Contact us at: sooddram@gmail.com

 

தியாகிகள் மற்றும் துரோகிகளை நினைவு கூருதல்

(மகேந்திரன் திருவரங்கன்)

கடந்த காலத்தை நினைவு கூருதல், அந்தக் காலத்தில் இடம்பெற்ற போராட்டம், அதில் பங்குபற்றியவர்கள், மற்றும் முகவர்கள், ஆகியோரினை நினைவு கூருதல் என்பன தற்போதைய எங்கள் அரசியல் பயணத்திலிருந்து பிரிக்க முடியாதபடி தொடர்புள்ளதாக உள்ளது. கடந்த காலமும் அதனுடன் இணைந்த நினைவுகளும் எமது நிகழ்கால வரலாற்றின் வளர்ச்சியினைப்பற்றி பேசும், எனவே கடந்த காலத்தை ஒரு இறந்தகால வடிவத்திலும் மற்றும் கடந்த காலத்தில் அதன் முகவர்கள் கடந்தகாலத்தை நமக்கு பரிசளித்த வடிவத்திலும் மட்டுமே போற்றிப் பாதுகாக்க நாம் முனைகிறோம்.

மற்றைய சந்தர்ப்பங்களில், கடந்த காலம் எம்மை விட்டுச்சென்றுள்ள சில தற்போதைய வெற்றிடங்கள், மற்றும் தோல்வி, என்பன அடிக்கடி கடந்தகாலத்தை பற்றிய ஒரு கற்பனைக் கனவுகள் நிறைந்த மாயத்தோற்றத்தை எங்களிடம் வரவழைக்கின்றன. அதன் விளைவாக நாங்கள் அடிக்கடி நிகழ்காலத்தை எந்தவித மாற்றமோ அல்லது கறைகளோ இல்லாத கடந்தகாலம் எனும் கண்ணாடியில் பார்க்க ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம். 

நீண்ட கால ஓட்டத்தில், கடந்த காலத்தினைப் போற்றி பாராட்டும் எமது அரசியல் நன்மை அளிக்கப்போவதாக மாறப்போவதில்லை. மகிமைமிக்க கதைகளைப் பேசும் ஒரு சுற்றாடலில் எங்களை வைத்திருக்கும் கடந்த காலத்தை நாம் பாதுகாக்க விரும்புகிறோம், மற்றும் புகழ்பாடும் செய்கை எமது விமர்சனக் கண்களின் பார்வையை மழுங்கடிக்கின்றன. இதன் விளைவாக நிகழ் காலமானது வழக்கற்றுப்போன சக்திகளால் தான் முடமாகிப் போய்விட்டதாக எண்ணுகிறது. மற்றும் எமது பார்வை குறைந்த கண்களுக்கு எதிர்காலம் ஒரு மங்கலான இடைவெளியாகவே காட்சியளிக்கின்றது. நாங்கள் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் எங்கள் நினைவுகளில் பின்னிப் பிணைந்துள்ள இந்த கடந்தகால மற்றும் நிகழ்கால பிணைப்பு என்னும் சுய அழிவுத் தொடர்ச்சியை உடைக்க வேண்டியது அவசியம் என்பதோடு, தேக்க நிலைக்கு பதிலாக மாற்றத்தை நோக்கி முன்னடத்திச் செல்லும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் கண்ணோட்டத்தில் நிகழ்காலத்தை மீட்கவேண்டியதும் அவசியம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால், ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கரமான வன்முறைகள் என்பனவற்றையும் பொருட்படுத்தாமல் எல்.ரீ.ரீ.ஈ யினரது மாவீரர் தின நினைவுகளை அனுட்டித்தது பற்றிய எனது எண்ணங்கள், கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் இரண்டுக்கும் இடையேயான இருமுனை விளைவுகளைப் பற்றிய புரிந்துணர்விலிருந்து  முளைவிட்டன. இந்த அபிப்பிராயக் கட்டுரையின் நோக்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், எல்.ரீ.ரீ.ஈ யினரது தியாகிகள் தின நிகழ்வை அனுட்டிப்பதன் நியாயத்தன்மை பற்றி எனது தீர்ப்பை வழங்குவதல்ல. எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களினது வாழ்விலே மையமாக இருந்த இலட்சிய நோக்கு என்ற உயர்ந்த குறிக்கோளை மாணவர்கள் போற்றிப் பாராட்டியதில் நானும் எனது பங்கினைப் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் கல்வியை, தங்கள் இளமைப் பருவத்தின் முக்கிய பாகத்தை எல்லாம் தியாகம் செய்து, தங்கள் குடும்பத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பெரிய சமூகத்தின் மையத்தில், அதன் பாரிய தேவைகளை கருத்தில் கொண்டு, எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஆற்றிய தியாகம், மற்றும் அவர்களின் தார்மீகத் துணிவு, என்பனவற்றை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

