Contact us at: sooddram@gmail.com

 

இந்தியா மீது TNA இரட்டை வேடம்; பாராளுமன்றில் அம்பலமாக்கிய சம்பந்தனும் சரவணபவனும்

தலைவர் புகழ்ச்சி, தொண்டன் இகழ்ச்சி

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தனது உறுப்பினர்களுடன் அடுத்த பாராளுமன்ற அமர்வில் எவ்விடயங்களை எவ்வாறு பேசுவது, தமது கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதைக் கூட ஆராயாமல் பாராளுமன்றத்திற்கு வருவது என்பது அக்கட்சி அரசியல் கட்சியாக இருப்பதற்கு உரிய தகுதியை இழந்துள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. இதுவே இன்றைய தமிழ்க் கூட்டமைப்பின் பரிதாப நிலையாக உள்ளது.

சம்பந்தன் ஐயா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர். தமிழரசுக் கட்சியின் தலைரும் அவர்தான். சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழரசுக் கட்சியிலிருந்த பல தலைவர்களுடன் பணியாற்றியவர். அரசியலில் நன்கு பழுத்த பழம். தமிழ் மக்களது பிரச்சினைகளை நன்கு அறிந்து வைத்து அதற்கேற்ப காய் நகர்த்தும் அற்புதமான அரசியல் தலைவர். சிங்கள அரசியல்வாதிகளாலும் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் மதிக்கப்படும் அரசியல் தலைவர். அனுபவம் வாய்ந்த ஒரு சட்டத்தரணி. இதற்கும் மேலாக அரசியல் மூலமாக பணம் சம்பாதிக்காதவர் என்று கூறினாலும் பலரும் ஓரளவு ஏற்றுக்கொள்வர். இவருக்கு ஏன் இத்தனை பாராட்டுக்கள் என்று நிச்சயம் நினைக்கத் தோன்றும். ஆனால், இவை அவரைப்பற்றிய மிகைப்படுத்தப்படாத உண்மையான சில அடைமொழிகள். ஒருவரைப் பற்றிக் கூற வேண்டுமானால் இன்னொருவரை எடுத்துக் காட்டி அவரைக் குறைத்து இவரைக் கூட்டிச் சொல்வது நாகரிகமற்ற மரபு. அதனால் சொல்ல வேண்டியவரைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிட்டால் மற்றவரைப் பற்றி நாம் சொல்லாமலேயே இவருக்கு எதிர்மாறாக இருப்பவர்தான் அவர் என்பது தானாகவே புரிந்துவிடும்.

இப்போது விடயத்திற்கு வருவோமேயானால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இரட்டை,வேடமான நிலைப்பாடு தொடர்பாக தமிழ் மக்களுக்கு இருந்த சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது போல பாசாங்கு செய்து பின்னர் தாமே அதனைக் குழப்பி ஏமாற்றிவிட்டு இப்போது உலக நாடுகளின் துணையை நாடி நிற்பது போன்று நடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த உலக நாடுகள் வரிசையில் இவர்களது பட்டியலில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது. இந்தியாவே எமக்குக் கை கொடுக்க வேண்டும் எனக் கூறி புதுடில்லிக்குச் சென்று பாரதப் பிரதமரையும் சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால், இதே கூட்டமைப்பினர் யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியிலிருந்து இந்தியாவை எப்படியெல்லாம் சாட முடியுமோ அவ்வாறு கடுமையாக விமர்சித்தனர். இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ உதவிகளை வழங்கி புலிகளை அழித்த கொடிய நாடு, தமிழ் மக்களின் முதல் எதிரி என்றெல்லாம் இந்தியாவை இகழ்ந்தார்கள்.

