Contact us at: sooddram@gmail.com

 

நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக சமூகவிரோதிகள் ஆட்கடத்தல்களை மேற்கொள்கிறார்கள்

30 ஆண்டுகால யுத்தத்தின்போது அரசாங்கப் படையினர் அப் பாவிப் பொதுமக்களை ஈவிரக்கமற்ற முறையில் துன்புறுத்தி யதுடன் நின்று விடாமல் தமிழ் பெண்களை மானபங்கப் படுத்தியது போன்ற பலதரப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட் டார்கள் என்று எல்.ரி.ரி.ஈ.யை ஆதரிக்கும் தேசத்துரோக சக்தி களும், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலரும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வந்தார்கள். இத்தகைய தீய நடவடிக்கைகளினால் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை அரசாங் கப் படைகள் எத்தனையோ சந்தர்ப்பங்களில் போர் முனையில் படுதோல்வியடையச் செய்யும் வாய்ப்புக்கள் இருந்தும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக எங்கள் நாட்டில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் வெற்றியடையும் கட்டத்தில் இருந்தபோதிலும் யுத்த நிறுத்தம் அல்லது அந்த யுத்தத்தின் அழுத்தங்களைத் தளர்த்தி வாபஸ் பெறுதல் போன்ற தீர்மானங்களை எடுக்கவேண்டியிருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்துக்கும் இத்த கைய சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்நாட்டு மக்க ளாகிய சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கர வாத பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற உன்னத நோக் கத்துடன் அரசாங்கத் தலைவரான ஜனாதிபதி சர்வதேச அழுத் தங்களை பொருட்படுத்தாமல் யுத்தத்தை தொடர்ந்து நடத்தி இறுதி யில் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று இந்நாட்டு மக் களை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் பெரும் பணியை நிறைவேற்றினார்.

அதையடுத்து எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் வெளிநாட்டிலுள்ள முகவர்கள் யுத்தம் முடிவடையும் இறுதிநாட்களில் இராணுவத்தினர் மக்களை படுகொலை செய்தார்கள் என்ற செய்திகளை சர்வதேச ரீதியில் பரப்பிவந்தனர். இம்முயற்சிகளுக்கு சனல் 4 தொலைக்காட்சி சேவை யில் ஜோடிக்கப்பட்ட மனித படுகொலைகள் பற்றிய காட்சிகள் இலங்கைக்கு எதிரான போலி பிரசாரத்துக்கு சிறந்த ஆயுதங் களாக அவர்களுக்குக் கிடைத்தன.

என்றும் உண்மை நிலைத்திருக்கும் என்பதற்கமைய இன்று உலக நாடு கள் இலங்கை அரசாங்கமும், இராணுவத்தினரும் அப்பாவித் தமிழர்களை திட்டமிட்டு கொலை செய்யவில்லையென்பதை உணர்ந் துள்ளன. இதனால்தான் இன்று புலிகள் ஒழிக்கப்பட்டுள்ள போதி லும் இந்தியா உட்பட பல நாடுகள் அவ்வியக்கத்தை தொடர்ந்தும் தடைசெய்து வருகின்றன.

தங்களுடைய தில்லுமுல்லுகள் எவையும் பயனளிக்கவில்லை என்பதை உணர்ந்த எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் சுயநல நோக்கத்துடன் இலங்கை யிலுள்ள அப்பாவித் தமிழர்களிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தை கட்டணமாகப் பெற்று அவர்களை அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாகக் கடத்திச்சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருவதற்கு ஒரு சிறந்த வழியை அமைத் துள்ளார்கள். இலங்கையில் தமிழர்கள் யுத்தம் முடிவடைந்து மூன் றாண்டு காலம் கழிந்துவிட்டபோதிலும் தொடர்ந்தும் துன்புறுத்தப் படுவதனால்தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்று இந்த தேசத்துரோகிகள் இப்போது போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளி நாடுகளுக்கு சென்று அங்கு அரசியல் புகலிடம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதனால் வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விடுத்துள்ள வேண்டு கோளில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கை க்கு நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அரசியல் புகலிடம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதனால், வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையரின் எண் ணிக்கையை அந்நாடுகளுக்கு சமாளிக்க முடியாத ஒரு பெரும் சவாலாக அமைந்திருப்பதனால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண வேண்டுமாயின், அந்த அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட இலங்கையரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென்று எமது அரசாங்கம் கேட்டிருப்பதாக தெரிவித்தார்.

இவ்வாண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று அரசி யல் அடைக்கலம் கோரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார். எல்.ரி.ரி.ஈக்கு ஆதரவான இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த சில அரசியல் சக்திகள் எங்கள் நாட்டில் உள்ள அரசியல் குழுக் களுடன் இருக்கும் தங்களின் நெருக்கமான தொடர்பை அடிப் படையாக வைத்து, இந்த மனித கடத்தல்களை மேற்கொண்டு வரு வதை இலங்கை அரசாங்கம் இனங்கண்டுள்ளதென்றும் கூறினார்.

இவ்விதம் இலங்கையில் இருந்து ஆட்கடத்தலை மேற்கொண்ட இரு வர் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்கி றார்கள். இவர்கள் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு நூற் றுக்கணக்கான தமிழர்களை கடத்தி செல்ல எத்தனித்த போதே, கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள நல்ல, பலம் வாய் ந்த எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் சக்திகளின் நிதி உதவியுடனேயே இவர்கள் இந்த ஆட்கடத்தல் நாடகத்தை மேடையேற்றி, தமிழர் கள் இலங்கையில் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற போலிப் பிரசாரத்தை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார்.

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மீளாய்வு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பின்னணியி லேயே இந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். புலம்பெயர்ந்த பிரதான தமிழ் அமைப்புகள் இத்த கைய சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சியில் ஈடுபடுவோரை நிர பராதிகள் என்று காண்பிப்பதற்கு முயற்சிகள் எடுத்துவருவதாக தெரிவித்த அமைச்சர், இப்போது வெளிநாட்டு அரசாங்கங்கள் எமது புலம்பெயர்ந்த இலங்கை மக்களை உடனடியாக எங்கள் நாட்டுக்கு நாடு கடத்த வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் அவ்வரசாங்கங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.

தற்போது இலங்கைத் தமிழ் பிரஜைகளை படகுகள் மூலம் வெளிநாடு களுக்கு கடத்திச் சென்று அங்கு அரசியல் புகலிடம் பெற்றுக் கொடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை இந்த ஆட்கடத்தல் காரர்களுக்கு நல்ல வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் நல்ல வியாபாரமாக மாறியிருக்கிறதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com