Contact us at: sooddram@gmail.com

 

சுரேஷ் விடும் 'றீல்'

தமிழ்க் கட்சிகளுடனான கூட்டு, இறுதி இலக்கிற்காக அமைக்கப்படும் தளம் வெறுமனே தேர்தலை நோக்கமாகக் கொண்டதல்ல-சுரேஷ் பிரேமச்சந்திரன்!

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன்மூலம் வட, கிழக்கில் தமிழ்க் கிராமங்களை இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும். அது ஜனநாயக ரீதியிலான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு உந்து சக்தியாக அமையும் என்று யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி போன்ற தமிழ்க் கட்சிகள் உள்ளுராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றமை, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் சிவாஜிலிங்கத்துடன் ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வு உட்பட தற்போதைய நிலைவரங்கள் பற்றி யாழ். தினக்குரலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ள பேட்டியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது, தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் பேச வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் நாம் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நிலையில் தான் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது. எனவே அந்த அரங்கிலிருந்த ஒரு சாரார் தாம் அரசுடன் இணைந்து போட்டியிடுவதெனவும் சிலர் தாம் தனித்துப் போட்டியிடுவதெனவும் தீர்மானித்தனர். இன்னுமொரு சாரார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட விரும்பினர். அதனடிப்படையில் புளொட் அமைப்பினருடனும், தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் தேர்தலுக்காக மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் இணைந்து செயற்படுவதென்ற தீர்மானத்திற்கு வந்தோம். இதற்கு முன்பாக பாராளுமன்றத் தேர்தல் காலத்திலும் தலைவர் இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோரை எம்மோடு இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் அது அன்று நிறைவேறவில்லை. தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அவர்களையும் இணைத்துக் கொண்டு செல்வோம். சிவாஜிலிங்கம் தான் மேற்சொன்ன நகர்வுகளில் உள்ளடங்கியிருக்கவில்லை. இது தமிழரசுக் கட்சியின் பொருளாளருக்கும், அவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் அவர்கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.

படிப்படியாக சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து, பலமானதொரு தமிழர் அமைப்பை உருவாக்க வேண்டும். அகிம்சை ரீதியான போராட்டமும் ஆயுத வழியிலான போராட்டமும் தோற்றுப் போயிருக்கின்றது. இந்நிலையில் எமக்குள்ள பலம் நாம் எல்லோரும் ஒன்றாக இணங்கியிருப்பதனால்தான் ஏற்படும். சிதறிப்போய் ஒவ்வொரு கோணங்களில் நாம் இருப்போமேயானால் அதனை அரசாங்கம் தனக்குச் சாதகமானதாகப் பயன்படுத்திக் கொள்ளும், இதேவேளை இந்த ஒன்றிணைவென்பது கொள்கை அடிப்படையும் இல்லாமலும் ஒன்றிணைய முடியாது. சகலருடைய அங்கீகாரத்துடனும், சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அங்கீகாரத்தைப் பெற்றுப் படிப்படியாக எல்லோருடனும் பேசி ஒவ்வொருவராக இணைத்துக் கொண்டுபோக வேண்டும். ஆகவே இந்தக் கூட்டுக்களுடைய நோக்கம் வெறுமனே தேர்தல் மாத்திரமில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வுதான்.

புலிகளுடைய ஓய்வுக்குப் பின்னர் பலமானதொரு பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு உருவாகியிருக்க வேண்டும். காரணம் முன்னர் புலிகள் வலுவாக இருந்தபோக இலங்கை அரசுடன் பேரம் பேசும் அளவிற்கு சக்தியுடன் இருந்தனர். தற்போது ஒரு பலமான அரசியல் கட்சிதான் அதை செய்ய முடியும். அவ்வாறானதொன்றை உருவாக்க விரும்பினால் கொள்ளைகயற்ற விதத்தில் நடந்துகொள்ள முடியாது.

