Contact us at: sooddram@gmail.com

 

உலகையே அதிர வைக்கும் மாயர் கணக்கு

நெல்லை சு. முத்து

பத்து பழங்களைப் பத்துப் பேருக்கு பகிர்ந்து அளித் தால் ஆளுக்கு ஒரு பழம் கிடைக்கும். ஒரு எண்ணினை அதே எண்ணினால் வகுத்தால் மிகுதி ஒன்றுதானேகணிதப் பாடம் நடத்தினார் கும்பகோண ஆசிரியர். ஏன் சார் பூஜ்யத்தைப் பூஜ்யத்தால் வகுத்தால் ஒன்று வருமா? இல்லாத பழங்களை இல்லாத ஆள்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால், ஆளுக்கு ஒரு பழம் கிடைக்குமா சார்?’ ஒரு சுட்டி மாணவன் போட்டானே ஒரு போடு, திகைத்துப் போனார் ஆசிரியர். கேட்டது வேறு யாருமல்ல, இந்திய நாட்டின் கணித மேதை சீனிவாச இராமானுஜம்தான். ஒருமுறை அண்ணல் காந்தி ஆசிரமத்தில் திரட்டப்பட்ட மக்கள் நிதிப் பணத்தில் மறுநாள் கணக்கு சரியாகவில்லை. சில சதங்கள் குறைந்ததாம். இரவு முழுவதும் மகான் உறங்கவே இல்லை. ஏதோ ஒரு ஏழையின் பணம் தம் கையில் வந்து தொலைந்துவிட்டதே என்கிற கவலை. அதனால்தானோ என்னவோ இந்தியர்கள் காணா மல் விடுபட்ட காசு என்றால் காந்தி கணக்கு என்கிறார்கள்.

இன்றைக்கு ஒரு விளம்பரத்தில்ஒன்றில் இருந்து ஒன்பது போகாது பக்கத்தில் இருந்து ஒன்றைக் கடன் வாங்கிக் கழிக்கணும்என்று கற்றுத் தருகிறார் ஆசிரியர். கடன் வாங்கினால் திருப்பித் தர வேண்டாமா, இது என்ன சார், காந்தி கணக்கா?’ என்று தலையில் அடித்துக் கொள்கிறாள் ஒரு குட்டி மாணவி. நல்லவேளை, எந்த காந்தி என்று கேட்காமல் விட்டாளே?

2012 இந்தியத் தேசியக் கணித ஆண்டாக அறிவிப்பாகி இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டில் மாய இந்தியர் கணிப்பு உலகையே உசுப்பி வருகிறது.

மெக்சிகோவில் யுகாதன் தீப கற்பத்தின் ஆதி நாகரிக இனத்த வர் மாய இந்தியர்கள். ஏறத்தாழ ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்ட விண்கல் மோதி, டைனோசர் இனம் அழிந்ததாகக் கருதப்படுகிறதே. அதே பிராந்தி யப் பழங்குடிகள் 16 ஆம் நூற்றா ண்டில் அங்கு குடியேறிய ஸ்பானி யத் துறவிகள் செய்த திருப்பணி, மாயர்தம் அறிவியல் சுவடிகளில் அக்கினி வளர்த்துதான் நான்கே நான்கு சுவடிகள் தப்பித்தன.

பாருங்கள் இன்னொரு வேடிக்கை, சிதைக்கப்பட்ட சம்பிரதாயங்களை வரலாற்று ரீதியில் தொகுத்தார் ஃபரே பெர்னார்டினோ டி சஹாகுன் எனும் பாதிரியார். புதிய ஸ்பெயின் நாட்டில் பொது வரலாற்றுச் செய்திகள்என்பது நூல் தலைப்பு.

அங்குகிச்சென் இத்சாஎன்ற இடத்தில்குகுல்கன்கோயில் ஒன்று பிரமிட் வடிவில் உள்ளது. பறக்கும் தெய்வீகப் பாம்பு என்று பொருள். தமிழில்கூக்கழுகன்மாதிரி ஒலிக்கிறதே. போகட்டும், அந்தப் பிரமிட் சதுர வடிவ அடித் தளம் கொண்டது. நாற்புறமும் பக்கத்திற்கு மூன்று பகுதிகளாக மொத்தம் 12 பிரிவுகள். அவை பன்னிரெண்டு ராசி மண்டலங் களாம். ஒவ்வொரு பக்கத்திலும் 91 படிக்கட்டுகள், உச்சியில் ஆலயப் படிவாசல். ஆக, 365 படிக்கட்டுகள் மாய இந்தியர்தன் ஆண்டுக் கணக்கு.

