Contact us at: sooddram@gmail.com

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அரசாங்கம் வழங்கும்

இந்நாட்டு மக்களை தேக ஆரோக்கிய சீலர்களாக நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கையை நடத்துதவதற்கு உறுதுணை புரியக்கூடிய தேசிய போஷாக்கு கொள்கையொன்றை சுகாதார பராமரிப்பு மற்றும் போஷாக்குத் துறை அமைச்சு தயாரித்துள்ளது. நாட்டின் பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்திக்கு பயன்வாய்ந்த பங்களிப்பொன்றை பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் இலங்கையில் போஷாக்கு நிலையை உறுதி செய்வதே இத்திட்டத்தின் இலக்காகும். சமீப காலமாக இலங்கையில் இடம்பெற்று வரும் பெருமழை, பெருவெள்ளம் போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டிருக் கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று தற்காலிக இடைத்தங்கல் இருப்பிடங்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் மட்டுமன்றி வறுமை கோட்டுக்கு கீழ் துன்பத்தில் மூழ்கியிருக்கும் மக்களும் இத்தகைய இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களினால் அடுத்த சில வாரங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று வைத்திய நிபுணர்கள் அபாய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்கள்.

இதற்கமைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே இந்த தொற்று நோய் தடுப்பு மருந்துகளையும் நோய் எதிர்ப்பு மருந்துகளையும் பெருமளவில் நாட்டிற்கு தருவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

உலகில் இன்று சீரற்ற காலநிலை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றமையினால் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் அதிகமான இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றன.

இலங்கையில் கடந்த 6 மாத காலமாக பெரு மழையும், பெரு வெள்ளமும் தொர்ந்தும் மக்களின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மலையகத்தில் நாளாந்தம் மண் சரிவுகள் ஏற்படுவதனால் பல வீடுகள் தரை மட்டமாகின்ற அதே வேளையில் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட் டுள்ளனர்.

இந்த மண் சரிவுகளினால் மலையகப் பாதைகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது. இரயில் சேவை மற்றும் வாகன சேவைகளும் அடிக்கடி சீர்குலைந்த வண்ணம் இருக் கின்றது.

அரசாங்கங்கள் எதிர்பாராத இத்தகைய இயற்கை அனாத் தங்களினால் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் தேசிய பொருளாதாரத்தின் பெரும் பகுதி மக்களின் மீட்பு பணிகளுக்காக வும் நிவாரண புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காகவும் அவர்க ளுக்கு நஷ்ட ஈட்டை வழங்குவதற்காகவும் செலவிடப்படுகிறன.

பொதுவாக காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் அவுஸ்திரேலியா இந்தத் தடவை அந்நாட்டின் வரலாற்றில் என்றுமே இடம்பெறாத பெரும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பலம்வாய்ந்த அவுஸ்திரேலியாவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை பெற்றுக்கொடுக்குமாறு வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்கும் அளவிற்கு நிலைமை அங்கு மோசமடைந்துள்ளது.

இலங்கையும் இயற்கை அனர்த்தங்களினால் கடந்த சில மாதங்களாக பெரும் பாதிப்பிற்குள்ளானது. ஆயினும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பெருமளவு பணத்தை இப்போது ஒதுக்கி அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது.

பெரு வெள்ளத்தினால் கால்நடைகளையும் தங்கள் நெற்காணிகளையும், காய்கறி தோட்டங்களையும், வாழைத்தோட்டங்களையும் இழந்து பெரும் பணக்கஷ்டத்தில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணத்தையும், நஷ்டஈட்டையும் வழங்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திறைச்சேரியில் இருந்து மேலதிக பணத்தை ஒதுக்கீடு செய்து அதனை அரசாங்க அதிபர்கள் மூலம் மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்கள்.

இவ்விதம் இயற்கை அனர்த்தங்களினால் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை அரசாங்கம் எதிர்நோக்கி வேண்டியிருந்தாலும் மக்களின் நல்வாழ்வுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்கட்சியினர் தேசப்பற்றுடன் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி அரசாங்கத்திற்கு தங்கள் பூரண ஆதரவை அளிப்பது மிகவும் அவசியமாகும்.

அதற்கு மாறாக அரசாங்கத்திற்கு எதிராக இந்த இயற்கை அனர்த்தங்களை முன்வைத்து அரசியல் இலாபம் தேட எதிர்கட்சியினர் தேர்தல் காலத்தில் முயற்சி செய்தல் நிச்சியம் அவர்களுக்கு மக்கள் தங்கள் வாக்குப் பலத்தின் மூலம் மறக்க முடியாத பாடமொன்றை கற்பிப்பார்கள் என்று நாம் திடமாக நம்பிக்கை கொள்ள முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com