Contact us at: sooddram@gmail.com

 

எங்களை விற்கவேண்டாம்!

இரண்டு முன்னாள் போராளிகள் மனக்குமுறல்

நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! ஒரு முன்னாள் பெண்புலியின் வாக்கு மூலம் என்று ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது தமிழகத்தின் பிரபல வெகுசன வார இதழான ஆனந்தவிகடன். அந்த நேர்காணலை ஒரு புனைவு என்றும் அது ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட முன் னாள் பெண் போராளிகளை கொச்சைப்படுத்துகிறது என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தன. இந்நிலை யில் விடுதலைப்புலிகள் இயக்கத் தின் இரண்டு முன்னாள் பெண் போராளிகள் தமது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

ஆண்டுகள் இத்தனை கடந்தும் ஆறாத நினைவுகளால் வெந்துகொண்டிருக்கும் உள்ளங்களில் வேல் பாய்ச்சும் விகடனின் வேலையை நினைத்தால் மிகுந்த வேதனையாய் இருக்கிறது. பெண்போராளிகள் இந்த விகடனுக்கு அப்படியென்ன தீங்கிழைத்தார்கள் என்று விகடன் இப்படி பெண்களின் வாழ்க்கையில் விளையாடத் துடிக்கிறது என்பதுதான் எங்களுடைய கேள்வி. விகடனில் வந்த பெண்போராளி பற்றிய பேட்டி விகடனின் கற்பனை என்பது அதன் எழுத்து நடையிலேயெ புரிந்தாலும் அதற்கு நாங்களா கிடைத்தோம்? என்று சினக்க வைக்கிறது. ஆனந்தவிகடனை விருப்பத்தோடு தேடிப்படிக்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கு விகடன் செய்த வேலை மிகவும் கேவலமானது.

வாழ்க்கையில் ஆயிரம் சவால்களை சந்தித்தாலும் சொந்தக் கால்களில் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கப் போராடும் முன்னாள் பெண் போராளிகளுக்கு விகடன் காட்டியிருக்கும் வேலை அபத்தமானது, அபாண்டமானது. கேவலம் பெண் போராளிகளது வாழ்க்கையை அல்லவா கேவலப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

முன்பும் நாங்கள் பம்பைமடு தடுப்புமுகாமில் இருந்த நாட்களில், 2010 காலப்பகுதியில் என்று நினைக்கிறேன், விகடனின் கட்டுரை ஒன்று எங்களின் மனங்களில் தணலைக் கொட்டியது. பம்பைமடு முகாமில் இருக்கும் பெண் போராளிகள் படையினரால் பாலியல் ரீதியாக உபயோகப்படுத்தப்படுவதாக பக்கம் பக்கமாய் எழுதியிருந்தது விகடன்.

இல்லாத ஒன்றை எழுதியதால் கொதிக்கவில்லை. எங்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய விகடனின் அக்கறை இவ்வளவுதானா? என்ற வேதனையில் துடித்தோம். அதைப் படித்த ஒவ்வொரு பெண்ணும் தனதும் தன் தோழிகளதும் எதிர்காலம் குறித்து கண்ணீர் விட்டோம். விகடன் எதற்காக வீண்பழி சுமத்துகிறது. எங்களது எதிர்காலத்தையும் அல்லவா கேள்விக்குறியாக்குகிறது விகடன் என்று வருந்தினோம். இதோ இப்போது மேலும் அசிங்மகாய் எங்களை விமர்சித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த போராளிகளையும் களங்கப்படுத்தி நோவடித்திருக்கிறது.

கேவலம் வயிறு வளர்ப்பதற்காக ஒரு போராளி உடலை விற்கிறாள் என்று சொல்லும் விகடனின் முகத்தில் இந்தப் பிரசுரம் ஒரு மாறாத கறை. வாழ்வின் முழுநாட்களும் இடப்பெயர்வுகளையும் வலியையும் வேதனையையும் காயங்களையும் இழப்புகளையும் கண்ணீரையும் சவால்களையும் எதிர்கொண்டபடி வாழ்க்கையில் இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் என் போன்ற முன்னாள் போராளிகளுக்கு விகடன் செய்த துரோகத்தை ஒரு பொழுதும் மன்னிக்க முடியாது.

