Contact us at: sooddram@gmail.com

 

மதங்கள் வாயிலாக உருவாகும் நல்லிணக்கம்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் உற்சவங்கள் ஆரம்பமாகியிருக்கி ன்றன. நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மடுமாதா திருத்தலம், சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதர் ஆலயம் போன்ற திருத்தலங்களும் இவற்றில் உள்ளடங்குகின்றன. இதேசமயம் கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க திருத்த லங்களான மாமாங்கேஸ்வரர் ஆலயம், கோணேஸ்வரர் கோயில் போன்றவற்றின் வருடாந்த உற்சவங்கள் ஓரிரு தின ங்களுக்கு முன்னரே நிறைவடைந்தன. மதத் தலங்களில் இம்முறை நடைபெறும் உற்சவங்கள் கடந்த காலங்களைப்போலன்றி வெகுவிமரிசையாக அமைந்திருப் பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கதிர்காமக் கந்தன் ஆலயத்திலும் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோயிலிலும் இம்முறை வருடாந்த உற்சவத்துக்காக வந்திருந்த பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாததாக இருந்தது. ஆலய உற்சவ வரலாற்றில் இதுபோன்ற பக்தர்கள் எண்ணிக்கையை முன்னரெல்லாம் காண முடிந்ததில்லை.

இது ஒருபுறமிருக்க தென்னிலங்கை ஆலய உற்சவங்களுக்கு வட க்கு, கிழக்கு பிரதேசங்களிலிருந்து எண்ணிலடங்காத பக்தர் கள் சென்றிருந்ததை இப்போதுதான் காண முடிந்தது. அதே போன்று வடக்கு, கிழக்கு ஆலய உற்சவங்களுக்கும் நாட்டின் தென்பகுதியிலிருந்து பெரும்பான்மையினப் பக்தர்கள் பெரு மளவில் செல்வதை அவதானிக்க முடிகிறது. மடுமாதா திரு விழாவில் இம்முறை இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவரென எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்றதொரு சூழ்நிலையை கடந்த காலத்தில் எங்களால் காண முடிந்ததில்லை. ஆலய உற்சவங்களும் இத்தனை தூரம் விமரிசையாக நடைபெறவில்லை. ஆலய உற்சவங்களின் போது கிரியைகள் மட்டுப்படுத்தப்பட்டன. அடுத்த கணம் எத்தகைய விபரீதம் நேருமோவென்ற அச்சத்தில் பக்தர்கள் ஆலயம் செல்வதைத் தவிர்த்தனர். பாண்டிருப்பு திரெளபதை யம்மன் ஆலயம் போன்ற ஒருசில ஆலயங்களில் உற்சவ வேளையில் குண்டுவீச்சு சம்பவங்கள் இடம்பெற்றமை ஞாப கமிருக்கலாம்.

இன்றைய வேளையில் திருத்தல உற்சவங்கள் சிறப்பாக நடை பெறுவதற்கு அமைதியான சூழ்நிலையே காரணமாகும். அனை த்து இன மக்களும் எதுவித அச்சமுமின்றி நினைத்த நேரத் தில் நாட்டின் எப்பகுதியிலும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வரக்கூடிய அமைதியான சூழல் இப்போது நிலவுகிறது.

இதேசமயம் மற்றொரு விடயமும் இங்கே கவனிக்கத்தக்கதாக உள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள திருத்தலங்களின் உற் சவத்துக்காக தென்னிலங்கையிலிருந்து சிங்கள மக்கள் இப் போதெல்லாம் பெருமளவில் செல்வதைக் காண முடிகிறது. அது மாத்திரமன்றி வடக்கு, கிழக்கில் உள்ள இந்து, கிறிஸ்தவ திருத்தலங்களில் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக தென்னிலங்கை சிங்கள மக்கள் பெருமளவில் செல்கின்றனர்.

இதுவொரு ஆரோக்கியமான சூழல் ஆகும். இனங்களுக்கிடை யேயான நல்லிணக்கம் உருவாவதற்கு மொழி, மதம் ஆகி யன பாலமாக அமைகின்றன. பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டைப் பொறுத்தவரை குடிமகன் ஒருவன் தனது தாய் மொழியில் மாத்திரமன்றி இங்குள்ள மற்றைய மொழியிலும் பரிச்சயம் பெற்றிருப்பதானது இன நல்லுறவுக்குப் பாலமாக அமையுமென்பதில் ஐயமில்லை.

அதேபோன்று ஒருவரின் மதத்தை மற்றவர் கெளரவப்படுத்துவ தென்பது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வுக்கும் ஐக் கியத்துக்கும் வழியேற்படுத்தவே செய்யும். மற்றைய இனங்க ளின் மதங்களை கெளரவப்படுத்துவதே உயரிய மாண்பு என் பதை அனைத்து மதங்களுமே வலியுறுத்துகின்றன.

மதம், மொழி போன்றவற்றால் மிக நீண்ட காலமாக விலகியிரு ந்த இனங்களிடையே மதங்கள் வாயிலாக நல்லிணக்கம் தோன்றுவதற்கான சூழலொன்று துளிர்விட்டிருக்கிறது. ஆரோ க்கியமும் பக்குவமும் நிறைந்த இத்தகைய சூழல் நிலைத்திட வேண்டும். இதன் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லுறவு பலமடைய வேண்டும் என்பதே எமது அவா ஆகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com