Contact us at: sooddram@gmail.com

 

தரைக்கீழ் நீரை பாதுகாக்கத் தவறுவோமானால் நீருக்காக அலைய வேண்டிய நிலைமையேற்படலாம்

நிலத்தின் அடியில் மாசடையும் நீரை சுத்திகரிப்பதென்பது இயலாத காரியம். நீர்ப் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்படுவது அவசியம். நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக ஒரு சொட்டு நீரின் விலை ஒரு சொட்டு பெற் றோலின் விலையை விடவும் கூடுதலான பெறுமதியை அடையக் கூடிய காலம் மிகவும் தொலை வில் இல்லை என்று ஆர்ஜென்டி னாவில் நடைபெற்ற ஐக்கிய நாடு கள் சபையின் நீரியல் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட சிரியாவின் பிரதிநிதியான சவூப் கெளல் கூறினார்.

இத்தகைய பெறுமதிமிக்க நீரினை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

01. மேற்பரப்பு நீர்  (Surface Water)

02. தரைக்கீழ் நீர் (Ground Water) என்பனவாகும்.

தரைக்கீழ் நீர் என்பது பூமியின் மேற்பரப்பிற்குக் கீழாக காணப் படும் நீராகும். நிலக்கீழ் நீர் நிரம்பிய வலயம் என்றும் அழைக் கப்படுகின்றது.

தரைக்கீழ் நீர் வளத்தினைப் பல்வேறுபட்ட நாடுகளும் பயன் பாட்டில் ஈடுபடுத்தி வருகின்றன. குடிநீரிலே தரைக்கீழ் நீரின் பங்கானது ஐரோப்பாவில் 75% ஆகவும், ஐக்கிய அமெரிக்காவில் 51% ஆகவும், ஆசியாவில் 32% ஆகவும், இலத்தீன் அமெரிக்காவில் 29% ஆகவும் காணப்படுகின்றது.

எனவே இவ்வாறாகப் பயன்பட்டு வரும் தரைக்கீழ் நீர் இன்று அதிகரித்த விவசாய நடவடிக்கை, கைத்தொழில் மற்றும் ஏனைய சமூக நடவடிக்கைகளால் மாசடை ந்து வருவது மிகவும் கவலைக் குரிய விடயமாக அமைந்துள்ளது.

ஒரு தடவை தரைக்கீழ் நீர் மாசடைந்தால் அதனை மீண்டும் சுத்துதிகரிப்பது என்பது மிகவும் கடினமாகும். அதாவது தரைக்கீழ் நீரை இறைத்தல் (Pumping) மூலம் மேலே கொண்டு வந்து மீண்டும் அதைச் சுத்திகரிப்பது என்பது மிகவும் செலவும் கூடியது மட்டுமல்லாது நேர, காலம் என்பவற்றாலும் அது முடியாத காரியமாகவே அமைந்துள்ளது.

நிலக்கீழ் நீர் என்பது தரையின் கீழ் காணப்படுகின்ற நீரினையே குறித்து நிற்கின்றது. இந்நிலக்கீழ் நீரானது உலகளாவிய ரீதியில் மிகவும் குறைந்தளவில் காணப்படு வதுடன் வெகுவாக அருகிச் செல் கின்ற வளமாகவும் காணப்படுகின்றது.

உலக மொத்த நீர்ப் பரம்பலில் 0.005% நீரே தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. இத்தரைக்கீழ் நீரானது இன்று இலங்கையில் அதிமுக்கிய வளமாகத் தொழிற் பட்டு வருகிறது.

குறிப்பாக இன்று இலங்கை ஒரு விவசாய நாடாக இருப்பதனால் விவசாயத் துறைக்கும், வளர்ந்து வரும் கைத் தொழிலுக்கும், உதாரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு இப்பகுதிகளில் காணப்படும் தரைக்கீழ் நீர் அதிக ளவில் பயன்படுத்தப்பட்டு வருவ துடன், மக்கள் குடியேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது.