இந்த நிராயுதபாணிகளான மாணவர்கள்மீது ஸ்ரீலங்கா அரசு வன்முறையை பயன்படுத்தியதற்கும் மற்றும்; மரித்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை நினைவுகூர்வதை அரசாங்கம் இடைவிடாது எதிர்ப்பதையும் நானும் கண்டிக்கிறேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈயின் சித்தாந்தங்களையும் மற்றும் அரசியலையும் பற்றி ஜனநாயக ரீதியில் கேள்வி எழுப்புபவர்களை தீயசக்திகளாக மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் இந்த தியாகிகள் பற்றிய கதையிலிருந்து நான் தூர ஒதுங்கிக் கொள்ள விரும்புகிறேன். எனவே போராட்டத்தின் பின்னான காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ தியாகிகளைப் பற்றி நினைவு கூருவதற்கு, கடந்த காலத்தினைப் பற்றிய வேறு என்ன முக்கியமான பிரதிபலிப்புகள் தேவைப்படுகின்றன என நான் எண்ணிப்பார்க்க விரும்புகிறேன்.

வேறு பல விடுதலை இயக்கங்களைப்போலவே எல்.ரீ.ரீ.ஈ யும் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடுதலைக்காக போராடும் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் உள்ளடக்கமான இலட்சிய உணர்வு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் அநேக இளைஞர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டது. தமிழர்களின் அத்தியாயத்தில் போர்க்குணம் 1970 களில் ஒரு உடைந்த பிளவுபட்ட அங்கமாக உருவெடுத்து பல்வேறு வகையான போராளிக் குழுக்களையும் உற்பத்தி செய்தது. எனினும் இந்த போராளிக் குழுக்கள் யாவும் அவற்றின் ஆரம்ப வருடங்களில், பிரதான நீரோட்டத்தில் உள்ள அரசியற் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளையும் மற்றும் அவற்றின் பலவீனங்களையும் மற்றும் தோல்விகளையும் அடையாளம் காண்பதற்காக தமிழ் சமூகத்தினருக்கு அவற்றை அளவிடும் வகையில் ஒரு முக்கியமான மேடையை வழங்கியிருந்தன.

போர்க்குணத்தின் எழுச்சி கடந்த தசாப்தங்களில் இருந்த தமிழ் அரசியலுக்கு ஒரு ஆதரவான தோற்றத்தை மீள உருவாக்கவில்லை. இது கடந்த காலத்தினப் பற்றிய தீவிரமான விமர்சனக் கண்ணோட்டத்தினைக் கொண்டிருந்தது. அது தனது விமர்சனத்தை அரசாங்கத்துடன் மட்டும் நிறுத்தி விடவில்லை. ஈபிஆர்எல்எப் போன்ற இயக்கங்கள் தமிழ் கலாச்சாரத்தின் மேலாதிக்க அடித்தளத்தை கொண்ட சைவ வெள்ளாள ஆணாதிக்க வர்க்கத்தினால் தீவிரமான கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. ஆரம்ப நாட்களின் போர்க்குணத்தின் தீவிரம், பல உணர்வுகளிலும் போராளிகள், தமிழர்களுக்கு வாக்களித்திருந்த புதிய எதிர்காலம் மற்றும் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என்பனவற்றுக்கு இடையே அது ஏற்படுத்த விரும்பும் தொடர்பின்மை என்பனவற்றிலேயே தங்கியிருந்தது.

போர்க்குணம் என்பது, 1980 களின் நடுப்பகுதியில் எப்படி ஒரு மேலாதிக்க திட்டமாக மாற்றமடைந்தது, மற்றும் 1980ன் நடுப்பகுதி வருடங்கள் தொடங்கி 1990களின் ஆரம்ப வருடங்கள் வரை தமிழ் சமூகத்தின் மனநிலையை உலுக்கிய மூர்கத்தனமான பரஸ்பர நாசங்களை ஏற்படுத்திய வன்முறைகள் என்பனவற்றைப் பற்றி ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட கதைகளை திரும்பவும் சொல்வதற்கு நான் பிரியப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் போராளிகள் குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈ, பிரதான தமிழ் அரசியலிலிருந்து அதிகமாக பெற்றுக்கொண்டதும் மற்றும் பரப்பியதுமான நாட்டுப்பற்றாளர் மற்றும் துரோகி என்கிற சிக்கலான அடையாளங்களும் மற்றும் தேசிய மூர்க்க குணத்துக்கு அந்தக் காலகட்டத்தை இரையாக்கியதும் நடைபெற்றது.

