Contact us at: sooddram@gmail.com

 

எனது அருமைத் தோழர்களே!

துவக்கத்தில், 8 வாரங்களுக்கு முன்பு, ஒரு போர் வெடிக்கும் அபாயத்திற்கு உடனடி தீர்வு இல்லை என்று எண்ணியிருந்தேன். எனது கண்களில் அது தெரிகிறது. உலகின் இருப்பு நீடித்திருப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிவதைத் தவிர வேறு வழியில்லை. நமது இந்தப் பிராந்தியத்தில் ஒரு நேரடியான தாக்குதல் நடத்தப்படுவதற்கான எந்தக் காரணமும் இல்லை; இப்பூவுலகின் இதரப் பல்வேறு பகுதிகளைப் போலவே. மனித குலம் எப்போதுமே ஒரு உயரிய கண்ணோட்டத்தின்பால், அது எவ்வளவு தொலைவானதாக இருந்தாலும் ஈர்க்கப்பட்டிருக்கும். எனினும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து நான் யோசித்துப் பார்க்கிறேன்.

நல்வாய்ப்பாக நம்பிக்கை ஒளியைப் பெறுவதற்கு - ஒரு உறுதிப்பாட்டை உணருவதற்கு எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை. ஒரு வேளை அந்த வாய்ப்பு தவறிப் போய்விட்டால், அதனால் ஏற்படும் பேரழிவின் தொடர் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். அப்படியொரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் மனித இனத்திற்கு விடிவே கிடைக்காமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. இப்படி நிகழ வேண்டுமென்று நான் விரும்பவில்லை; ஆனால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் இதற்கு முன்பு கனவில் கூட காணாத சூழ்நிலைமையை இப்பூவுலகில் உருவாக்கியிருக்கிறது.

ஒரு மனிதர், அமெரிக்க தேசத்தின் ஜனாதிபதி, இதுதொடர்பாக தானாகவே முடிவெடுக்க முடியும். அவருக்குப் பல வேலைகள் இருக்கிறது. மனித குலத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்து குறித்து உணர்வதற்கு அவர் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவரது ஆலோசகர்கள் அதை உணர்ந்து கொள்ள துவங்கிவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் கடந்த 12 ஆண்டு காலமாக கியூபா மீதான கொடிய பகைமை நிறைந்த அரசியல் கட்டமைப்பில் கியூப தேசத்தின் வீரனாம் ஜெரார்டோ மீது நடத்தி வந்த சிறைக் கொட்டடி சித்ரவதையை தற்சமயம் முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இது ஒரு சிறிய நடவடிக்கைதான்.

அடுத்த நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதை நாம் முன் உணர முடியும். ஜெரார்டோவைச் சந்திப்பதற்கு அட்ரியானாவுக்கு அனுமதி கிடைக்கலாம் அல்லது ஜெரார்டோ விடுதலை செய்யப்படலாம். இத்தகவலை அட்ரியானா மூலம் நான் அறிந்து கொண்டேன். 12 ஆண்டு காலம் கொடிய சிறைக் கொட்டடியில் அநீதியாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் ஜெரார்டோவின் உணர்வு எப்போதும் போல் துடிப்புடனே இருக்கிறது.

இப்போது ஈரானுக்கு வருவோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பும் விதத்தில் ஈரான் ஒரு இஞ்ச் கூட தனது உறுதிப்பாட்டிலிருந்து விட்டுக் கொடுக்க மறுக்கிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கெனவே தங்களது ராணுவ பலத்தை குவிக்க ஆரம்பித்து விட்டன. இனி தாக்குதல் நடத்துவதற்கான தேதி நிர்ணயிக்க வேண்டியதுதான் பாக்கி. இதற்கான ஒப்புதலையும் 2010 ஜூன் 9-ம்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பெற்று விட்டார்கள்.

மனிதர்கள் சாதிக்க விரும்பும் ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. இப்படிப்பட்ட கடுமையான நிலைமையில் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்ட ஒரு தாக்குதலுக்கு உத்தரவிட வேண்டிய அந்த நபர் ஜனாதிபதி பாரக் ஒபாமா; அவர் இந்தப் பிரம்மாண்டமான பேரரசின் விதிகளையே பின்பற்றுவார். ஆனால், அப்படிப்பட்ட ஒரு உத்தரவை அவர் பிறப்பிக்கும் அந்த தருணம், தனது அதிகாரத்தின் எல்லையில் நின்று உத்தரவைப் பிறப்பிக்கும் அந்தக் கணம், ஏகாதிபத்திய சக்திகளிடையே நடந்து கொண்டிருக்கும் மோசமான போட்டியின் காரணமாக மிகப்பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ள, மிகவும் வேகமான, எண்ணற்ற அணுசக்தி ஏவுகணைகளை இயக்குவதற்கு உத்தரவிடுகிற அந்த தருணம், அவர் லட்சக்கணக்கான மனிதர்களின் உடனடி மரணத்திற்கு உத்தரவிடுகிறார் என்று பொருள்; கணக்கிடவே முடியாத அளவிற்கு ஏற்படப் போகிற மரணங்களில் அவரது சொந்த நாட்டு குடிமக்களும் அடங்குவார்கள்; ஈரானைச் சுற்றி கடல் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கிற அமெரிக்க போர்க்கப்பல்களில் இருக்கும் அமெரிக்க வீரர்களும் அடங்குவர். அதே தருணத்தில் மத்தியக் கிழக்கிலும் அதற்கு அருகிலும், அது மட்டுமின்றி ஒட்டுமொத்த யுரேஷியாவிலும் மிகப்பெரும் மனிதப் பேரழிவு ஏற்படும்.

