Contact us at: sooddram@gmail.com

 

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

(நந்தினி ஹரிகுமார்)

எந்திரமயமான பொருளாதாரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துவிட்ட வாழ்க்கைச் சூழலில் எங்கெங்கு காணினும் போட்டிகள், பொறாமைகள், அருவருக்கத்தக்க சூழ்ச்சிகள் தான் தெரிகின்றன. மனித வாழ்க்கை ஒரு நாளில் உள்ள 24 மணி நேரமும் அதிக பட்ச விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கைப் போராட்டத்தைச் சமாளிக்க முடியும் என்ற சூழல். உளவியில் ரீதியாகப் பல முக்கிய காரணங்கள் இருந்தாலும் உறக்கம் வராததற்கு உடலியல் ரீதியாகச் சில பிரச்சினைகள் இருக்கலாம்.

மூளை மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு, இதயம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்களுக்கு உடலில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் உறக்கம் பாதிக்கப்படலாம்.

எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் உறக்கம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். ஹோர்மோன் பிரச்சினை களாலும் தூக்கமின்மை ஏற்படும்.

தூக்கத்தில் நடப்பது மற்றும் உளறுதல், தூக்கத்தில் பற்களை நறநறவென கடிப்பது, இவை தவிர இன்சோமினியா எனப்படும் தூக்கமின்மை நோயும் ஒரு சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நோயின் அறிகுறிகள்:

சீக்கிரம் விழிப்பு வருதல், அடிக்கடி விழிப்பு வருதல், தூங்க முடியாமை, காலையில் எழும்போது ஒருவித மந்த நிலை (சுறுசுறுப்புடன் செயல்பட முடியாத நிலை) இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலேசானையைப் பெற வேண்டும். உறக்கம் என்பது இயற்கையாக உடலும் உள்ளமும் ஓய்வு பெறுவதற்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.

ஆழ்ந்த நிலையில் தேவையான அளவு தூங்கி எழுந்தால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியும் உத்வேகமும் பெறும். குழந்தைகளுக்கு பொதுவாகவே 15 முதல் 16 மணி நேரம் தினமும் உறக்கம் தேவை. அதுவே இளம் வயதில் 8 முதல் 9 மணி நேரமும் அதற்கடுத்து உள்ளவர்களுக்கு 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் தேவை. அதாவது பொதுவாக சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 8 மணி நேரம் உறக்கம் தேவை.

வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்திற்காக ஒதுக்கினால் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம். அது மட்டுமல்ல தெளிவான சிந்தனை யுடனும் முழுமையான அர்ப்பணி ப்புடனும் முழு உழைப்பையும் நமது வேலைகளில் காட்ட முடியும். உறக்கம் தொடர்பாக எந்தப் பிரச்சினை இருந்தாலும், மருத்துவரை அணுகி அவர்தம் ஆலேசானையைப் பெற்று அதன்படி செயற்படுவது மிகச் சிறப்பானது. இருப்பினும் நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறப்பாக வாழலாம். அவற்றுள் சில,

* உறக்கத்திற்கு என ஒதுக்கப் படும் நேரத்தை (சராசரியாக தினமும் 8 மணி நேரம் மற்றும் குறித்த நேரத்துக்கு) முழுமையாக முறையாகப் படுத்து, பயன்படுத்த வேண்டும்.

* உறங்குவதற்கு முன் மது வகைகளை பயன்படுத்தக் கூடாது. படுக்கைக்கு முன் புகைபிடிப்பதோ இடையில் விழிப்பு வந்தால் புகை பிடிப்பதோ கூடாது.

* படுப்பதற்கு முன் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது. மிதமான அளவு உணவு உட்கொண்ட பின் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது.

* தினமும் உடற் பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உறங்குவதற்கு 4 அல்லது 5 மணி நேரம் முன்னதாக உடற் பயிற்சி செய்தால் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி கிடைக்கும்.

உறங்கும் நேரத்தில் அதிக அளவு ஒலி - ஒளி இரைச்சல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி அதிகாலையில் குறித்த நேரத்துக்கு விழித்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தியானம், யோகாசனம் போன்ற பயனுள்ள பயிற்சிகளைச் செய்ய லாம். உறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக மனதுக்கு மகிழ்ச்சி தரும் புத்தகங்களைப் படிப்பது மற்றும் பாடல்களையோ, இசையையோ கேட்பதை வாடிக்கையாகக் கொள்ளலாம். படுக்கைக்குச் செல்லும் முன், கவலைகளை மறந்துவிட்டு உறங்குவதை மட்டுமே நோக்க மாகக் கொள்ள வேண்டும்.

வாய்ப்புள்ள போதே பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காகக் கண்ணிரண் டையும் விற்று சித்திரம் வாங்குவ தைப் போல ஆகிவிடாமலும், உடலும் உள்ளமும் முழு ஓய்வு பெறும் வகையில், ஆழ்ந்த தேவையான உறக்கத்தைப் பெற்று நோய் நொடியின்றி அமைதியாக நாமும் வாழ்ந்து மற்றவர்களை யும் வாழ வழி விடுவோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com