Contact us at: sooddram@gmail.com

 

ஜீவா என்றொரு கவிஞர்

தாலிகளேதுக்கடி... கற்பென்பதேதுக்கடி...

(சு.பொ.அ)

காதல் மணம் பேண வேண்டுமடி - பொய்மைக்
கட்டுடைத் தோங்கிட வேண்டுமடி
சாதலை வேண்டி நாம் வாழவில்லை - இங்கு
சங்கடம் வேண்டியும் வாழவில்லை
என காதல் மணம் பேண ஜீவா அடிக் கும்கும்மிஅடடா... ஓசை நயமும் உயர்ந்த நோக்கும் கொண்டவை. அதில் அவர் கூறுகிறார்
கற்பென மாதரை நிர்ப்பந்தஞ்-செய்வதைக்
கட்டோடு குப்பையில் விட்டெறிவோம்

ஆனால் தமிழ்ச் சமூகம் கற்பெனும் சங்கிலியை குப்பையில் இன்னும் விட் டெறியாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் அதுவே தமிழர் பண் பாடு என்று குரல் கொடுப்பதும் தொடர் கிறதே!

அதனால்தானோ என்னவோ அந்த வரிகளைத் தொடர்ந்து அவர் கூறிய வரி களும் இன்றும் எண்ணத்தக்கவனவாக உள்ளன,


தப்புத் தவறுகள் செய்வதில் - ஆண்களே
தையலரை வெல்வோ ரென்றறிவோம்.
ஒத்த உரிமையும் ஒத்த - முறைகளும்
உண்டெனில் நன்றென ஒப்பிடுவோம்
சித்தப் படியாண்கள் செய்கின்ற செய்கை - கிஞ்
சிற்றும் பொறோம் உண்மை செப்பிடுவோம்

ஜீவாகற்புஒரு தலையானது என்ப தால் அதனை குப்பையில் வீசச் சொன் னார்; அதே சமயம் கட்டுப்பாடற்ற வாழ்வை போதிக்கவில்லை. மாறாகஒத்த உரிமை, ஒத்த முறைகள்என இரு பால ருக்கும் பொதுநெறி வலியுறுத்தினார். இதற்கு எதிரான ஆணாதிக்க செய்கை களை பொறுக்கமாட்டோம் என்றார்.

சாதி மதம் நிறம் தேசம் குலம் செல்வம்
தம்மைப் புகுத்தி காதலைத் தடுத்தார்
நீதிதெரிந்து நெறிதெளிந்தின்று நாம்
நேசித்துக் காதலை பூசை செய்வோம்

இப்படி காதல் மணம் அரும்பினால் எப்படிப்பட்ட வெளிவேஷங்கள் வேண் டாம் எனவெளிவேஷங்கள்என்ற பாட லில் பட்டியலிடுகிறார். மாங்காய்ப் பாலுண்டு மலைமேலிருப்போர்க்கு”.... என்ற மெட்டில் அமைந்த பாடல் அது.

காதலைத்தான் வாழ்த்தி கருத்தொருமித்தாரேல்
ஜாதக மேதுக்கடி - குதம்பாய்

ஜாதக மேதுக்கடிஎன தொடங்கிபொருத்தங்களேதுக்கடி...”, “ஜோசியமேதுக்கடி” “ஹோமங்களேதுக்கடி”, “சடங்குகளேதுக்கடிஒவ்வொரு பத்தியிலும் கேள்வி எழுப்பியவர் அடுத்து தொடுத்த நாலு பத்திகளும் வெடிகுண்டாகும்.

கற்றாராய்ந்தேற்று பின் கல்யாணஞ் செய்வதில்
பெற்றோர்களேதுக்கடி - குதம்பாய்
பெற்றோர்களேதுக்கடி...”

ஆமாம். காதலுக்கு இடையூறாய் பெற்றோர்கள் நிற்கும்போது அவர்களை மீறு என்று வலுவாகக் கூறுகிறார்.

போலியன்றி மனப்பூர்வமாய் வாழ்வாரேல்
தாலியுமேதுக்கடி - குதம்பாய்
தாலியுமேதுக்கடி
பொற்புறுங் காதலாய் புவிதனில் வாழ்வாரேல்
கற்பென்பதேதுக்கடி - குதம்பாய்
கற்பென்பதேதுக்கடி
உபச்சாரமான உரிமை பெறுவாரேல்
விபசாரமேதுக்கடி - குதம்பாய்
விபசாரமேதுக்கடி

இப்படிவெளிவேஷமேதுக்கடிஎன பளிச் பளிச்சென்று மண்டையில் அறை கிற மாதிரி இவர் கேள்வி எழுப்பியது அன்றைய சனாதனிகளுக்கு பிடிக்காமல் போனதில் வியப்பில்லை. ஆனால் சமூகத் தின் பொதுபுத்தியில் உறைந்து போயுள்ள ஆணாதிக்க சிந்தனையும் இதனை ஒப்ப மறுத்ததோ என எண்ணத் தோன்றுகிறது? ஏனெனில் இவரின் கவிதைகள் அதிகம் பேசப்படாமல் போனதில் இத்தகைய அக்னிக் கவிதை களை தாங்க முடியாத சமூக இருண் மைத்தனம் ஒரு காரணியாகியிருக்குமோ?

