Contact us at: sooddram@gmail.com

 

வடமாகாண தேர்தலில் TNA யினரை தெரிவு செய்தால் தமிழர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படுமா?

-     (அபிமன்யூ)

வடக்குகிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இப்பொழுது எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?

 

 

1.    இனப்பிரச்னைக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு இன்னமும் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவில்லை.

2.    இளம் தலைமுறையினர்க்கு  கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, நிரந்தர வீடு போன்ற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலை.

3.    போரினால் பாதிக்கபட்‌ட  குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கு எந்த சமூக நலத்திட்டங்களும் இல்லாமை

4.    வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான உள்ளுர் ஆட்சி சபைகளை தமது கட்டுப்பாடில் வைத்திருக்கும் TNA யினர் எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் இன்றி இருப்பது

5.    விலைவாசியேற்றம், கடன்பழு, நித்திய வறுமை என்ற விசசக்கரத்தின் பிடியில்லுள்ள பெரும்பான்மையினர் வாழ்க்கையில் நம்பிக்கை அற்று இருப்பது

6.    எந்தவிதநம்பிக்கையும்இல்லாமல்நூற்றுக்கணக்கானஇளைஞர்களும்யுவதிகளும்கப்பலில்மரணஆபத்துக்களின்மத்தியில்தினமும்வெளியே றிக்கொண்டுஇருக்கின்றமை

7.    அளவுக்குஅதிகமானஇராணுவப்பிரசன்னம்.

8.    உயர்பாதுகாப்புவலயத்திலிருந்தசிலபகுதிகள்இன்னமும்பாதுகாப்புப்படையினர்வசமேஇருக்கின்றமை.

9.    இன்னமும்பலர்தம்பகுதிக்கு மீள்குடியேற்றப்படாத நிலை.

10.  வடக்கின்இராணுவஅதிகாரியேஅங்குஆட்சிபுரிபவராகஇருக்கிறார்.

11.  பயங்கவாதத்தடைச்சட்டத்தின்கீழ்தடுத்துவைக்கப்பட்டவர்களில்அநேகர்இன்னமும்உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாத நிலை. 

12.  தமிழர்களின்பகுதிகள்சிலவற்றில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றமை. 

 

 

தமிழ் மக்கள் பெரும்பான்மையான வாக்குகளை அளித்து பாராளுமன்றத்திலும், கிழக்கு மாகாண சபையிலும், பெரும் அளவிலான உள்ளூராட்சி சபைகளிலும் TNA இனரை தெரிவு செய்திருக்கிறார்கள். சர்வதேச நாடுகள் எங்கும் தாமே மக்கள் அங்கீகாரம் பெற்ற ஏகப்பிரதிநிதிகள் என்ற கோதாவில் வலம் வருகிறார்கள். மக்களின் இந்த பிரச்சினைகள் பற்றி என்ன செய்தார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ன செய்ய போகிறார்கள்? என்பதே இன்று நேர்மையான அக்கறை உள்ள தமிழ் மக்களின் முன் உள்ள கேள்வியாகும்.

 

இவற்றைத் தீர்க்க TNA முன்வைக்கும் வழிகள் என்ன?

 

தமிழர்கள் ஒற்றுமையாக எதிர்வரும் தேர்தலில் தம்மை அமோகமாகத் தெரிவு செய்ய வேண்டும்என்பது பற்றி

 

 

அப்படி ஒற்றுமையாக பெரும்பான்மைப் பிரதிநிதிகளைத் தேரந்தெடுத்து அனுப்பி வைத்தால் மேற்குறிப்பிட் பிரசனைகளை எப்படித் தீர்ப்பார்கள்?

 

தீர்வுகளை எய்துவதற்கு எத்தகைய அணுகுமுறைகளை மேற்கொள்வார்கள் என்பவற்றைத் தெளிவாகக் கூறாமல், அவ்வப்போது முன்னுக்குப் பின் முரணாகவும் சிங்களப் பேரினவாதிகளுக்கு ஏட்டிக்குப் போட்டியாகவும்பேசி காலத்த்தை கழிக்கின்றனர்.

 

தமிழத்தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் ஈழம், சிங்களப் பேரினவாதம், அடக்குமுறை என்ற சொற்பதங்களில் தொடர்ந்தும் அரசியல் நடாத்துவது அப்பட்டமான, பச்சையான வாக்கு வேட்டையே தவிர எதுவித பலாபலன்களையும் என்றும் தரவில்லை.  இனியும் தராது.

