Contact us at: sooddram@gmail.com

 

கற்றுக்கொடுக்கிறார் காந்திஜி

(வெ.ஜீவகுமார்)

ஆண்டு - 1936; இடம் - நாக்பூர் புகை வண்டி நிலையம்; வயதான கண வனும் மனைவியும் ரயிலில் உட்கார்ந்துள் ளனர். சுற்றிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். வாழ்த்து கோஷங்கள் வானை முட்டுகின்றன. அந்தத் தம்பதி உட்கார்ந் திருந்த ரயில் பெட்டி அருகில் கிழிந்த துணிகளோடு ஒருவர் நெருங்குகிறார். சன்னல் அருகே உட்கார்ந்திருக்கும் அந்த அம்மையாரிடம் ஒரு ஆரஞ்சுப் பழத்தை நீட்டுகிறார்.

அம்மா, இதோ உங்களுக்கு என் அன்பின் சின்னம்’’.

அந்த அம்மையாரின் கணவர் அருகில் உட்கார்ந்திருக்கிறார். கிழிந்த சட்டை அணிந்திருப்பவர் அவரைப் பார்த்து கூறு கிறார்நீங்கள் பெரிய மனுஷன் என்றால் அதற்கு முழுக் காரணமும் அம்மாதான்’’ என்கிறார்.

ரயில் ஓடத் தொடங்குகிறது. அந்தக் கிழிந்த சட்டை அணிந்திருப்பவரின் குரல் மீண்டும் கேட்கிறது. கணவரும் மனைவியும் மனக்குழப்பத்துடன் பயணம் செய்கின்றனர். அந்தத் தம்பதி வேறு யாருமல்ல மகாத்மா காந்தியும் அவரது மனைவி கஸ்தூர்பாவும்தான்; கிழிந்த சட்டை அணிந்திருந்தவர் அவர்களின் மூத்த மகன் ஹரிலால்.

இன்று நாம் காணும் இந்தியாவில் பல அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல், தலைவர்களின் குடும்ப ஆதிக்கம் அதி கரித்து வருவதைப் பார்க்கிறோம், படிக் கிறோம், உணர்கிறோம்.

ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் என்று நினைப்பவர் களும் இருக்கலாம். இந்திரா காந்தியின் கணவர்பெரோஸ் காந்திஎன்றே நம்மில் பலர் அறிந்துள்ளோம். இந்திரா வின் கணவர் பெயர்பெரோஸ் கான்என் பதும் நேரு இந்தத் திருமணத்தை விரும் பாத சூழலில் பெரோஸ் கான், பெரோஸ் காந்தி ஆக்கப்பட்டார் என்பதும் வரலாற்று உண் மைகள்.

ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் பெரோஸ் கான் பெரிதும் உதவுகிறார். 1942-இல் பெரோஸ், இந்திரா மணவிழா நடக்கிறது.

1944-இல் ராஜீவ், 1946-இல் சஞ்சய் பிறக்கின்றனர். ராஜீவ் கான், சஞ்சய் கான் என்று அழைக்கப்பட வேண்டியவர்கள், ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று அழைக்கப்படுகின்றனர். ராகுல் காந்தி, வருண் காந்தி வரை அந்தப் பெயர் நீடித் துக்கொண்டே போகிறது. ராஜீவ் காந்தி யின் மனைவி சோனியா பெயருடனும்காந்திசேர்க்கப்பட்டது.

இந்தகாந்தி’களின் பெயர்கள் மீண் டும் மீண்டும் தில்லி செங்கோட்டை அரியணையோடு தொடர்புபடுத்தப்படு கின்றன. காந்திஜிக்கும், கஸ்தூர்பாவுக்கும் பிறந்த மகன்கள் நான்கு பேர். ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ். ஹரி லாலுக்கும் முன்பு பிறந்த மூத்த மகன் பிறந்த சில நாள்களிலேயே இறந்து விட்டார்.

எந்த அரியணைக் கனவுகளோடும் இவர்கள் வளர்க்கப்படவில்லை. மாறாக சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் நாட் டுக்காக ஏராளமாக ரத்தம் சிந்தினர். இவர் களின் உடலும் உள்ளமும் புண்ணாகித் துன்புற்றனர்.