மக்கள் குடியிருப்பி னைத் தீர்மானிக்கின்ற வளமாகவும் இன்று இது தொழிற்படுகின்றது. எனினும் கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற முறையற்ற விவசாய நடவடிக்கைகள் காரணமாக கற்பிட்டி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் நைதரசன் மாசுபடுதல் தரைக்கீழ் நீரில் அதிகளவில் ஏற்பட்டுள்ளதுடன், கைத்தொழில் நடவடிக்கைகளால் தலைநகர் கொழும்பு, அதனை அண்டிய பகுதிகளிலும், சனச்செறிவுமிக்க பிரதேசங்களில் அதிகரிக்கும் சனத்தொகை அழுத்தங்களினாலும், வெளியேற்றப்படுகின்ற கழிவுகளா லும் தரைக்கீழ் நீரானது மாச டைந்து வருகின்றது.

எனவே தரைக்கீழ் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை நாட்டில் எழுந்துள்ளதுடன் நீருக்கான மாற்று மூலாதாரங்களை கண்டு பிடிக்கவும் புதிய தரைக்கீழ் நீர் வளங்களைக் கண்டுபிடிக்கவும் வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

படிவு வீழ்ச்சி, நீர் நிலைகள், வடிநிலங்கள் என்பவற்றின் மூலம் மேற்பரப்பிற்கு வருகின்ற நீரானது ஊடு வடிதல் செயன்முறைக்கு உட்பட்டு மண், பாறைகளுக்கு இடையே உட்புகுந்து செல்லா வண்ணம் தடுக்கப்பட்டு நீரினைத் தேக்கி வைக்கின்றன.

இவ்வாறு தேக்கி வைக்கப்படு கின்ற நீரே தரைக்கீழ் நீர் என அழைக்கப்படுகின்றது. தரைக்கீழ் நீரானது காற்றுடன் கலந்த வலயம் (Zone of Aeration)  ிரம்பல் வலயம் (Zone of Saturation) என்ற இரண்டு பிரதான வலயங்களைக் கொண்டது.

புவியின் மேற்பரப்பை வந்தடைகின்ற மழை நீரில் ஒரு பகுதி நிலத் தினுள் பொசிந்து தேங்குகின்றது. அதனைத் தரைக்கீழ் நீர் என்பர். அதேபோல புவியின் உட்பகுதியிலிருந்தும் சிறிதளவான நீர் தரைக் கீழ் நீராகத் தேங்குகின் றது. எனினும் படிவு வீழ்ச்சி வடிவங்களாக நிலத்தை வந்தடையும் நீர், தரைக்கீழ் நீரில் பெரும்பங்கை அளிக்கி ன்றது. நிலத்தினுள் பொசிந்து தரைக்கீழ் நீராக தேங்கும் நீரினளவு பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. அவை பின்வருமாறு,

01. மழை நீரினளவைப் பொறுத்து ஓரிடத்தின் தரைக்கீழ் நீரினளவும் அமையும்.

02. நிலமேற்பரப்பின் சாய்வினைப் பொறுத்துத் தரைக்கீழ் நீரினளவு அமையும். அதாவது குத்துச் சாய்வாக நில மிருக்கில் அங்கு பெய்கின்ற மழைநீர் தேங்கி நிற்காது ஓடிவிடும், சமவெளியாயின் நீர்தேங்கி நிலத்தினுள் பொசிய வாய்ப்பாக இருக்கும்.

03. ஆவியாகும் விதத்தைப் பொறுத்து ஓரிடத்தில் தேங்கும் நீரினளவு அமையும். அதாவது பாலைநிலங்களில் ஆவியாகுதலதி கமாகும். விரைவாகவும் நிகழும், அதனால் தரையினுள் நீர் பொசிய வாய்ப்புக் குறைவு.

04. இயற்கையாக ஒரு பிரதே சத்தில் தாவரப் போர்வை இருக் கின்ற நிலத்தினுள், பொசியும் நீரினளவு அதிகமாகவிருக்கும்.

