Contact us at: sooddram@gmail.com

 

ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறதா அவர்களின் தலைவர்களால்?

ஆம் இப்போதய சூழ்நிலையில் விவாதிக்கப் பட வேண்டிய விஷயம்தான்.
நாடு சுதந்திரமடைந்து 50 வருடங்களுக்கு மேலாகிறது, நம் நாட்டில் எத்தனையோ மதங்கள், சாதிகள், சங்கங்கள். ஆண்டாண்டு காலமாக அடிமை படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்று தலைவர்கள் போராடினர். இத்தனை வருடங்கள் கடந்த பிறகு கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளில் முக்கியமாக தமிழகத்தில் ஜாதியை உயர்த்தி பிடித்த கட்சிகள் தோன்றலாயின, அவர்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடி பெற்றுத் தருவதாக சொல்லி அதன் தலைவர்கள் பெரு வாரியான மக்களை திரட்டினர்.
மக்களும் அவர்களின் மேடைப் பேச்சுகளை நம்பி அவர்களின் பின் சென்றனர்.அந்த வகையில் எனக்கு கிடைத்த, தெரிந் , கட்சிகளை பற்றிய எனது கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு:-

காந்தி ஜி யை பற்றிய சர்ச்சை

ஆனால் தலித்களுக்காக தனி இட ஒதுக்கீடும், சில சலுகைகளும் கிடைப்பதற்காக அம்பேத்கர் முன் வைத்த வரைவுத்திட்டத்தை அமுல் படுத்தக் கூடாது என்பதில் காந்தி ஜி தீவிரமாக இருந்தார், உண்ணாவிரதமும் இருந்தார், தலைவர்களின் அழுத்ததின் காரணமாக அம்பேத்கர் அதை வாபஸ் பெற்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி

வன்னியரை ஆதாரமாக வைத்து உருவாக்கப் பட்ட கட்சி, ஆரம்பத்தில் வன்னியர் சங்கமாக இருந்தது பின்பு பா.மா.கவாக உருவெடுத்தது, (கேளிக்கைக்காக சொல்வர :- திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் மரங்களை ரோட்டில் போட்டு அரசியல் செய்தே வளர்ந்தனர் என்று,)
சரி வளர்ந்தாகி விட்டது பிறகு என்ன? பலத்தை காட்ட வேண்டியதுதான்.
பலத்தைக் காட்டியே இத்தனை சீட்கள் என்று பேரம் பேசி சீட்களைப் பெற்று வென்று வந்தனர், இதன் விசுவரூபமாக கடந்த ஆட்சியில் முக்கியத்துறையான இந்திய மருத்துவத் துறை தரப்பட்டது, அன்புமணியும் அவர் பங்கிற்க்கு என்ன செய்தார் என்று விலாவரியாக தெரியவில்லை ஆனால் நடிகர்களை புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லி அதற்கு இந்தி நடிகர் ஷாருக்கான் பதில் சொன்னதால் இந்திய பிரபலம் அடைந்தார்,கூட்டணி பிரிந்தது, பின்பு பழைய அஸ்திரத்தை எடுத்தார், வன்னியர் மேம்பாடு, சினிமா சீரழிக்கிறது, முழு மது விலக்கு என்று,
ஆனால் ஆட்சியில் உள்ளபோது கிடைத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுக்க ஆஸ்பத்திரிகள் ஒழுங்காக இருக்கின்றனவா? கடை கோடி இந்திய கிராமத்திலும் மருத்துவ வசதி கிடைத்ததா என்றால் இல்லை, வட இந்திய கிராமங்களில் 1000 நபருக்கு ஒரு மருத்துவர்தான்.
சரி அதை விடுங்கள், வன்னியர்கள் மேம்பாடு அடைந்தார்களா என்றால்…… தெரியவில்லை………அவர்கள் பகுதியிலேயே உள்ள கிராமங்களில் கூட ஏதாவது மாறுதல் நிகழ்ந்ததா என்றால் ம்….கூம்…..இல்லை,
இப்போது எதிரணியில் இல்லை என்றாலும் திரும்பவும் வன்னியர் அஸ்திரத்தை எடுத்துள்ளனர்.
மக்கள்
என்ன நினைப்பர்.

விடுதலை சிறுத்தைகள்

மிகப் பெரும் படிப்பு படித்தவர், தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர், திருமாவளவன் ஆரம்பித்த கட்சி, தாழ்த்தப்பட்டவருக்கான விடியல் வெள்ளி, சுழன்றடிக்கும் சூறாவளி என்றார்கள்.