தந்தை - தனயன் என்ற உறவு காந்தி ஜிக்கும் அவரின் மூத்த மகன் ஹரிலாலுக் கும் வித்தியாசமான சூழலில் சிதைந்து போய் இருந்தது. எனினும் ஹரிலால் விடு தலைப் போராட்டத்தில் சிறைப்படுத்தப் பட்டு சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட் டார். தென் ஆப்பிரிக்காவில் காந்தி இருந்த சூழலில், தொடக்கம் முதலே காந் திஜியுடன் அவரது மூத்த புதல்வன் இணைந்து வாழ முடியவில்லை. நெறி தவறிப்போன தனது மூத்த புதல்வனின் வாழ்க்கையைச் சரிசெய்ய காந்திஜி முயற்சி மேற்கொண்டார். தென் ஆப்பிரிக் காவில் காந்தி நடத்திய போராட்டத்துக்கு ஹரிலாலையும் அழைத்தார். தென் ஆப் பிரிக்காவின் டிரான்ஸ்வால் சிறையில் சத்தியாக்கிரகியாகிய ஹரிலாலின் உடை மைகள் தகரப்பெட்டியில் வைக்கப்பட்டு அவரது முதுகுடன் சேர்த்துக் கட்டப்பட் டன. கைகளில் விலங்கு பூட்டி தெருக் களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டார் ஹரிலால்.

தமது உண்ணாவிரதப் போராட்டத் தில் குடும்பத்தை ஈடுபடுத்தினார். அடி யும் உதையும் பெற்று அவர்கள் காயத்தில் ஈக்கள் மொய்க்க சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். தன் பிள்ளைகள் என்பதற் காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்று காந்திஜி உறுதியாக இருந்தார்.

லண்டனில் காந்தியின் மூத்த மகன் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பீரன் ஜீவா மேத்தா அதற்காக உதவிகள் செய்தார். காந்திஜி யின் மகனை லண்டன் அனுப்பி வைக் கும்படி கேட்டார்.

காந்தியின் குடும்பத்துக்கு என்று அந்தப் பிரத்யேக ஏற்பாட்டை பீரன் ஜீவா மேத்தா செய்தார். காந்தியின் மகனுக்கும் பிறரைவிட முழுமையான தகுதி இருந் தது. எனினும் ஆசைப்பட்ட மகனை காந்தி லண்டனுக்கு அனுப்பி வைக்க வில்லை.

காந்தியின் மூத்த மகன் ஹரிலால் வழக்குரைஞராகப் படிக்க விரும்பியதற்கு காந்தி உதவவில்லை. காந்தியின் இரண் டாம் மகன் மணிலால் படிக்கவும் காந்தி உதவவில்லை. தான் சிறையில் இருந்த போது, சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவு தர வேண்டிய பொறுப்பை மகன் மணி லாலிடம் ஒப்படைத்தார் காந்திஜி.

காந்திஜியின் மனைவி கஸ்தூர் பாவின் தியாகம் நிகரற்றது. கஸ்தூர்பா வுடன் அவரது மகன் ராம்தாஸ் 15 வயதில் இருந்தபோது ஒரே சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.

சிறைச்சாலை வாழ்க்கை காட்டு விலங்குகளுடன் வாழ்வதுபோல இருந் தது. இந்த நிலையில்தான் காந்திஜியின் மனைவி கஸ்தூர்பாவின் வாழ்க்கை சிறைச்சாலையிலேயே முடிந்தது. சிறைச் சாலை வளாகத்தில்தான் அவரின் இறு திச் சடங்குகள் நடந்தன.

6 முறை - சுமார் 2 ஆண்டுகள் - கஸ் தூர்பா சிறைக் கைதியாக வாழ்ந்தார். தமது 69-வது வயதில் இருண்ட அறை யில் தனிமைச் சிறையில் கஸ்தூர்பா தைரியமாக இருந்தார். சொந்த ஊர் ராஜ் கோட்டில், இறக்கைகள் நறுக்கப்பட்ட பறவையாக சிறைக் கைதியாக வாழ்ந்தார். அவரின் 72-ஆவது வயதில் விலைமாது கள் அடைக்கப்பட்டிருந்த அறையில் அவரை அடைத்துவைத்தது அன்றைய கொடூர அரசு. அப்போது கடைசி மகன் தேவதாஸ் பஞ்சாப் சிறையில் இருந்தார்.

