Contact us at: sooddram@gmail.com

 

வைக்கோலை எரிப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு

(ஜெஸ்மி எம். மூஸா)

வைக்கோலை எரிப்பதால் விவசாய நிலம் உரம் பெறுகின்றது. என்ற விவ சாயிகளின் நம்பிக்கை தவறு என்று அதை பசளை உரமாக மாற்றுவதே புத்திசாலித் தனமானது என்றும் கூறுகிறார் கட்டுரையாளர். தொழில்களில் முதன்மை யானது விவசாயம். இதை வள்ளுவரும் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். உலகத் தொழில் துறையில் 75 சதவீதத்தை விவசாயம் கொண்டுள்ளது. ஏனெனில் இது மனிதனின் வாழ்வாதாரம். இலங்கை கைத்தொழில் துறையில் முன்னேற பெருமுயற்சிகள் செய்து வந்தாலும் அடிப் படையில் இது ஒரு விவசாய நாடு. தேயிலை, இறப்பர், தெங்கு என பல விவசாய உற்பத்திகள் இங்கே நடைபெற்று வந்தாலும், முதன்மையான விவசாயம், நெல் உற்பத்தியே. எனவே நெல் உற்பத்தியை மென்மேலும் அதிகரிப்பதற்காக விஞ்ஞான ரீதியில் பல முயற்சிகளும் திட்டங்களும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெல் உற்பத்தியில் பாரம்பரிய முறைகள் பின்பற்றப்படுவதற்கு பதிலாக நவீன முறைகள் தற்போது அதிக அளவில் பின்பற்றப்பட்டு வந்தாலும் பல்வேறு காரணங்களை முன்னிட்டு பாரம்பரிய முறைகள் முற்றாக கைவிடப்படாமல் தேவையான அளவு அவையும் பிரயோகத்தில் இருக்க வேண்டும் என்று புதிய சிந்தனைகள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

எனினும் சில பாரம்பரிய நம்பிக்கைகள் துறக்கப்படவே வேண்டும். அவற்றில் ஒன்றுதான் வைக் கோலை எரிக்கும் பழக்கமாகும்.

நெல் அறுவடை முடிந்ததும் அடுத்த விதைப்பு தொடங் குவதற்குள் வயல் நிலத்திலிருந்து கிடைக்கும் வைக்கோலை எரித்து விடுவது விவசாயிகளிடம் பாரம்பரியமாக இருந்து வரும் செயற்பாடாகும். மேட்டுப் பூமியில் நெற் கதிர்களைக் குவித்து நெல்லை வேறாக்கி விட்டு மிஞ்சும் வைக்கோலை எரித்தால் வைக்கோலில் உள்ள மூலகங்கள் சில மண்ணுடன் சேருகின்றன. இதிலிருந்து உருவாகும் ஒரு வகை ஊண் உண்ணிகள் நிலத்தை களித்தன்மையாக்குகின்றன. இந்நிலையில் பயிரிட்டால் நல்ல விளைச்சலைப் பெறலாம் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

எனினும் இவ் வாதங்களை விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் முழுமையாக மறுக்கின்றனர். காலங்காலமாக இந் நம்பிக்கை தொடர்வதால் இது உண்மை போலத் தோன்றினாலும் வைக்கோல் எரிப்பு மண்ணின் போசணை மட்டத்தைப் பாதிப்படையச் செய்கின்றது என்பது இவர்களின் வாதமாகும்.

தொடர்ச்சியாக வைக்கோலை எரிப்பதன் மூலம் மண் நீரின் அளவு குறைவடைந்துவிடும் என்றும் பயன்தரக்கூடிய நுண்ணுயிர்களும் பூச்சி புழுக்களும் அழிந்து விடு கின்றன என்பது இவர்கள் தெரிவிக்கும் காரணமாக உள்ளது.

வைக்கோல் எரிப்பு மூலம் ஏற்படும் சூட்டினால் ஒட்சி யேற்றம் நடைபெற்று நீர்த்தன்மை வலுவிழந்து விடுகிறது. உயிரியல் பல்வகைத் தன்மையின் சமச்சீர் குழைந்து விடும் அபாயமும் இதன்மூலம் ஏற்படுகிறது. இவ்விடயங்கள் தொடர்பிலான விளிப்பூட்டல்கள் செய்த போதிலும் விவசாயிகள் அதனை உதாசீனம் செய்வது வேதனை அளிக்கின்றது என்கிறார் அம்பாறை விவசாய ஆராய்ச்சித் திணைக்கள சிரேஷ்ட ஆய்வுநிலை உத்தியோகத்தர் வை. பி. இக்பால்.

இதே சமயம் உப்புக் கரைசல் அதிகமாக உள்ள இடங்களில் வேளாண்மை வளர்ச்சி துரிதமாகுவதில்லை. இவ்வாறான இடங்களில் வைக்கோலைப் போட்டு எரிக்கும் போது உப்புக் கரைச்சல் மாறி, விளைச்சல் அதிகரிக்கின்றது. கறுப்பு நிறம் படிதல் என்ற நோய் நீங்கி வேளாண்மை அதிகரிக்கிறது. இவ்வாறெல்லாம் நன்மை பயக்கும் போது வைக்கோலை எரிக்காமல் விடுவது எவ்வாறு எனக் கேட்கிறார் வயது முதிர்ந்த விவசாயி ஒருவர்.

