Contact us at: sooddram@gmail.com

 

பொல்லைக் கொடுத்து கொடுத்து மீண்டும் மீண்டும் அடி வாங்கும் தமிழினம்

 (சிவகரன்)

1983 இனக்கலவரம் இலங்கை தமிழர்களுக்கு அவர்களின் எதிர்காலம் பற்றிய ஒரு பாரிய கேள்வியை எழுப்பியது.  கலவரம் நடந்து 29 வருடங்கள் உருண்டோடியும் தமிழர்களின் எதிர்காலத்திற்கு இன்னும் ஒரு பதில் கிடைக்கவில்லை. ஆனால் அந்த மாபெரும் இனக்கலவரத்தை நாம் எடுத்த ஒரு முட்டாள் தனமான நடவடிக்கைதான் ஒரு சிறு பொறிபோல் தூண்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. திருநெல்வேலி அதாவது இன்று பிரச்சனை நடந்த யாழ் பல்கலைக்கழகத்தின் அதே பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் நடைபெற்ற ஒரு பொறுப்பற்ற கொரில்லா தாக்குதல் தான் 83 இனக்கலவரத்தை தூண்ட காரணமாயிருந்தது. அன்று நாம் கொரில்லா யுத்தம் என்று தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஆரம்பித்த போராட்டம் நம்மையே தாக்க நாம் இலங்கை அரசிடம் எடுத்து கொடுத்த ஒரு பொல்லு. இனக்கலவரம் என்ற பெயரில் அதே பொல்லால் நாம் மிக மோசமாக அடி வாங்கினேம். கொரில்லா தாக்குதல்கள் அழிவை கொண்டு வரும்! நாம் புத்தியுடன் செயற்பட வேண்டு;ம இல்லை எதிரியை நாம் பலமாக்கி விடுவேம் என்று விமர்சித்தவர்கள் அன்று சோத்துப்பாசல்கள் என்று பரிகசிக்கப்பட்டார்கள்.

கலவரத்தின் பின் பின் தமிழினம் அழிவதா? புறப்படு தமிழா போருக்கு! என்று ஆயிரக்கணக்கில் இளைஞர்களை பெரும் போருக்கு அணி திரட்டினோம். நாம் ஆயுத பயிற்சியை இந்தியாவில் பெற்று இந்திய அரசின் ஆட்டத்திற்கு ஆடினோம். ஆனால் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து நடந்தது என்ன? நமக்கு பயிற்சி அழித்த அதே இந்திய இராணுவத்தாலேயே நாம் மோசமாக தாக்கப்பட்டோம். திருந்தினோமா? அடி வாங்கிய வலி மாற முன்போ மீண்டும் ஒரு மாபெரும் பெரிய பொல்லை  தயார் செய்தோம்! அது தான் புலிகளின் மரபு ராணுவப்படை! சுமார் 22 வருங்களாக மரபு ராணுவத்தை கட்டி பொலீஸ் இராணுவம் கடற்படை வான்படை என்று பல வடிவுகளில் பொல்லுகளை தயார் பண்ணினோம்.  நடந்து மடிந்தது என்ன? சாதாரண துப்பாக்கிகளுடன் திரிந்த பொலிசுக்கு நாங்கள் தான் நவீனரக துப்பாக்கி என்ற பொல்லையும் கொடுத்தோம். ஊருக்கு வெளியே முகாமில் இருந்த இராணுவத்தை போராட்டம் என்ற பொல்லைக் கொடுத்து எங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தினோம். ஆர்பிஜி என்ற பொல்லை எடுத்து நாம் அடிக்க நாம்  அவர்கள்  ஆட்லறி என்ற பொல்லை எடுத்து எம் வீடுகளையும் சொத்துகளையும் துவசம் பண்ணிவிட்டு போனார்கள்! முஸ்லீம்கள்  ாலம் காலமாக வாழ்ந்த நிலங்களை விட்டு அடித்து துரத்திய இனச்சுத்திகரிப்பு என்ற பெரிய பொல்லு தான் இன்று எங்களையும் சுத்திகரிக்க வைக்கிறது. பொல்லை நாங்கள் இப்ப சிங்கள முஸ்லீம் மக்களுக்க கூட்டாக கொடுத்து விட்டு இரு தரப்பிடமும் வாங்கி கட்டுகிறோம். அனால் இன்னும் திருந்துவதாக தெரியவில்லை! இறுதி யுத்தம் என்று நாம் எடுத்த அதே பொல்லு தான் முள்ளிவாய்காலில் எம்மை சூரஹம்சாரம் செய்து எமது ஆயுதப்போராட்டத்தையும் அடியோடு நிர்மூலமாக்கியது.

