Contact us at: sooddram@gmail.com

 

ஊர்காவற்றுறை மக்களுக்கு இனியாவது விடிவு கிட்டுமா?

வியர்வைக்கும்  கண்ணீருக்கும் கடனில்லாது பூமிக்கு பாரமற்றிருக்கும் ஊர்காவற்றுறை மக்கள் மத்தியிலே தீவின் ஒவ்வொரு இடத்துக்கும் கால் நடையாகச் செல்ல நான் முயற்சித்தேன். ஆடு, மாடுகள் போன்ற கால் நடைகளைக் கொண்டு நடத்துவதே அவர்களின் ஜீவனோபாயம் என்று நான் முன்னொரு நாள் உங்களுக்கு எழுதினேன். ஆனால் இடைக்கிடை வெளியாக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கிடையே புகையிலை பயிர் செய்து வாழும் ஒருவரை நாம் சந்தித்தோம். நாம் வரும் வழியை மிக உன்னிப்போடு பார்த்துக் கொண்டிருந்த அவர், வெற்றிலை கறை படிந்த பற்களைக் காட்டிக் கொண்டு ஒரு அப்பாவி போல் சிரித்தார்.

‘மாமா எப்படி இருக்கிறீங்க’ நான் நெடுநாள் இவரை தெரிந்த ஒருவரைப் போல் கேட்டேன்.

‘என்ன செய்வது ஐயா, வயல் வேலை செய்வதில் எங்களுக்கு கூடிய விளைச்சல் இல்லை. ஒரு கிலோ நெல்லுக்குக் கூட எங்களுக்கு என்றுமே சரியானதொரு விலை கிடைத்ததில்லை. அதனால் புகையிலையைப் பயிரிடுகிறோம். புகையிலை பயிர் செய்வோர் பயிரிடும் அளவுக்கு விளைச்சலைப் பெறுகிறார்கள்.

இது எவ்வளவு துக்ககரமான நிலைமை என்று நான் நினைக்கிறேன். இம்மனிதர்கள் வாழ்வதற்காக மரணத்தை தேர்ந்தெடுத்துக் கொண்ட மனிதர்களாக எனக்குத் தெரிகின்றனர். புகையிலையை திண்ணையில் கட்டி வைத்திருக்கும் போது வரும் மணத்தினால் கூட அதிக நஞ்சு இருக்கின்றது.

‘புகையிலை பயிரிடலில் ஏனைய எந்த ஒரு பயிரை பயிரிடுவதைக் காட்டிலும் பூச்சி கொல்லிகளைப் பாவிக்க வேண்டி இருக்கின்றது. பயிரிடலை ஆரம்பிக்கும் போது விதைத்ததிலிருந்து கன்றுகளை நடும் மூன்று மாத காலத்துக்குள் மாத்திரம் குறைந்தது பதினாறு முறை பூச்சிகொல்லி மருந்துகளை கட்டாயம் பாவித்தே ஆக வேண்டும். நரம்பு சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் என்பன தான் இந்த விவசாய வாழ்க்கையின் பிரதிபலன்.

தமது பெயர்களை வெளியிடாத இந்த விவசாயிகள் இவ்வாறு கூறினர்.

ஆனால் பசியில் இருப்பதை விட புகையிலை பயிர் செய்தாவது வாழ்க்கையை கொண்டு நடாத்த அவர்கள் இப்போது தயாராக இருக்கின்றனர்.

புகையிலையில் இருக்கும் நிக்கோடின் மற்றும் ஏனைய நச்சுப் பதார்த்தங்களைப் பற்றி இவர்களுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இது அவர்களுக்கு வாழ்வதற்கு இருக்கும் ஒரு சவால் மிக்க வழி மாத்திரமே. அவர்களின் மீன்பிடித் தொழிலும் இவ்வாறே சவால் மிக்க நிலையில் இருக்கின்றது. இந்தியாவின் ரோலர் படகுகளோடு மோதி தமது வயிற்றுப் பசியை ஏழ்மையான வகையிலேயே நிரப்பிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

ஊர்காவற்றுறை தீவில் வசிக்கும் அப்பாவி மோட்டார் தொழில்நுட்பவியலாளர் ஒருவரான திஸ்ஸ கலுபஹன ஒரு சிங்களவராவார். அவரின் தந்தை ஆதர் டி சில்வா கலுபஹன. அத்தீவுக்கு வந்து அந்தோனியா பிள்ளையென்ற ஒரு பெண்ணோடு வாழ்ந்தாலும் அவர் தமது சிங்களப் பெயரை மாற்றவில்லை. அதனால் கலுபஹன என்ற பெயர் அழிந்து விடவில்லை. திஸ்ஸ கலுபஹன ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்திருந்தாலும் அவர்களின் பிள்ளைகளின் பரம்பரைப் பெயர் கலுபஹன என்றே தான் குறிப்பிட்டுள்ளனர். நான் அவரைப் பேட்டி கண்டேன். அவரின் மனைவியும் என்னை அன்போடு வரவேற்றார்.

