Contact us at: sooddram@gmail.com

 

இயற்கையின் மொழியை புரிந்து கொள்வது அவசியம்

மெக்சிகோவில் உள்ள கான்சன் நகரில் ஐ. நா. வானிலை மாநாடு நடைபெற்று முடிந்துவிட்டது. அங்கு பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே போராட்டம் நடைபெற்றது என்பதே உண்மை. புவி வெப்பமடைதலுக்குக் காரணமான வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்வதில் பேரம் பேசின. வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கடுமையாகக் குறைப்பது பற்றிய கியோட்டோ ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவையெல்லாமும் சுற்றுச் சூழல் என்பதை ஏதோ அரசுகளின் பிடியில் சிக்கியுள்ள விவகாரமாக்கியுள்ளது.

சுற்றுச் சூழல் நாசமானதன் அடிப்படைகள் என்ன? அதனை ஊக்குவித்த மூலச் சிந்தனைகள் என்ன என்பதை நாம் பார்த்தோமானால், மேற்கத்திய நாடுகளின் சிந்தனை வரலாற்றிலேயே இயற்கை பற்றிய ஒரு எதிர்மறையான பார்வை ஆதிக்கம் செலுத்தியுள்ளதை நாம் உணர முடியும். அந்த அடிப்படையில் இயற்கை, சூழல் பற்றிய மேற்கத்தியத் தத்துவ, விஞ்ஞானப் பார்வைகள் என்ன கூறியுள்ளது என்பதை ஓரளவுக்கு எடுத்துக் கூற முயற்சி செய்துள்ளோம்.

ஒவ்வொரு யுகமும் இயற்கை பற்றிய தனிச்சிறப்பான பார்வைகளை, கருத்தியல்களை, புரிதல்களை, அனுமானங்களைக் கொண்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இயற்கை பற்றிய பார்வைகளை வைத்து அந்த குறிப்பிட்ட காலத்தில் அந்த குறிப்பிட்ட நாகரீகம் எவ்வாறு சிந்தித்தது, செயல்பட்டது என்பதை நாம் அறிய முடியும்.

பொதுவாக மொழியில்லையேல் சிந்தனையில்லை. இயற்கையையும் மனிதன் மொழிவழிதான் சிந்தித்தான். இதில் உருவகங்கள் (Metaphors)  ெரும்பங்கு வகித்தன.

பொதுவாக இரண்டு விதமான பார்வைகள் இவ்வுலகில் இயற்கை குறித்து இருந்து வருகிறது.

1. மானுட மையப் பார்வை (Anthropo Centrie World-view):

அதாவது பிரபஞ்சத்தில் மனிதனே மையம், அவனது சிந்தனைகளும் செயலுமே இயற்கையை வடிவமைக்கிறது என்ற பார்வை.

2. உயிரிமையப் பார்வை (Bio-centric world-view):

இதன்படி இயற்கை அல்லது பூமி பற்றிய ஒரு முற்றுமுழுதான பார்வை முன் வைக்கப்படுகிறது. இதில் மனிதன்/இயற்கை என்ற துவைதப் பார்வை அல்லது சிந்தனை கிடையாது.

இயற்கைப் பற்றிய மானுடமையப் பார்வை மேற்குலகின் மத்திய கால சிந்தனை களையும் உலகப் பார்வையும் ஒட்டியது. இருப்பின் சங்கிலித் தொடர் (chain of being) என்று இது அழைக்கப்படுகிறது. இதன்படி ஒரு படிமுறை அமைப்பு சிந்திக்கப்பட்டுள்ளது.

அதாவது கடவுள், அதற்குக் கீழ் தேவதைகள், துர்தேவதைகள், நட்சத்திரங் கள், சந்திரன், அரசர்கள், இளவரசர்கள், புனிதர்கள், மனிதன், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள், மரங்கள், பிற தாவரங்கள், விலைமதிப் பில்லா கற்கள், விலை மதிப்பில்லா உலோகங்கள், மற்றும் பிற உலோகங்கள் என்ற படிமுறையில் சிந்திக்கப்பட்டுள்ளது.

மானுட மையப் பார்வையின் மற்றொரு உலகப் பார்வை அல்லது கருத்தியல் இயற்கையை பெரும் எந்திரமாக உருவகிப்பது.

