Contact us at: sooddram@gmail.com

 

அரசியல் தீர்வை அடைவதில் தென்னிலங்கை நட்பு சக்திகள் பிரதான பங்காளிகள்

(ஜீவகன்)

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே ஒவ்வொரு கட்டத்திலும் ஐக்கியம் ஏற்பட்டது. ஆனால் அந்த நோக்கத்தை அடையக்கூடியதாக ஐக்கியத்தின் செயல்முறை இல்லாததாலே ஐக்கியங்கள் சரிவராமற் போயின. ஒன்பது தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கியதமிழ்க் கட்சிகள் அரங்கம்கடந்த புதன் கிழமையும் கூடிக் கூட்டுச் செயற்பாடு பற்றி விவாதித்தது. தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தை மேலும் வலுவூட்டும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எனவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் ஏற்பட வேண்டியது அவசியம் தான். தமிழ்க் கட்சிகள் எதிரும் புதிருமாகச் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியாது. தமிழ்க் கட்சிகளின் எதிரும் புதிருமான செயற்பாட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. தமிழ்க் கட்சிகள் என்ற வகையில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் மாத்திரம் வடக்கு, கிழக்கில் செயற்பட்ட காலத்தில் ஒரு கட்சி கூறுவதற்கு எதிரான கருத்தையே மற்றக் கட்சி கூறியது. சுதந்திர தினத்தன்று ஹர்த்தால் அனுஷ்டித்துக் கடைகளைப் பூட்ட வேண்டும் என்று ஒரு கட்சி சொன்னால் கடைகளைத் திறந்து வைத்து வர்த்தக விடுமுறையை மீற வேண்டும் என்று மற்றக் கட்சி சொல்லும். பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் ஒரு கட்சி கையொப்பம் இட்டால் அது துரோகச் செயல் என்று மற்றக் கட்சி சொல்லும்.

இந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்ததாலோ என்னவோ தமிழ்க் கட்சிகளிடையே ஐக்கியம் என்பது நின்று நிலைக்காததாக இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஐக்கியமும் நிலைக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியமும் நிலைக்கவில்லை. இப்போது ஐக்கியத்துக்கான முயற்சி மேற்கொள்ளப்படும் போது கடந்த கால ஐக்கியங்கள் சரிவராமற் போனமை பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே ஒவ்வொரு கட்டத்திலும் ஐக்கியம் ஏற்பட்டது. ஆனால் அந்த நோக்கத்தை அடையக்கூடியதாக ஐக்கியத்தின் செயல்முறை இல்லாததாலே ஐக்கியங்கள் சரிவராமற் போயின.

தமிழர் விடுதலைக் கூட்டணி இனப் பிரச்சினையின் தீர்வுக்காகவே அரங்குக்கு வந்தது. கூட்டணியை ஆரம்பித்த நேரத்தில் கொள்கை உடன்பாடு இருக்கவில்லை. அதாவது கொள்கை பற்றி விவாதித்து உடன்பாடு ஏற்பட்ட நிலையில் கூட்டணி ஆரம்பிக்கப்படவில்லை. எனவே அது அத்திவாரமற்ற ஐக்கியம். அந்த ஐக்கியம் ஏற்பட்ட பின்னரே கொள்கை பற்றிப் பேசி வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதை ஒரு சமரச ஏற்பாடு என்றுதான் கூற வேண்டும். தமிழரசுக் கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணியில் பெரிய கட்சி. அதன் அடிப்படைக் கொள்கை சமஷ்டி. அந்தக் கொள்ளையுடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட்டணியில் இணைந்திருந்ததால் சமரச ஏற்பாடாகத் தனிநாடு என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய வேளையில் அது நடைமுறைச் சாத்தியமானதா என்பது பற்றியோ அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியோ தலைவர்கள் சிந்திக்கவில்லை. ஐக்கியமாகத் தேர்தலுக்கு முகங்கொடுத்து வெற்றியீட்ட வேண்டும் என்பதிலேயே அவர்களின் முழுக் கவனமும் இருந்தது. பிற்காலத்தில் பல பின்னடைவுகளும் இழப்புகளும் ஏற்படுவதற்கு இதுவே காரணமாகியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதையும் இது தான். சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வராமல் தடுக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது. அதற்காகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு அணியில் சேர்த்தார்கள். அதிலிருந்து பிறந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. புலிகளின் தேவைக்காகத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படத் தொடங்கினார்கள். இந்த ஐக்கியமும் கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதல்ல. சந்தர்ப்பவாத ஐக்கியம். கொள்கை ரீதியாக ஏற்படாத ஐக்கியம் என்பதால் அதனால் எதையும் பெற்றுத் தர முடியவில்லை - அழிவுகளைத் தவிர.

கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை இன்றைய ஐக்கிய முயற்சிக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

இரண்டு அணுகுமுறைகள்

அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்வின்றி இழுபடுகின்ற பிரச்சினைக்கு எடுத்த எடுப்பில் தீர்வு காண முடியாது. இரண்டு விதமான அணுகுமுறைகள் தேவை. ஒன்று நீண்ட கால இலக்கை நோக்கிய அணுகுமுறை. மற்றது உடனடி இலக்கை நோக்கிய அணுகுமுறை. முழுமையான பிரதேச சுயாட்சி நீண்டகால இலக்காக இருக்கலாம். உடனடியாகப் பெறக்கூடிய தீர்வு உடனடி இலக்கு.

இப்போது என்ன தீர்வு சாத்தியமோ அதைப் பெற்று மக்களின் நாளாந்த பிரச்சினைகளில் கணிசமானவற்றைத் தீர்ப்பதும் கிடைத்த தீர்வை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தீர்வை நோக்கி நகர்வதுமான அணுகுமுறையே பலனளிக்கக் கூடியது.

உடனடியாகச் சாத்தியமான தீர்வை ஏற்க வேண்டும் எனக் கூறும் போது இறுதித் தீர்வைக் கைவிடுவது என்றோ பலவீனப்படுத்துவது என்றோ அர்த்தமாகாது. உடனடித் தீர்வை ஏற்றுச் செயற்படுகின்ற அதேவேளை இறுதித் தீர்வுக்கான ஆதரவை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம்.

தென்னிலங்கையின் ஆதரவு

முன்னைய தமிழ்த் தலைமைகள் தவறு விட்ட இன்னொரு விட யத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வை நடைமுறைப் படுத்துவதற்குத் தென்னிலங்கை நட்பு சக்திகளின் ஆதரவு அவசியம். இந்த விடயத்தில் முன்னைய தலைவர்கள் பாரிய தவறு விட்டுள்ளனர்.

இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தென்னிலங்கையில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள் மாக்சிஸ்டுகள். சுதந்திர இலங்கையில் இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தலைமை வகித்தவர்களான ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் போன்றோர் அடிப்படையில் மாக்சிஸ விரோதிகள். இதனால், இனப் பிரச்சினையின் தீர்வுக்கான போராட்டத்தைத் தென்னிலங்கையின் நட்பு சக்திகளுடன் இணைந்து முன் னெடுப்பதற்கு அத் தலைவர்கள் விரும்பவில்லை. அது மாத்திரமன்றி, தமிழ் மக்கள் மத்தியில் மாக்சிஸ்டுகளுக்கு எதிரான உணர்வலைகளை வளர்ப்பதிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். தென்னிலங்கையின் வலதுசாரி சக்திகளுடனேயே அவர்களின் உறவு இருந்தது.

இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தென்னிலங்கை நட்பு சக்திகளின் ஆதரவு முன்னரிலும் பார்க்க இப்போது கூடுதலாகத் தேவைப்படுகின்றது. பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான எந்தத் தீர்வும் அரசியலமைப்பு மாற்றத்துக்கூடாகவே நடைமுறைக்கு வர வேண்டும். அரசியலமைப்பு மாற்றம் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்துடனேயே பூர்த்தியடையும். அந்த அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் தான் இனப் பிரச்சினைக்கான தீர்வை நடைமுறைப்படுத்த முடியும். சர்வசன வாக்கெடுப்பில் அங்கீகாரம் பெறுவதற்குச் சிங்கள மக்களின் வாக்குகள் அத்தியாவசியமானவை. தமிழ்த் தலைவர்கள் இந்த யதார்த்தத்தை விளங்கிச் செயற்படுவதன் மூலமே நியாயமான தீர்வை அடைய முடியும்.

