Contact us at: sooddram@gmail.com

 

அடுத்து என்ன நடக்கும்?

60 ஆண்டுகளுக்கு முன்பு, சரியாக இதே ஜூலை மாதத்தில் வரலாறு காணாத புரட்சியை எகிப்து தேசம் கண்டது. எகிப்தின் முகத் தோற்றத்தையே அந்தப் புரட்சி மாற்றியது. மன்னராட்சி வீழ்ந்து, ஒரு குடியரசாக மலர்ந்தது. நிலச்சீர்திருத்தங்கள் துவக்கப்பட்டன. வரலாற்றுப் புகழ்மிக்க சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அணிசேரா கொள்கையே நாட்டின் வெளியுறவுத்துறை கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

60 ஆண்களுக்குப் பிறகு, இதோ... இப்போதும் எகிப்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கெய்ரோ மாநகரில் உள்ள சுதந்திரச் சதுக்கம் (தஹ்ரீர் சதுக்கம்), எதேச்சதிகாரத்திற்கும், அரசியல் மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் எதிரான போராட்ட மையமாக மாறியிருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டில் எதேச்சதிகாரி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டமும் சரி; தற்போது ஜனாதிபதி முகம்மது மோர்சிக்கு எதிரான போராட்டமும் சரி அடிப்படையில் மூன்று அம்சங்களை உள்ளடக்கியவை.

1) எதேச்சதிகாரத்திற்கு எதிர்ப்பு,

2) நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தியதாலும், உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாலும் தங்களுக்கு நேர்ந்த பொருளாதார துயங்களிலிருந்து மீள்வதற்கான முயற்சி,

3) அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கைக்கு எதிர்ப்பு.

மகத்தான மக்கள் எழுச்சி காரணமாக ஹோஸ்னி முபாரக் ஆட்சி அதிகாரத்திலிருந்து ஓட ஓட விரட்டப்பட்டபோது, எகிப்தில் எதேச்சதிகாரம் வீழ்ந்தது என்பது உண்மையே. ஆனால் பொருளாதாரத் தாக்குதலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளும் புதிதாக வந்த மோர்சியின் ஆட்சியில் மேலும் தீவிரமடைந்தன என்பதே உண்மை.

*******
மன்னராட்சி வீழ்த்தப்பட்ட போதிலும், எகிப்தில் நீண்டகாலமாக எதேச்சதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சியே நடந்து வந்திருக்கிறது.
அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் எழவிடாமல் அடித்து நொறுக்கினார்கள். தொழிற்சங்கங்களின் குரல்வளையை நெரித்தார்கள். தனியார் பெரும் முதலாளிகள் ஊக்கம் பெற்றார்கள். எந்தவொரு நிறுவனத்திலும் தொழிற்சங்கம் அமைப்பது இதுவரையிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இவை அனைத்தும், எகிப்தில் ஒரு கட்டமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை உருவாக்க விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும், மக்களின் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பு பற்றியெரிவதை எதேச்சதிகாரத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

60 ஆண்டுகாலமாக கனன்று கொண்டிருந்த அந்த நெருப்பு, பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தால் உழைக்கும் மக்களின் வயிறுகளை இறுக்கிக் கட்ட உத்தரவிடப்பட்டபோது, எரிமலையாக வெடித்தது. 2011ன் துவக்கத்தில் நடந்த அந்த மகத்தான எழுச்சியே, எதேச்சதிகாரி முபாரக்கை விரட்டியடித்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற செயல்களில் வலுவான வேறு அரசியல் அமைப்பு இல்லாததால், ‘முஸ்லிம் பிரதர்ஹுட்’ (முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி) கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அதே தனியார்மயமும்,தாராளமயமும் தொடர்ந்தன. தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி சிறு அளவுகூட உயர்த்தப்படவில்லை. தொழிற்சங்க உரிமை மறுப்பும் தொடர்ந்தது. முற்றிலும் பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவான ஆட்சி நடந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கைகட்டி சேவகம் செய்வதில் முபாரக்கையும் மிஞ்சினார் முஸ்லிம் பிரதர்ஹுட்டின் ஜனாதிபதி முகம்மது மோர்சி. இஸ்லாமிய நாடுகளை ஒழித்துக் கட்ட வளைகுடாப் பிரதேசத்தில் ஏகாதிபத்தியத்தின் ஏவலாளியாகச் செயல்படும் இஸ்ரேலுக்கு சாதகமாக நடந்து கொண்டது, மோர்சியை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக அடையாளம் காட்டியது. வேலையின்மையும், வறுமையும் தீவிரமடைந்தது. தங்களது வாழ்வை மோர்சியின் அரசாங்கத்திடம் அடகுவைக்க தயாராக இல்லாத மக்கள், கொந்தளித்துக் குமுறினர். கடந்த ஓராண்டில் மட்டும் எகிப்து முழுவதும் 7,400 தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. உண்ணாவிரதங்கள், மறியல் போராட்டங்கள் நடந்தவண்ணம் இருந்தன.

