Contact us at: sooddram@gmail.com

 

ஒலி வேறு ஓசை வேறு

தமிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள். இக் கருத்தைக் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. தொடக்கக் காலத் தில் முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த தமிழர், தம் மொழியை இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூவகைப்படுத்தி வளர்த்து வந்தனர். இயல், இசை, நாடகம் என் னும் முத்தமிழ் பற்றியும், தமிழரின் வாழ்க்கை நிலை பற்றியும் அறிந்து கொள்வதற்குத் தமிழிலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தமிழர் கள் முத்தமிழோடு கலை மற்றும் கலா சாரத்திலும் சிறந்து விளங்கிய சிறப்பை யும் இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. எனவே இலக்கியங்களே தமிழர் தம் கலை மற்றும் கலாசாரம் பற்றி அறிய உதவும் முதற் சாதனங்களாக அமை கின்றன.

ஆகவே இலக்கியக் குறிப்பு களின் அடிப்படையில் இயல் தமிழ் இசைத் தமிழ், நாடகத்தமிழ் விஞ்ஞா னத் தமிழ் மற்றும் நுண்கலைகள் என்னும் ஐந்தமிழுள் இசைத்தமிழ் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து, ஆராய்ந்து அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் அரியதோர் முயற்சி யாகவே இக்கட்டுரை அமைகின்றது.

முதல் இயல் தமிழ் என்பது எது? இயற்றமிழ் ஒரு விளக்கம் அனைத் துத் துறையிலும் இயலுகின்றதும், இயக்க வைப்பதுமாகிய இயற்றமிழ் என்பது தமிழர் மட்டும் பொதுமையின் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என் னும் இருவகை வழக்கிலும் இயங்கு கின்ற வசனமும், செய்யுளுமாகிய நூல்களில் தொகுதியாம் என்பர்.

ந. சி. கந்தையா பிள்ளைபடித்த மாத்திரத்தில் ஒன்பான் சுவை தரத்தக்கதாக அமைந் துள்ள இயற்றமிழினுள்ளே எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி ஆகிய ஐந்து வகை இலக்கணமுமே அடங்கும்.

இன்னும் தெளிவாகக் கூறின் வழக்கி யலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக் கணம் இயற்றமிழ் எனப்படும் என்பர் பேராசிரியர். எனவே இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரைகள், உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும் என்பது தெளிவு.

முத்தமிழில் முன்னர்தோன்றியமையாலும், இயலின்றி ஏனையவை இசை மற்றும் நாடகத் தமிழ் இயங்கவியலாமையினா லும் இவ்வியற்றமிழ், முத்தமிழ் முதன் மைப்படுத்தி மொழியப்படுகின்றது. இயற்றமிழன் பின் வைத்து எண்ணப் படுகின்ற இசைத் தமிழ் பற்றியும் இசைத்தமிழ் எவ்வாறு கூத்து என்னும் நாடகத் தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகிறது என்பது பற்றியும் அடுத்து ஆராயப்படுகின்றது.

இசைத்தமிழ் விளக்கம்:

இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இலையோடிக் கிடக் கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வோ றாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

இசை பொருள் இசை என்ற சொல் லுக்கு அசைவிப்பது, வயப்படுத்துவது, ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப் பது எனும் பொருளைத் தருகிறது என்பர். எம்.எம். தண்டபாணி தேசிகர் இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெய ரைப் பெறுகின்றன.

ஒலி ஓசை, இசை இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி. ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம், மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு, ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்ப ரின் தேவார வரிகளிலிருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப் படுவதை உணர முடிகிறது.

ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையே ஏழிசையாக அமைகிறது என்று சுட்டு கின்றது. எனவே ஓசையே இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகி றது. ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவைப் பயப்பதாக இருக்க வேண்டும்.

காலக் கடப்பால் ஏற்பட் டுள்ள சொல் பயன்பாட்டை நோக்கும் போது இசை யும் ஒலியும் சில இடங்க ளில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஓசை மற்றும் இனிதாய் அமைந்து சுவை பயப் பதாக இருப்பதான ஒளியின் அடிப்படை யில் தொன்றுவதான இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயல் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும் சுவைக்கவும் முடியும். ஆனால் இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.

இசையும் இறையும் இசை யின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனுன் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான் என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர். ‘துறைவாய் நுழைந்தவனையோவற்றி யேழிகசைச் சூழல் புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென் கொலாம் புகுந்த தெய்தியோ’ எனும் திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ஏழிசை யாய் இசைப்பயனாய் என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையை யும் நோக்கத்தக்கது.

ஆதி மனிதனும் இசையும் மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியி லும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்ச கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆராவாரமே தாளமாயிற்று. சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்துக்கு முலமாயிற்று.

இசையின் பழமைத்தொல்காப்பியம்: மனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர் ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம். அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிய இசையோடு சிவனிய நரம்பின் மறைய என்மனார் புலவர் எனும் தொல்காப்பி யம் அடிகள் இசையில் புழமையை உணர்த்தும் தொல்காப்பி யச் சொற்களின் ஓசையதிக்கு வண் ணம் என பெயரிட்டு வண்ணந்தாமே நாலைந்தென்ப’ என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத் திக் கூறியுள்ளார்.

எதுகை, மோனை, இணைபு, முதலிய தொடை களின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக் கும் இசைப்பாடல் களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இனற்றியமையாது வேண்டப்படுபவன வாம். எதுகை, மோனை போன்ற தொடைகளில்லையேல் இசைப்பாடல் கள் இல்லை. இசைப் பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும் வகுத்தும் புகுத்தும் காட்டியுள்ளார்.