 

மாறாக தமிழர்களின் நிலைமையை மேலும் சிரழிக்கவே வழி கோலின. மேலும் தொடர்நது வழி கோலும்.

 

இந்த அணுகுமுறை சிஙகள மக்கள மத்தியில் சிங்களப் பேரினவாதிகள் தமிழர்களுக்கு எதிராகப் பரப்பும் அச்சத்தை மேலும் அதிகரிக்கவே உதவியது, இந்த அணுகுமுறை  இராணுவப் பிரசன்னத்தை நியாயப்படுத்தவே

ஏதுவாக அமையும்.

 

மக்களால் கவனம் செலுத்தப்பட வேண்டிய, மக்களின் மேம்பாட்டுக்கு அத்தியாவசியமான, பொருளாதாரக் கொள்கைகள், விலைவாசி, கல்வி, வேலை வாய்ப்புக்கள், ஊழலற்ற நிர்வாகம், வேட்பாளர்களின் தராதரங்கள், ஆகியவை பற்றிய விவாதங்கள் எதுவும் வைக்கப்படவில்லை,

 

 

இன விரிசல்களை விரிவாக்குபவர்களே தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்வதற்கான இன்றியமாயாத ஒரே தகைமை என்ற நிலைமையே TNAஐத்தெரிவு செய்வதன் மூலம் உறுதியாகும்.

 

இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி, அதன் மூலமாகவே அரசியல் அதிகாரங்களையும், அவை தரும் பதவி சுகங்களையும் அனுபவிப்பவர்களின் கைகள், இரு இனங்கள் மத்தியிலும் மேலோங்கும்.

 

இரு இனங்களின் தரப்பிலும் இனமுரண்பாட்டைக் கூர்மையாக்குவோர்களினதும், அவர்களுடன் அருகில் அண்டி வாழ்வோர்களினதும் காட்டில்தான் மழை. அவர்களை நம்பி வோட்டுப் போடும் அடித்தள ஏழை மக்கள் வாயில்தான் தொடர்ந்தும் மண்.

 

 

TNA சார்பில் போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் சிலரின்யோக்கியதை:

 

 

இந்தத் தேர்தலில் TNA சார்பில் போட்டிடத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் சிலரின் கடந்த சமீபத்திய சரித்திரத்தையும், அவர்களின் யோக்கியதையையும் பார்ப்போமானால், புலிகளின் தலைமைத்துவத்தின் நடவடிக்கைகள்  தமிழ் மக்களை அதலபாதாளத்திற்கே இட்டுச் செல்கிறது எனத் தெளிவாகத் தெரிந்தும், புலிகளுக்கு அஞ்சி;, நாளாந்தம் பலியாகிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடயத்தில் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டு அரசியல் நடாத்திய கல்நெஞ்சக்காரர்கள்இவர்கள்.

 

தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு தாங்களும் ஒரு காரணமாக இருந்தும் அதற்காக தமிழர்களிடம் எவ்விதத்திலும் மன்னிப்புக் கோராத மனச்சாட்சி அற்றவர்கள்!

 

ஈழத் தமிழர்களின் விடிவிற்காக உழைக்க முன்வந்த, தமக்கு வழிகாட்டிய தமது தலைவர்களை, கொடூரமாக, கோழைத்தனமாக படுகொலை செய்த புலிகளுடன் உறவு கொண்டு, அவர்களுக்கு வக்காலத்து வாங்கி பதவி சுகங்கள் அனுபவித்தவர்கள்

 

தம்முடன் தோளோடு தோள் சேர்ந்து கட்சியை வளர்த்தவர்களுக்கு, தம்மைத் தலைவனாகக் கருதிய கட்சியின் தொண்டர்களுக்கு, தம்மை நம்பிய கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு, கணக்கு வழக்கு காட்டாதிருக்க கட்சியை உடைத்தவர்கள.

 

இலங்கை அரசை எங்களையும் சேர்த்து ஏதாவது செய்யுங்கள் எனக் கெஞ்சியும்,

 

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சிங்களத் தலைமை மீதும், சிங்கள மக்கள் மீதும் துவேஷத்தைக் கக்கியும்,

 

புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தங்களது அசிங்கங்களை மறைத்து ஒற்றுமை என்ற பதத்தைக் காட்டியும்,

 

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி அவர்களின் துன்பத்தில் அரசியல் நடாத்தும் பல்முகங்கள் கொண்டவர்கள்!

