Contact us at: sooddram@gmail.com

 

''இளவரசன் - திவ்யாவோடு என் மகள் காதலை ஒப்பிடாதீர்கள்!''

சேரன் உருக்கம்...

செல்லமாய் வளர்த்த கடைக்குட்டி தாமினி, இப்போது மைலாப்பூர் மகளிர் காப்பகத்தில் இருக்கிறார். எப்போதும் கலகலப்பாய் இருக்கும் இயக்குநர் சேரனின் வீடு சோகமயமாக காட்சி அளிக்கிறது. அழுது, அழுது வீங்கிய முகத்தோடு இருந்த இயக்குநர் சேரனை ஆசுவாசப்படுத்திப் பேசினோம். ''இதுவரைக்கும் 10 சினிமா எடுத்து இருக்கேன். ஒண்ணுலகூட சினிமாத்தனம் இருக்காது. எல்லாமே யதார்த்த நிகழ்வுகளின் பதிவுகள். நான் காதலுக்கு எதிரி இல்லை; என்னோட திருமணமே காதல் திருமணம்தான். 18 வயசுல எனக்கும் காதல் வந்துச்சு. இப்ப என் பொண்ணுக்கும் வந்திருக்கு. வரணும். இல்லைன்னா, உடலில் ஏதோ ஹார்மோன் குறைபாடு இருக்குதுனு அர்த்தம். மூணு வருஷத்துக்கு முன்னாடி 'கிட்ஸ்என்கிற டான்ஸ் புரோகிராம் போயிருந்தேன். என்கூட வந்த தாமினியை அங்கே விட்டுட்டு, வேறொரு நிகழ்ச்சிக்கு நான் போயிட்டேன் அப்போ சந்துருவைச் சந்திச்சு இருக்கா. ரெண்டு பேரும் செல்போன் நம்பரை எக்சேஞ்ச் பண்ணியிருக்காங்க. ஃபேஸ்புக் மூலமாவும் பழகியிருக்காங்க.

ஒரு கட்டத்துல தாமினியோட காதல் எனக்குத் தெரியவந்துச்சு. அப்போ கோபத்துல சத்தம் போடல. என் மகள் காதலைப் பரிபூரணமா ஆதரிச்சேன். அதே சமயம் மகளின் காதலன் எப்படிப்பட்டவன் என்று ஒரு தகப்பனா தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். சந்துருவை என்னோட ஆபீஸுக்கு வரவழைச்சுப் பேசினேன். அவருக்கு அப்பா இல்லை. அம்மா இருதய நோயாளி. நாலு அக்கா இருக்காங்க. மாதம் 5,000 தரும் வாடகை வீடு தவிர, நிலையான வருமானம் இல்லை. அதுக்காக அவரை வெறுக்கல. ஏன்னா நான் ஒண்ணும் டாட்டா, பிர்லாவுக்கு மகனா பிறக்கலை. சினிமா தியேட்டர்ல வேலை பார்த்த சராசரி அப்பாவுக்கு மகனா பிறந்தவன்.

சந்துருவிடம், 'என் மகளோட படிப்பு முடியட்டும். அதற்குள் நீங்களும் நிலையான வேலை தேடிக்குங்க. அவளோட அத்தியாவாசியத் தேவைகளை நீங்க நிறைவேத்துற மாதிரி உங்களை வளர்த்துகொள்ளுங்க. அதுவரைக்கும் ரெண்டு பேரும் பேசிக்காதீங்கஎன்று சொன்னேன். நான் சொன்னதை மதிச்சு மூணு மாசம் பேசாம இருந்தாங்க. நல்ல காதலனைத்தான் என் மகள் செலக்ட் செஞ்சிருக்கானு நினைச்சு, எனக்குப் பெருமையா இருந்துச்சு.

ஒருநாள், 'அப்பா, எனக்கு சந்துருகிட்டே பேசாம இருக்க முடியலை. செத்திடணும் போல இருக்கு...’ என்று புலம்பினாள். மகள் உயிருக்கு முன்னாடி என்னோட வைராக்கியம்  ெரிசில்லைனு, நானே என்னோட செல்போனில் சந்துருவை அழைச்சு என் மகளிடம் பேச சொன்னேன். 'நீங்கதான் பேசக் கூடாதுன்னு சொன்னீங்க... இப்ப நீங்களே பேச சொல்றீங்க...’ என்று பிகு செய்துகொண்டு பேசினார். அவருடைய செல்போனை இப்போது செக் செய்து பார்க்கும்போதுதான் அந்த மூணு மாசமும் என் மகளிடம் அடிக்கடி பேசியிருக்கும் விவரம் தெரியுது. நான் போனில் பேசியதை எல்லாம் ரெக்கார்ட் செய்து, நண்பர்களிடம் தம்பட்டம் அடித்துக்கொண்ட வன்மமும் இப்போதுதான் தெரியுது. அதன் பின் ஒருநாள் என் மகள், 'அப்பா என்னால சந்துருவை பார்க்காம இருக்க முடியலைஎன்று அழுதாள். சென்னையில பைக் பின்னாடி துப்பட்டாவால முகத்தை மூடிக்கிட்டு பெத்தவங்களுக்கு துரோகம் செய்யுற பெண்களுக்கு மத்தியில், இப்படி என் மகள் ஒப்பனா கேட்ட நேர்மை எனக்குப் பிடிச்சது. அதனால பார்க்கறதுக்கும் அனுமதிச்சேன். தாமினியிடம் பேசறதுக்கு, பார்க்கறதுக்கு அனுமதிச்ச பிறகுதான், சந்துருவோட கோர முகம் தெரிய ஆரம்பிச்சது. செல்போனில் தாமினியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார்.