இந்திய விடுதலைக்காக காந்திஜியின் குடும்பம் இப்படித்தான் மகத்தான விலை கொடுக்க வேண்டிவந்தது. இந்திய விடு தலைக்குப் பிறகு, ஒரு பியூன் வேலை யைக்கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை காந்திஜி விரும்பவில்லை.

பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் அம்பேத்கர், ஜின்னா போன்ற பல தலைவர்களுடன் காந்திஜிக்கு கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். எனி னும் காந்தியடிகளை சான்றுகாட்டவும் முதன்மைப்படுத்தவுமான நிகழ்வுகளும் ஏராளம் உண்டு.

ஒரு கிறிஸ்துவ ஆதிதிராவிடரின் மலத்தைச் சுத்தம்செய்ய தன் மனை விக்கு உத்தரவிட்டது, நாவிதத் தொழிலாக இருந்தாலும் ஒழுங்காகக் கற்றுக் கொள் என்று மகன் ராம்தாஸிடம் கூறியது என்று காந்தி பற்றி ஏராளமான செய்தி களைக் கூறலாம்.

உலகில் பல்வேறு நாடுகளில் விடு தலைப் போராட்டங்கள் நடந்துள்ளன. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியதாக காந்தியடிகள் பலரால் முன்மொழியப்படுகிறார். கியூபா, பொலி வியாவின் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் போராடியதாக எர்னஸ்ட் சேகுவேரா அறியப்படுகிறார். பல நிகழ்வு களில் இருவரையும் ஒப்பிட முடியாது. எனினும் சில ஒருங்கிணைந்த அம்சங் களும் உள்ளன. இருவரின் மரணமும் இயற்கையானதல்ல. துப்பாக்கித் தோட் டாக்களே இருவரின் வாழ்வையும் முடித்தன.

தம் வாரிசுகளை இவர்கள் எந்த வகை யில் எதிர்பார்த்தார்கள் என்பதிலும் விசித் திரமான சில ஒற்றுமை அம்சங்கள் உள்ளன.

தம் பிஞ்சுக் குழந்தைகளுக்குசே’’ பின்வருமாறு கடிதம் எழுதினார்.

இக்கடிதத்தை நீங்கள் படிக்கும் போது நான் உயிருடன் இருப்பேனா என் பதே சந்தேகம். என்னை அதிகம் நினைத் திருக்க மாட்டீர்கள். சின்னக் குழந்தை களுக்கு என்னை நினைத்துப் பார்க்க எதுவும் இருக்காது. நீங்கள் நல்ல புரட்சி யாளராக வளர வேண்டும். எங்கு அநீதி நடந்தாலும் எதிர்த்துப் போராட வேண்டும்’’.

இத்தகைய மகத்தான மனிதர்கள் தங்கள் குழந்தைகளை சொகுசு வாழ்க் கைக்குத் தயார்ப்படுத்தவில்லை. தங்க ளைப்போன்றே தங்கள் குழந்தைகளும் சமூகத்துக்கு உழைக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தனர்.

விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால், உன்னை தெய்வமாக வழிபடுவேன்’’ என்று மனைவி கஸ்தூர்பாவிடம் காந்தி அடிகள் கூறினார்.

காந்திஜியின் தியாகம் மட்டுமல்ல, காந்திஜியின் குடும்பத்தின் தியாகமும் நிறைய நிறையக் கற்றுக்கொடுக்கிறது. பொது நலனுக்காகத் தம்மை அர்ப்பணிப் பவர்களை சமூகம் சுவாசிக்கும்வரை கொண்டாடிக்கொண்டே இருக்கும்.

கட்டுரையாளர், வழக்குரைஞர்.

நன்றி : தினமணி (30.1.2013)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com