Contact us at: sooddram@gmail.com

 

நிவாரணப் பணிகளுக்கு மக்களின் பங்களிப்பு அவசியம்

ஆழிப் பேரலை இலங்கை மாதாவின் கடற்கரையின் பெரும் பகுதியை சின்னாபின்னப்படுத்தி, பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை பறித்துதம், வீடுகள், கட்டடங்கள் போன்ற வற்றை முற்றாக அழித்தும் பேரழிவையும், பொருள் நஷ்டத்தை யும் ஏற்படுத்தி, இப்போது ஆறாண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பேரழிவிலிருந்து மீண்டும் நாட்டு மக்கள் தங்கள் அழிவுகளை சரி செய்து சகஜ வாழ்க்கையை இன்றைய சுதந்திர இலங்கையில் ஆரம்பித்து, பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஒரு அடிதளத்தை அமைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இயற்கை அன்னை இலங்கையின் மீது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தின் மீதும், ஏதோ ஒரு காரணத்திற்காக தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி கடல் கொந்தளிப்பு சூறாவளி காற்று, எரிமலை வெடிப்பெடுத்தல், மண் சரிவுகள், பூமியதிர்ச்சிகள், பெருமழை மற்றும் பாரிய வெள்ள ங்களின் மூலம் தனது சீற்றத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளாள்.

30 ஆண்டு கால யுத்தத்தை வெற்றிகரமாக நிறைவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் தனது நெறியான கொள்கைகள் மூலம், பாரிய அபிவிருத்தி திட்டங் களையும், மாகம்புர துறைமுக அபிவிருத்தி போன்ற நாட்டின் தேசிய வருமானத்தை பெருக்கி, பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டங்களையும், பெருஞ்சாலைகளை நாடெங்கிலும் அமைக்கும் இலங்கையின் வரலாற்றில் என்றுமே இடம்பெறாத அபிவிருத்தி பணிகளை இன்று, நிறைவேற்றி வருகிறது.

பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோரை அவர்களின் சொந்த ஊர்களில் மீள் குடியமர்த்துவதற்காக அப்பிரதேசங்களில் எல். ரி. ரி. ஈ. பயங்கர வாதிகள் புதைத்திருந்த நிலக் கண்ணி வெடிகளையும் அரசாங்கம் அகற்றி, அம்மக்களுக்கு மீண்டும் நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்விதம் நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றம் அடைந்து வரும் இவ்வேளையில் மீண்டும் இயற்கை அன்னையின் சீற்றம் எங்கள் நாட்டில் பெருவெள்ளத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தி யிருப்பது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய ஒரு இயற்கை அனர்த்தமாகும்.

நாட்டிலுள்ள 14 மாவட்டங்களில் சுமார் 7 லட்சம் மக்கள் தங்கள் இருப்பி டங்களை இழந்து முகாம்களிலும், தற்காலிய வசிப்பிடங்களிலும் தங்கியிருக்கிறார்கள். இந்த மக்களுக்கு அரசாங்கம் சமைத்த உணவையும், உலர் உணவுகளையும், சுத்தமான குடிநீரையும் வழங்கி, இப்போதைக்கு தற்கால பாதுகாப்பை பெற்றுக் கொடுத் துள்ளது. சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதனால், அப்பிரதேசங்களுக்கு எமது விமானப்படை ஹெலிகொப்டரில் சமைத்த உணவும், குடிநீரும் வழங்கப்படுகிறது.

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஹொரொவப்பொத்தானையில் நேற்று, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற ஹொலிகொப்டரில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் ஆகாயத்தி லேயே ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சி க்குரிய அபூர்வமான சம்பவமும் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவ்விதம் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது இலங்கைக்கு பல வெளிநாடுகள் உதவி செய்கின்ற போதிலும், பெருமளவு பணத்தை இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவ தற்கும், அவர்களின் சிதைந்து போன வீடுகளையும் நிர்மாணிப் பதற்கும், உணவுப் பண்டங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கமே தனது தேசிய வருமானத்தின் பெரும்பகுதியை செலவிட்டு வருகிறது.

வெள்ள நீர் வடிந்து சென்ற பின்னர், அப்பிரதேசங்களில் புனர் நிர்மாண, புனர்வாழ்வு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்ப துடன், அப்பிரதேசங்களிலுள்ள வீதிகளை மீண்டும் செப்பனிட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது அதனால் பாதிக்கப்பட்ட அப் பாவி மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான உதவிகளை மன முவந்து இந்நாட்டு மக்கள் என்ற நல்லெண்ணத்துடன் பொது மக்கள் செய்த உதவிகளை நாம் என்றும் மறக்கலாகாது.

அதுபோன்று, தற்போதைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மாத்திரமே உதவிகளையும் நிவாரணப் பணிகளையும் செய்ய வேண்டும் என்று ஒதுங்கியிருக்காமல், இந் நாட்டு பிரஜைகள் எல்லோரும் நல்லெண்ணத்துடன் மனமுவந்து உதவி செய்ய முன்வர வேண்டும். அதன் மூலமே சுனாமி அனர்த்த த்திலிருந்து மீண்டது போன்று, இந்த வெள்ள அனர்த்தத்தி லிருந்தும் எமது நாட்டு மக்களை காப்பாற்றி அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக துன்பம், துயரமின்றி இருப்பதற்கு மக்கள் உதவி செய்ய வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com