‘எனது தந்தை அவிசாவளையைச் சேர்ந்தவர். அவர் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தான் வேலை செய்தார். இங்கு அப்போது சிங்கள, தமிழ் வேற்றுமை காணப்படவில்லை. மாத்தறை, காலி போன்ற பிரதேசங்களிலிருந்த பேக்கரிகாரர்கள் இங்கு பாண் பேக்கரி வைத்திருந்தார்கள்.

கொழும்புத் துறை, மணியன்தோட்டம் போன்ற மீனவ கிராமங்களில் கூடுதலாக வேலை செய்தது தெற்குப் பகுதி மக்களே.

‘எனது தந்தையினதும் தாயினதும் திருமணத்துக்கு இருதரப்பிலிருந்தும் எவ்வித பிரச்சினையும் எழுந்திருக்கவில்லை. சிறிய வயதிலிருந்தே நானும் எனது தந்தையுடன் படகுகளின் என்ஜின்களைச் செய்யவும், விவசாய உபகரணங்களைச் செய்ய, டிரக்டர், புல்டோசர், கடபிலர் போன்ற பல இயந்திர உபகரணங்களை திருத்தும் வேலைகளைச் செய்ய கற்றுக்கொண்டேன்.

எமக்கு தைப்பொங்கலைப் போலவே சிங்களப் புது வருடமும் பிறந்து விட்டது. நாங்கள் சிங்கள கிராமியக் கவிதைகள், தமிழ் கிராமியக் கவிதைகளைப் பாடிக் கொண்டு ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு புதுவருடத்தில் குதூகலமாக இருந்தோம். அது எவ்வளவு மகிழ்ச்சியான காலம் தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் அன்றிருந்த சிங்கள மகா வித்தியாலயத்துக்குத் தான் நான் படிக்கச் சென்றேன். எனது தாய் வந்து ஆசிரியர்களோடு சரிபாதியான வேலை செய்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. தந்தைக்கு அதிகமாக இருந்தது சிங்கள நண்பர்களல்ல. தமிழ் நண்பர்கள் தான். அவர்களுக்கு பணத்தைக் கூட எனது தந்தை கடனாகக் கொடுத்தார். அதுபோல ஆழமான ஒரு மனிதத் தொடர்பு தான் எமக்கிருந்தது. என்றாலும் யாழ்ப்பாணத்தில் நகர பிரதா துரையப்பா போலவே சிங்கள இராணுவத்தினருக்கும் போராளிகளினால் அழிவு ஏற்பட்ட போது சிங்கள, தமிழ் நட்பும் எரிய ஆரம்பித்தது. அவர்கள் மற்றவர்களைப் பார்த்தது ஓரக்கண்ணினால் தான்.

சிறிது சிறிதாக போராளி கூட்டங்கள் இங்கு தலை தூக்க ஆரம்பித்தன. தனி ஒரு சிங்களவர் என்ற ரீதியில் எனக்கு இவற்றை விவரிக்க முடியாது. போராளிகளின் கற்பித்தலினால் சிங்களவர் ஒரு மிலேச்சத்தனமானவர் என்று தான் புதிய பரம்பரை நினைத்தது. நான் சிங்களப் பெயரை மாற்றாததினாலும் பிள்ளைகளின் பெயர்களும் சிங்களமாக இருந்ததினாலும் அவர்கள் என்னையும் வைராக்கியத்தோடு பார்க்கப் பழகினார்கள்.

ஆனால் இப்பிரதேசத்தில் இயந்திர உபகரணங்களை கூடுதலாக திருத்தியமைத்தது நான்தான். அவர்களது டிரக்டர்கள், மோட்டார் படகுகள் என்பனவற்றை திருத்திக் கொடுத்தது நான் என்ற படியால் அந்த வைராக்கியம் இடைக்கிடை மேலெழுந்து பின்னர் சுமுகமானது.

எமது கதைக்கிடையில் கலுபஹனவின் தமிழ் மனைவி எமக்கு சூடான பால் தேனீரும் பனங்கருப்பட்டியும் கொடுத்து உபசரித்தார்.

இந்த ஊர்காவற்றுறை தீவும் பயங்கரவாதத்திலேயே அமிழ்ந்து விட்டது. எனது மனைவியின் உறவினர்களிடம் என்னைப் பற்றி கேட்டறிந்தனர்.

