Contact us at: sooddram@gmail.com

 

முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது

சர்வதேச கம்யூனிஸ்ட் / தொழிலாளர் கட்சிகள் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்

முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் மாற்றை உருவாக்கிட நாம் அனைவரும் களத்தில் இறங்குவோம் என்று சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழி லாளர் கட்சிகளின் 13ஆவது மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு, கீரிஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி மாநாட்டின் விவாதத்தில் பங் கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில், முதலாளித்துவ முறைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் அல்லாத மக்களும் கூட கிளர்ந்தெழுந்து உலகம் முழுவதும் போரா டிக் கொண்டிருக்கக்கூடிய தருணத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கிரீஸ் நாட்டிலும் அத்தகைய போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு போராடும் கிரீஸ் நாட்டின் தோழர்களுக்கும் மக்களுக்கும் நம் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

கிரீஸில் மக்களின் போராட்டங்கள் வீச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடிய இத்தருணத்தில் நாம் இங்கே இம்மாநாட்டை நடத்திக்கொண்டிருப் பதன் மூலம் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

இம்மாநாட்டின் கருப்பொருள் மூன்று முக்கிய அம்சங்களை முன்வைத்தது. முதலாவது, சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சிக்குப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்டு களுக்கு ஏற்பட்ட அனுபவம். சோவியத் யூனியனில் நடைபெற்ற எதிர்ப் புரட்சி யானது, மார்க்சிச-லெனினிசத்தின் புரட்சிகர அறிவியலையோ அல்லது சோசலிசக் கொள்கைகளைப் பின் பற்றுவதையோ எவ்விதத்திலும் மறுத லிக்கவில்லை.

சோசலிசத்தைக் கட்டுவதில் ஏற் பட்ட மிகப் பெரிய குறைபாடுகள், ஏகாதி பத்தியம் / முதலாளித்துவத்தைக் குறைத்து மதிப்பிடல், சோசலிசம் குறித்து அதீதமான மதிப்பீடு மற்றும் மார்க்சிச-லெனினிசத்தின் அறிவியல் பூர்வமான மற்றும் புரட்சிகரக் கோட் பாடுகளிலிருந்து விலகிச் சென்றமை ஆகியவையே சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சி உருவானதற்குக் காரணங் களாகும்.

இம்மாநாட்டுக் கருப்பொருளின் இரண்டாவது அம்சத்தை பொறுத்த வரையில், மேலே கூறியவாறு நடைபெற்ற நிகழ்ச்சிப் போக்குகள் ஏகாதிபத்திய மானது உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், கலாச்சார ரீதியாக வும், தத்துவார்த்த ரீதியாகவும் தன் னுடைய மேலாதிக்கத்தை வலுப்படுத் திட மூர்க்கத்தனமாகத் தாக்குதலைத் தொடுத்திட வழிவகுத்தது. ஆயினும், முதலாளித்துவம் அபரிமிதமான முறை யில் வளர்ச்சி அடைந்திருந்தபோதிலும் கூட, அதனால் தன்னை ஒரு சுரண்ட லற்ற அமைப்பாகவோ அல்லது நெருக் கடியற்ற அமைப்பாகவோ நிறுவ முடிய வில்லை என்பது மீண்டும் வலுவாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டு மல்ல, உலகில் உள்ள பல கட்சிகள் இத் தகைய முடிவுகளுக்கு வந்திருந்தன. அவை இன்றையதினம் எவ்விதப் பிசிறு மின்றி சரியானவையே என்று மெய்ப்பித் துக் காட்டப்பட்டிருக்கிறது.

உலக முதலாளித்துவம் தனக்கு ஏற் பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற் காக எடுத்திடும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் ஓர் ஆழமான புதிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