கெளத மலை’க்கு வடகிழக்கில் நரஞ்சோ நகரில் ஒரு கல்வெட்டு அவர்தம்நெடுங்கணக்கு நாட்காட்டிபத்தின் மடங்காக இல்லாமல், இருபதின் அடுக்கு களால் ஆனது. ஒருவேளை கை, கால்களின் 20 விரல்கள் அடிப்படையோ என்னவோ, மாயர்கள் 1 என்பதை ஒரு புள்ளியாலும், 5 என்பதை கிடைக்கோடு ஆகவும் எழுதினர்.

அந்தக் கல்வெட்டில் 9.13.18.4.18 என்று இருக்கிறது. அவை 9 பக்தூன்கள், 13 காதூன்கள், 18 தூன்கள், 4 உயினல்கள், 18 கின்கள். என்ன விழிக்கிaர்கள்? சிந்துபாத் கதையில் வரும் மாயாஜால சமாச்சாரம் அல்லவே. குறு யுகம், பஞ்சாங்க ஆண்டு, ஆண்டு, மாதம், நாள் மாதிரியான அளவீடுகள், அனைத்தையும் கணக்குப் போட்டால், 13,96,178 நாட்கள் என்று வரும்.

கி. மு. 3114 ஆகஸ்ட்டு 13 அன்று மாலை வேளை மேற்கு அடிவானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், புதன், சனி ஆகிய ஐந்து கோள்கள் ஒன்றுகூடி புலப்பட்டன. அவர் தம் கணிப்புப்படி 13,96,178 நாட்களின் பின் அந்த அரிய காட்சி மீண்டும் தோன்றி இருக்க வேண்டுமாம். கி. பி. 710 ஜூன் 25 அன்று நிகழ்ந்து இருக்கலாம். யார் கண்டது. அது இருக்கட்டும் மாயர் வாய்ப்பாடு பற்றிச் சொல்லிவிடுகிறேன். 1 நாள் 1 கின், 20 கின்கள் 1 உயினல் (மாதம்), 18 உயினல்கள் 1 தூன் (360 நாட்கள்) 20 தூன்கள் 1 காதூன், 20 காதூன்கள் 1 பக்தூன், அதாவது, 1,44,000 நாட்கள்.

20 ‘கின்கள்’ (நாட்கள்) வீதம் 18 உயினல்கள் கொண்டது ஒருஹாப்’ (மாய ஆண்டு) என்றும், 13 கின்கள் வீதம் 20 உயினல்கள் (260 நாட்கள்) ஒருத்சோல்கின்என்றும் இருவித ஆண்டுக் கணக்குகளைப் பின்பற்றினராம்.

இந்த இரண்டு நாட்காட்டிகளிலும் 52 ஆண்டுகள் ஓர் உத்தமப் பொதுக் காரணி. திரும்பத் திரும்ப வரும்.

ஒவ்வொரு 52 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சூரியனே மறைந்து, உலகம் அழியும் என்று நம்பினர். மனிதர்கள் அனைவரும் ஆதிகால வேட்டை மிருகங்கள் ஆகவோ, காட்டுப் பறவைகள் ஆகவோ உருமாறக் கூடும் என்றும் அஞ்சினர். அதனால் ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம்பிளையாடிஸ்’ (கார்த்திகை) உடுக்கணம், சூரிய வீதியினைக் கடக்கும் நள்ளிரவில் நரபலி கொடுத்து வந்தனர். வானில் கொத்தாகத் தோன்றும் கார்த்திகையைச்சந்தைக் கூட்டம்என்ற பொருளில்தியான்குஸ்த்லிஎன்று வழங்கினர்.

மெக்சிகோவில்இஸ்தபலப்பாஎன்ற இடத்தில்ஹியுக்சாக்த்சலான்’ (முள்மரம் என்று பொருள்) மலை உச்சியில் பூசாரிகள் கூடி நடத்தும் சடங்கு அது. பின்னர் அந்தச் சடலத்தின் இதயத்தைக் குறுங்கத்தியால் தோண்டி எடுத்துத் தீயில் போடுவார்களாம், ஏன் தெரியுமா? அந்தப் புது நெருப்பு ஏற்றி வைக்கும் சூரியனால் அடுத்த 52 ஆண்டுகளுக்கு எந்தப் பயமும் இல்லை என்பது ஐதீகம்.

மாயர் ஆண்டுத் தட்சிணாயணத் தொடக்கம் சூரியன் வடகோடியில் கோடை சந்தி நாளில் மிதுன உடுக்கணத்தில் இயங்கிற்று. ஆனி மாத இரவில் தேள் வடிவ விருச்சிக உடுக்கணத்தின் நுனிக் கொடுக்கில்மூலம்’ (ஷெளலா) விண்மீனும் தெரியும். மாயர் மொழியில் அதுகொல்காகேட்டால், கொடுக்கா என்று தமிழாக ஒலிக்கிறதே.