செய்யுட்களின் சிறப்பிற்கு எதுகை, மோனை, முதலிய தொடை விகற்பங்கள் பெரிதும் துணைபுரிந்தமையினின்று இயற்றமிழும் இசையமைதி பெற்றிருப்பது புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொ ன்றும் ஒவ் வொரு வகையான இசையுடனேயே பண்டு தொட்டு ஓதப்படுகின்றன.

அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர் கள் கூறுவாராயினர் வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை துறை முதலியனவும் இசைப் பாக்களேயாதல் வேண்டும். தொல்காப் பியரே முதன் முதலில் எதுகை, மோனை ஆகியவற்றைப் பிரித்துக்கூறும் யாப் பிலக்கணத்தை அறிமுகப்படுத்தியவராவார்.

இசைத் தமிழ் நூல்கள்:

இசைத் தமிழ் விரிவானது, ஆழ மானது; பல துறைகள் கொண்டது.

நெடுந்தொகை நாநூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பிரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என இத் தொடக்கத்தன என்றும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இசைத் தமிழில் பல தலைசிறந்த நூல்கள் முதற் சங்க காலத்திலேயே இருந்தன என்பதும், கடைச் சங்க காலத்து எழுந்த எட்டுத்தொகை நூல்களும் இசைத்தமிழ் தொடர்புடையன என்ப தும் விளங்குகின்றது.

பெருநாரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட் உரைக் கோவை போன்ற எண்ணற்ற இசைத் தமிழ் நூல் களும் வழக்கில் இருந்து, பின்னரே வழக்கு ஒழிந்ததோ, கடல் கேட்பட்டோ மறைந்திருத்தல் வேண்டும். பரிபாடல், இன்று நமக்கு கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புக்களில் பழைமையான இலக்கியமாகத் திகழ்வது பரிபாடல், எட்டுமுத் தொகை நூல்களில் ஒன்றான இது கி. பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 ஆகும்.

இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ். செந்துறை, தூக்கு வண்ணம் முதலியவும் குறிப்பிடப்பட் டுள்ளன. மேலும் பரிபாடலில் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் பாலையாழ். நோதிரம், காந்தாரம் எனப் பண்கள் குறிக்கப்பட் டுள்ளன.

இசை வகுத்தோராகப் பதின்மர் பெயர்களும் அதில் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்பத்திலும் ஒவ் வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன. எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றப்படை நூல்களில் இசை பற்றி யும், இசைக்கலைஞர்கள் பற்றியும் விரி வாகக் கூறப்பட்டுள்ளன.

சிறுபாணாற் றுப்படை, பெரும்பாணாற்றப்படை, பொருநாராற்றப்படை, கூத்தராற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்புத்திலும் ஒவ்வொரு பாடலுக் கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட் டுள்ளன.

எட்டத் தொகை நூல்களை யடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப் படை நூல்களில் இசை, பற்றியும் இசைக் கலைஞர்கள் பற்றியும் விரிவா கக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப் படை முதலியவை இசைக் கலைஞர் கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன.

திறுமுருகாற்றுப்படை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, ஆடலா கிய கூத்து கண்டமாகிய இசை மரபிற் கான பஞ்ச மரபினைப் பெற்று தமிழி சையின் சிறப்பை விளக்கவல்ல ஆற் றுப்படை நூலாகத் திகழக் காணலாம். சிலப்பதிகாரம், சங்க இலக்கியத்தை அடுத்த சிலப்பதிகாரத்தில் இசை பற்றி செய்திகள் மிகவும் பரந்து காணப்படு கின்றன. சிலம்பின் கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப்பிணைந்து இயற்றப்பட்டுள்ளன என்றே கூறலாம்.

தமிழிசை இலக்கணம் கூறும் பெருங் கடலில் சிலம்பு ஓர் ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம். இது நல்கும் ஒளியின் உதவியால் இதற்குக் காலத் தால் முந்திய தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டி யுள்ள ஏராளமான இசைக்குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம்.

சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவர சருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறை யில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத்தந்தை என்றும் கூறலாம். இளங்கோவின் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வழிவழி வந்த இசை இலக்கண மரபு சிலம்பில் காணப்படுகின்றமையின் தொல்காப்பிய இசைக் குறிப்புகளை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்க ணமே. தமிழிசை இலக்கணம் சிலம்பு தொட்டு இன்று வரை சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து வருகிறது என்பர். தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகார த்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை. ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக் களின் தொகுதியாகும்.

உதயணன் கதையினைக் கூறும் பெருங்கதையிலும் யானையின் சீற்றத்தை சீவக சீந்தாமணி யில் காந்தருவதத்தை யார் இலம்பகத் தில் இடைக்காலத் தமிழிசையினைப் பரக்கக் காண முடிகின்றது. இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று.

என்னும் பரிமேலழகர் கூற்றிலிருந்து, தமிழ்ப் பண்கள் நூற்று மூன்று என்பது கொள்ளப்படுகின்றது. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும். நரம்பு என்பது இங்கு ஸரி கம பத நீ என்றும் ஏழு ஸ்வரங் களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங் களை வடமொழியில் ஷட்ஜம்.

ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடு வர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்களை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும் இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில் தேனி, ஆடு, ஆகியவையும், இவற் றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ. ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத் துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாக வும் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com