மற்றும் 1990களுக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் எல்.ரீ.ரீ.ஈக்கு வல்லமை மிக்க உள்ளக எதிர்கட்சி இல்லாதபடியால் இந்த அரசியல் மே 2009 வரை தொடர்ந்தது. தற்போது தமிழ் சமுதாயம் அடைந்துள்ள இந்த அரசியல் இக்கட்டான நிலைக்கு காரணமான ஒரே ஒரு சக்தி எல்.ரீ.ரீ.ஈ தான் என்று நான் கருதாவிட்டாலும் கூட, ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை வலியுறுத்தும் ஒரு புதிய அரசியல் பாதையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்றால், தமிழர்கள் சந்தித்த துயர்ங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ எவ்வகையிற் காரணம் என நாம் ஆராய வேண்டும். இப்போதைக்கு இந்த நடைமுறை தமிழ் சமூகத்திற்குள்ளே நடப்பதைப்போல் தோன்றவில்லை, மற்றும் “ நாம் அரசாங்கத்தால் மிகவும் தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்வதால், இப்போது இது சரியான நேரமல்ல” என்று இதற்கான சாக்குப் போக்குகள் கூறப்படுகின்றன.

இப்பொழுது நாங்கள் எதிர்கொள்ளும் முட்டுக்கட்டைகளை நோக்கும்போது, ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் மற்றும் தமிழர்களுக்கும் இடையேயான மோதல்கள் தீர்வதற்கு இன்னமும் பல வருடங்கள் ஆகலாம். எனவே கடந்த காலத்துடனான முக்கிய தெடர்புகளை தள்ளி வைப்பதற்கான எங்கள் அயலிடச் சான்றுகள் ஒருபோதும் பயனுள்ளதாக இருக்கப்போவதில்லை. அவை வரலாறு எங்களிடம் விட்டுச்சென்றுள்ள தமிழ் அரசியலை ஒரு முன்னேற்ற இலட்சியத்துடன் மீள் ஒருங்கிணைக்க வேண்டிய ஒரு பொறுப்பை நாங்கள் கைவிடும்படி எங்களை ஊக்கப்படுத்துகிறது. ஒருவேளை போரின் முடிவு மற்றும் தமிழ் சமூகத்தின் அரசியல் மனக்குறைகளுக்கு தீர்வு காண்பதில் தொடர்ந்து தவறி வரும் அரசாங்கத்தின் பங்கு, தொடர்ந்து இடம்பெறும் இராணுவ மயமாக்கல், மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசினால் காணிகளை கபளீகரம் செய்தல், மற்றும் அரசாங்கம் வாக்களித்தபடி சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாதலால் உள்ளக இடம் பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் போன்றவை ஒரு சாத்தியமான வெளிச்சத்தில் கடந்தகாலத்தை மீண்டும் எம்மிடம் கருத்தரிக்க வைக்கிறது. ஆனால் கடந்த காலத்தை பற்றியதான அப்படியான ஒரு கண்ணோட்டம் ஏமாற்றமளிப்பதும், மாயைத்தன்மையானதும் மற்றும் தமிழ் சமூகத்திடையே தீர்க்கப்படாத உள்ளக முரண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

மாவீரர் தினம் பற்றி நான் எழுப்ப விரும்பும் ஒரு கேள்வி எல்.ரீ.ரீ.ஈ யினரால் விட்டுச் செல்லப்பட்ட தீர்வுகாணப்படாத ஒரு பிரசங்கத்தினைச் சுற்றியுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ இரக்கமற்ற முறையில் புளொட், ரெலோ ஈபிஆர்எல்எப், போன்ற சக போராளி இயக்க அங்கத்தவர்களை கொன்றொழித்தது. இந்த இயக்கங்களை பிரதிநிதிப்படுத்திய போராளிகள்; துரோகிகள் என்கிற இழி பெயரை சம்பாதித்துக்கொண்டு எல்.ரீ.ரீ.ஈயின் கைகளினால் கொல்லப்பட்டார்கள். இந்த இயக்கங்களின் அங்கத்தவர்களோடு எந்த தொடர்பையோ அல்லது கூட்டையோ வைப்பதை நிறுத்தும்படி தமிழ் சமூகத்தை எல்.ரீ.ரீ.ஈ வற்புறுத்தியது. இந்த துரோகி என்கிற முத்திரை ஒரு வழியில் சாதி மற்றும் தீண்டாமை பற்றிய புதியதோர் பிரசங்கத்தை தமிழர்களின் மையப் பிரதேசத்தில் ஏற்படுத்தியது, மற்றும் எல்.ரீ.ரீ.ஈயின் ஆணையை மீறியவர்களிடம் விளக்கமும் கோரப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்த மனித உரிமைகள் ஆர்வலர்கள், எல்.ரீ.ரீ.ஈ யை பற்றி வெளிப்படையாகவே தங்கள் விமர்சனக் குரல்களை வெளியிட்டவர்கள். தமிழ் தேசியத்துக்காக உயிர்நீத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை தியாகிகள் என்று மரியாதையுடன் மகிமைப் படுத்தும் அதேவேளை, இந்த மாற்று இயக்க போராளிகள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ஜனநாயகத்துக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள்.