சிங்களவர்களை திருமணம் செய்தார்கள் என்று அவர்களை அவமதித்தார்கள். நான் படித்த யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தில் ஒரு கட்டடத்தைக்கூட அவர்கள் மிச்சம் வைக்கவில்லை.

என்னை இடைக்கிடை அவர்களின் வேலைகளுக்கு பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள். சரியான ஒரு சம்பளம் கூட கிடைக்கவில்லை. அதற்கிடையில் இராணுவத்தால் என்னைத் தேடி வந்தார்கள்.

‘உங்களுக்கு யாழ்ப்பாண கச்சேரியால் காணிகளைப் பெற்றுத் தருவோம், கொழும்புத் துறைக்கு அல்லது மணியன் தோட்டத்துக்கு செல்ல வேண்டி வரும், இராணுவத்துக்கு உங்களது உதவி தேவை.’

நாட்டுக்காக உதவி செய்ய பிள்ளைகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு இங்கிருந்து வெளியேறுங்க.’ உயர் இராணுவ அதிகாரியொருவர் எனக்குக் கூறினார். நான் மனைவியோடும் இரண்டு பிள்ளைகளோடும் கிராமத்திலிருந்து வெளியேறினேன். சில காலம் நாம் மணியன் தோட்டத்தில் வசித்தோம்.

சமாதான பேச்சுவார்த்தைகள் நடக்கும் போது மீண்டும் கிராமத்துக்கு வந்தோம். உறவினர்களைச் சந்தித்தோம், எனக்குத் தெரிந்த அளவில் 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு இராணுவத்திலும் ஒரு வேலை கிடைத்தது.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வேலையின் போது வாகனங்கள் உடைந்து போகும் தறுவாயில் அவற்றை மீண்டும் திருத்துவதே எனது வேலை. நான் தான் பிரதான மெக்கானிக். காலை ஆறு மணிக்கு வாகனங்கள் செல்வதற்கு முன் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். உடையும் வாகனங்களை திருத்திக் கொண்டு நானும் இருந்தேன்.

இக்காலத்தில் எனது மனைவியும் பிள்ளைகளும் இருபத்து நான்கு மணி நேரமும் பயத்தினால் நடுங்கிக் கொண்டு தான் இருந்தனர். எந்த நேரத்திலும் என்னைக் கொன்று விடலாம் என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆனால் நாட்டுக்காக, இராணுவத்துக்காக அவ்வேலையை சரியாகவே செய்தேன்.

உடனடியாக இவ்வேலையிலிருந்து விலகுமாறும் கிராமத்துக்கு வரும்படியும் கூறி எல். ரி. ரி. ஈ. எனக்கு கடிதங்களை அனுப்பியது. ஆனால் எனக்கு ஊருக்கு போக முடியாது.

2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த காலத்தில் முல்லைத்தீவு பகுதி முழுமையாகவே அழிந்து விட்டது. நல்லூர் முகாமிலிருந்து அதிகாரிகள் வந்து என்னைக் கூட்டிச் சென்றார்கள். பாதைகளைச் சுத்தப்படுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது, வாகனங்களைச் செய்வது தான் எனது தொழிலாகும்.

இவர்களோடு போகும் போது நான் கண்டேன் பிக்குமாரைக் கூட நடுத்தெருக்களில் கொலைசெய்து போட்டிருந்தார்கள். எனக்கும் கட்டாயமாக புலிகள் துப்பாக்கிச் சூடு வைப்பார்கள் என்று கிராம வாசிகளும் கூறினர். ஆனால் நான் எல்லோருக்கும் அன்பு கூறுகிறேன். எனது தாய் தமிழ், தந்தை சிங்களவர், எனக்கு இன பேதமில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன். ஒரு நாள் நான் ஜீப் வண்டியொன்றை ஓட்டிக்கொண்டு வரும் போது சடுதியாக எல். ரி. ரி. ஈ.யினர் பாய்ந்து முல்லைத்தீவின் காடொன்றுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். என்னை கண்ணாடியொன்றில் ஒரு பக்கத்தில் வைத்து மறு பக்கத்தில் அவர்களின் தலைவர்கள் இருந்து கேள்வி கேட்டார்கள். உள்ளே மனிதர்களுக்கு அடிக்கும், வதை கொடுத்து துன்பப்படுத்தும் குரல்கள் எனக்குக் கேட்க வழியமைத்தனர். சிவப்பு நிற இரத்தக் கறை இருக்கும் சுவர்களைக் காண்பித்தனர்.

‘உண்மையைச் சொல், இல்லாவிட்டால் விஷயம் பிழைத்திடும்’ ஒரு தலைவன் கையிலிருந்த கிளாசை கீழே வீசி காலால் மிதித்து என்னிடம் வந்தார்.

