Contact us at: sooddram@gmail.com

 

கனிமொழி

காத்திருக்கும் கட்சிப் பொறுப்புக்கள்

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன்.
சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன். என்முறை வருமென்று...

இவை கனிமொழியின்கருவறை வாசனைகவிதைத் தொகுப்பில் வரும் கவிதை வரிகள்.

கனிமொழியின் கவிதைகள் சமகாலக் கவிஞர்களின் கவிதைகளுக்கு நிகரானவையல்ல எனப் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இலக்கிய வாரிசாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பொது வெளிக்குள் நுழைந்தவர் கனிமொழி.

தந்தை சங்ககாலக் கவிதைகளைக் கையிலெடுத்தார். மகளோ சமகாலக் கவிதைகள் வடித்தார். சமூக ஆர்வலராக, இலக்கியவாதியாக தன்னைக் காட்டிக் கொண்ட கனிமொழி, அவரை நன்கறிந்தவர்களுக்கு மிகவும் கூச்ச சுபாவங்கொண்ட, நளினமான பெண். கனிமொழியின் இந்த கூச்ச சுபாவம்தான் அரசியலில் நுழையுமாறு அவருக்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்புகளையெல்லாம் நிராகரிக்கச் செய்திருக்கிறது.

கனிமொழி கலைஞரின் மூன்றாவது தாரமான ராஜாத்தியம்மாளின் ஒரே வாரிசு. தயாளு அம்மாளின் ஆண் வாரிசுகள் அரசியலில் கொடிகட்டிப் பறக்க தனது மகளும் அரசியலில் இறங்க வேண்டும் என்று ராஜாத்தியம்மாள் ஆசைப்பட்டார். ராஜாத்தியம்மாளின் நச்சரிப்புக்கு கலைஞர் இணங்க, கனிமொழி தந்தையின் சொற்கேட்டு அரசியலில் இறங்க வேண்டியதாயிற்று. கனிமொழி 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற போது எல்லாமே என்னால் தானே என்று ராஜாத்தியம்மாள் அழுதது பலருக்கு நினைவிருக்கலாம்.

கனிமொழி அரசியலில் நுழைந்த போது அவரது எழுத்துக்களைப் படித்திருந்த பலர் அவர் ஒரு கண்ணியமான மக்களுக்காக உழைக்கக் கூடிய அரசியல்வாதியாக வருவார் என்றே நம்பினர். ஆனால் இன்று அவரும் தன் தந்தையின் வழியில் தன் ஊழல்களை மறைக்க, இலக்கிய முகமூடியைப் பயன்படுத்துகிறார் என்பது நிதர்சனமாகியிருக்கிறது. மு. க. ஸ்டாலினுக்கோ, மு. க. அழகிரிக்கோ அது வாய்க்காததால் அவர்கள் அராஜக, அரசியல்வாதிகளாகவே பார்க்கப்படுகின்றார்கள்.

2007 ஆம் ஆண்டு கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிகையில் சிபிஐ சேர்த்தது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று கூறிய சிபிஐ, கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரையும் குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.

இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் வரவேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் திகதி கனிமொழியும் சரத்குமாரும் சி பிநீதிமன்றில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜராகிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம். கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண் குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடிவிட மாட்டார். எனவே முன்பிணை தர வேண்டும் என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது. அதன் பின்னர் மே 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் திகதி கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி கனிமொழியை உடனடியாகக் கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.

கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்பிணை கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்துவிட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டார்.

கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கக் கோரி அவர் சமர்ப்பித்த 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் முதலாம் திகதி வரை கனிமொழி உள்ளிட்ட 5 பேரின் பிணை மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இம்மாதம் முதலாம் திகதி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்த நிலையில் சிபிஐ தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்படாததால், கனிமொழி கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குஸோக்கான் நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கித் தீர்ப்பளித்தது.

திஹார் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய கனிமொழிக்கு பாரிய அங்கு வரவேற்பளிக்கப்பட்டிருக்கிறது. சிறை சென்று திரும்பிய கனிமொழியை ஒரு தியாகியாக அவரது கட்சிக்காரர்கள் பலர் வர்ணிக்கின்றனர். 1960களின் ஆரம்பத்தில் கலைஞர் கருணாநிதியும் சிறைசென்றார். இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு அவர் சிறை சென்றார். தொடர்ந்து அவர் 1969 இல் தனது 45 ஆவது வயதில் தமிழகத்தின் முதலமைச்சரானார். கனிமொழியும் சிறை சென்று திரும்பியிருக்கிறார். அவருக்கு இப்போது 43 வயது. சிறை சென்று திரும்பியிருக்கும் கனிமொழிக்கு திமுக வில் ஆதரவு வலுவடைந்திருப்பதால் அவருக்கு கட்சி கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்களை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கட்சியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூட சில ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தைத் தொடர்ந்து திமுகவின் மத்திய அமைச்சர்களான ராசா மற்றும், தயாநிதி மாறன் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்தனர். கனிமொழியின் 6 மாதகால சிறைவாசம் முடிவடைந்ததையடுத்து அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. திமுகவின் அமைச்சரவை வெற்றிடத்துக்கு கனிமொழியின் பெயர் அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் கலைஞர் சந்திப்பில் பிரேரிக்கப்பட்டதாகவும் சில பத்திரிகைகள் கூறுகின்றன.

திமுக வில் கனிமொழிக்கு தற்போது வழங்கப்படும் முக்கியத்துவம், தமிழகத்தின் தலைவிதியை பெண்கள் இருவர் தீர்மானிக்கும் நிலையை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தந்தையின் சொற்படி கேட்ட கனிமொழியின் காத்திருப்பு என்னவோ வீண்போகவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

(அனன்யா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com