Contact us at: sooddram@gmail.com

 

உயிரினங்களுக்கு மனிதன் படிப்படியாக உலை வைப்பதால் புவியின் சூழலுக்கு பெரும் ஆபத்து

ல்லுயிர் பெருக்க குறைவு என்பது தட்பவெப்ப மாறுதல், மாசடைதல், சுற்றுச் சூழல் நெருக்கடி ஆகியவற்றை விட உயிர் சூழலியல் முறையில் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதே உண்மை. மனிதனால் இயற்கைக்கு நேரும் நேரடி ஆபத்தைவிட இது மிகக் கடுமையானது. இதற்காக உலகளவில் ஒவ்வொரு நாடும் பல்லுயிர் பெருக்கத்தையும், அதன் விளைவையும் தெரிந்துகொண்டுள்ளனர். ஒவ்வொரு குடிமகனும் எளிமையாகப் புரிந்துகொண்டு தன்னையும் இப்பூவுலகையும் பாதுகாக்க வேண்டும். இதற்கு அரசு முழு அளவில் தன்னை அர்ப்பணித்து செயல்புரிய வேண்டும் என சமீபத்தில் கனடாவில் கூடிய அனைத்துலக சுற்றுச் சூழலியல் விஞ்ஞானிகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர்.

உயிரினங்களின் அழிவு பல்லுயிர் பெருக்க சீரழிவிற்கு முக்கிய காரணமாகிறது. இதுதான் இவ்வுலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தெளிவாக குறிப்பாக இல்லத்தரசிகளும், குழந்தைகளும், தொழிலதிபர்களும் புரிந்து சிற்றுயிர்களைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பராட் லீயின் கருத்து.

இவர் மிக்சிகன் பல்கலைக்கழக சுற்றுச் சூழல் ஆய்வக இயக்குனர் பூமிக் கோளத்தில் ஏற்படும் சீரழிவுகளைபெரும் சீரழிவு 5’ எனப் பட்டியலிடுகிறார்கள். இதில், 3வது இடத்தைப் பெற்றுள்ளது பல்லுயிர் பெருக்க குறைபாடு. கடந்த 20 வருட ஆய்வில் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்ட உயிர் சூழல் மண்டலம், அதிக நன்மைகளை மனித குலத்திற்கும், பிற உயிரினங்களுக்கும் தந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது.

இதை ஆய்வுகூட அறிவியல் தற்காலிக நன்மை என அழைக்கிறது. ஏனெனில் ஆய்வு கூடத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உணவு, தானிய வகைகள், மூலமே இந்த நன்மை வந்துள்ளது. இதற்குப் பின்னால் நாம் அன்றாடம் பார்த்த சிற்றுயிர்கள் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டன என்பது இப்போது தான் தெரிய வந்திருக்கிறது.

இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமெனில் உங்கள் இல்லத்தின் பின்புறத்திலோ அடி குழாய் இருக்கும் மண் தளத்திலோ நீங்கள் உண்டு எஞ்சிய உணவிலிருந்து முளைத்த ஹை பீரிட் தக்காளி செடி மிக பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கும். ஆனால், நீங்கள் சிறார் பருவத்தில் பார்த்த வண்ணத்துப் பூச்சிகளை இப்போதெல்லம் பார்க்கிaர்களா?

நவீன விஞ்ஞானமும் உயிரழி விற்கு காரணமாகிறது. செல்போன் கோபுரங்களால் சிட்டுக் குருவிகள் அழிந்து வருகின்றன என எல்லோரும் கூறிக்கூறி கருத்தின் முக்கி யத்துவத்தையே மழுங்கடித்து விட்டனர். செல்போன்களின் புதிய அவதாரங்களும், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் காரணமாக இவ்வாறான கருத்துக்கள் இவர்களைக் கவரவில்லை.

இது ஒருபுறமிருக்க குருவிகள் கூடுகட்ட இப்போதெல்லாம் வைக்கோல்களே கிடைப்பதில்லை. கூரை வேய்ந்த வீடுகளுமில்லை. வீட்டின் வாயிலில் இடது மூலையில் ஒரு சிறிய பானையை கட்டித் தொங்க விடவும் மக்கள் தயாராக இல்லை.