ஆனால், இன்று இந்தியாதான் தமக்கு ஆதரவுக் கரம் கொடுக்கக்கூடிய நாடு. தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரக் கூடிய நாடு என்று புகழ்கிறார்கள். அதிலும் அண்மைக் காலங்களில் சம்பந்தன் ஐயா பாராளுமன்றத்திலும் சரி, பிற பொதுக் கூட்டங்களிலும் சரி, பிற நாட்டு இராஜதந்திரிகளின் சந்திப்புக்களின்போதும் சரி இந்தியாவையே புகழ்ந்து தள்ளுகிறார். நல்ல விடயம். தமிழ் மக்களுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்பும் அந்நாட்டு மக்கள் அனைவருமே நிச்சயம் இதனை ஏற்றுக்கொள்வர். அரசாங்கம் கூட அவர்கள் இதய சுத்தியுடன் இந்தியாவுடன் இணைந்து வந்தால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளது. ஏனெனில், அரசாங்கம் அன்றும் சரி இன்றும் சரி அயல் நாடான இந்தியாவுடன் தமிழ்க் கட்சிகளை விடவும் மிக மிக நல்லுறவையே பேணி வருகின்றது.

ஆனால், தமிழ்க் கூட்டமைப்பு இந்தியாவுடன் உண்மையிலேயே உண்மையாக உள்ளதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ஏனெனில், தலைவர் சம்பந்தன் இந்தியாவைப் புகழ்ந்து நேசக் கரம் நீட்டி உதவி வழங்க முன்வருமாறு அழைப்பு விடுக்கிறார். இலங்கைத் தமிழர் விவகார தீர்வில் இந்தியாவிற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகள் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றார். தீர்வு விடயத்தில் ஒத்துழைப்பையும், ஒத்தாசையையும் பெற்றுக் கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்பில் தனது தாய் நாட்டை விடவும், தனது நாட்டு அரசாங்கத்தை விடவும் இந்தியாவை உயர்வாகப் பேசுகிறார்.

ஆனால், அவரது அதே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ஈ. சரவணபவன் அதே பாராளுமன்றத்தில் தலைவரது கருத்துக்களுக்கு நேர் மாறாக இந்தியாவையும் அங்கு ஆட்சிசெய்யும் இன்றைய அரசாங்கத்தையும் எதிர்த்துக் கருத்துக்களை முன்வைக்கிறார். பின்னர் அதனைத் தனது பத்திரிகையில் அப்படியே பிரசுரமும் செய்கின்றார். இது ஏன்? இவர் உண்மையில் தெரிந்துதான் பேசுகிறாரா அல்லது கட்சிகளுக்குள் தனக்கு உரிய இடம் தரப்படவில்லை எனும் மன ஆதங்கத்தில் அல்லது தலைவருடன் முரண்பட்டு இவ்வாறு நடந்து கொள்கிறாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது. அனுபவம் மிக்க தலைமையில் வழிநடத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் நேற்று அடம்பிடித்துக் கொண்ட சிலரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை சரவணபவனின் தன்னிச்சையான பேச்சிலிருந்து உணர முடிகின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தனது உறுப்பினர்களுடன் அடுத்த பாராளுமன்ற அமர்வில் எவ்விடயங்களை எவ்வாறு பேசுவது, தமது கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதைக் கூட ஆராயாமல் பாராளுமன்றத்திற்கு வருவது என்பது அக்கட்சி ஓர் அரசியல் கட்சியாக இருப்பதற்கு உரிய தகுதியை இழந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. அதுவே இன்றை தமிழ்க் கூட்டமைப்பின் பரிதாப நிலையாக உள்ளது.