மாவீரர் தினத்தை அனுட்டித்த மாணவர்கள்மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கத்தை நான் கண்டிக்கும்போது, எல்.ரீ.ரீ.ஈ அதன் செழுமைக் காலத்தின்போது மரணமடைந்த ஏனைய போராளிக் குழு அங்கத்தவர்கள் அல்லது அதை விமர்சனம் செய்தவர்களது நினைவு தினத்தை தமிழர்கள் பகிரங்கமாக அனுட்டிப்பதை அனுமதிக்காத கசப்பான உண்மையையும் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

கருத்துவேறுபாடு கொண்ட தமிழர்கள் அனைவரினது நினைவுகளும் துரோகிகள் பற்றிய எண்ணத்தை, முக்கியமாக பிரதிபலிக்காமல், மாவீரர் தினத்தைப்பற்றி சிந்திக்க அனுமதிப்பதில்லை. எல்.ரீ.ரீ.ஈயின் தேசப்பற்று விவரணங்களில் தியாகி, மற்றும் துரோகி, என்பவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தன்மையாக, முன்னவர் தமிழர்களால் விரும்பப்படுபவராகவும், பின்னவர் வெறுக்கத் தக்கவராகவும் சித்தரிக்கப் படுவார்கள். தமிழ் சமூகம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ, எல்.ரீ.ரீ.ஈ யுடன் உறவுகளை தொடரவேண்டிய காரணத்தால் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த அடையாளங்களை ஏற்றுக் கொண்டது. இப்போது எல்.ரீ.ரீ.ஈயின் மறைவுக்குப் பின்னரும், இந்த பிரசங்கங்கள் மற்றும் அடையாளங்கள் யாவும் கேள்விக்கு உட்படாதவையாகவே மீந்துள்ளன, மற்றும் சில சமயங்களில் விசேடமாக தேர்தல் காலங்களில் போட்டித் தமிழ் தேசிய வேட்பாளர்கள் ஒருவர்மீது ஒருவர் சேறு வீசுவதற்காக இந்த அடையாளங்களை எழுப்புகிறார்கள். ஒரு தமிழன் என்றவகையில் இந்த வெறுப்பூட்டும் அடையாளங்களை கூர்ந்து ஆராயாமல், மற்றும்  தமிழ் தேசப்பற்று பற்றி வெற்று முழக்கமிடும் அரசியல் கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் போரில் இறந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் நினைவினை அனுட்டிப்பதை கடினமான ஒன்றாகவே நான் காண்கிறேன்

போராட்ட செயற்பாட்டின் ஆரம்ப காலத்தில், தமிழர்கள் அவர்களது கடந்த காலத்தை ஒட்டு மொத்தமாக ஆராய்ந்ததுடன்,தங்கள் சொந்த செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கும் விருப்பம் உடையவர்களாக இருந்தார்கள். போராட்டத்திற்குப் பிந்திய காலத்தின் ஆரம்ப வருடங்களில் இதேபோன்ற ஒரு செயல்முறை இடம்பெற்றதாகத் தெரியவில்லை. பிரதான நீரோட்டத்திலுள்ள அரசியற்கட்சிகள் எல்.ரீ.ரீ.ஈ யின் சித்தாந்தம், மற்றும் அதன் அரசியல் வியூகம் தொடர்பான முக்கிய கேள்விகளைத் தீர்த்துவைக்கவில்லை. அதற்குப் பதிலாக தமிழ் அரசியல் தலைவர்கள், எல்.ரீ.ரீ.ஈ யினை மகிமைப்படுத்துதல் மற்றும் அதனைப்பற்றிய விமர்சனங்களை தீயனவாக தள்ளிவைத்தல் போன்ற செயற்பாடுகள் மூலமாக தங்கள் மதிப்பை பெருக்கிக் கொண்டார்கள்.  2009 மே வரை எல்.ரீ.ரீ.ஈ தலைமையிலான போர்க்குணம் படைத்தவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த சிக்கலான சிந்தாந்த ஆட்சி எல்லையிலிருந்து, போருக்கு பிந்திய காலப்பகுதி விடுதலை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தில் கட்டப்பட்ட ஒரு குறுகிய வட்டத்தின் உள்ளேயே, அதை உடைத்து வெளியேறுவதற்குரிய திறமை இல்லாமல் நாங்கள் முடிவில்லாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