விடுதலை சிறுத்தைகள் …..ஆகா பெயரே பயமுறுத்துகிறதே, என்று பார்த்தால்…………ஒன்றும் இல்லை, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை புலிகள் போல் விடுதலை சிறுத்தைகள்……ஆனால் …. சரி தமிழ் நாட்டிலும் அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடி ஒரு வெற்றி பெற்றுவிடுவார் என்று பார்த்தால்……. ஒன்றும் இல்லை.
அதே ஜாதி மக்களை உசுப்பேற்றும் பேச்சுக்கள் பேசி, கூட்டத்தை காண்பித்து வாங்கியாகி விட்டது சில பல பதவிகளை, சீட்களை
இதனால் உண்மையிலேயே விடுதலை அடைந்த்ததா அச்சமூகம் என்றால் ………….ஒன்றும் இல்லை,

இவர்கள் இருக்கும் போதேதான் நடந்தது, விழுப்புரத்திற்கு அருகில் மலம் திண்ண வைத்த சம்பவம், இன்று வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் தாழ்த்தப் பட்டவர் நின்று ஜெயிக்க முடியாத சூழல்.
எங்கே போயிற்று விடுதலை சிறுத்தைகள், திருமாவளவன்…….
என்ன ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கும் கூட்டம் கூடும், பின்பு கலைந்து செல்வர், மறந்து விடுவர். இதுதான் நடந்து வருகிறது, ஏனெனில் இவர்கள் சார்ந்திருப்பதோ மாநில பெரிய கட்சிகளை, அவர்களைத் தாண்டி ஒன்றும் பெரிய அறிக்கை விடமுடியாது இவர்களால்.
இதை விடக் கூத்து என்ன தெரியுமா? இவர்கள் தொண்டர்கள் இருக்கும் ஊர்களில் பிளக்ஸ் வைப்பர் எப்படி தெரியுமா?
திருமாவளவனுக்கு விடுதலைப்புலிகள் தலைவர் மாதிரி உடை அணிவித்து கையில் துப்பாக்கி கொடுத்து, அருகில் பிரபாகரன் போட்டோவையும் போட்ட ..ஏதோ ஆயுதம் தாங்கி போராடுவர் போல,
இப்படியெல்லாம் வித விதமாக,,,, இதைப் பார்த்தால் நாம் என்ன நினைப்பது ……. காமெடியாக இல்லையா?
இது ஒருபுறமிருக்கட்டும், காவல் நிலையங்களில் என்ன பெயர் இவர்களுக்கு தப்பான முத்திரை குத்தப்பட்டுள்ளது இவர்கள் மேல்,
கூட்டம் சேரும் என்பதெல்லாம் விடுதலைப் பெற்றுவிட்டோம் என்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா?
இதை விடுங்கள் இவர்களின் மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் பண்ணும் கட்டப்பஞ்சாயத்துகள், அதன் மூலம் வரும் பிரச்சினைகள் என எவ்வளவோ,
இதுதான் இவர்கள் சொன்ன விடுதலையா?
பிரபாகரன் போல இவரால் ஆக முடியுமா?  அவ்வளவு ஏன் விடுதலைப்புலிகள் மேல் உள்ள தடைகளை நீக்க ஆலோசனைக்கு அரசு கூட்டிய கூட்டத்தில் கூட எத்தனை கட்சிகளின் தலைவர்கள் கூடினார்கள்? வை.கோ வைத்தவிர,
அப்போ வெறும் பேச்சுதான் வெளியே ஒன்றும் செயலில் இல்லை, தமிழன் தமிழன் என்று வெற்றுப்பேச்சுதான்.

ஆக உண்மையில் விடுதலை என்பது என்ன? பல்லின சமூகத்தில் வாழும் மக்களால் ஜாதியை தூக்கி எறிய முடிகிறதா, அவர்கள் மனதை வென்றெடுக்க முடிகிறதா? அதுதான் விடுதலை, அதுவல்லாமல் மழை, வெயில் என்று வந்து அவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதற்காக ஒரு ஆர்பாட்டம், தொலைக்காட்சியில் ஒரு செய்தி அவ்வளவுதான். இது ஒரு மக்கள் விடுதலையா? இதனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் ஓங்கி வளர்ந்து விடுமா?

ஆட்சியில் இருக்கும் கட்சிகளே நாம் போராடவிட்டாலும் அவர்களது ஓட்டு வங்கிக்காக நிவாரணத்தொகை வழங்கி விடும். இதோஇந்த மழையில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் தயாராகிவிட்டது……

நன்றி: புதிய உலகம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com