நம் ஆகாய கங்கை ஆகிய பால்வீதி அண்டத்தின் மையப் பகுதியும் அந்தக் கொடுக்குத் திக்கில்தான் உள்ளது. அதனால்தான்மூலம்மையம் என்று பொருள். சொல்லப் போனால், கார்த்திகை மாதச் சூரியனோ தட்சிணாயண இறுதி (குளிர் சந்தி) நாளில் இதே தேள் கொடுக்கு அருகில் இயங்கும். இன்றைய கணக்கில் டிசம்பர் 21 காலை 11 மணி, 11 நிமிடம்.

இந்த மாய இந்திய வரலாற்றுப் பின்னணியில் தான் 20.12.2012 இரவோடு இரவாக உலகம் அழியும் என்று குறி சொல்கிறார்கள்.

தார்ச்சுகுவெரா கல்வெட்டில் உலகின் அந்த மரண நாள் 13.0.0.0.0 என்று குறிக்கப்பட்டு இருக்கிறதாம். அதாவது, கி.மு. 3114 ஆகஸ்ட் 11 அன்று தொடங்கிய 13 ஆம் பக்தூன் முடிவு அதுவே உலக முடிவாம்.

சில்வேனஸ் மோர்லி எழுதியபழங்கால மாயர்கள்எனும் ஆங்கில நூலின் 1983 ஆம் ஆண்டு திருத்திய நான்காம் பதிப்பின் சாரம் இது.

உண்மையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 குளிர் சந்தி நாளில் பூமியை ஒருபக்கம் பால் வீதி அண்ட மையமும், சூரியனும் நேர்கோட்டில் இணைந்து வடம் பிடிக்கும். மறுபக்கம் சந்திரன் மட்டும் தனித்து இழுக்கும்.

இந்த நிறையீர்ப்பு இழுபறியில் பூமியின் மேல்தோல் பிய்த்துக்கொள்ளலாம். நிலத்தில் பூகம்பம் நிகழும். அவ்வப்போது உள்புண் சீழ் மாதிரி எரிமலைச் சீற்றங்களும் ஏற்படலாம்.

அமெரிக்காவின் மஞ்சள்கல் தேசியப் பூங்கா, கொலொராடோவில் லா கரிதா கல்தேரா, நியூசிலாந்தில் தெளப்போ ஏரி, சுமத்ராவில் தோபா ஏரி எல்லாம் குமுறுவதற்கு தருணம் பார்த்துக் காத்து இருக்கின்றன என்கிறார்கள்.

ஆழிப் பேரலை பீறிடும், காற்றும் வந்துதானேதாண்டவம் ஆடும். நிலம், நீர், காற்று மட்டுமா, சூரிய நெருப்பும் பூமியை உக்கிரமாகத் தாக்கும். 1859 ஆம் ஆண்டு வெளிப்பட்டதைப்போல, இந்த ஆண்டும் டிசம்பர் மாதத்தை ஒட்டி, சூரியனில் இருந்து அசாதாரண அணுப்புழுதிப் புயல் வீசுமாம். அதில் சிதறுண்டு செயற்கைக் கோள், தொலைக்காட்சி அலைபரப்புகள் அலைக்கழியும்.

வானில் அப்போஃபிஸ் எனும் குறுங்கோள் 2029 ஆம் ஆண்டு பூமிக்கு அருகில் பூச்சாண்டி காட்ட இருக்கிறது. 2036 ஏப்ரல் 13 அன்று மோதவும் கூடுமாம். ஒரு கோடி கோடி தொன்கள்ட்ரை நைட்ரோ டொலுவீன்வெடிபொருளுக்குச் சமமான சேதம் உண்டாகலாம். ஏறத்தாழ 1980 ஆம் ஆண்டின் ஹெலீனா எரிமலைச் சீற்றத்தைப் பேல் 60 இலட்சம் மடங்கு.

விபத்தில் சிதைந்த கழிவுகள், போரில் தகர்ந்த அழிவுகள் பார்த்துப் பயந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நடுவீட்டுக் கழிவறைப் பாதுகாப்பை யார் வந்து சொன்னாலும், குழாய்க்குள் தலையை நுழைத்துக் கழிவுகள் என்ன ஆகிறது என்று கண்டே தீர வேண்டும் என்கிற அக்கறை சிலருக்கு.

விவிலியக் கணிப்புப்படி, ‘அந்நாட்களின் வேதனைக்குப்பின் உடனே, கதிரவன் இருண்டு விடுவான். நிலா தன் ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்தினின்று விழும்என்கிற (மத்தேயு 24 : 29) வசனம் வாசித்துப் பீதியைக் கிளப்புகிறார்கள்.

போகிற போக்கில் 12.21.12 (மாதம் - நாள் - ஆண்டு) என்றபடி ஹீப்ரு மொழியில் எழுத்துக்களை இட வலமாகக் கூட்டி வாசிக்கிறார்கள் என்கணித நிபுணர்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com