இந்த பொல்லுக்கொடுத்து அடி வங்குவது ஒன்றும் எமக்கு 1983இற்கு பின்னர்  வந்தது அல்ல! இலங்கை சுதந்திரமடைய முன்பாக யாழ் வேளாளர் சமூகம் மிக மோசமான ஒரு அடக்குமுறையை தலித் மக்கள் மீது செய்து வந்தது. தலித் மக்களிற்கான கல்வியை மறுத்து அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கினார்கள். தலித் மக்களை அடக்கி தனது சமூகம் மட்டுமே வளரகல்வியாழ் வேளாளர்கள் எடுத்த இன்னுமொரு பொல்லு! ஆனால் பிரிட்ஷாரிடம் சுதந்திரம் அடைந்த பின்  இலங்கை அரசு, யாழ் வேளாளர் வைத்திருந்த கல்வி என்ற அதே பொல்லை எடுத்து யாழ் வேளாள சமூகத்தின் மீது தரப்படுத்தல் என்ற பெயரில் ஒரு அடி போட்டது.

அது மட்டுமா? சாதி வெறி என்ற பொல்லை முதலில் தம் வசம் வைத்திருந்ததும் இந்த யாழ் வேளாள சமூகமே! அதே பொல்லை வாங்கி சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற பெயரில் தமிழருக்கு அடிபோட்டார்கள் சிங்கள இனவாதிகள். இவ்வளவு நடந்த பின்னரும் நாம் திருந்தினோமா? இல்லை. எம்மை நாமே அழிப்பதற்கு தினம் தினம் திட்டமிட்டு வகைவகையான பொல்லுகளை இன்றும் தயாரிக்கிறோம்.

மாவீரர் தினம் புலிகளின் போராளிகளுக்கு மட்டுமே நினைவு கூரும் ஒரு தினம்! ஆனால் இன்றும் மற்றைய இயக்க போராளிகள் துரோகிகள். அவர்களை இந்த தினத்தில் நினைவு கூர முடியாது என்று புலிகள் அதாவது எஞ்சிய புலிவால்கள் அடம்பிடிக்கிறார்கள். இருப்பினும் இறந்த போராளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செய்யும் உரிமையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் மக்களின் உரிமையை மறுத்து அவர்களை சாவுகளத்திற்கு இட்டுச் சென்ற புலிகளின் மாவீரர் நாளை கொண்டாட நாம் எமது கல்வியை பணயம் வைக்க வேண்டுமா? 30 ஆண்டுகள் புலிகளின் போராட்டம் தமிழ் சமூகத்தின் கல்வியை கருவறுத்து சென்றுவிட்டது. தமிழ் மக்களின் எதிர்காலம் சூனியமான ஒன்றாக இன்று புலிகளால் விட்டுச்செல்லப்பட்டுள்ளது. இவர்கள் கொண்டாட நினைத்த அந்த மாவீரர்கள் தம் கல்வியை இழந்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை எண்ணி தானே தம் இன்னுயிர்களை அர்ப்;பணித்தார்கள். அவர்களிற்கு நாம் இன்று செய்யக் கூடிய சிறப்பான ஒரு மரியாதை அவர்கள் நேசித்த மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவதே.  அதற்கு முதல் படிக்கல் கல்வி. யுத்த அழிவின் பின் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அத்திவாரமாக அமைய வேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம் கல்வி. ஆனால் ஒரு மாவீரர் தினத்திற்கு விளக்கேற்ற அந்த கல்வியை மீண்டும் தாரைவார்க்கப்போகிறோமா?

