Contact us at: sooddram@gmail.com

 

அரசசார்பற்ற அமைப்புக்கள் குறித்து அவதானமாக இருத்தல் அவசியமாகும்

இங்கு வந்து மக்களுக்கு பல்வேறு துறைகளில் பணிபுரிந்து நாட்டின் மேம்பாட்டிற்காக உழைக்கிறோம் என்ற போர்வை யில் இயங்கி வரும் சில அரச சார்பற்ற அமைப்புக்கள் உண்மை யிலேயே இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத் தக் கூடிய முறையில், செயற்பட்டு வருவது குறித்து, அரசாங்கத் தின் அவதானம் இப்போது திரும்பியுள்ளது. சுனாமி அனர்த்தத்தின் போதும் இத்தகைய சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் காளான்களைப் போன்று நூற்றுக்கணக்கில் நாடெங் கிலும் தோன்றின.

இவ்வமைப்புக்கள் இலங்கையில் நூற்றுக்கணக் கானோருக்கு ஓரளவு நல்ல வருமானத்தைத் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளைக் கொடுத்து, அன்று, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளும் வேதனையில் மூழ்கியி ருந்த மக்களுக்கு உளவியல் ரீதியில் ஆலோசனைகளும் வழங்கு தல் போன்ற பணிகளை மேற்கொண்டதும் உண்மைதான். இம்மக்க ளுக்கு கழிவறைகளை, கிணறுகளை அமைத்து சில மாதங்களாக உலர் உணவுகளையும், சமைத்த உணவையும் பெற்றுக் கொடுத்த தையும் நாம் மறுக்க முடியாது.

ஆனால், இவை மேற்கொண்ட இத்தகைய பொதுப்பணிகள் சரியான முறையில் இந்தப் பாதிக் கப்பட்ட மக்களை சென்றடைந்ததா அதனால், அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதில் ஒரு கசப்பான உண்மையை நாம் புரிந்து கொள்வது அவசியம். இந்த சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் இத்தகைய பணி களை செய்வதற்காக, வெளிநாடுகளிலுள்ள அவைக்கு உதவி செய்யும் அமைப்புகளிடமிருந்து கோடான கோடி டொலர்களை உதவியாகப் பெற்ற போதிலும், அந்த நிதியிலிருந்து, சுமார் 25 வீதத்தை மாத்திரமே இப்பணிகளை மேற்கொள்ளுவதற்கும் உள் ளூரில் அவர்கள் சேர்த்துக் கொண்ட ஊழியர்களுக்கு சம்பளத் தைக் கொடுப்பதற்கும் செலவிட்டன.

எஞ்சிய 75 வீத பணமும், இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் வெளிநாட்டிலிருந்து வந்த உயர் அதிகாரிகளுக்கு கொழும்பிலும், ஏனைய நகரங்களிலும் ஆடம்பரமான மாடமாளிகைகளை வாடகைக்கு, எடுப்பதற்கும் அதிக விலையுயர்ந்த வாகனங்களை அவர்களின் பாவனைக்காக தருவிப்பதற்கும் செலவிடப்பட்டன.

எல். ரி. ரி. ஈ. யுடனான யுத்தம் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் சுனாமியினாலும், ஏனைய இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கிறோம் என்று போர்வையின் கீழ் நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு இவ்வமைப்புக்கள் எடுத்துச் சென்ற வாகனங்கள் குறிப்பாக, டபிள் கப் வாகனங்கள் மற்றும் அரிசி, மா போன்ற பாவனைப் பொருட் கள் மூடை, மூடைகளாக மிகவும் இரகசியமான முறையில் எல். ரி. ரி. ஈ. யிடம் கையளிக்கப்பட்டதாகவும் புகார்கள் கிடைக்கப் பெற்றன. இவ்விதம் நாட்டை பிளவுப்படத்துவதற்காகவும் சில வெளிநாட்டு தீயசக்திகளின் கைப்பொம்மைகளாக சில சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் இலங்கையில் இயங்கி வந்தன.

ஒரு சில சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களும் ஏனைய சில அரச சார்பற்ற அமைப்புகளும் மிகவும் நேர்மையான முறையில் நாட்டின் மேம்பாட்டிற்கும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் உழை த்து வருவதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

பெரும்பான்மையான சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள், இலங் கைக்கு உதவி செய்வதை விட தீங்கிழைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் சென்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தவிருந்த உரைக்கும் முட்டுக்கட்டை செய்து, பிரச்சினைகளை செய்வதற்கும் பின்னணியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சதி முயற்சிகளில், இவை ஈடுபட்டதும், இப்போது ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.

காலியில் சமீபத்தில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய விழாவை பகிஷ்கரிப்பதற்கும் சில அரச சார்பற்ற அமைப்புக்கள் மேற்கொண்டு வந்த முயற்சிகளும் சில தினங்களுக்கு முன்னர் படுதோல்வியடைந்தன. எனவே, இலங்கை மக்களுக்கு, அரசாங் கமும் எதிர்காலத்தில் இவ்விதம் இலங்கைக்கு நன்மை செய்கி றோம் என்ற போர்வையில் வரும் பசுத்தோல் போர்த்த புலிகள் போன்ற சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் குறித்து, மிகவும் அவதானமாக இருந்து நேர்மையான இத்தகைய அமைப்புக் களுக்கே தங்கள் அனுசரணையை அளிப்பது மிக மிக அவசிய மாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com