தேசிய அரசியலிலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் விதத்திலேயே தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டார்கள். இதற்காகச் சிங்கள எதிர்ப்புணர்வும் வளர்க்கப்பட்டது.

இந்த நடைமுறை தமிழ்த் தலைவர்கள் தாங்கள் வளர்த்துவிட்ட சிங்கள எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தித் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைக்கப் பயன்பட்டதேயொழிய இனப் பிரச்சினையின் தீர்வுக்குச் சிறிதளவும் உதவவில்லை.

கடந்த காலத் தவறுகளிலிருந்து இன்றைய தமிழ்த் தலைவர்கள் விடுபட்டு ஆக்கபூர்வமான அணுகுமுறையைப் பின்பற்றுவார்களேயானால் அரசியல் தீர்வை அடைவதொன்றும் சிரமமானதல்ல.

ஐ. தே. கவின் பின்வாங்கல்

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அரசாங்கததுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் வெளிப்படுத்திய சமிக்ஞைக்கும் அண்மையில் வெளிப்படுத்திய சமிக்ஞைக்குமிடையே வேறுபாடு காணப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் ரணில் விக்கிரமசிங்ஹ நடத்திய பேச்சுவார்த்தையில் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவிக்குப் பதிலாக நிறைவேற்று பிரதமர் பதவியை உருவாக்குவதென உடன்பாடு காணப்பட்டதோடு அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தோற்றுவித்தன. அடுத்த பேச்சுவார்த்தையிலும் அந்த நம்பிக்கை தொனித்தது.

பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்ஸ¤டன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சி பதினேழாவது திருத்தத்தை வலியு றுத்தியது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அரசாங்கம் எல்லாக் கட்சிகளுடனும் பேச வேண்டும் என்றும் மதப் பெரியார்களினதும் பொதுமக்களினதும் ஆலோசனைகளைக் கோரிப் பெற வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நிபந்தனை விதித்தது.

ஐ. தே. கவின் இந்தத் திடீர் மனமாற்றம் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் தொடர்பான அதன் நடத்தையை நினைவூட்டுகின்றது. அன்றைய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது கட்சி தீர்வுத் திட்டத்தை ஆதரிக்கும் என்ற சமிக்ஞையை ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் வெளிப்படுத்தினார்கள். கடைசி நேரத்தில், மகாசங்கத்தின் சம்மதத்தைப் பெற வேண்டும் எனக் கூறிப் பின்வாங்கினார்கள்.

இப்போதும் அதேஸ்ரன்ட்போலவே தெரிகின்றது.

பதினேழாவது திருத்தத்தின் கீழ் சுதந்திரமான ஆணைக் குழுக்கள் அமைகின்றன என்று மேலெழுந்த பார்வைக்குத் தோன்றினாலும் நடைமுறையில் அப்படியாக இல்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தடையான சூழ்நிலையையே நடைமுறையில் இது தோற்றுவிக்கும். எனவே பதினேழாவது திருத்தத்தில் அரசாங்கம் அதிகளவு அக்கறை செலுத்தவில்லை.

எல்லாக் கட்சிகளுடனும் பேச வேண்டும் என்றும் மதப் பெரியார்களிடமும் பொதுமக்களிடமிருந்தும் ஆலோசனைகள் பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பது காலத்தைக் கடத்துவதற்கும் ஏதாவது சாட்டுச் சொல்லி அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிக்காது ஒதுங்குவதற்குமான தந்திரம்.

ஐக்கிய தேசியக் கட்சி எல்லா விடயங்களிலும் இந்த நடைமுறையை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றது. முதலில் ஆதரிப்பது போல சமிக்ஞை காட்டுவது. பின்னர் ஏதாவது சாட்டுச் சொல்லிப் பின் வாங்குவது. எந்த விடயத்திலும் தெளிவான கொள்கை இல்லாததே இதற்குக் காரணம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com