இந்தப் பின்னணியில் வெறும் 33 சதவீத வாக்காளர்கள் மட்டுமே பங்கேற்ற பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, எகிப்தின் அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக மதவெறிமயமாக்கினார் மோர்சி. அரசு நிறுவனங்கள் அனைத்தும் இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளால் நிரப்பப்பட்டன. முஸ்லிம் பிரதர்ஹுட் ஆட்சியின் இந்த நடவடிக்கைகளை எகிப்தின் எந்தவொரு இஸ்லாமியக் குடிமகனும் ஏற்றுக் கொள்ளவில்லை.

*******
ஏகாதிபத்திய கைக்கூலியாகவும், மதவாதத்தை முன்னிறுத்தி மக்கள் நலனை புறக்கணிப்பவராகவும் வலம்வரத் துவங்கிய ஜனாதிபதி மோர்சிக்கு எதிராக மீண்டுமொரு மாபெரும் எழுச்சியை துவக்குவது என மக்கள் முடிவு செய்தார்கள். அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து மோர்சிக்கு எதிராக பிரம்மாண்டமானதொரு கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்கள். தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், வீதிகள், வீடுகள் என நாடு முழுவதும்

2 கோடிக்கும் அதிகமான கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
கடந்த ஜூன் 30ம்தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 3 கோடி மக்கள் வீதிகளில் இறங்கினார்கள். எகிப்தின் வரலாற்றில் மட்டுமல்ல, சமீபத்திய உலக வரலாற்றில் இப்படியொரு போராட்டம் வேறெங்கும் நடந்ததில்லை.

மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்தது. அரசாங்கத்திற்கு இணையான சக்திவாய்ந்த இராணுவத்திற்கு நிர்ப்பந்தம் அதிகரித்தது. தனது நலனை காத்துக் கொள்ளவும், மக்கள் இயக்கத்தின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்தும், ஜனாதிபதி மோர்சியை இராணுவம் பலவந்தமாக வெளியேற்றியது. உண்மையில், மோர்சியை பாதுகாக்க முயன்ற அமெரிக்காவை மீறி, எகிப்திய இராணுவம் இப்படி நடந்து கொண்டது இதுவரையிலும் இல்லாத ஒன்று. அதே நேரத்தில் அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொண்ட இராணுவம் அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்கலாம் என திட்டமிடத் துவங்கியது.

இந்த நிலையில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிட்டது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தை, மோர்சியின் ஆதரவாளர்கள் - மோர்சியின் எதிர்ப்பாளர்கள் என்று பிரித்தது. இருதரப்பினரும் இப்போது மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுபட்ட போராட்டத்தை கட்டமைக்கக் காரணமான இடதுசாரி சக்திகளை குறிவைத்து வேரறுப்பதில் இராணுவமும், அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அதிகாரம் பறிக்கப்பட்ட ஆத்திரத்தில் வீதிக்கு வரும் மோர்சியின் ஆதரவாளர்களை இராணுவம் கொன்று குவிக்கிறது.

அடுத்து அங்கு என்ன நடக்கும்? எகிப்திய மக்கள் மீண்டும் ஒன்றுபட்டால்தான் அதிகாரவெறியர்களை வெளியேற்ற வழிபிறக்கும்.

-
எஸ்.பி.ராஜேந்திரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com