முன்னாள் போராளியான நானும் சொல்கிறேன். யாரிடமும் கருணை தேடியோ பரிதாபம் ஈனவோ இதை நான் எழுதவில்லை. ஈழத்தின் நிலை இதுதானடா விகடா என்று சொல்வதற் கத்தான் எழுதுகிறேன். இல்லாத கற்பனைகளில் மிதக்கும விகடன் போன்றவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். தயவு செய்து எங்கோ இருந்துகொண்டு எங்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.

ஈழத்து நிலத்தில் இன்னமும் காயாத வீரமும் ஈரமும் வாழ்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன் நிழல்களை இழந்தபின்னும் கொதிக்கும் அகோர வெய்யிலில் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்தும்தான் நடக்கிறாள். அப்பாவை இழந்த பிள்ளைகளை அறிவில் சிறந்தவர்களாகவும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கிக் காட்டுகின்ற அம்மாக்களான முன்னாள் பெண் போராளிகளின் தைரியத்தின்முன் இல்லாத பெயரில் கட்டுரை வெளியிட்டிருக்கும் விகடனின் எழுத்துவெறுந் தூசு.

படையினரையும் அமைச்சர்களையும் தமிழ் வயோதிபர்களையும் தமிழ் மாணவர்களையும் சிங்கள யாத்திரீகர்களையும் குற்றம்குறை சொல்வதற்கு அருளினியனுக்கும் ஆனந்தவிகடனுக்கும் ஆசையென்றால் அதற்கு முன்னாள் போராளிகள்தான் பலிக்கடாவா? அதற்கு எங்கள் ஆன்மாவை விற்பார்களா? ஒரு மூத்த போராளி இப்படியான நிலைக்கு எந்தத் தருணத்திலும் இடமளிக்க மாட்டாள் என்பதையும் நாங்கள் எப்படி நிரூபிப்பது? இது ஒவ்வொரு பெண் போராளியும் களங்கப்படுத்தும் நிலையை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு பெண்போராளியினது நெஞ்சும் குமுறுகிறது. இன்றைய காலத்தில் நாங்கள் எப்படி எங்களை நிரூபிப்பது? உயிரை துச்சமாக மதித்து போராடிய எங்களை உங்கள் பரபரப்பிற்காகவும் வியாபாரத்திற்காகவும் விற்பனை செய்யாதீர்கள்.

வெற்றிச் செல்வி, முன்னாள் போராளி

இரண்ராயிரம் பெண்கள் விட்ட கண்ணீர்

விகடனில் வந்த செய்தியால் மனம் கொதித்தது. இன்றைக்கு மூன்று வருடங்களிற்கு முன்பு பம்பைமடு பெண்கள் முகாமில் நானிருந்தபோது அப்போது வெளியான விகடனில் வெளிவந்த உண்மைக்கு புறம்பான செய்தியால் நாம் வெந்து துடித்த நாட்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது. இன்று இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த பெண் போராளிகளில் கணிசமான அதாவது இரண்டாயிரம் பெயர்வரை பம்பைமடு பல்கலைக்கழக விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். வெளித் தொடர்புகள் எதுவுமற்று முடக்கி வைக்கப்பட்ட நாட்கள் அவை. ஒரு மாதத்திற்கு ஒரு தடவை பெற்றவர்களை மட்டும், கூடியது பத்தே நிமிடங்கள் மட்டும் சந்திக்க அனுமதிக்கப்பட்டோம்.