இந்த தருணத்தில் விதியை தீர்மானிக்கப் போவது யார்? அமெரிக்காவின் ஜனாதிபதி ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர்; முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கலப்பினக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அதைச் செய்யக்கூடாது; ஆனால் அந்த விழிப்புணர்வு அவருக்கு இருக்குமா? அதை ஏற்படுத்தவே நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள், அவர்கள் அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி, இஸ்ரேலை விட்டுத் தள்ளுங்கள்.., அனைத்து நாடுகளின் தலைவர்களும் அவர் அப்படி செய்து விடக்கூடாது என வற்புறுத்த வேண்டும். அதற்குப் பின்னால் இந்த உலகம் அவருக்கு அனைத்து விதமான மரியாதைகளையும் செய்யும். அது நடந்து விட்டால், இந்த பூமியில் தற்போது நிறுவப்பட்டிருக்கிற அரசியல் கட்டமைப்பு முடிவுக்கு வந்து விடும்; தவிர்க்க முடியாதபடி அது உடனடியாக நிலைகுலைந்து விடும்.

இந்த கட்டமைப்பின் கருவியாக இருந்து கொண்டிருக்கும் மேற்படி கரன்சி (டாலர்) தனது மதிப்பை இழந்து விடும். இந்தக் கரன்சிதான் உலகெங்கிலும் இருக்கும் மக்களின் தியாகத்தைச் சுரண்டி, வேர்வையைச் சுரண்டி மேற்கண்ட கட்டமைப்புக்கு அளவில்லாத செல்வத்தைக் குவித்துக் கொடுத்தது.

நாம் நினைப்பது நடந்து விட்டால், உலகெங்கிலும் பொருட்களும் சேவைகளும் விநியோகிக்கப்படுவதில் புதிய வடிவங்கள் பிறக்கும். கல்வியும் சமூக அடிப்படை வசதிகளுக்கான வாய்ப்புகளும் அமைதியான முறையில் உதயமாகும்; ஆனால், போர் ஏற்பட்டு விட்டால் தற்போதைய சமூகக் கட்டமைப்பு முற்றிலும் காணாமல் போகும்; உணவுப் பொருள் உட்பட அனைத்துப் பொருட்களின் விற்பனையும் எல்லை இல்லாத அளவிற்கு அதிகரிக்கும்.

அதை தவிர்த்து விட்டால், இப்பூவுலகில் இருக்கும் மனிதர்கள் எல்லாம் ஒரு ஒழுங்காற்றுக்குள் வர முடியும்; புதுப்பிக்கத்தக்க அனைத்து வளங்களையும் பாதுகாக்க முடியும்; பூமியை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றத்தைத் தவிர்க்க முடியும்; அனைத்து மனிதர்களின் உழைப்பு சக்தியையும் உத்தரவாதப்படுத்த முடியும்; நோயாளிகளை குணமடையச் செய்ய முடியும்; அடிப்படை அறிவும், கலாச்சாரமும், அறிவியலும் மனித குலத்தின் சேவைக்கே என்பதை உறுதிப்படுத்த முடியும். உலகெங்கிலும் இருக்கும் நமது குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் எவரும் பேரழிவைத் தரும் அணுகுண்டு அபாயத்தில் சிக்கி அழிந்து போவதை தடுக்க முடியும்.

இந்தச் சிந்தனையையே நான் கியூப தேசிய நாடாளுமன்றத்தின் மூலம் இந்த உலகிற்கு விதைக்க விரும்புகிறேன்.

எனது அருமைத் தோழர்களே!

இந்தச் சிந்தனைகளோடு எனது வார்த்தைகளை நிறைவு செய்கிறேன். கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

(ஆகஸ்ட் 8 அன்று கியூப நாடாளுமன்றத்தில் மகத்தான புரட்சியின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை.)

தமிழில்: எஸ்.பி.ஆர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com