யாழ் பல்கலைக்கழகத்தில் அங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு யாருக்கும் விளக்கேற்றும் உரிமை இருக்கிறது. அனால் இன்று இவ்வளவு பிரச்சனை வர விளக்கேற்றிய யாழ் பல்கலைக்கழகம், அவர்களது முற்றத்திலேயே சகோதர படுகொலை  ெய்யப்பட்ட சக போராளிகளிற்காக என்றாவது ஒரு சிறிய மெழுகுதிரியை ஏற்றி இருப்பார்களா? 1980களில் புலிகளின் மிக மோசமான அடக்குமுறைக்கு உள்ளான யாழ் பல்கலைக்கழகம் எத்தனை பேரை புலிகளின் அதிகாரத் தீனிக்கு பலியாக்கினார்கள் என்பதை அவர்கள்; ஒரு போதும் நினைப்பது கிடையாது. புலிகளால் கொல்லப்பட்ட விரிவுரையாளர்கள் மாணவர்கள், இவர்களை இன்றைய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மறந்து பேய்விட்டார்கள். காரணம் இவர்கள் புலிகளால் துரோகிகள் என்று அநியாயமாக கொலை செய்யப்பட்டவர்கள். ஆனால் படித்தவர்கள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கிய புலிகள் மட்டும் இன்னும் இந்த பல்கலைகழக மாணவர்களிற்கு தியாகிகளா? அவர்களிற்காக தம் கல்வியையே தாரை வார்க்க தயராக இருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர்களின் தம்மை பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலையில்ல!

ஆனால் யாழ்  பல்கலைக்கழக மாணவர்களை நாம் முற்றாக குற்றம்  சொல்ல முடியது. காரணம் இன்று பல்கலைக்கழத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலே வேதவாக்காக உள்ளது.  புலிகளின் தற்கொலை அரசியலை தற்போது தன் கையில் எடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இன்னுமொரு பொல்லை தயாராக்கி வருகிறது. திருவாளர் சரவணபவன் அவர்கள் அன்று அமிர்தலிங்கம் செய்த அதே வேலையை இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் செய்கிறார். பின்னணியல் புலம் பெயர் புலி அமைப்புகளுடன் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஒரே தேவை யாழ்ப்பாணத்தில் அமைதி குலைய வேண்டும். மாணவர்கள் கல்வியை திறந்து போராட வேண்டும். ஆனால் திரு சரவணபவன் மட்டும்  தனத மகளை பவுத்திரமாக மகிந்தவின் உதவியுடன் அமெரிக்காவில் படிக்கவைத்து ஒரு வைத்தியராக்கி அமெரிக்காவில் வதிவுரிமையும் எடுத்து விடுவார். கவிஞர் காசி ஆனந்தன் 70களில் இளைஞர்களே உசுப்பேத்தும் கவிதை எழுதி அனைவரையும் இயக்கத்திற்கு அனுப்பி பலியாக்கினார். ஆனால் அவரது மகளை மட்டும் இந்தியாவில் படிக்கவைத்து திருமணமும் செய்து வைத்து விட்டார். தமிழ் மக்களின் அன்றைய தலைவர்கள் அனைவரும் அதை தான் செய்தார்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்ப நம்புவதை முதலில் நிறுத்த வேண்டும். புலம் பெயர் புலிகளின் தொடர்பை அடியுடன் துண்டிக்கவேண்டும். மாவீரர்களிற்காக தினமும் உங்கள் மனதில் தீபமேற்றுங்கள். அவர்களின் கனவை நனவாக்கும் ஒரே ஒரு ஆயுதம் கல்வி! கல்வி மட்டுமே. வீணாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம் பெயர் புலி ஊடகங்களின் உசுப்பேத்தல் என்ற பொல்லை கையில்வாங்கி மீண்டும் அதே பொல்லால் அடி வாங்கி உங்கள் எதிர்காலத்தையும் தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் நசுக்காதீர்கள்.

(நன்றி: தேனி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com