 

இவர்கள்தான் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தைக் கொண்ட  கட்சியின் முக்கியஸ்தர்கள் என்றிருக்கும்போது,

 

இவர்கள்தான் வேட்பாளர்களைத் தெரிவு செய்பவர்கள் என்ற நிலைமை இருக்கும்போது,

 

இவர்களின் சில்லறைத்தனமான வியூகங்களை உள்ளடக்கிய தெரிவுகள் தான் மக்கள் முன்  இருக்கும் தேர்வுகள் என்றிருக்கும்போது,

 

அத் தேர்தல் வெற்றிகளினால் வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வளம் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாளதனமானது..

 

 

ஒற்றுமைஎன்றகோசம் தேர்தல்களில்வெற்றியீட்டுவதற்கான பம்மாத்து:

 

எதுவித ஆக்கபூர்வமான, நடைமுறைச் சாத்தியமான, வழிமுறைகளையும் முன்வைக்காது ஒற்றுமைஎன்ற கோஷத்தை மட்டுமே மையமாக வைத்து கடந்த பல தசாப்தங்களாக செயற்ப்பட்டுவருவது, தேர்தல்களில் போட்டயிடுவது, தேர்தல்களில் தாம் சுலபமாக வெற்றியீட்டுவதற்கான பம்மாத்து அரசியலே.

 

ஒற்றுமை எனப்படும்போது, ஒரே கட்சியினரின் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் என்ற அளவுகோலின் அடிப்படையில் பார்ப்போமானால்:

 

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், ஏறத்தாழ அனைத்துத் தேர்தல்களிலும், ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்ஆரம்பத்தில்தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, பின்னர் ரியுஎல்எவ், அதன் பின்னர் ரிஎன்ஏதமிழர்களால் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் கொண்டவர்களாகத் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார்கள்.

 

ஆனால், இவர்களில் ஒருசிலரை தவிரஅநேகர் தங்களின் தனிப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொண்டார்களேயன்றி, தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளைச் சிறிதளவேனும் அவர்களால் பெற்றுத் தர முடியவில்லை என்பதுதான் சரித்திர உண்மை. 

 

இவர்களா தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்கப்போகிறார்கள்?

 

TNAல், தமிழரசுக் கட்சியுடன் இதர கட்சிகளான TULF, PLOTE, EPRLFசுரேஷ் குழு, TELO ஆகிய கட்சிகள் உள்ளடக்கப்பட்டிருப்பது போல், தேர்தல் ஆணையத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக செயற்பட்டு வரும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியும் TNAயின் ஒரு அங்கமாக இணைக்கப்பட வேண்டும், இது தமிழர்கள் ஒற்றுமையை அங்கீகரிப்பதாகவும் இருக்கும் என்ற பத்மநாபா ஈபிஆர்எல்எவ்ன் கோரிக்கைகளும், முயற்சிகளும் TNAயில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின், பல்வேறு தகிடுதத்தங்களாலும், சாக்குப்போக்குகளாலும், தில்லுமுல்லுகளாலும், பசப்பு வார்த்தைகளாலும், காப்பாற்றப்படாத வாக்குறுதிகளாலும் உதாசீனப்பட்டமை

 

அவர்கள் எந்தளவிற்கு நேர்மையானவர்கள், நம்பகத்தன்மை கொண்டவர்கள், ஒற்றுமையில்  இதயசுத்தியான அக்கறை கொண்டவர்கள், தமிழர் நலன கருதிச் செயற்படுபவர்கள் என்பதனைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைகின்றன.இவர்களா தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்கப்போகிறார்கள்!

 

 

TNAதேரந்தெடுக்கப்பட்டால் தமிழர்களின் அழிவு தொடர்வது தவிர்க்க முடியாதது:

 

ஒற்றுமைஎன்னும் கோஷம் தேர்தல்களில் தம் வெற்றிகளை உறுதி செய்து கொள்ளவும், ஒற்றுமையின்மைஎன்னும்காரணம் மக்களுக்கு எதுவுமே பெற்றத்தராத தமது கையாலாகத்தனங்களையும், பலவீனங்களையும், அரசியல் வங்குரோத்தையும் மறைக்கவும், மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கும் அவ்வப்போது பிரயோகிக்கப்படும் போர்வைகளே.

 

தமிழர்களின் இன்றைய இழிநிலைக்கான காரணங்கள்:

 

TNA யினரின்அரசியல் அணுகுமுறைப் பிசகுகள், தூரநோக்கற்ற செயற்பாடுகள்,தவறவிட்ட சந்தர்ப்பங்கள், தேர்தல்களில் வெற்றியீட்டுவதற்காக சுயநலமே ஒரே நோக்காககொண்டு பொய்மையைப் பெருக்குவது, துவேஷத்தை வளர்ப்பது, வாயில் மக்கள் நலனும் நெஞ்சில் சுயநலனுமாக அரசியல் நடாத்துவது ஆகியவையே.