05. மண்ணினுள்ள நீரின் அள வினைப் பொறுத்து நீர் தொடர்ந்து ஊடுபரவும் தன்மையது. ஒரு பிரதேசத்து மண் போதியளவு நீரை உறிஞ்சிப் பூரிதமடைந்திருப் பின் மேலதிக நீரைப் பொசியவிடும் தன்மை குன்றும்.

06. நீரை உட்புகவிடும் பாறைப் படைகளின் இயல்பு தரைக்கீழ் நீரின் அளவினை நிர்ணயிக்கும் பாறைப்படைகளில் நுண்துளை களும், வெடிப்புகளும் அமைந்தி ருக்கில் தரைமேல் நீரின் தரைக் கீழ் ஊடுபரவுதல் அதிகம் நிகழும்.

சுண்ணாம்புக்கற் பிரதேசங்களில் தரைக்கீழ் நீர் அதிகமாகக் காணப் படுவதற்கு முக்கிய காரணம், சுண்ணாம்புப் பாறைகளில் காணப்படும் நுண் துணைகளும் வெடிப்புக்களுமாகும். இந்த நுண் துளைகள், வெடிப்புகள் என்பவற் றினூடாக நீரானது கீழ் நோக்கிப் பொசிந்து நீரை உட்புகவிடாப் பாறைப் படையை அடைந்ததும் தேங்குகின்றது. இதனை நீர் தாங்குபடுக்கை Aquifer) என்பர். பொதுவாக நீர் தாங்கு படுக்கைக்கு மேல் 03 வலயங்கள் காணப்படுகின்றன. அவை,

(1) காற்றூட்டல் வலயம் (Aeration Zone)

(2) நிரம்பு நீர் வலயம்  (Saturation Zone)

(3) இடைவிட்ட நிரம்புநீர் வலயம் (Intermittent Saturation Zone)

காற்றூட்டல் வலயம் என்பது வளி நிரம்பிய நுண் துளைகள், வெடிப்புகள் என்பவற்றைக் கொண்டு மேற்படையாகும். இது மேற்பரப்பு நீரைத் தரையின் கீழ் ஊடுபரவவிடும். ஒரு பிரதேசத்தில் தரைக்கீழ் நீர் எவ்வளவு உச்ச மட்டத்தில் தேங்கி நிற்குமோ அதுவே நிரம்பு நீர்வலயம் ஆகும். இதனை நீர்மட்டம் (Water Table) எனவும் கூறுவர்.

மேற்பரப்பிலுள்ள நீர் நிலை களைப் போலல்லாது நிலக்கீழ் நீர் இரசாயனப் பதார்த்தங்களைப் பொறுத்தவரை மிகக்குறைவான சுத்திகரிப்புத் தன்மையையே கொண்டுள்ளது. திண்மப் பதார்த் தங்களையும் நுண்ணங்கிகளையும் மண் வடித்தெடித்து கரைந்து வரும் இரசாயனப் பதார்த்தங்கள் நிலக்கீழ் நீரில் சேர்ந்து அந்நீருக்கே தனித்துவமான பண்புகளைக் கொடுக்கும்.

உதாரணமாக கல்சியம் காபனேற்றுக் கரைவதால் யாழ். குடாநாட்டில் நீரும் கற்பிட்டி பகுதி நீரும் வன்மைத் தன்மை யுடையதாகவுள்ளது. யாழ். குடா நாட்டில் பெருமளவு செயற்கை உரம் உபயோகிக்கப்படுவதால் நிலக்கீழ் நீரில் நைத்திரேற்றுக்கள் அபாயகரமான அளவுக்குச் சேர்ந்து காணப்படுகின்றன.