இது தொடர்பாக விவசாய ஆராய்ச்சிப் பகுதியினரிடம் வினவிய போதுஇவ்வாறான சிற்சில நன்மைகள் ஏற்படுவதாக அவர்கள் கூறினாலும் எரிக்காமல் விடுவதால் கிடைக்கும் பலன்களுக்கு இவை ஈடாகாது. பாரம்பரியமாகத் தாம் செய்து வருவதை கைவிடுவதில் உள்ள சிக்கலே இவ்வாறு நியாயம் கூற வைக்கின்றதே தவிர வேறில்லை. எரிப்பது தொடர்பாகக் கூறும் நியாயங்கள் பாரம்பரிய அடைவுகளைப் பெற்றுக் கொடுத்தாலும் விஞ்ஞான ரீதியாக அதில் எவ்வித உண்மையும் இல்லைஎன்று விளக்கம் முன்வைக்கப்படுகிறது

வைக்கோல் எரிப்பதனால் ஏற்படும் போசணை இழப்பானது அதிக நோய்த் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நெற் கதிர்களின் அடர்த்தி பாதிப்படைகிறது. விளைச்சலின் வேகமும், அளவும் குன்றி விடுகின்றன. தொடர்ச்சியான எரிப்பு சூழல் மாசடைவதை ஊக்குவிப்பதுடன் காலப்போக்கில் வயல் நிலத்தை பாலை வனமாக்கவும் வாய்ப்பு உண்டாகின்றது என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் அரிசித் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் அம்பாறை மாவட்டத்தில் நெல் அறு வடைக்கும் பின் வைக் கோல்கள் எரிக்கப்படுவதனால் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறக் கூடிய வாய்ப்புள்ளதாக கல்முனை சுற்றாடல் பசுமைப் பாதுகாப்பு அமைப்பினர் அண்மையில் விடுத்த அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைக்கோலை எரிக்காது மீள் சுழற்சி செய்து விளைச்சலை அதிகரிப்பது தொடர்பில் விவசாய ஆராய்ச்சிப் பகுதியினர் இவ்வாறு கூறுகின்றனர்.

ஒரு ஏக்கர் விவசாய நிலத்திலிருந்து கிடைக்கும் ஆயிரம் கிலோ கிராம் அல்லது ஒரு மெற்றிக் தொன் வைக்கோலை பனித்துளி அல்லது மழைத்துளி அல்லது ஏதாவது தூறல்களுக்கு உட்படுத்தி அதில் ஐந்து கிலோ தொடர்க்கம் 10 கிலோ வரையான யூரியாவை தெளித்து உக்கலடையச் செய்தால் அதனை மீள் பசளையாக்கலாம். இச் செயற்பாட்டின் பின்னர் உழுது பண்படுத்தும் போது இவை மண்ணோடு புரட்டப் படுவதால் விளைச்சலுக்கு உகந்த நிலை உருவாகின்றது.

இச் செயற்பாட்டினை நீண்ட காலத்திற்கு நடைமுறைப் படுத்துவதன் மூலம் மண்ணின் பெளதீக மற்றும் இரசாயனத் தன்மைகள் மேம்பாடு அடைந்து பயிர்களின் வளர்ச்சி வீதமும் துரிதமடைகின்றன. இக்கருத்துக்களை விவசாயிகள் செவிமடுத்துச் செயல்பட வேண்டியது அவசியம்.

விவசாயத் திணைக் களத்தினரும், துறைசார் நிறுவனங்களும், சமூக சேவை நோக்கில் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இவ்விடயம் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி வருகின்றன. எனினும் அனைத்து விவசாயிகளின் கவனத்தைக் கவரும் வகையில் பிரசாரம் செய்யப்படுவதே உகந்த பலனைத் தரும்.

எனவே கிராமங்கள் தோறும் விழிப்புணர்வுக் கூட்டங்களையும் கருத்தரங்குகளையும், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவதனையும் சம்பந்தப்பட்டவர்கள் விரைவாக முன்னெடுக்க வேண்டு. இவ்விடயத்தை விவசாயிகள் அலட்சியம் செய்யாமல் ஆலோசனைகளைச் செவிமடுத்து ஆக்கபூர்வமான நடவடிக் கைகளில் இறங்க வேண்டும். பாரம்பரிய முறைகளை விட்டுக்கொடுக்க விரும்பாத விவசாயிகள் நவீன ஆய் வுகளையும் மதிக்க வேண்டும். தங்களது விடாப்பிடித் தன்மையில் இருந்து விலகி விவசாய அதிகாரிகள் கூறும் கருத்துக்களையும் இதய சுத்தியுடன் செவிமடுக்க வேண்டும்.

வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் வைக்கோல் எரிப்பைக் கைவிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை விவசாயிகளால் மறுக்கப் பட்டபோது சட்டத்தின் மூலம் அதை அந்நாட்டு அரசுகள் தடுத்தன.

இதனால் இந்நாடுகள் அரிசி உற்பத்தியில் முன் னேற்றம் கண்டு வருகின் றன என்ற கருத்தினை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனினும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் போதிய பயன்தராத விடத்து சட் டத்தைப் பயன்படுத்தி வைக்கோல் எரிப்பைத் தடுக்கலாம்.

விலை அத்தாட்சிச் சட்டம், பீடை நாசினிச் சட்டம் போன்றன போல் வைக்கோல் எரிப்பைத் தடுக்கும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவைகளை விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தி விளைச்சல் அதிகரிப்புக்கு உதவ விவசாயிகள் முன் வரவேண்டும்.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com