Contact us at: sooddram@gmail.com

 

காஸா சிவிலியன்களுக்கு எதிரான கூட்டுத் தாக்குதல்

இஸ்ரேலினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் காஸாவுக்கு மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகுக்குள் டிசம்பர் 31ந் திகதி அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் படையினர் ஒன்பது துருக்கிப் பிரசைகளைக் கொன்றனர். இந்த அடாவடித் தனத்தை முழு உலகமும் கண்டித்த போதிலும் அமெரிக்கா மாத்திரம் வெளிப்படையாக இஸ்ரேலுக்குச் சார்பாகச் செயற்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான கண்டனப் பிரேரணை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படுவதை அமெரிக்கா தடுத்துவிட்டது.

துருக்கி ஆளுங்கட்சிக்கு நெருக்கமான அரச சார்பற்ற நிறுவனமொன்று படகின் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பியது. தொண்டர்களாகப் படகில் சென்றவர்களே இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டவர்கள். இதனால் துருக்கி அரசாங்கம் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் நிக்கோலாஸ் சார்க்கோஸி பதவியேற்ற ஆரம்ப நாட்களில் தன்னை இஸ்ரேலின் நெருங்கிய ஆதரவாளராக இனங்காட்டியவர். அவரும் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்திருக்கின்றார். பிரித்தானியா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஸ்பெயின், பிரேஸில் ஆகிய நாடுகளும் கண்டித்திருக்கின்றன. தென்னாபிரிக்கா, துருக்கி, ஈகுவடோர், வெனிசூலா ஆகியவை இஸ்ரேலிலிருந்து தூதுவர்களைத் திருப்பி அழைத்திருக்கின்றன.

உலக நாடுகளின் எதிர்ப்பு வலுவடைந்து வருகின்ற நிலையில், காஸா மீதான பொருளாதாரத் தடையைத் தளர்த்துவதாக இஸ்ரேல் அறிவித்தது. காஸாவுக்குள் அத்தியாவசிய பொருட்கள் செல்ல முடியாதவாறு படைபலத்தைப் பயன்படுத்தி மூன்று வருடங்களாக இஸ்ரேல் தடுத்து வருகின்றது. தடையைத் தளர்த்துவதென்ற இஸ்ரேலின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என்றும் உலக அபிப்பிராயத்தைத் திசைதிருப்புவதற்கான முயற்சி என்றும் அவதானிகள் கூறுகின்றனர். தடை விதிக்கப்பட்டுள்ள 4000 பொருட்களில் 130 பொருட்கள் மீதான தடையே நீக்கப்பட்டுள்ளது. இவை நாளாந்த வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களல்ல.

உலக அபிப்பிராயத்தைத் திசைதிருப்பும் நோக்கத்தில், இத்தாக்குதல் பற்றி விசாரிப்பதற்கென ஒரு ஆணைக்குழுவையும் இஸ்ரேல் நியமித்தது. இந்த ஆணைக்குழுவின் தலைவராக இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் ஜேக்கப் ரேர்கெல்லும் (JACOB TURKEL)  உறுப்பினர்களாக அல்ஸ்டர் யூனியனிஸ்ட் தலைவர் டேவிட் ட்ரிம்பிளும் (DAVID TRIMBLE) கனடாவின் முன்னாள் அட்வகேற் ஜெனரல் கென் வற்கினும் (KEN WATKIN)  நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இஸ்ரேலின் விசுவாசமான ஆதரவாளர்கள். இந்த விசாரணை இஸ்ரேலுக்குச் சாதகமான முடிவை அறிவிப்பதாகவே நிச்சயம் அமையும்.