எப்படியாயினும் இந்த வருட மாவீரர் தின நிகழ்வு, பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றை உருவாக்கியுள்ளது. தென்பகுதியில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ருகுணுப் பல்கலைக்கழகம் என்பனவற்றிடமிருந்துதான் இந்த நம்பிக்கை தோன்றியுள்ளது,அந்தப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரி மாணவர்கள், எல்.ரீ.ரீ.ஈ யின் மாவீரர் தினத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடிய மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். நீண்டகால இனப்பிளவையும் மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் மாணவர்களுக்காக் தங்கள் ஆதரவை வழங்கிய இவர்களின் குணநலனை எவராலும் வியந்து பாராட்டாமல் இருக்கமுடியாது. அவர்களது எதிர்ப்பினை அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்காகத் தங்கியிருக்கும் ஒரு தொகுதியிலிருந்து வரும் ஒரு எதிர்ப்பாகவே நான் காண்கிறேன். தெற்கிலுள்ள பிரதானமான சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவம் வழங்காதுவிட்ட யாழ்ப் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலை இவர்கள் எதிர்த்திருப்பது வெளிப்படுத்துவது என்னவெனில், தனது சொந்த நிலைப்புக்காக வேண்டி எல்.ரீ.ரீ.ஈயினை தீய சக்தியாக தொடர்ந்து கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அரசாங்கத்தால் தாங்கள் பலி கொள்ளப்படாமல் தடுக்கவேண்டும் என இவர்கள் நினைப்பதனைக் குறிக்கிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலைப் பட்டதாரியாக நான் இருந்தபொழுது, ஒரு நவம்பர் மாத மாலையில், உயிர்நீத்த ஜேவிபி அங்கத்தவர்களது புகைப்படங்கள் மற்றும் சித்திரங்களை மாணவர் நலன்புரி நிலையக் கட்டிடத்தில் காட்சிக்கு வைத்தது எனக்கு நினைவிலுள்ளது. இந்த இளைஞர்கள் ஜேவிபி கிளர்ச்சியின்போது கொல்லப்பட்டவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்திலுள்ள இளநிலைப் பட்டதாரி மாணவர்கள் ஜேவிபி அங்கத்தவர்களை நினைவு கூருவதையிட்டு அரசாங்கத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லாவிட்டால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எல்.ரீ.ரீ.ஈ தியாகிகளை நினைவு கூர்ந்த தமிழ் மாணவர்களை வன்முறையை பிரயோகித்து அடக்க விரும்புவது ஏன்? இந்தக் கேள்வியைத்தான் தெற்கிலுள்ள மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்ப வேண்டிய தேவை உள்ளது. மாணவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டதற்காக, அல்லது ஜனநாயகத்தை நிலைநிறுத்த தவறியதற்காக அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பவர்கள், சிங்கள பௌத்த தேசியவாதம் அரசாங்கத்தை சூழ்ந்து கொண்டுள்ளதுடன் அதன் கட்டமைப்புகள் நாட்டிலுள்ள ஏனைய இனக் குழுக்களுக்களான தமிழ், மற்றும் முஸ்லிம்களுக்கு  எதிராக பாகுபாட்டையும் விதைக்கின்றதைப் பற்றியும் கண்டனம் எழுப்பவேண்டும். ஒரு சமூகத்திற்குள்ளும் மற்றும் பல்வேறுபட்ட ஏனைய சமூகங்களிடையும் அர்த்தமற்ற தேசப்பற்று மற்றும் தேசியவாதம் போன்ற சொல்லாட்சிகளை உருவாக்கும் குறுகிற பிரிவினர்களை, நாம் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும். ஒரு முற்போக்கான எதிர்காலம் பிறப்பதற்கு அப்படியான ஒரு விமர்சனம் அவசரமாகத் தேவைப்படுகிறது

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

(நன்றி: தேனி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com