Contact us at: sooddram@gmail.com

 

பாரதிய ஜனதா - ஐக்கிய ஜனதா தள் பிஹார் மாநிலத்தில் தனி வழியா?

(கேவியெஸ்)

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பில் ஐக்கிய ஜனதா தள் ஒரு பிரதான உறுப்புக் கட்சி. இரண்டு கட்சிகளும் பிஹார் மாநிலத்தில் கூட்டரசாங்கம் அமைத்திருக்கின்றன. ஐக்கிய ஜனதா தள்ளைச் சேர்ந்த நிதிஷ் குமார் முதலமைச்சராகவும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுசில் குமார் மோடி பிரதி முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்கள். பிஹார் மாநிலத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் இப்போது விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. மாநிலத்தில் எதிர்வரும் நவம்பரில் அல்லது டிசம்பரில் சட்ட சபைத் தேர்தல் நடைபெறும். அதற்கிடையே இரண்டு கட்சிகளும் தனித்தனி வழி செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகின்றது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்துடனேயே இரண்டு கட்சிகளுக்குமிடையே இடைவெளி தோன்றத் தொடங்கியது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பிஹார் தலைநகரமான பட்னாவில் ஜூன் 12ஆம், 13ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இக் கூட்டம் நடைபெற்ற இரண்டு நாட்களும் பிஹார் பத்திரிகைகளில் பெரிய அளவிலான பாரதிய ஜனதா கட்சி விளம்பரங்கள் வெளியாகின. எல்லா விளம்பரங்களிலும் நரேந்திர மோடிக்குக் கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

பாரதிய ஜனதா கட்சி இப்போது தேசிய மட்டத்தில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்துகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் அத்வானியின் தலைமை சோபிக்கவில்லை. தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த வேளையிலேயே சில கட்சி முக்கியஸ்தர்கள் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இப்போது நரேந்திர மோடி எல்லா மட்டங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்.

பிஹார் பத்திரிகைகளில் வெளியாகிய பெரும்பாலான விளம்பரங்களில் நரேந்திர மோடியும் நிதிஷ் குமாரும் ஒன்றாக நிற்பது போன்ற படங்கள் இருந்தன. இது போன்றகட் அவுட்’டுகளும் காணப்பட்டன. நரேந்திர மோடியுடன் தன்னை இணைத்து வெளியாகிய விளம்பரங்கள் நிதிஷ் குமாருக்குத் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தின. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இன சங்காரத்தைக் கட்டவிழ்த்து விட்டவர் நரேந்திர மோடி. அவருடன் தன்னை இனங்காட்டுவதைச் சகிக்க முடியாதிருந்த நிதிஷ் குமாருக்கு ஒரு விளம்பரத்தின் வாசகங்கள் ஆத்திரமூட்டின. நரேந்திர மோடியை ஒரு முன்மாதிரி நிர்வாகியாகச் சித்தரித்த அந்த விளம்பரம் பிஹார் அரசாங்கம் குஜராத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்றிருந்தது. நிதிஷ் குமார் ஆத்திரத்தை வெளிப்படுத்திய விதம் பா. ஜ. கவை அவமதிப்பதாக இருந்தது.

தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இராப் போசன விருந்தை நிதிஷ் குமார் ரத்துச் செய்தார். இதற்குப் பதிலடி கொடுப்பது போலப் பாரதிய ஜனதா கட்சி நடந்துகொண்டது. நிறைவேற்றுக் குழுக் கூட்ட முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் சுசில் குமார் மோடியின் தனிப்பட்ட முயற்சியினாலேயே பிஹாரில் அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனக் கூறினார்கள். நிதிஷ் குமார் கையாலாகாதவர் என்பதே இதன் அர்த்தம்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த நிதிஷ் குமார் வெள்ள நிவாரணமாக நரேந்திர மோடி ஏற்கனவே அனுப்பியிருந்த ஐந்து கோடி ரூபாவைத் திருப்பி அனுப்பினார். பிரதி முதலமைச்சர் சுசில் குமார் மோடி முதலமைச்சருடன் ஒத்துழைப்பதில்லை என்ற முடிவை அறிவித்தார்.

இவ்வாறு ஒவ்வொன்றாக இடம்பெற்ற சம்பவங்கள் இரு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்தன.

நான்கு மாதங்களில் நடக்கவிருக்கும் சட்ட சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை வென்றெடுக்கும் நோக் கத்துடன் நிதிஷ்குமார் செயற்படுவது தெளிவாகத் தெரிகின்றது. பிஹார் மாநில வாக்காளர்களில் 16 வீதத்தினர் முஸ்லிம்கள். நரேந்திர மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதும் அதன் விளைவாகப் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டிலிருந்து வெளியேறுவதும் முஸ்லிம்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு உதவும் என்று நிதிஷ் குமார் கருதுவதில் நியாயம் உண்டு. நரேந்திர மோடி முஸ்லிம்களின் வெறுப்புக்குப் பாத்திரமானவர்.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டு உடைவதற்கு இடமளிக்க விரும்பாத பாரதிய ஜனதா கட்சி சமரசத்துக்கு முயற்சிக்கின்றது. தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோடியும் வருண் காந்தியும் வரக்கூடாது என்ற நிபந்தனையை நிதிஷ் குமார் முன்வைக்கின்றார். பாரதிய ஜனதா கட்சி இந்த நிபந்தனையை ஏற்கத் தயாரில்லை. நரேந்திர மோடி தேசியத் தலைவர் என்றும் நாட்டின் எந்தப் பகுதியிலும் அவர் பிரசாரம் செய்ய முடியும் என்றும் அது கூறுகின்றது. நிதிஷ் குமா ரின் நிபந்தனையை ஏற்றால் தேசிய ஜன நாயகக் கூட்டமைப்பின் மற்றைய உறுப் புக் கட்சிகளும் இவ்வாறான நிபந்தனையை முன்வைக்கலாம் என்ற அச்சமும் பாரதிய ஜனதா கட்சிக்கு உண்டு.

பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளிலும் பார்க்கக் குறைவான தொகுதிகளை இந்தத் தடவை அதற்குக் கொடுப்பதற்காகவே நிதிஷ் குமார் இப்படியொரு நாடகம் நடத்துகின்றார் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கூறுகின்றார்கள. கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 105 தொகுதிகளில் போட்டியிட்டது.

பாரதிய ஜனதா கட்சி என்னதான் கூறினாலும், முஸ்லிம்களின் வாக்குகளைக் கூடுதலாகப் பெற வேண்டும் என்பதே நிதிஷ் குமாரின் நோக்கம். பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் காட்டுவதையே அவர் விரும்புகின்றார்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு இப்போது நூலிழையில் தொங்குகின்றது. என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com