அமெரிக்க ஜனாதிபதி

நிவாரணப் படகின் மீதான தாக்குதல் சர்வதேச கடற்பரப்பில் நடந்ததென்பதால் அதை விசாரிப்பதற்கு ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரம் இஸ்ரேலுக்கு உண்டா என்ற கேள்வியும் எழுகின்றது. சர்வதேச அமைப்பொன்று இச் சம்பவம் பற்றிய விசாரணையை மேற்கொள்வதே சரியான நடைமுறை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதை விசாரிப்பதற்குப் பொருத்தமான அமைப்பு. ஆனால், அமெரிக்காவின் விருப்பத்துக்கு அமைவாகச் செயற்படும் அமைப்பாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இருக்கிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2000 ஆம் ஆண்டின் உரோமாபுரி நிறைவேற்றுச் சட்டத்தின் (Rome Statute) அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்த நிறைவேற்றுச் சட்டத்தை ஏற்று 120 நாடுகள் அப்போது கையொப்பம் இட்டன. அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி பில் கிளின்டனும் கையொப்பமிட்டார். எனினும் அமெரிக்க செனெற் அதை உறுதிப்படுத்தாமலே இருந்தது. ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் பில் கிளின்டனின் கையொப்பத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். இவ்வகையில், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லை. எனினும் இந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தக் கூடியதாக இருக்கிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் அதன் செயற்பாடுகளில் அமெரிக்காவுக்குப் பக்கச்சார்பானதாகவே நடந்துகொள்கின்றது.

ஆப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததற்கு அமெரிக்கா உறுப்பு நாடல்ல எனக் காரணங் கூறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுப்பு நாடாக இல்லாத சூடானின் ஜனாதிபதி ஒமர் அல் பiருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்திருக்கின்றது. அவர் மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் பiரைக் கைது செய்வதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் லூயிஸ் மொறேனோ ஒகம்போ (LUIS MORENO OCANPO) தீவிரமாக இருக்கின்றார்.

நிவாரணப் படகைத் தாக்கியது தொடர்பான விசாரணையை அமெரிக்காவினது ஆலோசனையின் பேரிலேயே இஸ்ரேல் ஆரம்பித்திருக்கின்றது. தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்களே தாக்குதல் பற்றிய விசாரணைக்காக ஆணைக்குழுவை அமைத்திருப்பது

உலக அபிப்பிராயத்தைத் திசை திருப்புவதற்காக மாத்திரமல்ல. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தவிர்க்கும் நோக்கமும் இதில் இருக்கின்றது. சம்பந்தப்பட்ட நாடு நடவடிக்கை எடுப்பதற்கு விரும்பாமலோ இயலாமலோ இருக்கும் பட்சத்திலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையிட முடியும். இது உரோமாபுரி நிறைவேற்றுச் சட்டத்தின் ஒரு ஏற்பாடு.

சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற சம்பவம் பற்றி விசாரிப்பதற்கு ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரம் இஸ்ரேலுக்கு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆக்கிரமிப்பும் இன்னொரு நாட்டுக்கு எதிராகப் படைபலத்தைப் பயன்படுத்துவதும் குற்றச் செயல்கள் என்றும் அவற்றுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றத்தின் முதலாவது மீளாய்வு மாநாடு உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் மே 31 முதல் ஜூன் 11 வரை நடைபெற்ற போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

படைபலத்தை பயன்படுத்தல் என்பதில் பொருட்கள் செல்ல முடியாதவாறு படைபலத்தின் மூலம் தடுப்பதும் உள்ளடங்குகின்றது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். காஸா மீது இஸ்ரேல் மூன்று வருடங்களாக இவ்வாறான பொருளாதாரத் தடையை விதித்திருக்கின்றது. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை. அமெரிக்கா கீறிய கோட்டுக்குள்ளேயே அது நிற்கின்றது.

காஸா மீது இஸ்ரேல் விதித்துள்ள இப்பொருளாதாரத்தடை காஸா சிவிலியன்கள் அனைவருக்கும் விதிக்கின்ற கூட்டுத் தண்டனையாகும். (Collective punishment)  அமெரிக்காவினதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினதும் பங்களிப்புடனேயே இத் தண்டனை விதிக்கப்படுகின்றது. இதை காஸா சிவிலியன்களுக்கு எதிரான கூட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.

(சங்கர சேயோன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com