உற்பத்தி உறவுகளை அழித்திடு வதையே தன் ஒவ்வொரு முயற்சியின் போதும் உலக முதலாளித்துவம் கைக் கொள்கிறது. இதன் காரணமாக அது மக்கள் மீதான சுரண்டலை மேலும் உக்கிரப்படுத்துகிறது. சமீபத்தில் உலகின் பல நாடுகளில் கார்ப்பரேட்டுகள் தங்க ளுக்கு ஏற்பட்ட திவால் நிலையை அந் தந்த நாட்டு அரசுகளின் திவால் நிலை யாக மாற்றியதிலிருந்து இக்கொடூரத்தை நம்மால் பார்க்க முடிந்தது. அதன் காரண மாக அந்த அரசுகள் மக்களுக்கு அளித்து வந்த பல்வேறு நலத் திட்டங்களை வெட்டிக்குறைத்தன. இவ்வாறு அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந் தோங்கி வருகின்றன. இதனை லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் நம்மால் பார்க்க முடிகிறது. அமெரிக்காவில் நடை பெறும் ‘‘வால் ஸ்ட்ரீட் எதிர்ப்புகிளர்ச்சி கள் முதலாளித்துவ முறையையே கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இன்றைய கடும் நெருக்கடிக்குக் கார ணங்கள், முதலாளித்துவ முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறு களால் அல்ல, இம்முறையே தவறு என்று அவை உரக்கக் கூறத் தொடங்கி யுள்ளன.

முதலாளித்துவத்தைத் தூக்கி எறிய வும், சோசலிசத்தைக் கட்டிடவும் வலு வான முறையில் தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியையும் கட்டவேண் டியது இன்றைய அவசியத் தேவை யாகும். இதற்கு இங்கு குழுமியுள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளும் தங்கள் நாடுகளில் நடை பெறும் வர்க்கப் போராட்டங்களைக் கூர் மைப்படுத்தும் அதே சமயத்தில், ஏகாதி பத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும், முத லாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்கிற அரசியல் மாற்றுக்கான போராட்டத்தையும் வலுப்படுத்திட வேண்டும். இத்தகைய போராட்டங்களை அந்தந்த நாடுகளில் உள்ள துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக பகுப் பாய்வு செய்து, அதற்கேற்ற வகையில் நம் போராட்ட வடிவங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

இதற்கு இந்தியாவிலிருந்து வந்திருக் கும் நான் ஓர் உதாரணத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். இந்திய அரசு, சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திட முடிவு செய்திருந்தது. அதனை அது கொண்டு வர முடியாமல் அதற்கு நிர்ப்பந்தம் கொடுத்து அதனைத் திரும்பப் பெற வைத்த பின்னரே நான் இங்கே வந் திருக்கிறேன். இந்தத் துறையில் இந்தியா வில் சுமார் 5 கோடி மக்கள் வேலை செய் கிறார்கள். அவர்கள் குடும்பத்தாரையும் சேர்த்தால் இது சுமார் 25 கோடி பேர் களாகும். எனவே, வால்மார்ட் இப் போதைக்கு இந்தியாவுக்குள் நுழைய முடியாது.

சோசலிசம் என்கிற நம் அரசியல் மாற்றை வலுப்படுத்திடக் கூடிய வகையில் மக்களை அணிதிரட் டிட வேண்டும். வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள், நிச்சயமாக முதலாளித் துவ அமைப்பு முறையை ஒருநாள் தூக்கி எறியும்.

முதலாளித்துவத்திற்கு எதிரான புறச் சூழ்நிலைகள் வேகமாகவும் நமக்குச் சாதகமாகவும் வளர்ந்து வருகின்றன. ஆயினும் மாமேதை லெனின் எச்சரித்தது போல அதற்கேற்ற வகையில் நம் அகக் காரணிகளையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். மார்க்சிசம்-லெனினிசம் என்கிற புரட்சிகரத் தத்துவத்தினை ஏற்றுக்கொண்டுள்ள தொழிலாளர் வர்க் கத்தின் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்கள் முன்னெடுத்துச் செல் லப்பட வேண்டும்.

வரலாற்றுத் தொலைநோக்கில் நிச் சயம் சோசலிசம் தவிர்க்க முடியாதது. அது தாமதப்படலாம், ஆயினும் அது வரு வதை எவரும் தடுத்திட முடியாது. எவ் வளவு விரைவாக அது வரும் என்பது நம் மையே சார்ந்திருக்கிறது. அதனை விரைவுபடுத்தும் பணியில் நம் பணி களை நாம் முடுக்கி விடுவோம்.

‘‘சோசலிசத்திற்கு எதிர்காலம் உண்டா?’’ என்று இனியும் எவரும் கேட் கக் கூடாது. சோசலிசத்திற்கு மட்டுமே எதிர்காலம் உண்டு’. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவு பிரகடனத்தின் மீது பிரதிநிதிகள் விவாதம் செய்தபின் அது ஏற்கப்பட்டது. மாநாடு டிசம்பர் 11 அன்று நிறை வடைந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com