கிராமங்களிலெல்லாம் தற்போது அரசுத் திட்டங்களின் உபயமாக கொன்கிரீட் வீடுகள் முளைத்துவிட்டன. வயல்வெளியில் அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் அந்தக் காலத்தில் பெரிய கலன்களிலும், சணல் மூடைகளிலும், கூடைகளிலும் நிரப்பப்பட்டு மாட்டு வண்டிகளில் ஏற்றப்படும். அவைகளிலிருந்து சாலைகளிலும், வரப்புகளிலும் சிந்தும் தானியங்களை சிறு பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. இன்று இயந்திர அறுவடை ஒரு துளி தானியத்தைக் கூட சிந்த விடுவதில்லை. வைக்கோல்களும் துண்டு துண்டாக்கப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்டவை அடர்த்தியான பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு இயந்திரம் மூலம் வாய் தைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

எனவே ஒரு மணி தானியம் கூட சிந்த வாய்ப்பில்லாமல் போகிறது. இந்த முன்னேற்றமடைந்த அறிவியலின் சூழல் பறவைகளுக்கு உணவு நெருக்கடியைக் கொணர்ந்து அவைகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டது. குளவிகள் கூடுகட்டினால் மங்கலமான நிகழ்வுகள் வீட்டில் நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்கும் இருந்தது. அதனால் வீட்டின் மூலைகைளில் குளவிகள் சர்வ சுதந்திரமாய்கூடு கட்டி உயிர் வாழ்ந்தன.

தற்போதெல்லாம் வீட்டில் பூச்சி கள், பல்லிகள் வரக்கூடாது என் பதற்காக சுவரில் வர்ணம் பூசும்போது இரசாயன மருந்துகளை கலந்து பூசுகின்றனர். அம்மருந்துகளின் உபயத்தால் ஒரு சிறு பூச்சி கூட வீட்டிற்குள் நுழைவதில்லை. அப் படியே குளவிகள் வந்தாலும் அதன் கூட்டை அசிங்கம் என்று நினை த்து இடித்து எறிந்து விடுகின் றோம். கூட்டைக் கலைத்தாயோ கொலை பாவம் செய்தாயோஎன்ற பழமொழியெல்லாம் இன்று காலாவதியாகி நகைச்சுவையாகிப் போய்விட்டன. இந்தக் குளவிகள் சிறந்த புழு தடுப்பான் என்பது இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து நம்மை நாமே விலக்கிக் கொண்டுவிட்டோம். மேலும் அந்த இரசாயன மருந்துகள் தன் கோரக் கரங்களால் நம்மையும் அழிக்க காத்துக் கொண்டிருக்கின்றன என்பதை ஏனோ நினைக்க மறந்தே போனோம்.

உயிர் சூழல் பாதிப்பானது சத்தான உணவு உற்பத்தி, சுத்தமான தண்ணீர், நிலையான தட்பவெப்ப நிலைக்கும் கேட்டை விளைவித்துள்ளது. ஆனால், இன்று வரை நாம் இது குறித்து தெளிவான அறிவின்றி வாழ்ந்து வருகிறோம். சில அறிவியல் விஞ்ஞானிகள் கூட அறியாமையால் உயிர்ச் சூழல் பாதிப்பு பூமிக்கோளத்தைப் பெருமளவெல்லாம் பாதிக்காது. பிற சுற்றுச் சூழல் மாறுபாடுகளையும் அதன் விளைவுகளையும் ஒப்பிடும்போது பாதிப்பின் அளவு மிகக்குறைவு தான் என வாதிடுகின்றனர்.

ஹ¥ப்பர் மற்றும் அவரது சகாக்கள் இது குறித்து ஆய்வு செய்து சில அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அதில் உலகளவில் நடக்கும் சூழல் மாறுபாடுகள் பூமிக்கு எவ்வாறு மன அழுத்தத்தைக் &8!qனி வருகிறது என மிகச்சிறப்பாக விவரித்துள்ளனர். செடி கொடிகள் வளர்வது இறந்தவை மக்கிப்போவது பக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் செயல்பாடுகள் போன்றவையின் அடிப்படையில் அவர்களது அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஓசோன் மாசடைதல், அமில மழை, சத்துக் குறைவான நீரை மேகங்கள் மழையாகப் பொழிதல் போன்றவை அதிகபட்ச பாதிப்பை உண்டாக்குகிறது. பெருமரங்கள் வளராமல் இருப்பது அல்லது அதன் வளரச்சி குன்றுதல், பறவைகள் இடப்பெயர்ச்சி, வண்ணத்துப் பூச்சிகள் இனப்பெருக்க குறைவு குளத்தில் மீன்கள் இறப்பது, அதன் பெருக்கம் குறைதல், மூலிகைச் செடிகள் முற்றோடு அழிதல் என்பனவெல்லாம் இதன் தாக்கம்தான்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com