Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்ச் சமூகம் நெளிந்து வளைந்து வாழும் நிலைக்குக் காரணம் யார்?

கடந்த வாரம் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற ஞானம் சஞ்சிகையின் 150 ஆவது இதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் இன்றைய உண்மையான நிலையை எடுத்துக் கூறி சபையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோரை ஆழமாகச் சிந்திக்க வைத்தார். அவரது அந்த ஆழமான, அவசியமான, உண்மையான காலத்திற்கேற்ற கருத்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோரை விடவும் முழுத் தமிழ்ச் சமூகத்தையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்தில் அவர் தெரிவித்த அக்கருத்துக்களை எமது இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் ஆராயலாம் எனும் முடிவிற்கு நாம் வந்தோம்.

இலங்கையில் முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த போர்ச்சூழல் காரணமாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மட்டுமல்லாது தென்னிலங்கை மற்றும் மலையகம் வாழ் தமிழ்ச் சமூகமும் பாதிக்கப்பட்டது. இவர்களுடன் தமிழ்பேசும் மற்றொரு சமூகமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இந்த யுத்தம் காரணமாக நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ்ச் சமூகத்தில் 99 சத வீதமானோர் யுத்தம் முடிவிற்கு வந்ததும் அந்த முப்பது வருட கால போராட்டத்தை முழுமையாக மறந்து விட்டனர் என்பதே கம்பவாரிதியின் கருத்தாக அமைந்திருந்தது.

யுத்தம் நடந்த போது வடக்கு கிழக்கில் யுத்தத்தை நடத்தியவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வழிகளிலும் ஆதரவாக இருந்து அவர்களை வளர்த்துவிட்டவர்கள், இன்று தம்மால் வளர்க்கப்பட்டவர்கள் இல்லாதொழிக்கப்பட்டதும் நெளிந்து வளைந்து கொடுத்து வாழப் பழகிக் கொண்டுள்ளனர். அன்று அவர்களுடன், இன்று இவர்களுடன் நாளை வேறொருவர் வந்தாலும் வாழத் தயார் என்பதாக தமிழ்ச் சமூகம் வாழப் பழகிக் கொண்டுள்ளமை மிகவும் துர்ப்பாக்கியமானதென்பதே கம்பவாரிதியின் கவலை நிறைந்த கருத்தாக இருந்தது.

பொதுவாக கம்பவாரிதியின் மேடைப் பேச்சுகள் சபையோரை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும். ஆனால் அன்று மட்டும் சபையோரைச் சிரிக்க வைக்காது ஆழமாகச் சிந்திக்க வைத்தது. அத்தகைய இறுக்கமான கருத்துக்களை அவர் அன்றைய தினம் முன்வைத்தார். கம்பராமாயணத்தை மனனம் செய்து அதற்கு உவமைக் கதைகளையும், புராணக்கதைகளையும் சேர்த்து உரையாற்றுபவர் என்றும் மிகச் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் என்பதுவுமாகவே கம்பவாரிதி அவர்கள் கணிக்கப்பட்டு வந்துள்ளார். அவரது மனதிலும் ஆழமான அரசியல் கருத்துக்கள் பொதிந்திருப்பது உண்மையில் அன்றுதான் பலருக்கும் தெரிய வந்தது.

பெரும்பான்மையின அரசாங்கங்களினால் மறுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவே விடுதலைப் புலிகள் தமது உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பது உண்மை. புலிகள் மட்டுமல்ல அன்று சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் இயக்கங்கள் இவ்வாறுதான் தமது போராட்டத்தை தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆரம்பித்தன. பின்னர் போட்டி மற்றும் சகோதரச் சண்டை காரணமாக சகல இயக்கங்களும் போராடுவதிலிருந்து அழிக்கப்பட புலிகள் ஏகப்பிரதிநிதிகளாக தமது போராட்டத்தை நடத்தி வந்தனர். காலப்போக்கில் எதற்காகப் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்பதை மறந்த நிலையில் புலிகள் செயற்பட ஆரம்பித்தனர்.

தாம் எதைச் செய்தாலும் தமிழ் மக்கள் தம்முடன் இருப்பார்கள் என்ற தப்புக்கணக்கை புலிகள் தமக்குள் போட்டுக் கொண்டனர். உண்மையில் பிற்காலத்தில் புலிகளிலிடமிருந்த ஆயுதங்களுக்குப் பயந்த நிலையிலேயே அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களில் அகப்பட்ட மக்கள் அவர்களை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகள் பலரின் தனிப்பட்டவர்கள். சுதந்திரத்தில் தலையிட்டு தட்டிக்கேட்டு அதட்டிப் பயமுறுத்த முனைந்தபோதும், தமது சர்வாதிகாரப் போக்கை மிகைப்படுத்தியபோதும், மக்கள் மீதுஏற்றுக் கொள்ளப்படமுடியாத கட்டுப்பாடுகளைத் திணித்தபோதும் போராட்டம் திசைதிரும்ப ஆரம்பித்தது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ்ச் சமூகத்திலுள்ள படித்த செல்வாக்குள்ள நற்பண்பு கொண்ட பலரும் தென்பகுதியை நாடி வந்தனர். இல்லையென்று மறுதலித்தாலும் கம்பவாரிதியும் இத்தகையதொரு சூழ்நிலையில் இடம்பெயர்ந்த ஒருவராகவே கொழும்பில் குடியேற நேரிட்டது.

