Contact us at: sooddram@gmail.com

 

ரூபவதியும் இமெல்டாவும் மலையகத்துக்குக் கிடைப்பது எப்போது?

(சிவமணம )

200 வருடகால வரலாற்றைக் கொண்ட மலையகத்தில் அரச தொழிற்துறைகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கையானது தேசிய சராசரியுடனும், இன விகிதா சாரத்துடனும் ஒப்பிடுகையில் மிகவும் சொற்ப அளவிலேயே காணப்படுகிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மலையக சமூகத்திற்கு கிடைத்த கல்வி ரீதியான வாய்ப்பு நாடற்றவர் நிலை காரணமாக 30 வருடங்கள் பிந்தியே கிடைத்ததும் இதற்கான ஒரு காரணமாகும். இந்த 30 வருட கால பின்னடைவானது அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாசார, கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், போஷாக்கு, உட்கட்டமைப்பு வசதிகள், அரசாங்க தொழில் வாய்ப்புக்கள், சூழல் முகாமை, சமூக இடப்பெயர்வு, சமூக அந்தஸ்து, வாழ்க்கைத்தர முன்னேற்றம், அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள், புலமைப் பரிசில்கள், சம்பள உயர்வுகள் போன்ற பல்வேறு விடயங்களில் ஏனைய சமூகத்தினரை விட மிகவும் பின்னடைந்து போனதற்கான பிரதான காரணமாகும்.

இந்த 30 வருட கால பின்னடைவா னது மலையக மக்களின் பல்வேறு வாழ்வியல் அம்சங்களிலும் தாக்கம் செலுத்தினாலும் கூட இன்று பல துறை களிலும் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதைக் காணக்கூடிய தாக இருக்கிறது.

மலையகத்தில் க.பொ.த. உயர்தரம் வரை படித்தவர்கள் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் படித்து வெளி யேறிய பல துறைகளையும் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். க.பொ.த. சாதாரணதரம் வரை படித்த மாணவர்களின் எண்ணி க்கை பல மடங்கு அதிகமாகும். இவற்றையெல்லாம் விட கலைத்துறை, தச்சுத் தொழில், மேசன், வெல்டிங், வாகனத்திருத்தம், கைத்தொலைபேசி கள் திருத்துதல், புகைப்படக்கலை, வீடீயோ, வீட்டுத் தோட்டம், சுயதொழில் செய்வோர் எனப் பல தொழில்துறை களில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது.

தற்போதைய நிலையில் அரசாங்க சேவை என்பது ஆசிரியர் தொழில் மட்டுமே ஓரளவு மலையகப் பிர தேசத்தைச் சேர்ந்தவர்களால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. க.பொ.த. உயர்தரம் வரை படித்தவர்களே பெரும் பாலும் இத்தொழிலுக்கு வருகின்றனர்.

ஒரு நாட்டின் அரச தொழில்துறை யில் ஆயிரக்கணக்கான தொழில் பிரிவுகள் இருக்கின்றன. இப்பிரிவு களில் மலையக இளைஞர் யுவதிகள் எத்தனை சதவீதமானோர் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய விடய மாகும். ஏனெனில் மிகக் குறைவானவர்கள்.

ஒரு சமூகம் பல துறைகளிலும் அரச தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் அச்சமூகத்தின் அறிவுப் பாய்ச்சலும், சமூகத்தின் தேவைகளும் முழுமையாக அந்த சமூகத்தைச் சென்றடையும்.

உதாரணமாக வைத்தியர்கள், பொறி யியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசா ங்க உயர் பதவிகள் போன்றவற்றில் கணிசமான அளவு அதிகரிக்கும் போதே அரசுக்கும் அச்சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகள் அதிகரிப்ப துடன் அரச நிர்வாகம் அந்த மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

இத்துறைகளில் மலையகத்தைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய வர்களே உயர்ந்த பதவிகளில் இருக் கின்றனர். எதிர்வரும் காலங்களில் மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் அரச நிர்வாகிகளாக வருவதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் அரசியல்வாதியாக வருவதற்கு வெறுமனே வாய்ச்சொல் வீரராகவும் பணம் படைத்தவராகவும் இருந்தாலே போதுமானது.

ஆனால் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உடையவராகவும் அரச உயர் பதவிகளில் நிலைத்து நிற்கக் கூடியவராக ஒருவர் படித்து பட்டம் பெற்று வந்தால் அதுவும் கூட மலையக சமூகத்தின் மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதனால் இப்பரீட்சையில் சித்தியடை வதற்கான வசதி வாய்ப்புக்களை எமது அமைச்சர்கள், எம்.பிக்கள், சமூகப் பற்று கொண்டவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தால் மலையகப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகமான இளைஞர் யுவதிகளை அரச பதவிகளுக்கு உள்வாங்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி எஸ்.எம். சார்ள்ஸ், யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அனைவரும் பெண்மணிகளே, இவர்களைப் போல மலையகத்தைச் சேர்ந்த படித்த யுவதிகளும் அரச உயர் பதவிகளை வகிக்க வேண்டு மானால் அதற்கான அர்ப்பணிப்பும், சமூக நோக்கும், வாழக்கையில் முன்னேற வேண்டும் என்ற இலட்சியமும் ஏற்பட வேண்டும்.

ஒரு ரூபவதியும் இமெல்டாவும் எப்போது மலையகத்தில் தோன்றப் போகிறார்கள்?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com