 

 

இவையையே  TNAஇத்தேர்தலிலும் கடைப்பிடிக்கும் ஆயுதம். அவர்கள் தேரந்தெடுக்கப்பட்டால் தமிழர்களின் அழிவு தொடர்வது தவிர்க்க முடியாததாகும்.  சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு எதுவித அரசியல் தீர்வையும் தாராது தொடர்ந்து தட்டிக் கழிக்க சாக்காகவே அமையும்.

 

புலம்பெயர்ந்த தமிழ்அரசியல் நடவடிக்கைகளும், அழுத்தங்களும்:

 

TNAயின் புலம்பெயர்ந்த தமிழ் மக்களைக் குஷிப்படுத்தும் அரசியல்,TNAினருக்கு பணவருவாயையும், அவரகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தங்குவதற்கும் விருந்துபசாரங்களில் பங்குபற்றுவதற்கும் உதவலாம்.

 

தூரதிருஷ்டவசமாக, புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு இலங்கை அரசியல் தம் பொழுது போக்கிற்காகவும்,  தம்மைப் பிரபல்யப்படுத்துவதற்குமான சாதனங்களே. இதற்குநாடுகடந்த அரசாங்கம் நகைப்பிற்குரிய ஒரு உதாரணம்.

 

புலம் பெயர்ந்த தமிழர்களின் நடவடிக்கைகள் என்றுமே மகிந்த ராஜபக்சாவையோ, மற்றும் அரசாங்கத்தைக்  சேர்ந்தவர்களையோ போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தப் போவதில்லை. மாறாக, சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்சாவின் அரசியல் பலத்தை அதிகரிக்கவே செய்யும். 

 

 

 

TNA யின்வங்குரோத்தைமறைக்ககொண்டு வரப்பட்டவர்உயர்நீதிபதி விக்னேஸ்வரன்:

 

முன்னாள் உயர்நீதிபதி விக்னேஸ்வரன், TNAயின் தலைவர் சம்பந்தனால்TNAயின் இதுவரையிலான அரசியல் கையாலகத்தனங்களையும், வங்குரோத்தையும் தமிழ் மக்களின் பார்வையிலிருந்து மறைக்கவும், TNAக்குள் நடந்த உள் வெட்டுக்குத்துக்களைத் தவிர்க்கவும் கொண்டு வரப்பட்டவர்.

 

ஆனாலும்  இப்பொழுது TNAக்குள் இருக்கும் சக்திகள் இதுவரை இருந்த பேர்வழிகள்தான். அவரால் ஒன்றும் வித்தியாசமாகவோ, விசேடமாகவோ செய்து விடமுடியாது என்ற நிலைமையோ, விரக்தியோ, அல்லது அவரும் TNAயின் சகதிக்குள் இழுபட்டு விழும் நிலையோ விரைவில் ஏற்படும்.

 

TNAயின் உள் வெட்டுக்குத்துக்களும் ஒரு சிறு இடைவெளிக்குப் பின் தீவிரமாகத் தொடரும் தமிழர்களின் நிலைமையில் நல்மாற்றங்கள் எதுவும் ஏற்படாது அடுத்த தேர்தலிலும் சிங்களப் பேரினவாதம், ஒற்றுமை என்ற கோஷங்கள் தொடரும்.

 

இந்தியா சர்வதேச நாடுகள் தொடர்பாக TNA யினர் அம்புலி மாமா கதைகள் கூறுகிறார்கள்:

 

 

சர்வதேசநாடுகள் TNAயினர்தான் வடமாகாணத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இரகசியமாக கூறியிருக்கிறார்கள். தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த்தால் உங்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்துவோம் என்று மன்மோகன் கூறுகிறார் என்றெல்லாம் யூ ட்யூப் (You Tube) ஒளி பரப்புக்களில்சம்பந்தனும் சுரேஷும்செய்திகளைகசிய விடுகிறார்கள்.

 

சர்வதேசநாடுகள் இப்பொழுது இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல்கள் பற்றியும் தமிழர் நலன்பாலும் எடுத்துக் கொண்டிருக்கும் அக்கறை, தமது பூகோள அரசியல் பொருளாதார மற்றும்பாதுகாப்பு நலன் சம்பந்தமானது. அதனை நாம் அவதானித்து செயற்படவேண்டும்.

