Contact us at: sooddram@gmail.com

 

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை பெரும்பாலான இந்தியர் விரும்பவில்லை

(நேற்றைய தொடர்ச்சி)

1991ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கத்தை இந்திய மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் எல்.ரி.ரி.ஈ.யுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்த காரணத்தினால் கலைத்தது. அதையடுத்து இந்திய மத்திய அரசாங்கத்தின் சட்ட மற்றும் நீதித் துறையின் சிரேஷ்ட அமைச் சர் என்ற முறையில் தமிழ்நாட்டு விவகாரங்களை கண்காணித்து வந்தேன். அப்போது தமிழ்நாட்டு மக்கள் எனக்கு பேராதரவை அளித்தார்கள். 1991ம் ஆண்டு ஜூன் மாத பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 234 எம்.எல். ஏக்களைக் கொண்ட சபையில் இரண்டு ஆசனங்களையே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. மாநில அரசாங்கத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இக்கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவும் இல்லை.

தி.மு.க. அரசாங்கம் கலைக்கப் பட்ட போது, தமிழ்நாட்டில் ஒரு வன்முறை சம்பவம் கூட இடம் பெறவில்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் முதலில் தங்களை இந்தியர்கள் என்று நினைத்து செயற்படுகிறார்களே ஒழிய, அதற்கு பின்னரே தாங்கள் தமிழர்கள் என்ற உணர்வுடன் நடந்துகொள்வதே காரணமாகும்.

நாம் தாய்நாட்டுப் பற்றுடைய இந்தியர்கள் என்ற முறையில் எங்கள் நாட்டின் நலனுக்கே முதலிடம் கொடுக்கின்றோம். மாநில, பிரதேச அல்லது பிராந்திய ரீதியில் எங்களுக்கு விருப்பம் இருந்தால் நாம் தேசியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக மாகாணங்களின் நலனை தியாகம் செய்யக்கூடிய எண்ணத்தைக் கொண்டிருக்கிறோம்.

நான் இன்று உங்களுக்கு உணர்வு பூர்வமாக ஒரு விடயத்தை தெரி விக்க விரும்புகிறேன். இந்திய மக்கள் இலங்கை நன்றாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள். இந்தியர்கள் ஆகிய நாம் இலங்கையருடன் உணர்வுபூர்வமாக, வரலாற்று ரீதியிலான மத ரீதியிலான, மொழி ரீதியிலான இணைப்பை வைத்தி ருக்கிறோம். இத்துடன் இரு நாடு களின் தேசியப் பாதுகாப்புக்கு நன்மை ஏற்படுத்துவதற்கும் நாம் இவ்விதம் நடந்து கொள்கிறோம். சமீபத்தில் நடத்திய மரபணு ஆய் வில் இந்தியர்களுக்கும் இலங்கை யருக்கும் ஒரே ளினிதி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய மக்களாகிய நாம் எங்கள் அரசாங்கம் இலங்கையின் நலவுரிமைக்கு எதிராக எடுக்கும் அரசியல் அழுத்தங்களுடன் நாம் இணக்கப்பாட்டை கொண்டிருப் பதும் இல்லை. ஜனநாயகத்தின் கீழ் இத்தகைய நிகழ்வுகள் இடம் பெறுவது அபூர்வமானதல்ல. உதாரணமாக, எல்.ரி.ரி.ஈ. பயங்கர வாதத்தை ஒழித்துக்கட்டும் கடைசி கட்டத்தில் இலங்கை படையினர் சட்டத்திற்கு முரணாக படுகொலை களை புரிந்தார்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு முன்னர் அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப் பட்ட பிரேரணையை இந்திய அரசாங்கம் ஆதரித்து வாக்களிப்பதென்று எடுத்த முடிவு க்கு பெரும்பாலான இந்திய மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளி யிட்டதை இங்கு நான் உதாரண மாக காட்ட விரும்புகிறேன்.