ஆனால் அவர் ஒருபோதும் புலிகளையோ அவர்களது செயற்பாடுகளையோ விமர்சித்தது கிடையாது. ஏதோவொரு வகையில் அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் தானுண்டு, தனது பிரசங்கங்களுண்டு என பொதுச் சேவையுடன் தன்னை இணைத்துச் செயற்பட்டு வந்ததே வரலாறு. அன்று புலிகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆட்சி நடத்திய காலத்தில் அவர்களுக்குப் பின்னால் தமது சுயநலன்களுக்காகவும், உண்மையான தமிழுணர்வுடனும் வெளிப்படையாகவே ஓடித்திரிந்த பலரையும் எல்லோருக்குமே நன்கு தெரியும். அதில் தெரியாது என்று மறைப்பதற்கு ஒன்றுமில்லை. கூறினாலும் எவரும் நம்பவும் மாட்டார்கள்.

அன்றைய அதே அவர்கள்தான் இன்று தலைகீழாகத் தமது பணிகளைச் செய்கிறார்கள். அன்றிருந்த தமிழுணர்வு இவர்களிடம் இன்று துளியளவும் இல்லாமல் போனது எப்படி என்பதே கம்பவாரிதியின் ஏக்கம். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் சென்றது போன்று இந்தக் கம்பவாரிதியும் தலைநகருக்கு வாசம் செய்து சுமார் பதினான்கு வருடங்களாக வாழ்ந்து வருகிறார். அமைதி திரும்பிய பின்னர் தனது சொந்த மண்ணிற்குச் சென்றதும் அவர் கண்ட காட்சிகள் அவரது மனதைப் புண்பட வைத்தமையை அவரது பேச்சில் காணமுடிந்தது. தமிழகத்துத் தமிழன் எடுத்த கருமத்தைச் செய்து முடிக்கும்வரை தூங்கமாட்டான்.

உயிரைக் கொடுத்தாவது தனது காரியத்தை செய்து முடிப்பதில் கண்ணாக இருப்பான். ஆனால் எமது இலங்கை தமிழினத்திற்கு அப்படிவாழ முடியவில்லையே என்பது அவரது ஆதங்கம்.

கம்பவாரிதியின் ஆதங்கம், கவலை எல்லாமே நியாயமானதுதான். ஆனால் இத்தனைக்கும் காரணம் புலிகள்தான் என்பதை இல்லாதபோதும் நாம் வெளிப்படையாகக் கூறப் பயப்படுகிறோம் அல்லது தயங்குகிறோம். தமிழ் மக்களைக் காப்பாற்றுகிறோம் என்று கூறிப் புறப்பட்டு இன்று தமிழ் மக்களை அவர்கள் நட்டாற்றில் விட்டுவிட்டார்கள். கிடைத்த பல அமைதிப் பேச்சுவார்த்தை சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியிருந்தால் இன்று அவர்களும் இருந்திருக்கலாம். பல்லாயிரக்கணக்கான மக்களும் இறந்திருக்கமாட்டார்கள். உதவிசெய்த இந்தியாவிற்கே துரோகம் செய்து பாரதப் பிரதமரையே கொன்றுவிட்டு அதே இந்தியாவிடம் எவ்வாறு உதவி கேட்பது?

கம்பவாரிதி குறிப்பிட்டது போன்று இலங்கைத் தமிழனை நெளிந்துவளைந்து வாழும் நிலைக்குத் தள்ளியது யார்? ஓர் அரசாங்கத்துடனாவது இதய சுத்தியுடன் புலிகள் பேச்சு நடத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைக் குழப்பியது போலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் புலிகள் தமது ஏமாற்று வேலையைக் காட்ட முனைந்தனர். அவ்வாறிருந்தும் இன்றைய ஜனாதிபதி மிகவும் பொறுமையாக பல சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வழங்கினார்.

இன்றைய ஜனாதிபதியின் பொறுமையைப் புலிகள் முன்னைய ஜனாதிபதிகளைப் போன்று பலவீனமாகக் கருதியதால் ஏற்பட்ட பிரதிபலனை அவர்கள் சந்திக்க நேரிட்டது. அதன் காரணமாக இன்று வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலுமே மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். விரைவில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும். அதற்கு புலிகளைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அடம்பிடித்துத் தடையாக நிற்காது தமிழ் மக்கள் சார்பாக ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும். தீர்வு காணப்படுவதில் ஏற்படும் காலதாமதம் கம்பவாரிதி கூறியது போன்று தமிழ் மக்களை நெளிந்து வளைந்தே வாழ வைக்கும். நேற்றும் இன்றும் கடந்து செல்ல நாளையாவது தமிழினம் நிமிர்ந்து வாழ வேண்டுமாயின் இனியுமொரு வன்முறையான அரசியலை ஒருபோதும் நாடக் கூடாது.

(நன்றி: தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com