 

ஆனால், அவை நம் உரிமைகளைப் பெற்றெடுத்துத்தரும் என்று TNAயினர்கூறிக்கொண்டு திரிவது, வெறும் ஏமாற்று அரசியல்.

 

மக்களை ஒரு கனவுலகத்தில் சஞ்சரிக்க வைக்கும் செயல்.

 

மகிந்த ராஜபக்சா அரசு,சீனா, பாகிஸ்தான், இரான் சார்பு நிலையிலிருந்து விலகுமானால், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்ளடங்கிய சர்வதேசநாடுகளின் அக்கறையும் அற்றுப் போய்விடும்.

 

 

இப்பொழுது தமிழ் நாட்டில், திமுக, அதிமுக எடுக்கும்  நிலைமைகளும் 2014 இல்எதிர்வரும் இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் மங்கி விடும். திசை திரும்பி விடும்.

 

எனவே, சர்வதேச நாடுகளின் தற்போதைய அக்கறையை மட்டும் மையமாக வைத்து TNAதாம் எடுப்பதாகக் கூறி வரும் அரசியல் பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுடும் அரசியல்.

 

 

சிங்கள மக்களுடனும்அரசியல்சக்திகளுடனும் ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றங்கள் இல்லை   

 

 

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுடனோ, சிங்கள அரசியல்வாதிகளுடனோ இணைந்து சகல இன சமூக மக்களின் நலன் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் எடுப்பதோ அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முனைவதோ பயன் அளிக்காதுஎன்ற பாணியிலேயே TNA யினர் செயற்படுகிறார்கள்

 

TNAயின் தலைவர்கள் தமது தனிப்பட்ட சொந்த நலன்களைப் பாதுகாக்க அரசாங்கத்துடனும் அரசபடை அதிகாரிகளுடமும் அவ்வப்போது மேற்கொண்டு வரும் சமரசங்கள் மற்றும் பின்கதவால் பெற்றுக் கொள்ளும் சலுகைகள் அனைத்தும் தமிழர்களுக்குத் தெரியாதவாறு மூடி மறைக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.

 

இத் தலைவர்கள் தங்களுக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்று நடந்ததுதான், நடப்பதுதான், தமிழ் மக்களின் இன்றைய இழிநிலைக்குக் காரணம். இவர்கள் மாறமாட்டார்கள். ஆதலின் தமிழர்களின் இன்னல்களும் மாறாது தொடரும்.

 

எனவேTNAயினரைத் தம் பெரும்பானமைப் பிரதிநிதிகளாக எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் தமிழர்கள் தேர்ந்தெடுப்பினும் இன்றைய யதார்த்தத்தில் தமிழர்களின் பிரச்னைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்பெற்று தமிழர்கள் தன்னம்பிக்கையுடனும் தன்மானத்துடனும் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்வதற்கு பயனளிக்கக்கூடிய வழியாக அமையாது. இதே கோஷங்களும் கூக்குரல்களும் தமிழர்களின் வாக்குகளைப் பெற அடுத்த தேர்தலிலும் முழங்கப்படும்.

                                               

 

 

 

 

 

தமிழ் மக்கள் வட மாகாண தேர்தலில் என்ன செய்ய்யலாம்?

 

தேர்தலுக்கு இன்னும் இருபத்தி இரண்டு நாட்களே உள்ளன. TNA யின் பண பலம், புலம் பெயர்ந்தோரின் ஆவேசம், ஊடககங்களின் அறிவிலித்தனமும் இயலாமையும் TNA யின் வெற்றிக்கு வழி செய்யும்

 

தமிழ் மக்கள் மீண்டும் அதே சோக கீதங்களுடனும். TNA யினர் அதே போர்வீர வீறாப்புக்களுடனும் ரோசமில்லாமல் வலம் வருவார்கள் அடுத்து வரும் தேர்தலில் வென்று பதவிகளை பெறுவதின் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்களையும் தருவார்கள்.

 

இந்த சூழ் நிலையில் மனசாட்சி உள்ள தமிழ் வாக்காளர்கள் அமையப்போகும் மாகாண அரசில் TNA மாகாண அரசு அமைத்தால் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை தொடர்பாக என்ன சொல்கிறார்கள் என்பதை தெளிவு படுத்தும் படி கோரவேண்டும்.  அல்லது மனசாட்சியின்  படிவாக்களித்த்துஅவர்களுக்கு தமது அதிருப்தியை தெரிவிக்கவேண்டும்.

 

 

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com