எவ்வாறாயினும் நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவில் இலங்கையை முழுமையாக ஆதரிப்பவர்களில் பெரும்பான்மை யானோர் கூட இலங்கையில் தமிழ் சமூகம் ஓரங்கட்டப்படுகின் றது என்ற தற்போதைய உணர்வு உண்மையானதாகவோ அல்லது கற்பனையில் ஏற்பட்ட அச்சமாகவோ இருந்தாலும் கூட, எல்.ரி.ரி.ஈ.யை என்றுமே ஆதரிக்காத மலையகத் தோட்டத் தமிழர்களின் பிரச்சினை களும் இந்த நல்லிணக்கப்பாட்டு செயற்பாட்டின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இதன் மூலமே எல்.ரி.ரி.ஈ.யின ரின் யுகம் என்றுமே ஏற்படவில்லை என்ற எண்ணத்துடன் தமிழர்களு க்கு வலுவூட்டி, அவர்களை நாட்டை கட்டியெழுப்பும் பணி பங்காளர்களாக சேர்த்துக் கொள்வதற்கு உதவ முடியும். இவ்விதம் மக்களுக்கு வலுவூட்டுவதன் மூலம் இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தின் ஊடாக அடிப்படை அம்சங்களை உள்ளடக்கக்கூடிய வகையில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதற்கான சரியான யோசனைகள் இலங்கை பாராளுமன்றத்திலேயே முன்வைக்க வேண்டுமென்று கருதுகின்றேன். இதற்கான யோசனைகளை வெளிநாட்டில் இருந்து வெற்றிகரமாக திணிக்க முடியாது என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

அதிகார பரவலாக்கலை ஏற்படுத்த வேண்டுமென்பது இந்தியாவின் வேண்டுகோள் என்று நினைக்க முடியாது. ஆயினும் இந்தியா அதிகார பரவலாக்கலை விரும்புகிறது. இதனை மையமாக வைத்தே இந்தியா பயங்கரவாதிகளுக்கு எதிரான படுபயங்கர யுத்தத்தின் போது உங்களுக்கு பக்கசார்பாக இருந்ததை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அதிகார பரவலாக்கல் கட்டா யம் செய்யப்பட வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு ஏற்புடைய வகையிலும், அதே வேளையில் சிறுபான்மை தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக நெறி யான அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் நிலைபெற்றி ருந்த முனைவாக்க நிலையின் போது இது சாத்தியமாகியிருக் குமா? எனவே, அதிகார பரவ லாக்கலை இன்று அமுலாக்குவது நல்லதென்று நான் நினைக்கிறேன்.

உண்மையான மற்றும் கற்பனையிலான தமிழ், சிங்கள பேதங்கள்

இந்திய தீபகற்பத்தின் தென் முனையில் 34 கிலோமீற்றர் கடல் இடைவெளியான பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா ஆகியவற்றுக்கு அப்பால் இலங்கை அமைந்துள்ளது.

இந்திய சமஸ்கிருத நூல்களில் இந்தத் தீவு நீண்டகாலமாக லங்கா என்றே அழைக்கப்பட்டது. 1972ம் ஆண்டில் இலங்கையின் அரசியல் சாசனம் மாற்றப்பட்ட போது இந்த நாடு ஸ்ரீ லங்கா என்று பெயர் மாற்றம் பெற்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவு பூகோளவியல் ரீதியில் ஒரு அயல் நாடாகவும் கலாசார ரீதியில் ஒரு சகோதரியாகவும் இருந்து வருகின்றது. அத்துடன் வரலாற்று ரீதியில் ஒரிசா, ஆந்திரா பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்திற்கும் சிங்கள சமூகத்திற்கும் இடையில் தொடர்புகள் இருந்தன.

இலங்கை சனத்தொகையில் 75 சதவீதமானோர் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது போன்று தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக இலங்கைத் தமிழர்களுடன் தொடர்ந்தும் நல்லுறவை வைத்திருக்கிறார்கள். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் அல்லது இந்தியர்களுக்கும் இடையில் எவ்வித இன ரீதியிலான வித்தியாசங்களும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் கற்பனையில் உருவாக்கியதே இந்த இனப் பேதங்களாகும்.

தற்போது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இருந்து வரும் மனோ நிலையினால் ஏற்பட்ட பிரிவினையை நாம் முடிவுக்கு கொண்டு வரலாம். தமிழர்கள் மனதிலும் இலங்கையர் மனதிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சார்பில் எழுதப்பட்ட பல நூல்களில் இருக்கும் போலி பிரசாரங்களே இந்த பிரிவினைக்கு பிரதான காரணமாகும்.

