Contact us at: sooddram@gmail.com

 

அந்தக் காலம் எப்போதோ மலையேறி விட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்களாகிய தமிழர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களில் வடக்கு கிழக்கு மக்களை ஓரளவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக ளாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஆதரவு யாருக்கு என்பதை அறிவதில் போட்டியிடும் பிரதான கட்சிகளுடன் இணைந்து பொது மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உண்மையில் இவ்விரு கட்சிகளும் தாம் சார்ந்த மக்களது நலனில் அக்கறை கொண்டதாக இருப்பின் அவை ஆளுங்கூட்டணியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே தமது ஆதரவை வழங்க வேண்டும் என்பது பலரதும் கருத்தாக உள்ளது. அதிலும் முஸ்லிம் காங்கி ரஸைப் பொறுத்தவரையில் அக்கட்சி ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களதும் கருத்தாக உள்ளது.

காரணம் அவர்கள் இன்றுவரை ஆளுங்கட்சியில் அமைச்சுப் பொறுப் புக்களை வகித்து வருவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையிலான இந்த அரசாங்கத்தின் மூலமாகப் பல உதவிகளையும் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவிற்கே தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர். அத்துடன் அக்கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் பலரும் ஜனாதிபதிக்கே தமது ஆதரவு எனவும் தெரிவித்துள்ளனர். அதனால் அதன் தலைமையினால் மக் களது இக்கோரிக்கையைத் தட்டிக்கழிக்க முடியாத நிலையே காணப்ப டுகின்றது. எனினும் கட்சியில் காணப்படும் சிறு சிறு உட்பூசல்கள் காரணமாக அவர்களால் தமது முடிவை உடனடியாக வெளியிடுவதில் ஒரு சிக்கல் நிலை காணப்படுவதாக அறிய முடிகிறது. அது விரைவில் தீர்க்கப்பட்டுவிடும்.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை அறிவிப்பதில் காலந்தாழ்த்தி வருவதானது அவர்களும் இம்முறை ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிக்கவுள்ளமைக்கான அறிகுறியாகவே கொள்ளப்படுகின்றது. காரணம் இதுவரை காலமும் ஆட்சி மாற்றம் வேண்டும், பொது எதிரணி வேட்பாளர் வேண்டும் எனக் கூறி வந்தவர்கள் ஆதரவளிப்பது விடயத்தில் திடீரென மெளனித்திருப்பது அவர்களிடையே ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத் தியுள்ளது என்பதைப் புலனாக்கியுள்ளது.

அவர்கள் பொது வேட்பாளரை ஆதரிப்பவர்களாக இருந்திருந்தால் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்ட அடுத்த நிமிடமே தமது ஆதரவு பொது வேட் பாளருக்கு என அறிவித்திருப்பர்.

அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னரைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்களின் ஆதரவு கிடையாது. குறிப்பாக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்மக்கள் தமிழ்க் கூட்டமைப்பு மீது காட்டிய ஆர்வம் இப்போது இல்லை. காரணம் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக அம்மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் தமிழ்க் கூட்டமைப்பு எடுக்கவில்லை. மாறாக அதன் தலைவர்கள் தமது குடும்பங்களையும், உறவினர்களையுமே பலப்படுத்தியுள்ளனர். உண்மையில் தமிழ் மக்களின் கணிப்பு இதுவாகவே உள்ளது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் வடக்கில் முன்னொருபோதும் இல்லாதவாறு பலமாகியுள்ளன. இதனால் தமிழ்க் கூட்டமைப்பு தமது எதிர்காலத்தைத் தக்க வைப்பதற்கானதொரு போராட்டத்தில் அங்கு ஈடுபட வேண்டியுள்ளது. வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் மூலமாக மக்களது பல தேவைகளை நிறைவேற்றி வருகிறார். அதேபோன்று அங்கு சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களான கலாநிதி. வேல்முருகு தங்கராசா, அங்கஜன் இராமநாதன், திருமதி. கீதாஞ்சலி நகுலேஸ்வரன் ஆகியோரும் அங்கு முன்னரைவிடவும் காலூன்றி உள்ளனர். மக்கள் இவர்கள் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.

அதேபோன்று கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எதுவுமே செய்யாது வெறுமனே அறிக்கைகளையே விட்டுவரும் நிலையே காணப்படுகிறது. அங்கும் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக இருக்கும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கட்சியின் அமைப்பாளர்களான அருண் தம்பிமுத்து, இராசமாணிக்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், இனியபாரதி எனப் பலர் அரசாங்கத்தின் சேவைகளை அம்மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுபோலவே கிழக்கில் வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேவை செய்து வருவது போலவே முதலமைச்சராக இருக்கும் நஜீப் ஏ.மஜீத், அலி ஸாகிர் மெளலானா, சுலைமாலெவ்வை உட்பட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் சேவையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது எந்தவொரு கட்சியுமோ நாம்தான் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி என இனியும் மார்தட்ட முடியாது. இப்போது தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும ளவிலான மக்கள் ஜனாதிபதியுடன் நேரடியாகவே தொடர்புகளை வைத்துள் ளனர். இப்போது அம்மக்களுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. அந்த ளவிற்கு ஜனாதிபதி மக்களுடனான இணைப்பை இலகுபடுத்தியுள்ளார். அதனால் வீர அறிக்கைகள் விடும் கட்சிகள் இனியும் மக்களைத் தம்பக்கம் வளைத்துப் போடலாம் எனக் கனவு காண்பது தவறு. அந்தக் காலம் எப்போதோ மலையேறிவிட்டது.

இதனைப் புரிந்து கொண்டு செயற்பட்டாலேயே தமக்கு எதிர்காலம் என்பதை தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதியுடனேயே உள்ளனர். அதனால் ஜனாதிபதியின் வெற்றி என்பது இலகுவானதாக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தமது தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் அதேவேளையில் நிச்சயம் வெற்றி பெறும் வேட்பாளரான ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டு தமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே புத்திசாலித்தனம்.

இதனைவிடுத்து முன்னொரு காலம் போன்று நாமே தீர்மானிக்கும் சக்தி, எமது கால்களில் விழுந்தாலே ஆதரவு, எமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்பதாக வீர வசன அறிக்கைகளை விடுத்தால் நிச்சயம் சிறு கட்சிகள் மண்ணையே கவ்வ நேரிடும். அதனால் தாம் சார்ந்த மக்களதும், தங்களது கட்சியின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதே சிறந்த முடிவாக அமையும். இக்கருத் தினையே தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் கொண்டிருக்கின்றன. அதனை அவர்கள் இன்னுமொரு தடவை உறுதி செய்து கொள்வது நல்லது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com