இலங்கை மக்களது குடிநீர் தேவையையும் சிறியளவில் பயிர்ச் செய்கைக்கான நீர்த் தேவையையும் தரைக்கீழ் நீரே பூர்த்தி செய்து வருகின்றது. இலங்கையின் கரையோர அடை யற் பாங்கான பிரதேசங்கள், புத்தளம், முல்லைத்தீவை இணைக் கும் கோட்டிற்கு வடபாகம், குறிப்பாக யாழ்ப்பாணக் குடா நாடு என்பன கிணறுகள், குழாய் கிணறுகள் ஆகியன மூலம் நீரைப் பெற்று வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வாழ்வும் வளமும் தரைக்கீழ் நிரிலேயே தங்கியிருக்கின்றது.

யாழ்ப்பாண குடாநாட்டில் தரைக்கீழ் நீர்கிணறுகள் மூலமும் புத்தளம், மன்னார், முழங்காவில் ஆகிய கரையோரப் பகுதிகளில் குழாய்க் கிணறுகள் மூலமும் நீர் பெறப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் பின்வரும் சூழல் பிரச்சினைகளை இன்று பிரதிபலிக்கின்றது.

01. நன்னீர் வளம் குறைதல்

02. நன்னீர் உவராதல்

03. நன்னீர் மாசடைதல்

இன்று வீட்டுக்கு வீடு, தோட் டத்திற்கு தோட்டம் கிணறுகள் உள்ளன. துலாக்களுக்குப் பதிலாக நீரிறைக்கும் இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன. அதனால் கூடுதலான தரைக்கீழ் நீர் மேல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பும் அதிக நீர்த் தேவையை ஏற்படுத்திவிட்டது. கூடுத லாக நீர் இறைக்கப்படு வதால் உவர் நீர் உட்புகு தல் பல விடயங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.

கரையோரக் கிணறுகள், தீவுப்பகுதிக் கிணறுகள் பலவும் ஏற்கனவே உருவாகிவிட்டன. இன்று யாழ்ப்பாணக் கழிப்பிடங் கள் நீரடைப்பு மலசல கூடங்களாக மாறிவிட்டன. அதனால் கிணறுகளுக் கருகே மலக்குழிகள் அமைந்து வருகின்றன. நகர்ப்புறங்களில் இது அதிகம், அதனால் கிணற்று நீர் மாசடைந்து வருவது அண்மைக் காலங்களில் அவதானிக்கப்பட் டுள்ளது.

அத்துடன் விவசாய, கைத்தொழில் நடவடிக்கைகளா லும் இலங்கையின் தரைக்கீழ் நீரானது அண்மைக் காலமாக பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது. கற்பிட்டிப் பகுதி களில் கிணறுகளில் நைதரசனின் அளவு 44 மி/கிராம். அதேபோன்று இலங்கையின் வடமத்திய, வடமேல் உலர் வலயங்களில் விவசாயக் கிணறுகள் அதிகளவு தோண்டப்பட்டு தொடர்ச்சியாக பாவனைக்கு உள்ளாக்குவதால் நீர் நிலைகள் வற்றிச்செல்கின்றன.

அதேபோல கொழும்பு, யாழ்ப் பாணம், குருநாகல் போன்ற நகரங்களில் இடம்பெற்று வருகின் றன நகராக்கம் தரைக்கீழ் நீரின் தரத்தைப் பாதித்து வருகின்றது. அண்மைக் காலங்களில் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்க ளும் இவற்றில் கணிசமானளவு பங்களிப்பினை வகித்து வருகின்றது.

மாசடைந்த ஆறு ஒன்றினை 20 நாட்களின் பின்பு மீள்பாவனை க்கு உட்படுத்தலாம். ஆனால் மாசடைந்த தரைக்கீழ் நீரினை மீள் பாவனைக்கு உட்படுத்த, 1400 வருடங்கள் செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே மாசடைந்து வரும் தரைக்கீழ் நீரானது தொடர்ந்து மாசுபடுத்தப்படுமானால் நீர் வளத்திற்கு தட்டுப்பாடு ஏற்படலாம். இதனால் இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு உரிய சட்டங்களையும் இயற்றுவதோடு அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதும் நம் எல்லோ ரதும் முக்கிய கடமையாக உள்ளது.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com