Contact us at: sooddram@gmail.com

 

அந்தோ தமிழ்நாடே!

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? (பாகம் 4)

நேரடியாக ஸ்ரீபெரும்புதூரின் துன்ப நிகழ்வுக்குப் போகும் முன்பு, கோடம்பாக்கம் சம்பவத்திற்கு பின்பும் ஸ்ரீபெரும்புதூரின் துன்ப நிகழ்வுக்கு முன்பும் இடையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். அப்போதைய இந்திய ஜனாதிபதியாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள். தமிழ்நாட்டுக்காரர். காமராஜர் காலத்தில், தமிழக தொழில்துறை அமைச்சராகவும், பின்பு மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு போன்ற முக்கிய பதவிகளையும் வகித்தவர். தஞ்சை மாவட்டத்தின் ராஜhமடம் கிராமம், பட்டுக்கோட்டை அவரது சொந்த ஊர். ஆகவே, தஞ்சையில் தமிழ்ப் போராளிகளின் ஆளுமையை அவர் அறிந்தே இருப்பார்.

1990 ஜ_ன் 19ஆம் திகதி, சென்னையில் பத்மநாபா கொலை நடந்த மறுநாள், அப்போதைய பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பினார் அவர். அதன் சாரமாவது:

"இலங்கைப் போராளிகளின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பல வகைகளில் பாதிக்கிறது என்ற எனது கவலையை நேற்று நாம் விவாதித்தோம். சென்னையில் இருந்து வந்த ஒரு சிறு தொழிலதிபர் நேற்று என்னை சந்தித்தபோது இந்த இலங்கை இளைஞர்கள் பல வர்த்தகர்களிடம் பலவந்தமாக ரூபாய் 500 முதல் கப்பம் வசு+லிப்பதாகவும், தர மறுப்பவர்களை பயமுறுத்துவதால் யாரும் காவல்துறையிடம் முறைப்பாடு செய்வதில்லை என்றும் கூறினார்."

"கோடம்பாக்கத்தில் நடந்த கோரச்சம்பவம் விடுதலைப் புலிகளின் வன்முறையையும், ஆயுததாரிகளின் முன்னால் காவல்துறையின் மெத்தனப் போக்கையும் நன்கு காட்டுகிறது. நான் முன்பு கூறியபடி, அனைத்து இலங்கைப் போராளிகளையும் LTTE, EPRLF, TELO மற்றும் குழுவினரை உடனடியாக இந்தியாவிலிருந்து திருப்பியனுப்பி விடுவதே நல்லது. இல்லாவிடில், இலங்கையின் வட கிழக்கில் நடைபெறும் சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் வழிந்தோடி, பின்பு கட்டுக்கு அடங்காததாக மாறிவிடும்".

இவ்வாறு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்க பிரதமர் வி.பி.சிங் 4 மாதங்கள் எடுத்தார். 13.10.1990இல் அவர் எழுதிய கடிதத்தில்; "தமிழ்நாட்டிலுள்ள இலங்கைப் போராளிகள் பற்றிய உங்கள் கவலையையும், சட்டம் ஒழுங்கு பற்றிய உங்கள் அவதானத்தையும் நான் உணர்கிறேன். நாங்கள் நிலைமையை தொடர்ந்து அவதானித்து வருகிறோம். தமிழக அரசுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறோம்."

"மத்திய அரசின் கொள்கையான, ஈழப் போராளிகள் நமது மண்ணில் செயல்படக் கூடாது, முகாம்களிலேயே இருக்க வேண்டும்; வெளியில் நடமாடித் திரியக் கூடாது என்பதையும் தமிழக அரசுக்கு அறிவித்துள்ளோம். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும், கடத்தல் காரர்களைக் கண்காணிக்கும்படியும் கூறியுள்ளோம்." "மேலும் தமிழக அரசு 22 விடுதலைப் புலிகளைக் கைது செய்துள்ளது. ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கையர்கள் அனைவரும் தங்களை காவல்துறையிடம் பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த அறிவிப்பு, வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கும் தரப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றுள்ள சு+ழலில் பெரிய அளவில் அகதிகள் வருகிறார்கள். ஆகவே, நீங்கள் கூறிய படி, அனைத்து இலங்கையர்களையும் திருப்பியனுப்புவதென்பது இயலாத காரியம்" என்று பதில் கொடுத்துள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதியின் கடிதத்திற்கு பிரதமர் எடுத்த காலம் நான்கு மாதங்கள். நிற்க, மே மாதம் 06ஆம் திகதி தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி, சுயுறு உளவுத்துறை தான் மத்திய - மாநில அரசுகளுக்கிடையே பொய்த் தகவல்களைத் தருகிறது என்று குற்றஞ்சாட்டிப் பேசியதை பிரதமர் வி.பி.சிங்கிற்கும் எழுதியதற்கு, பிரதமர் மே மாதம் 11ஆம் திகதியே அதனை மறுத்து பதில் அனுப்பியதை இங்கு குறிப்பிட வேண்டும்.

சென்னை - டெல்லி கடிதப் பரிமாற்றத்தில் இருந்த அந்த விரைவு, டெல்லி வுழ டெல்லியில் இல்லை. பிரதமர், ஜனாதிபதியின் கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பியிருக்கலாம். முதல்வர் பதில் தர காலதாமதம் செய்திருக்கலாம். அல்லது பிரதமருக்கு, ஆறப்போட்டு பதில் கொடுங்கள் என்று சொல்லி இருக்கலாம். காரணம், சட்டம் ஒழுங்கு விடயத்தில் ஜனாதிபதிக்கும் அதிகாரம் உண்டு. ஆனால் இந்த நான்கு மாதங்களில் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கை பல துறைகளில் ஓங்கிவிட்டது. பல குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

நடேசனும் காசி ஆனந்தனும்

ஜுன் 1990இல் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்தது. களத்தில் நிலைத்து நிற்க புலிகளுக்கு புதிய ஆயுதங்கள் நிறைய தேவைப்பட்டதோடு காயப்பட்ட போராளிகளின் சிகிச்சைக்காக மருத்துவ உதவியும் அவசியமாகத் தேவைப்பட்டது.

ஜுன்  26இல், ஏற்கனவே சென்னைக்கு வந்துவிட்ட புலிகளின் அரசியல் துறை - காவல் துறைப் பொறுப்பாளரும் 2009 கடைசி யுத்தத்தில் வெள்ளைக் கொடி விவகாரத்தில் இறந்தவருமான நடேசன், மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் வைகோவுடன் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, தமது தேவைகளைக் கூறியபோது, முதல்வர் - தனக்கு ஆயுதக் கடத்தல் செல்லும் வழிகளை முற்கூட்டியே அறியத் தந்தால், அது பாதுகாப்பாகச் செல்ல உதவி செய்வதாகச் சொன்னதோடு, மருத்துவ உதவி செய்யவும் ஒப்புக்கொண்டு, காயப்பட்டவர்கள் வரும் நாட்களில் சோதனைச் சாவடிகளை மூடி விடுவதாகவும் சொன்னார்.

மேலும், பத்மநாபா கொலை சென்னையில் நடந்ததால், 'ஒரு துரோகிக்கு நான் அஞ்சலி செலுத்த வேண்டி வந்துவிட்டது என்று வருந்தியதோடு, வரதராஜப்பெருமாளையும் முடித்துவிடுவது நல்லது என்றார். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும்போது முற்கூட்டியே எனக்கு அறிவித்தால், அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை நான் எடுக்க வசதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com