இரண்டாம் மாதிரியான உயிர் மையப் பார்வை இயற்கையைத் தாயாகவும், இயற்கையை வலைப்பின்னலாகவும், இயற்கையை அளவுகோலாகவும் கருத்தில் கொள்வதாகும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இயற்கை பற்றிய சிந்தித்தல் முறையால் இன்று பல்வேறு விதமான சுற்றுச் சூழல் நாசங்கள் விளைந்துள்ளன. குறிப்பாக மனிதனின் இயற்கைப் பற்றிய அறிதல் முறை அதனை, தனது வசதியான பயன்பாட்டுக்குக் கொண்டு சென்றதோடு, மனிதன் தன்னை மட்டுமே முன்னிறுத்தி பிற உயிரிகள், பிற தாவரங்கள் அல்லது சுற்றுசூழல் அமைப்பு என்று இன்று நாம் கூறும் ஒன்றை தனக்குக் கீழான ஒன்றாகச் சிந்தித்த போக்குகளையும் உருவாக்கியது.

சுற்றுசூழல் பற்றி நாம் யோசிப்பது பல வகையில் நமது நனவுத் தளத்தில் அல்லாமல் நனவிலி தளத்திலேயே நடைபெற்று வருவதால் நாம் சுற்றுச் சூழல் அல்லது இயற்கை பற்றிய பார்வை ஒரு வகையில் நமக்குச் சாதகமான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளது. இயற்கைக்குச் சாதகமான ஒன்றாக இருப்பதில்லை.

இதனால் நாம் இயற்கை குறித்த நமது மொழியை முதலில் புரிந்துகொள்வது அவசியம். உதாரணத்திற்கு ஒன்று கூற வேண்டுமென்றால் இயற்கை பற்றிய நமது ஒரு வகையான மாந்திரீக புரிதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.

நாம் குறிப்பாக மொழிக்குள் நுழையும் காலகட்டத்தில் நமது சிந்தனை, செயல், கருத்தியல்கள் ஆகியவை மொழியால் கட்டமைக்கப்படுகின்றன. எனவே நாம் இயற்கை குறித்த நமது மொழியை ஆராயாமல் அதனைக் காப்பாற்றுவது குறித்து பேச முடியாது.

இதற்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமென்றால : மரம் வெட்டப்பட்டது என்று கூறுகின்றோம். ஆனால் யார் வெட்டினார்கள் என்ற காரணி இந்த வாசகத்தில் இல்லை.

அந்த மரம் மனிதனால் வெட்டப்பட்டதுஎன்று கூறும்போது மனிதனே மரத்தை வெட்டுகிறான் என்ற புரிதல் போய் மனிதன் செயற்பாட்டு வினையாக மாறுகிறான். அந்த மனிதன் மரத்தை வெட்டினான் என்று கூறினால் நாம் உடனடியாக ஏன் வெட்டினான் என்று கேட்பதில்லை. மாறாக அது ஒரு வெறும் கூற்றாகவே நமக்குப் படுகிறது. இது போன்று மொழியும் அது புழங்கும் பண்பாடும் நமது சிந்தனையை ஆக்கிரமித்துள்ளது.

எனவே மேற்குலகில் இருந்து வரும் இயற்கை பற்றிய உருவகங்கள் எந்தெந்தக் கால கட்டங்களில் எவ்வாறு இருந்தன என்பதைப் பேசுகிறோம்.

இயற்கை என்பதற்கு அதி நவீன அகராதியை நாம் புரட்டிப் பார்த்தால் 10க்கும் மேற்பட்ட பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெளதீக உலகில் உள்ள அனைத்து பொருட்கள், உயிரிகளின் ஒட்டுமொத்தம்என்று ஒரு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது மனிதனால் தயாரிக்கப்படாதது அனைத்தும் இயற்கை என்றும் ஒரு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை என்பதை பூமிக்கு மட்டும் சுருக்க முடியாது அல்லது பூமியின் உயிர்க்கோளம் என்பதற்கு மட்டும் நாம் குறுக்க முடியாது. ஆனால் இது இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் அதில் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் மற்றவற்றுடன் உறவு கொண்டுள்ள ஒரு நட்பு நிலை என்றும் நாம் ஒரு முழுமையான பார்வையை வளர்த்தெடுக்கலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com