Contact us at: sooddram@gmail.com

 

கிடைத்த சந்தர்ப்பங்களை தலைவர்கள் நிராகரித்ததால் மக்களின் தலையில் மண்

(ஜீவகன்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எதிராகப் பாரதூரமான ஒரு குற்றச் சாட்டை இவ்வார முற்பகுதியில் முன்வைத்தது. வடக்கில் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி ஒரு லட்சம் படையினரைக் குடிய மர்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிக் கின்றது என்பதே அக்குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டு எவ்வளவுக்கு உண்மைத் தன்மையானது என்பது ஆராய்ந்து அறியப்பட வேண்டியதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதுபற்றிப் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருப் பதிலும் பார்க்க அரசாங்கத்துடன் நேரடியாகப் பேசி உண்மை நிலையை அறிவதற்கும் உண்மையானால் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் முயற்சித்திருக்க வேண்டும். அது தான் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய நடைமுறை.

இவ்வாறான குற்றச்சாட்டுகளைப் பத்திரிகைகளில் அறிக்கையாக வெளியிடுவதன் மூலம் அரசியல் லாபம் தேடலாம். உரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தான் பிரச்சினைக்கான தீர்வைப் பெற முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்விடயம் பற்றிப் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டதுடன் நின்றுவிட்டார்கள் போலத் தெரிகின்றது.

எவ்வாறாயினும், கூட்டமைப்பின் இக்குற்றச்சாட்டு பாரதூரமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஐக்கிய இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் வாழும் உரிமை எல்லாப் பிரசைகளுக்கும் உண்டு என்பதை மறுதலிக்க முடியாதெனினும் அரசாங்கமோ அல்லது வேறேதும் அமைப்போ நடைமுறைப்படுத்தும் குடியேற்றங்கள் மூலம் எந்தவொரு பிரதேசத்தினதும் சனத்தொகை விகிதாசாரம் பெருமளவில் மாற்ற மடைவது அப்பிரதேசத்தில் இன ஐக்கியத்துக்கும் அமைதிக் கும் பங்கம் ஏற்படுத்தவே செய்யும்.

கூட்டமைப்புத் தலைவர்கள் தங்கள் குற்றச்சாட்டு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். குற்றச்சாட்டைப் பத்திரிகைகளில் வெளியிட்டுவிட்டு அது பற்றி நடவடிக்கை எடுக்காமலிருப்பதும், நடவடிக்கை ஏதாவது எடுத்திருப்பின் மக்களுக்கு அதைத் தெரிவிக்காம லிருப்பதும் அரசாங்கத்துக்கு எதிரான உணர்வலைகளை வளர்க்கும் நோக்கத்தை மாத்திரம் கொண்டவை. அரசாங்கத்தை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ள உரிமை. இந்த வகையில், அர சாங்கத்துக்கு எதிரான உணர்வலையை வளர்ப்பதோ ஆதரவான உணர்வலையை வளர்ப்பதோ அந்தந்தக் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தது. ஆனால் அது தான் அக்கட்சிகளின் பொறுப்பாகாது. மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயற்பட வேண்டியதே பிரதான பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற் றுவதில் கூட்டமைப்பு அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. இவர்களுடைய அரசியல் வரலாறே இதுதான்.

அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களுடனேயே இனப் பிரச்சினை தோற்றம் பெற்றது. தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை குடியேற்றங்கள் பற்றிப் பேசாத நாளில்லை. இன்றும் பேசுகின்றார்கள். தீர்வுக்காக ஏதாவது செய்தார்களா என்றால் இல்லை என்றே கூறவேண்டும்.

கிடைத்த சந்தர்ப்பங்களை இத் தலைவர்கள் சரியாகப் பயன் படுத்தியிருந்தால் இன்று குடியேற்றம் பற்றிப் பேச வேண்டிய தேவை இருந்திருக்காது. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகுவதற்குப் பங்காளிகளாக இருந்தார்கள். வடக்கு, கிழக்கு மாகாண சபையை நிரா கரித்தார்கள். பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர் வுத் திட்டத்தையும் நிராகரித்தார்கள்.

யானை தனது தலையில் மண் அள்ளிப் போட்ட மாதிரி என்பார்களே! அதுபோல, கிடைத்த சந்தர்ப்பங்களை நிராகரித்ததன் மூலம் தமிழ் மக்களின் தலையில் மண் அள்ளிப் போட் டிருக்கின்றார்கள். இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் அனைத்துக்கும் இத் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள்.

தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம்

பல தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழ்க் கட்சிகளின் அரங்கு என்ற பெயரில் செயற்படுவது தெரிந்ததே. இக்கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்தன. அந்த அழைப்பைப் பரி சீலிப்பதாகக் கூட்டமைப்புப் பிரமுகர்கள் சிலர் கூறிய போதிலும் இதுவரை எந்த முடிவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள ஒரு கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கோடி காட்டுகின்றது.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களை ஒன்றுபடுத்தும் அரங்கம் உரிய நேரத்தில் அமைக்கப்படும் என்று கல்முனையில் மாவை சேனாதிராசா கூறியிருக்கின்றார். தற்போது அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் முஸ்லிம்களும் மலையக மக்களும் சேர்ந்துகொள்வார்கள் என்றோ சேர்த்துக்கொள்ளப்படு வார்கள் என்றோ அவர் கூறவில்லை. தமிழ், முஸ்லிம் மலையக மக்களை ஒன்று படுத்தும் அரங்கம் உரிய நேரத்தில் அமைக்கப்படும் எனக் கூறுவது புதிதாக அமைப்பொன்று உருவாகும் என்பதையே குறிக்கின்றது.

தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என்று இவர்கள் அடிக்கடி கூறி வருகின்றார்கள். கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக் கைக்குச் செவி சாய்க்காமல் மக்களின் ஐக்கியம் பற்றிப் பேசுவது தங்கள் அரசியல் பாதையில் மக்கள் அணிதிரள வேண்டும் எனக் கூறுவதற்குச் சமன். இதற்கு ஐக்கியம் என்ற வார்த்தை பொருத்த மில்லை.

பொது நோக்கத்துக்கான ஐக்கியம் என்பது மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்கள் முக்கியமான ஒரு பிரச்சினையில் தங்கள் வேறுபாடுகளை மறந்து பொதுவான ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரித்துச் செயற்படுவதாகும். தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இனப் பிரச்சினையையும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை யும் முக்கிய பிரச்சினையாகக் கருதி அது தொடர்பான கூட்டுச் செயற்பாட்டுக்காக அமைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ்விரு விடயங்களையும் முக்கிய பிரச்சினையாகக் கருதுவதாகவே கூறுகின்றது. ஆனால் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படத் தயாராக இல்லை. இவ்விடயங்களில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் பின்பற்றும் அணுகுமுறையிலும் பார்க்கத் தங்கள் அணுகுமுறை வித்தியாசமானது என்று கூட்டமைப்பினர் கருதுவதாலேயே இந்த முடிவு எனக் கொள்ளலாம்.

குறிப்பிட்டுக் கூறுவதானால் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளும் அமைப்புகளும் பின்பற்றும் அணுகுமுறைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகு முறைக்குமிடையே பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. இன்றைய நிலையில் எது சாத்தியமோ அதை ஏற்றுக்கொண்டு இறுதித் தீர்வை நோக்கி நகரும் அணுகுமுறையைத் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் பின்பற்றுகின்றார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்த முழுமையான தீர்வைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப் படுத்தியிருக்கின்றார்கள்.

கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு தான் தமிழ் மக்களின் அவலங்களுக்குக் காரணம். ஒவ்வொரு தீர்வும் முன்வைக்கப்பட்ட வேளைகளில் அதிகாரம் போதாது எனக் கூறி இத் தலைவர்கள் நிராகரித்தார்கள். இப்படி நிராகரித்ததால் இன்று ஏற்பட்டுள்ள நிலை என்ன என்பது பற்றி இத்தலைவர்கள் கொஞ்சம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். பண்டா - செல்வா ஒப்பந்தம் முதல் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் வரை நிராகரித்த ஒவ்வொரு தீர் வினதும் அதிகாரங்களுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பார்க ளேயானால் தங்கள் தவறு இத் தலைவர்களுக்குப் புரியும். பட்டு வேட்டிக்காக அடம் பிடித்துக் கட்டியிருந்த கோவணத்தையும் கைவிட்ட நிலைக்கு வந்திருக்கிறோம்.

அரசியல் கட்சிகள் அணுகு முறைகளை மாற்றுவதைத் தோல்வியாகவோ பின்னடைவாகவோ கருதக் கூடாது. ஒரு கொள்கை அல்லது அணுகுமுறை மக்களுக்குப் பாதகமான விளைவை ஏற்படுத்துகின்றதெனத் தெரிந்தால் உடனடியாக அக் கொள்கையை அல்லது அணுகு முறையை மாற்றியாக வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இந்த நிலைக்கு வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் கொள்கையும் அணுகுமுறையும் தமிழ் மக்களைப் படுகுழியில் தள்ளிவிட்டன.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற கொள்கையும் உடனடியாகச் சாத்தியமான தீர்வை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் அணுகுமுறையுமே இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியவை. மக்களின் நலனின் அக்கறை உண்டென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com