நிறைய பணக்காரங்க வீட்டுல மகள், அப்பா, அம்மா எல்லோருக்கு தனித்தனியா பெட்ரூம் இருக்கும். ஆனா, எனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து நான், மனைவி, என் ரெண்டு மகள் நாலு பேருக்கும் ஒரே பெட்ரூம்தான். தாமினி திடீர்னு தனியா வேற பெட்ரூம்ல படுக்க ஆரம்பிச்சா. இரவு விடிய விடிய செல்போனில் பேச ஆரம்பிச்சா. ஒரு கட்டத்தில் அப்பா, அம்மாவிடம் பேசாதேன்னு சந்துரு கட்டளைபோட ஆரம்பிச்சார். தாமினியோட அக்கான்னே தெரிஞ்சிருந்தும், என் மூத்த பொண்ணுக்கு ஃபேஸ்புக்லலவ் யூனு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதிர்ந்துபோய் அவ தாமினியிடம் காண்பிச்சா. அப்போதும் அவரை நேசிச்சாள் தாமினி.  

காலேஜ் சார்பா விஜய் டி.வி. நிக்ழ்ச்சிக்கு போயிருந்தா தாமினி. அப்போ சில பேர் அவளுக்கு ஃப்ரெண்ட் ஆயிருக்காங்க. அவங்களோட அடிக்கடி செல்போனில் பேசியிருக்கா. அப்படி ஒரு தடவை பேசும்போது, சந்துரு போனில் பேசியிருக்கார். லைன் கிடைக்கலை. உடனே, 'எவன்கிட்ட பேசிகிட்டு இருந்தே’னு சந்தேகப்பட்டு டார்ச்சர் கொடுத்து இருக்கார். 'வீட்டைவிட்டு வெளியில் வா... ஹாஸ்டலில் தங்கிக்கொள்என்று தாமினிக்கு நெருக்கடி கொடுத்தார். செல்லமா சீராட்டி கொஞ்சி வளர்த்த தாமினிக்கு, எங்களோட இருக்கவே பிடிக்கலை. இருந்தா செத்திடுவேன்னு மிரட்டினாள். சரின்னு  ாஸ்டலுக்கும் அனுமதிச்சேன். என்னோட தங்கை நடத்துற ஹாஸ்டலில் தங்க அனுமதிச்சேன். என் மனைவி பேசுற எல்லாத்தையும் ரெக்கார்ட் செய்யச் சொல்லி தாமினியை மிரட்டினார். ஒரு கட்டத்துல சந்துருவோட டார்ச்சர் எல்லை மீறிப்போக, பிரஷர் 180-க்கும் மேல் தாண்ட, தாமினியை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தோம். மனசு தாங்காமல் அன்னிக்கு இரவு சந்துரு வீடு தேடி போனேன். அங்கே இல்லை. 'வடபழனியில் அ.தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ் வீட்டில் இருக்கிறார். அங்கே போய் பாருங்கள்என்றார்கள். தலைவிதியை நொந்துகொண்டு அங்கே போனேன். ரமேஷ் ஏளனமாகப் பேசினார். அதையும் தாங்கிக்கொண்டேன்.

இரண்டு நாளைக்கு முன்பு என் மனைவி மௌன விரதம் இருந்தார் அப்போது காலேஜ் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் தாமினி. அவள் காலேஜுக்கு போகவில்லை; போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கிறாள் என்கிற விவரம் அப்புறம்தான் தெரிந்தது. ஏற்கெனவே சந்துரு சில பெண்களை காதலித்து ஏமாற்றி இருப்பது தெரியவருது. அடையார், கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் சந்துரு மீது புகார்கள் இருக்கின்றன.

நான் ஆள் வைத்து அடித்ததாக சந்துரு சொல்வது வடிகட்டின பொய். உழைச்சு சம்பாதிச்சுக் காட்டு. என் மகளைத் தருகிறேன்னு நான் சுட்டிக்காட்டினேன்.  அப்படி நான் சொன்னதை தன்னோட வறுமையை குத்திக்காட்டியதாக நினைச்சு, என்னைப் பழிவாங்கும் எண்ணம்தான் சந்துருவிடம் இருக்கிறது.    

தயவுசெய்து யாரும் என்னோட மகள் காதலை இளவரசன், திவ்யாவோடு ஒப்பிட்டுப் பேசாதீங்க. சினிமாவுலயே காதலை வாழவைக்கும் நான், சந்துரு உண்மையான காதலனா இருந்தால், நானே சேர்த்துவைத்து இருப்பேன். ஆனா சந்துரு உண்மையா இல்லையே? எனக்கு சினிமா மூலமா கிடைச்ச அங்கீகாரம், கௌரவம் எல்லாத்தையும்விட என் மகள் வாழ்க்கை, உயிர்தான் முக்கியம். கௌரவத்தை காப்பாத்தறதுக்காக மகள் காதலை எதிர்க்கறேன்னு நினைக்காதீங்க. மகளுக்காக என்னோட கௌரவத்தையே தூக்கி எறியறதுக்கும் தயாராக இருக்கேன்!'' - கண்ணீரோடு முடித்தார் சேரன்.

- எம்.குணா

(நன்றி: விகடன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com