றம், இனப் படுகொலை தொடர்பான விவகாரங்களில் உறுதி யான நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்களே அன்றி, அவர்கள் ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கவில்லை!''

''இப்போது வன்னிப் பகுதிக்குச் சுற்றுலா வந்து செல்லும் சிங்களர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை எப்படிப் பார்க்கிறார்கள்?''

''தான் வாழும் பகுதியில் பார்க்கஇயலாத ஒன்றை இன்னோர் இடத்துக்குச் சென்று கண்டுகளிப்பதற்குப் பெயர்தான் சுற்றுலா. அந்த வகையில் வடக்குப் பகுதி தமிழ் மக்கள், சிங்களர்கள் வாழும் தென்னிலங்கைக்குச் சென்றால், அங்கே புத்தர் கோயிலையோ, சிங்களக் கலாசாரங்களையோ காண்பார்கள். ஏனென்றால், தங்கள் பகுதியில் அதைப் பார்க்க முடியாது. ஆனால், இப்போது யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற வட பகுதிகளிலும் கூட புத்தரை மட்டுமே காண முடிகிறது. போர், அனைத்துப் பிரதேசங்களிலும் இந்து ஆலயங்களை அழித்துவிட்டு புத்தரைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. இது சிங்கள மக்களுக்கு ஓர் இனிய மன எழுச்சியாக அமைந்துள்ளதால், இந்தப் போரைப் பெருமிதமான வெற்றியாக நினைக்கிறார்கள். அப்படித்தான் சிங்கள அரசு சிங்கள மக்களை வைத்திருக்க விரும்புகிறது. அந்தச் சிந்தனையும் பெருமிதமுமே ராஜபக்ஷே வின் வெற்றி!''

''எந்தச் சட்டதிட்டத்துக்கும் அடங்க மறுக்கிற இலங்கை அரசிடம், ஈழத் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீளப்பெற முடியுமா?''

''உலகின் மௌனமே இலங்கை அரசின் சண்டித்தனங்களுக்குக் காரணம். தன்னுடைய அரசியலுக்காக இலங்கை மீது இந்தியா கொண்டிருக்கும் பெரும் காதலும் ஒரு காரணம். எல்லா அரசுகளும் அதனதன் அளவில் செய்யும் கொலைகளுக்கு ஈடாக, தான் செய்த கொலைகளைக்கொண்டு நியாயம் கேட்கப்பார்க்கிறார் ராஜபக்ஷே. ஆனால், நடந்த இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்துக்கும் இந்த உலகம் நீதியை வழங்க மறுக்கும்போது, எங்கள் அடுத்த தலைமுறையும் போராட வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்படுவார்கள்!''

இதை படித்தவுடன் நிறைய கருத்துக்கள் தோன்றுகிறது..

1. யாழில் உள்ள மக்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கிறார்கள்? சம உரிமைகளையும், சமத்துவத்தையுமா, அல்லது, தனி நாடா?

2. எடுத்துச் செலுத்த யாரும் இருப்பது மாதிரி அங்கு தெரியவில்லையே.. அப்படியெனில் நாம் இங்கு போராடி, அதை அங்கு யார் எடுத்துச் செலுத்துவது...??

3. நாடு கடந்த தமிழீழம் என்று ஒரு அமைப்பும் அதற்கொரு தலைவனும் இருக்கிறாரே, இந்த மாணவர் போரட்டத்தின் போது வந்து தமது நன்றியை நேரில் தெரிவித்திருந்தால், அதற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்குமே... அவர் ஒரு பேட்டி கூட கொடுக்க வில்லை... இந்த மாணவர்கள் யாருக்காக போராடுகிறார்கள்?

4. பல்லியின் வால் துடிப்பது மாதிரிதான் இந்தப் போராட்டம் பார்க்கப் படுகிறது... குறைந்த பட்சம் வைகோவை முன்னிறுத்தியாவது அல்லது, உருத்திரகுமாரனை முன்னிறுத்தியாவது இதைச் செய்திருக்க வேண்டும். கரையான் புற்றில் புகுந்த கதையாக, ஜெயா, தான் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வளர்த்து விட்ட மாதிரியான ஒரு உருவகத்தை திருமாவேலன் போன்றவர்கள் கொடுக்க ஆரம்பித்திருப்பதும் சரியாக இல்லை.

5. தனி நாடு என்பது சாதாரண விஷயமில்லை. பொருளாதர ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் ஒரு வளர்ந்த நாடு ஆதரவு தராத பட்சத்தில் அது சாத்தியமே இல்லை. அது, இந்தியாவாக, சீனாவாக, அல்லது அமெரிக்காவாக இருக்க வேண்டும். இந்த மூவரில் ஒருவர் கூட வராத பட்சத்தில், தனி நாடு கோரிக்கை விழலுக்கு இறைத்த நீர் தான்.

6. சம உரிமை, சம அந்தஸ்து வேண்டுமா அல்லது தனி நாடு வேண்டுமா என்பதை ஈழ மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பது சரி. ஆனால் அனைவரையும் எப்படி ஒருங்கிணைத்து ஓட்டெடுப்பது? அவர்கள் ஈழ மக்கள் தானா என்பதை எப்படி உறுதிப்படுத்தி ஒரு அட்டவணை தயாரிப்பது? அதன் பிறகெல்லவா ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். எனவே, இதுவும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு கோரிக்கை.. அதற்கு சட்டமன்ற தீர்மானம் என்பது இன்னொரு நாடகம்.

- திருச்சிக்காரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com