Contact us at: sooddram@gmail.com

 

குதிரை இறைச்சி உட்கொண்ட பிரித்தானிய மக்கள : பல்தேசிய சில்லரை வணிகத்தின் கொலை வெறி

பல்தேசிய வியாபார வெறிக்குப் பலியான பிரித்தானிய அப்பாவி மக்கள் கடந்த ஆறு மாதங்களாக குதிரை இறைச்சி உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். உறைந்த உணவு தயாரிக்கும் -frozen food-நிறுவனம் ஒன்றின் ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து டெஸ்கோ -TESCO- என்ற பல்தேசிய சில்லறை விற்பனை நிலையம் பிரித்தானியா முழுவதும் உள்ள தனது கிளைகளில் குதிரை இறைச்சி விற்பனை செய்து வந்ததாக கண்டறியப்பட்டது.

Findus என்ற இலச்சனையைக் கொண்ட உறை உணவு வகைகளில் குதிரை இறைச்சி கலந்திருப்பதாகத் தெரியவந்ததை தொடர்ந்து பிரித்தானியா முழுவதும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
Findus இற்கு உறை உணவு தயாரிக்கும் பிரஞ்சு நிறுவனமான comigel கொமிஜெல் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் குதிரை இறைச்சி கலந்ததிருந்ததை ஏற்றுக்கொண்டுள்ளது.

டெஸ்கோவைத் தொடர்ந்து அல்டி -Aldi- என்ற பல்தேசிய அங்காடியும் தனது உணவு வகைகளில் குதிரை இறைச்சி கலந்திருப்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த இரு அங்காடிகளும் குறித்த உணவு வகைகளில் 30 வீதத்திலிருந்து 100 வீதம் வரை குதிரை இறைச்சி கலந்திருப்பதை பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளன.
பிரித்தானியாவைத் தலைமையகமாகக்கொண்ட டெஸ்கோ நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் அங்காடிகள் உள்ளன. உலகின்
மூன்றாவது பெரிய சில்லரை வணிக வியாபார நிறுவனமான டெஸ்கோவின் உற்பத்திகள் பல மூன்றாம் உலக நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

டெஸ்கோவின் சொந்தத் தயாரிப்பான ஸ்பெகெதி போலோனியஸ் என்ற உணவுப் பண்டத்தில் 60 வீதம் குதிரை இறைச்சி கலந்திருப்பதாக இறுதியாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் உணவு தரப்படுத்தும் அரச நிறுவனம் கோழி மற்றும் பன்றி இறைச்சிக்கள் குறித்த புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றையும் சோதனை செய்யப்படுவதாகவும் இன்று அறிவித்துள்ளது.

டெஸ்கோ போன்ற பல பில்லியன் பெறுமானமுள்ள பல்தேசிய வியாபார நிறுவனனங்கள் மீது பிரித்தானிய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் போவதில்லை. வியாபாரத்திற்குப் பாதிப்பற்ற அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு தமது வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவார்கள்.

பிரித்தானியாவில் 80 வீதமானவர்கள் தமது நாளாந்த உணவுத் தேவைக்கு டெஸ்கோவில் கொள்வனவு செய்கின்றனர். சொந்த நாட்டு மக்களையே சுரண்டிக் கொழுக்கும் இந்த சில்லரை வணிக நிறுவனனங்கள் மூன்றாம் உலக நாடுகளிலும் தமது கிளைகளைப் பரப்பியுள்ளன. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை நிபந்தனையின்றி அனுமதிக்கும் இந்திய இலங்கை அரசுகள் தமது மக்கள் குறித்துத் துயரடைவதில்லை.

அன்னிய மோகம் கொண்ட சமுதாயத்தை உருவாக்கியுள்ள ஊடகங்கள் உட்பட அனைத்து அதிகாரவர்க்கதின் கூறுகளும் டெஸ்கோ போன்ற பல்தேசிய சில்லைரை வணிக அங்காடிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
குறைந்த பட்ச அரச கட்டுப்பாடுகள் கூட பல்தேசிய நிறுவனங்கள் சார்பாகத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நச்சு உணவுப் பொருட்களை வறிய நாட்டு மக்கள் மீது இந்த நிறுவனங்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யும்.

கொக்கெயின் என்ற போதைப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகக் கருதப்படும் கொக்கோகோலா பானம் உலகின் சந்துபொந்துகளில் எல்லாம் அரசுகளின் முழு ஆசியோடு விற்பனை செய்யப்படுகின்றது.

கொக்கொகோலா தனது தயாரிப்பு இரகசியங்களை வெளியிட மறுக்கின்றது. உலகின் எந்த நாட்டு அரசும் அதனைக் கேட்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. கோலாவின் இரகசிய சூத்திரத்தைத் தயாரிப்பவர்கள் ஸ்டீபன் கெமிக்கல்ஸ் என்ற இரசாயன நிறுவனம்.

கொக்கோ கோலா ஆழ் மன அடிமைத்தனத்தை ஏற்படுத்தும் போதை கலந்த பானம் என பல நிறுவனங்களும் மனித உரிமையாளர்களும் எச்சரித்த போதும் உலகின் சமூக விரோத அரசுகள் எந்த கவனமும் கொள்ளவில்லை.
லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் பணச் செலவின் ஒரு பகுதியை கொக்கொகோலா வழங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் தடையற்ற விளம்பரங்கள் விளையாட்டுப் போட்டிகளின் மையமாகத் திகழ்ந்தது. அரங்கத்தினுள் வேறு குடிபானங்கள் கொண்டு செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. அரங்கின்
உள்ளே கோக்கொகோலா மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

அமரிக்காவின் ரொட்டிக் கடையான மக்டொனாலில் விற்பனை செய்யப்படும் உணவுப்பண்டங்களில் உடல் நலத்திற்குத் தீங்கான இரசாயனக் கலவைகள் கலந்திருப்பதாக பலர் எதிர்ப்புத் தெரிவித்த போதும், இன்று உலகின் ஒவ்வொரு சந்தியிலும் மக்டொனால்ட் கோரமாக நிமிர்ந்து நிற்கிறது.

அப்பாவி மக்களின் உடல் நலத்தையே தனது பணப்பசிக்கு தீனியாகக் கேட்கும் பல்தேசிய நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வும் அதே வேளை போராட்டங்களும் இன்று அவசரத் தேவை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com