இந்த பிரிவினையை பாக்கு நீரிணைக்கு அப்பால் உள்ளவர்களும் இந்தப் பக்கத்தில் உள்ளவர்களும் தங்கள் அரசியல் இலாபத்திற்கு தூபமிட்டு வளர்த்தனர். எமது வரலாற்றை நாம் சுருக்கமாக மீளாய்வு செய்து பார்த்தால், எவ்விதம் இந்தப் பிரிவினை ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இவ்விரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட தற்போதைய பதற்ற நிலையின் ஆரம்பம் வரலாற்று காலத்தில் இருந்து தொடரவில்லை. 1850ம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாக சிங்களவர் தமிழர்களை தங்களை விட கூடுதல் நன்மை அடையும் ஒரு சமூகத்தினர் என்று சிந்திக்க இடமளித்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நட்புறவு ஏற்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்தியாவில் உள்ள தமிழர்களுடன் பேசிப் பழகியதனால் இங்கு வந்த பின்னரும் தமிழர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தினார்கள். இதனால் பல தமிழர்கள் பிரிட்டிஷாருடன் இணைந்து இந்தியாவில் இருப்பது போன்று திராவிட இயக்கம் போன்ற அமைப்புகளை தங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள இலங்கையில் ஏற்படுத்த எத்தனித்தார்கள்.

இந்த இயக்கத்தில் உள்ள தமிழர்கள் இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கூட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கூடுதலாக ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

சுய மரியாதை இயக்கம் என்று அழைக்கப்பட்ட ஓர் அமைப்பு தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் என்று உருவாகியது. ராஜகோபால் ஆச்சாரி, சத்தியமூர்த்தி, சுப்ரமணிய பாரதியார் போன்ற உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திர இயக்கத்தை குலைப்பதற்காக திராவிட இயக்கம் பிரிட்டிஷாரின் தூண்டுதலின் பேரில் செயற்பட்டது. இந்த சுதந்திர இயக்கத்தில் இந்தியாவின் பெரும் தலைவர்களான முத்துராமாலிங்க தேவர், வீ.ஓ. சிதம்பரம், காமராஜ் ஆகியோரும் இவ் இயக்கத்தில் இருந்தனர்.

பிரிட்டிஷாருக்கும், தமிழருக்கும் இடையில் இலங்கையில் ஏற்பட்ட இந்த ஒத்துழைப்பு காரணமாக தமிழர்கள் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அளவுக்கு அதிகமான செல்வாக்கை கொண்டிருந்ததுடன், 1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெறும் வரையில் இலங்கையின் அரசியல், பொருளாதார செயற்பாடுகளில் கூடுதலான தொடர்புகளை தமிழர்கள் பெற்றிருந்தார்கள். இதனால் தமிழர்களுக்கு நல்ல கல்வி அறிவை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் பொருளாதார ரீதியில் பயன்தரக்கூடிய விவசாயத்துறைக்கு அப்பாற்பட்ட துறைகளில் வெற்றிகரமாக இருப்பதற்கும் இது உதவியது.

இதனால் சிங்களவர்கள் தாங்கள் பாரபட்சமாகவும், நியாயமற்ற முறையிலும் நடத்தப்படுகிறார்கள் என்ற வெறுப்புணர்வு உருவாகுவதற்கு வழிவகுத்தது. தமிழர்களின் ஆதரவுடன் தங்களை பிரிட்டிஷார் நியாயமற்ற முறையில் ஓரங்கட்டுகிறார்கள் என்று அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

தமிழர்கள் கூடுதலாக உள்ள பகுதிகளில் அரசியல் சாசனத்திற்கு அமைய அதிகாரப்பரவலை ஏற்படுத்துவதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு இந்த பகைமை உணர்வே அடித்தளமாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். இந்த சிக்கலை தீர்த்து வைப்பது அவசியமாகும்.

சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான உண்மையான வித்தியாசங்களை ஆகக்கூடிய அளவில் குறைப்பது அவசியம். தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கின்ற காரணத்தினால் இலங்கைத் தமிழர் கூடுதலான அதிகார பரவலாக்கலை கேட்கிறார்கள் என்ற சந்தேகம் சிங்களவர்களின் மனோ நிலையில் வலுவாக இருந்து வருகிறது.

சிங்கள சமூகம் இலங்கையின் சனத்தொகையில் 75 சதவீதத்திற் கும் அதிகமாக இருக்கின்ற போதிலும், சிங்கள சமூகம் தமிழர்களை பெரும்பாலும் ஒரு சிறுபான்மை இனமாக பார்ப்பதை விட, வடபகுதியில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வரும் தமிழ் அரசியல் மற்றும் மக்கள் தொகையின் அளவு என்று குறைவான மதிப்பையே கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 65 மில்லி யன் சனத்தொகையினர் பொது வாக இலங்கை தமிழர்களை ஆதரிப்பார்கள் என்ற எண்ணமும் இந்த நிலைப்பாட்டுக்கு உந்து சக்தியாக அமைந்தது.

(நாளை தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com