எனக்கு எனது அப்பாவி பிள்ளைகளின் முகங்களும் மனைவியின் சோகம் மிகுந்த முகமும் என் கண் முன்னால் தெரிந்தது.

‘நீ இராணுவத்துக்கு உளவு கொடுக்கிறாய். அவர்களுக்கு வேலை செய்கிறாய்.’ அந்த கூட்டத் தலைவன் கூறினான்.

நான் கூறினேன். நான் ஊர்காவற்றுறை. எனது தாய் தமிழ், தந்தை சிங்களம். நான் உங்களது படகு என்ஜின்கள், டிரக்டர்கள் எவ்வளவு செய்து கொடுத்திருக்கிறேன்? என்னை பலாத்காரமாகவே கொண்டு செல்கிறார்கள். என்னை என் பிள்ளைகளோடு இருக்க விடுங்கள்.

அதே நேரம் மற்றுமொரு மரணக் குரல் உள்ளிருந்து கேட்டது. உனது பிள்ளைகளையும் மனைவியையும் கொண்டு வந்து துன்பப்படுத்துவோம். நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லு என்று. அடுத்தது அந்தத் தலைவன் நீண்டதோர் பெயர்ப் பட்டியலை வாசித்து அவர்கள் இராணுவத்துக்கு உளவு கொடுத்தார்கள் தானே? என்று கேட்டார்.

நான் கூறினேன் தெரியாது என்று. அப்பாவி மக்களைக் காட்டிக் கொடுக்க என்னால் முடியாது. அப்படி இராணுவத்தோடு எனக்கு கிட்டிய தொடர்பு இல்லையென்று கூறினேன்.

என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் துன்பங்களைக் கொடுத்து கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். நாம் இருபக்கத்தாலும் நசுக்கப்பட்டோம். அவர்களின் வேலைகளுக்கு என்னை வைத்துக்கொள்ள வேண்டுமென்பதால் என்னை கொலை செய்யவில்லை. ஆனால் இடைக்கிடை இவ்வாறு கேள்வி கேட்டார்கள்.

அவர் தனது வலது கையை எனக்குக்காட்டினார்.

ஐயா நான் இந்த உள்ளங்கையில் கொப்புளங்கள் வரும் வரை அவர்களின் படகுகளின் என்ஜின்களைச் செய்தேன். டிரக்டர்கள், சைக்கிள்களைச் செய்தேன்.

எனது பிள்ளைகளின் கல்வி பாழாய்ப் போயிற்று. எனக்கும் மனைவிக்கும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. என்னை அழுகிய மீன் துண்டைப் போல இழுத்துக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு சென்றார்கள். ‘உங்களை கொலை செய்யாமல் விட்டது உங்களிடமிருந்து வேலை செய்து கொள்ளலாம் என்றார்.

‘அது அப்படியான ஒரு கூட்டு அல்ல ஐயா, எந்தளவு வேலைத் திறன் மிக்கவன் என்றாலும் துரோகி என்று நிரூபிக்கப்பட்டால் கொலை செய்து விடுவார்கள். துரோகியல்ல என்பதால் நான் தப்பினேன். மீண்டும் எமக்கு இந்த வீடு வாசல்களுக்கு வர முடிந்தது, நாம் சென்ற பிறப்பில் செய்த அதிர்ஷ்டமே.

ஊர்காவற்றுறை பொலிசுக்கருகில் மோட்டார் தொழில்நுட்ப வேலைகளைச் செய்துகொண்டு இன்னும் கலுபஹன வாழ்ந்து கொண்டிருக்கிறார். கலுபஹனவின் அந்த இருளை அகற்றிய மானிட செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் அவர் சிரம் தாழ்த்தி மரியாதை செய்தார்.

‘இன்று ஊர்காவற்றுறையில் மனித வாழ்க்கை சாதாரண நிலைக்கு வந்து விட்டது. அவர்களுக்கு பயமோ அச்சமோ இல்லை. பிள்ளைகளுக்குப் பாடசாலைகள் கிடைத்தன. ஆனால் வாழ்வது தான் கஷ்டம்.’

புகையிலை பயிரிட்டு வாழும், வாழ்வதற்காக மரணத்தை நோக்கிச் செல்லும் மனிதர்கள் மீண்டும் என் மனதில் வருகின்றனர்.

அவர்களின் காணியில் இரண்டு மூன்று முறை புகையிலை பயிரிட்டால் எஞ்சுவது சாறு உலர்ந்துள்ள கரடுமுரடான நிலம் மாத்திரமே. இந்த அப்பாவிகளின் பிரச்சினைகள் என்று தீரும் என்பதே எமது ஏக்கம்.

படங்கள்: விமல் கருணாதிலக

சிங்களத்தில் : உபாலி சமரசிங்க

தமிழில் : நிசா...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com