பாராளுமன்றத்தில் ஒரே அமர்வில் தலைவர் இந்தியாவைப் புகழ அதே கட்சியின் உறுப்பினர் ஒருவர் இந்தியாவை மிகக் கடுமையாகச் சாடுவது என்பது நகைப்புக்கிடமான விடயம். கணிசமான தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற தனித்துவக் கட்சி என்று மார்பு தட்டிக் கொள்ளும் தமிழ்க் கூட்டமைப்பு இவ்வாறு நடந்துகொள்வது அக்கட்சியின் வீழ்ச்சியை நோக்கியதாகவே உள்ளது. வெளிநாட்டுப் பயணங்களின் போதும், உள்ளூரில் இராஜதந்திரிகளைந் சந்திக்கும்போதும் தான் புறக்கணிக்கப்படுவதாக சரவணபவன் எம்.பிக்கு ஒரு மன ஆதங்கம் இருந்து வருகிறது.

இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் தலைவரின் கருத்திற்கு எதிர்க்கருத்து வழங்கிவருகிறாரோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. அல்லது தமது இரட்டை வேடத்தை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் என நினைத்து தலைவர் சம்பந்தனும் தொண்டன் சரவணபவனும் முன்கூட்டியே கதைத்துவிட்டு வந்து நாடகமாடுகின்றனரோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது? கூட்டமைப்பிற்குத் தனது பத்திரிகை மூலமாகப் பிரசாரம் செய்து அதனைத் தேர்தல்களில் வெற்றிபெற வைத்த தன்னை முக்கியமான பயணங்களிலும், சந்திப்புக்களிலும் ஓரங்கட்டுவதாக சரவணபவன் நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அது உண்மையல்ல. கூட்டுக் கட்சிகளின் ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே இவர் சேர்க்கப்படுவதில்லை என்பது இவருக்குத் தெரியாமலில்லை.

இருந்தும் தான் ஒரு பத்திரிகையை நடத்துபவர் என்றும், அதன் மூலமாக தமிழ்க்கூட்டமைப்பிற்கு அளவிற்கு அதிகமான பிரசாரம் செய்வதாகவும் இவர் நினைத்துக் கொள்கிறார். தான் தனது பத்திரிகையில் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட்டால் தமிழ்க் கூட்டமைப்பு படுத்து உறங்கிவிடும் என்பது இவரது நினைப்பாகவும் இருக்கலாம். ஆனால், அது தப்புக் கணக்கு என்பது அவருக்குத் தெரியும். தமிழ்க் கூட்டமைப்பிற்கு அவர் தனது பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுக்காதுவிட்டால் பத்திரிகையை தமிழ் மக்கள் புறக்கணித்துவிடுவர் என்பதும் இவருக்கு நன்கு தெரியும். முன்னர் புலிகளுக்குப் பிரசாரம் செய்து வந்தமையாலேயே அந்த மாயையில் இவரது பத்திரிகை மக்களது மனங்களில் இடத்தைப்பிடித்திருந்தது.

இது எவ்வாறிருப்பினும் புலிகளை நம்பி அவர்களால் இன்று நட்டாற்றில் விடப்பட்ட தமிழ் மக்கள் இப்போது அப்புலிகளுடன் நின்ற உங்களை நம்பி வாக்களித்துள்ள நிலையில் நீங்களாவது அம்மக்களை ஏமாற்றாமல் ஒரு நிலையான அரசியல் தீர்வைக் காண உதவி செய்யுங்கள். இந்தியா, அமெரிக்கா, லண்டன் என்று, இன்று தென்னாபிரிக்கா என்று கூறுகிaர்கள் தென்னாபிரிக்காவின் கதையுடன் அடுத்த இரண்டு காலத்தை ஓட்டாது இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஒரு தீர்விற்கு வாருங்கள். அல்லது ஒதுங்கிவிடுங்கள். எமது தலை எழுத்து இதுதான் என்றெண்ணி அம்மக்களும் வாழப்பழகிவிடுவார்கள். அதைவிடுத்து காலத்தைக் கடத்தி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மீண்டும் உசுப்பேற்றி எஞ்சியிருக்கும் தமிழ்ச் சமூகத்தையும் அழித்துவிடாதீர்கள் என்பதே எமது வேண்டுகோளாகும்.

(க.சிவராசா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com