பெரியார் பேசிய பெண்ணுரிமை வீரியமிக்கது; அவரது அடிப்பொடிகளிடம் அந்த வாசம் மிக மிகக் குறைந்து வெறும் பேச்சாகிவிட்டது. ஆனால் கம்யூனிஸ்ட்டு கள் பெண்ணுரிமையை இன்னும் வலு வாய்; இன்னும் தீர்க்கமாய்; இன்னும் விரி வாய் பேசியும் செயல்படுத்தியும் வரும் காட்சிகள் காண்கிறோம். ஆயினும் ஜீவா வின் பெண்ணுரிமை கீதங்கள் அவர்களா லும் உரக்க இசைக்கப்படாதது வேத னையே!

வேலையொன் றேமதிப்பு
வெட்டி வாழ்வு பழிப்பு
சேலை வேஷ்டி பிரிப்பு - கிளியே
செல்லாது சமதர்மத்தில்...”

பெண்ணுரிமை கனவல்ல, கைகூடும் காலம் உண்டு.
அது எதுவெனக் காட்டும் ஜீவானந்தம் பாடல்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

குழந்தைத் திருமணம்கண்டு கொதித்தும்; விதவை மறுமணம் வேண்டி யும் அவர் வடித்த கவிதைகள் குத்தீட்டி களாகும்.

கன்னி விதவைத்துயர் நினைத் திடுங்காலை
கலங்கிடுமே - நெஞ்சம் - குலுங்கிடுமே......
.....மனித உணர்வைக் கொல்லும் மடக்குணமே
வகுக்க விதவையானோர் நடைபிணமே

என சீறிப்பாய்ந்தவர்

ஏனைய நாட்டினர் இகழுதற் காச்சே
இந்து மதப் பிழையிலே இது பெரிதாச்சே

என்கிறார்.
இந்து மதம் பல பிழைகள் மலிந்த மதம் என்பது அவர் கருத்து. அவர் கவிதை நெடுகிலும் அதன் மீதான விமர்சன எறிகுண்டுகளைக் காணலாம்; ஆனால் அந்தப் பிழைகளில்விதவைத் துயர்மிகப்பெரும் பிழையெனச் சாடு கிறார். இதில் அவர் கவி உள்ளமும், தொலை நோக்கும் கைகோர்ப்பது தற் செயலானது அல்ல; இயல்பானது.

பாடல்கள் மட்டுமல்ல ஜீவாவின் எழுத்தும் பேச்சும் பெண் விடுதலைக்காக உரக்கக் குரல் எழுப்பிய வண்ணமே எப் போதும் இருந்துள்ளன. புதுமைப் பெண் ணுக்கு அவர் தொடர்ச்சியாக எழுதிய கடிதங்கள் குறிப்பிட்டு பேசத்தக்கன. சிந் தனைச் சிற்பி சிங்காரவேலரும், ஜீவாவும் பெண் விடுதலை குறித்து எழுதியவை மீண்டும் வாசிக்கப்பட வேண்டும். பெரி யாருக்கு ஒப்பவும் சில இடங்களில் அதற்கு மேலாகவும் பெண் விடுதலை குறித்து சிந்தித்தவர்கள் இவர்கள். இது குறித்து தனியே ஒரு தொடர் எழுத உள்ளேன். நிற்க.

செக்கு மாடு போலுழைத்து வீட்டிலடங்கி - வாழ ஜம்பம் பேசு கின்றனர்.எனவும்விருப்பு வெறுப் புக்கு அதிகாரிகளென்றே ஆண்கள் விதித்த வழக்கங்களை மிதித்திடு வோம்எனவும் கூவிய ஜீவா சாதி, மதம், மூடநம்பிக்கைகள் சாக - பெண் விடுதலை ஓங்ககாதல் மணம்’. உகந் தது உன்னதமானது எனக் கருதினார். பாடினார்.

காதல் மணந்தனை ஆதரித்தோம் பழங்
கட்டுடைத்தோம் வெற்றி நாட்டிவிட்டோம்
பாதகமரம் சாதி பேதங்கள் கொன்றுமே
பாங்கின் மணவினை கூட்டிவிட்டோம்
சாத்திரக்கேடுகள் கோத்திரச் சண்டைகள்
சாகின்றதைப் பாரீர் தோழர்களே!

இப்படி நம்பிக்கையோடு காதல் மணத்தை பெண் விடுதலையை ஆதரித் தவர் ஜீவா.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com