அந்த நாட்களில் வந்த நண்பி ஒருவரின் தந்தை கண்கள் பனிக்க உள்ளம் கதற விகடனில்பம்பைமடு பெண் முகாமில் பாலியல் வதைகள்நடைபெறுவதாக செய்தி வந்திருப்பதாக சொன்னார். எம்மால் உடனடியாக நம்பிவிட முடியவில்லை ஏனெனில், எம்மில் அனேகருக்கு விகடனில் நம்பிக்கையிருந்தது. உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளிவராது என்பதுதான். ஆனாலும், ஓரிரு நாட்களிலே காதோடு காதாக எல்லோருக்கும் பரவியது. காயப்பட்ட உள்ளங்களை மீண்டும் மீளவிடாது தாக்கியது விகடன். பாலியல்வதைகள் எதுவும் பம்பைமடு பெண்கள் முகாமில் நடக்கவேயில்லை என்பது தெட்ட தெளிவான உண்மை. உணவுக்கு நீருக்கும் உறையிலுக்கும் நோயினால் பட்ட வதைகள் உண்மைதான் சொல்லிவிடவே முடியாது.

ஆனாலும் பொய்யான தகவலை ஏன் வெளியிடவேணும் அங்கிருக்கும் பெண்களின் எதிர்காலம் என்னாகும்? அப்போது வெளிக்காற்றைக்கூட சுவாசிக்க முடியாத எம்மால் அங்கிருந்து என்ன செய்யமுடியும்? ஆனாலும், உண்மையாக விகடனில் வந்ததை உறுதி செய்ய நாம் படட கஷ்டம் அந்த பகுதியை மட்டும் கிழித்து அம்மா மீன் பொரியல் சுத்தி வந்து தந்தது அதை பார்த்தவுடன் இதயத்தில் சுள் என வலித்தது பசி,தாகம் களைப்பைவிட பெரும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது விகடன்.

நேரடியாகவே அந்த பெண்ணால் கூறப்பட்ட கதையைப்போல் இல்லை வேறு ஒருவரினால் கூறப்பட்டு மிகுதி புனையப்பட்டமை போன்றே தோன்றுகிறது. தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற பெரும் கனவுடன் வாழும் எந்த தாயும் பாலியல் தொழிலில் இலகுவில் இறங்கிவிட மாட்டாள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறைப்படும் தாய் நிச்சயமாக தான் பாலியல் தொழிலாளி ஆகினால் பிள்ளைகளின் கதி என்னாகும் என சிந்தித்து இருப்பார். சதா சமுகத்தில் அவர்களிற்கு வரப்போகும் பிரச்சினைகள் பற்றி பயந்திருப்பாள்.

முன்னாள் பெண்புலி என்ற வகையில் அதுவும் மரபுவழி படையணி ஒன்றில் இருந்தவள் வாழ்வின் சுமைகளைவிட பல மடங்கான சுமைகளை போராட்டத்திற்காக சுமந்திருப்பாள். போராட்ட வரலாறுகளை தெட்ட தெளிவாகவும் தியாகங்களை மதித்தும் வாழ்ந்த அவளால் வலிமையுடன் தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழமுடியும்

ஆனால், வயிற்றுப்பசிக்காக தன்னை விலை பேசினாள் என்பதை நம்பிவிட முடியவில்லை. காயப்பட்ட இனத்திற்கு மருந்திட்டு ஆற்றுவது தான் ஊடகங்களின் தலை சிறந்த பண்பு. இப்படித்தான் 2010 ஆம் ஆண்டு பம்மைபடு பெண்கள் முகாமில் பாலியல் வதை நடைபெறுவதாக விகடனில் வந்த பொய்யான செய்தி என் இதயத்தை இப்பவும் கிழித்துக்கொண்டுதான் இருக்கின்றது. அங்கிருந்த இரண்டாயிரம் பெண்களும் துடித்த துடிப்பு விட்ட கண்ணீர் மறக்கவே முடியவில்லை. அதுபோலவே இப்போ விகடன் சொன்ன செய்தியும் உண்மைக்கு மாறாகவே இருக்கிறது. உண்மைகள் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வுலகில் ஒவ்வொருவரின் உணர்வுகளிற்கும் சாகாவரம் கொடுக்க நாம் போராட வேண்டும்.

குயில் நிலா, முன்னாள் போராளி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com