தற்போதைய கூட்டமைப்பை மேலும் வலுவானதாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றைக்கும் என்னோடு தொடர்பு கொண்ட பலர் கூட்டமைப்பு பிளவுபடக்கூடாது. அதற்காக எந்த முயற்சிகளையும் முன்னின்று எடுக்கத் தயார் எனக் கூறியிருக்கிறார்கள். எனவே மக்கள் உண்மையை அறியவேண்டும். கூட்டமைப்பு சிதைவடையக் காரணமும் கிடையாது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆரோக்கியமாகவும், உற்சாகத்துடனும் உள்ளார். தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டிய நிலையிலிருக்கின்றார். அவர் தமது தலைமைப் பணியை, பொறுப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார். எனவே தலைமை மாற்றம் தொடர்பில் பேசப்படுவதற்கு எந்த நியாயமும் கிடையாது.

அதிகாரப் பகிர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் ஆகியன முக்கியமானவை. மேலும் வட கிழக்கு இணைப்பென்பதும் தவிர்க்கமுடியாது. முதலாவது கூட்டத்திலேயே இது விடயமாகப் பேசியுள்ளோம். மேலும் எமக்கும் அரசுக்கும் இடையிலான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளே நடந்து முடிந்திருக்கின்றன. அதில் எவ்வாறு பேசவேண்டும் என்பது பற்றி நாம் பேசியிருக்கின்றோம். ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டுமென நாம் வலியுறுத்தி நாம் பேசியிருக்கின்றோம். ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டுமென நாம் வலியுறுத்தியிருக்கின்றோம். அதற்கு அரச தரப்பு அமைச்சர்களும் உடன்பட்டிருக்கின்றார்கள். அதன்படி இரு வாரத்திற்கொருமுறை கூடிப் பேசுவதெனவும் தீர்மானித்துள்ளோம்.அதில் அரசியல் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் உயர்பாதுகாப்பு வலயம், மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள், தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர், யுவதிகள், அரசியல் கைதிகள் பற்றியும் பேசவுள்ளோம்.இது அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு சமாந்தரமாக நடைபெறும்.அடுத்தடுத்த கூட்டங்களில் என்ன என்ன விடயங்களை பேசுவது என்று நாம் இனங்காண்போம்.அது பற்றி கூடித் தீர்மானிப்போம்.

அரசிற்கு இன்று இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் இருக்கின்றது. அந்த வகையில் தான் அவர்கள் இன்று பேசுவதற்கு இணங்கியுள்ளனர். இணங்கினாலும் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய, தமிழ் மக்கள் தம்மைத் தாம் ஆளுகின்ற அளவில் தீர்வை முன்வைக்க அவர்கள் முன்வரவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை. அரசாங்கம் எமக்கு எதையும் தரமுடியாது என்று கூறலாம். ஆனால் அவை இல்லாமல் ஒரு தீர்வினை எட்டமுடியாது பாதுகாப்புச் சட்டம், ஒழுங்கு என்பன தமிழ் மக்களுக்குத் தேவை. அதில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை. இவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலே தீர்வு முழுமை பெறும். எமது மக்களுக்கான உரிமைகளில் விட்டுக் கொடுப்பில்லை. அதில் உறுதியாக நின்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்வோம்.

உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு விடயங்களை நாங்கள் குறிப்பாக முன்வைக்கவிருக்கின்றோம். அதில் முதன்மையானது தமிழ் மக்களுடைய கைகளில் அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். தமிழ் மக்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற தம்முடைய தலைவிதியைத் தாமே தீர்மானிக்கிற சக்தியாக மாறவேண்டும். அதன்மூலம் தங்களுடைய நிலங்களைத் தாங்களே ஆழவேண்டும். அப்போதே தமது இடங்களை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். அதிகபட்ச அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க நாம் முயற்சிப்போம். கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர். இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் வெற்றியைப் பெறுவோம். அதனோடு கிராம மக்களும் கூட்டமைப்பின் கொள்கைகளில் உறுதியாக நிற்கின்றனர் என்பதை அரசிற்கு உணரவைப்போம். கிராமப் புற மக்களுடைய நலன்களைக் கவனிப்பதற்கும் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பம்.

(நன்றி: புளொட்யுகே)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com