Contact us at: sooddram@gmail.com

 

சர்வதேச தமிழ் எழுத்தாளர  ாநாடு 2011 இன்று ஆரம்பம்


(கே. பொன்னுத்துரை)

புத்தாண்டு மலர்ந்ததும் இலங்கை தலை நகர் கொழும்பில் தமிழ் கலை, இலக்கியவாதிகள், படைப்பாளர்கள் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆய்வறிஞர்கள் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 பன்னிரண்டு அரங்குகளில் நடைபெறவுள்ளது.

தமிழாராச்சி மாநாட்டிற்கு வித்திட்டதமிழ் தூதுதவத்திரு தனிநாயகம் அடிகளார் அரங்கில் தனது முதலாவது அரங்கை நடத்தவிருக்கிறது. எதிலும் முதலாவது என்ற பெருமையை தனதாக்கிக் கொண்ட இலங்கை மண்ணில் இவ்வாறு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறுவது சாலவே பொருத்தமாகும்.

சர்வதேச அளவில் தமிழ் பேசும் மக்களின் இடப் பெயர்வு, புலம் பெயர்வு என்று இடம்பெற்றிருந்தாலும் 70களுக்கு பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற இலங்கை தமிழ் பேசும் மக்களின் புலம் பெயர்வு காரணமாகவே தமிழ் இலக்கியத்தில்புலம்பெயர்வு இலக்கியம்அல்லதுபுகலிட இலக்கியம்என்ற ஒரு கூறு முனைப்பு பெற ஆரம்பித்து அதன் பயனாக இன்று உலகில் 40 க்கு மேற்பட்ட மேற்கத்திய நாடுகளில் தமிழ் மொழியில் எழுதும் தமிழ் படைப்பாளர்கள் தாங்கள் வாழும் நாட்டின் இலக்கியங்களை தமிழ் மொழியில் கொண்டு வரும் முயற்சிகளிலும் புலம் பெயர்வு மக்களின் இரண்டாம் தலைமுறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ச்சியான வன்முறை கலாசாரம் நடைமுறையுடன் வாழ்ந்த எம் மக்களிடையே பதகளிப்பு, மனச் சோர்வு, மனவடு, நடத்தை கோளா றுகள் என்பன உள ரீதியாக அதீத பாதிப்பை எற்படுத்தியிருக்கின்றன. சமூக விழுமியங்கள் அழிந்து போகா வண்ணம் மக்களை மீட்சிபெற தமது கலாசார நிகழ்வுகளை மீட்டுவதன் மூலமே தீர்க்க முடியும்.

அவற்றுக்கு தேவையான வகையில் மக்களை மனதளவில் ஆற்றுப்படுத்தி நிலையான ஆற்றல் மிக்கவர்களாகவும், கலாசார விழுமியங்களை கடைப்பிடிப் பதற்குரிய ஆரோக்கியமானவர் களாகவும் மாற்றுதல் இன்றியமை யாததாகும். அதற்கு இவ்வாறான சமூக விழுமியங்களை வெளிப் படுத்தும் தமிழ் இலக்கிய, கலாசார மரபு சார்ந்த நிகழ்வுகள் அவசிய மாகும்.

இவற்றை கருத்தில் கொண்டே கலை இலக்கியங்களுடனான மக்கள் மனதை வென்றெடுக்கும் நோக்கில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்த இச்சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றியம் எடுத்த முயற்சிகளே இன்று மாநாடு நடைபெறும் கட்டத்தை அடைந் திருக்கின்றது.

இம்மாநாட்டின் பிரதான அமைப்பாளர் அவுஸ்திரேலியா வாழ் லெ. முருகபூபதி கருத்து தெரி விக்கையில், இன்று இந்நாட்டில் வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும், இதே பிரதேசத்திலும் தென்னிலங்கையிலும் வாழும் முஸ்லிம் மக்களும், மலையகத்தில் வாழும் மக்களும் தமிழ் பேசும் மக்களாவர்.

மதத்தினால் வேறுபட்டிருந்த போதிலும் இவர்களது பேசும் மொழியாகவும் எழுதுவும் மொழி யாகவும் தமிழே விளங்குகின்றது. இம் மக்களிடம் தமிழ் கலை, இலக் கிய எழுத்தூழியத்தில் ஈடுபடும் படைப்பாளிகளும் இதழியல்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் மொழி அடிப்படையில் சமூக விழிப்புணர்வுகளையும், புரிந் துணர்வு ஒற்றுமையையும் நடை பெறவுள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாடு ஏற்படுத்தும் என்றார்.

நடைபெறவுள்ள மாநாட்டில் இலங்கையின் பல பாகங்களிலு மிருந்து பேராளர்கள் கலந்து கொள்கின்றனர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, வன்னி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், அநுராதபுரம் உட்பட மலையகத்திலும் பல பிரதேசங்களிலிருந்தும், தென்னிலங்கை மற்றும் வடமேற்கு பகுதிகளிலிருந்தும் சுமார் முந்நூறு பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

அத்துடன் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், தமிழ்நாடு முதலான பல வெளிநாடுகளிலிருந்தும் பல படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்த் தூது தனி நாயகம் அடிகள், ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர், அருள்வாக்கி அப்துல் காதர், எம்.எம். உவைஸ், பேராசிரியர்கள் சு. வித்தி யானந்தன், க.கைலாசபதி, பத்திரி கையாளர் எஸ்.டி. சிவநாயகம், படைப்பாளிகள் இலங்கையர் கோன். கே. டானியல், வரதர், கலையரசு சொர்ணலிங்கம், சோமசுந்தரப்புலவர், இலங்கையில் இதழியல் முன்னோடி தேசபக்தன், கோ. நடேசய்யர் ஆகியோரது நினைவாக கருத்தரங்கு, கலை அரங்குகளின் அமர்வுகள் இம் மாநாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இம்மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் தலைமையில் மாநாட்டு அமைப்புக்குழுவில் அமைப்பு செயலாளராக கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீன் இயங்குகிறார்.

மொழிப் பெயர்ப்பு, உலக இலக்கியம், சிறுவர் இலக்கியம் படைப்புகளில் ஊடகத்தில் செவ்விதாக்கம், சிற்றிதழ், வலைப்பதிவு, பெண்ணியம், குறும்படம் உட்பட பலதுறைகளில் நடத்தப்படும் அமர்வுகளில் இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பேராளர்கள் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றுவார்கள்.

முதல் மூன்று நாட்களும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் இறுதி நாளன்று இராம கிருஸ்ண மிஷன் மண்டபத்திலும் மாலை வேளைகளில் நடைபெறவுள்ளன. கலை நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும், நாடகம், நாட்டுக்கூத்து நிகழ்வுகளும் நடைபெறும்.

இறுதி நாளன்று 09.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தமிழ்ச் சங்கத்தில் படைப்பு இலக்கியம், ஊடகத்தில் செவ்விதாக்கம் அரங்கு நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட இவ்வரங்கு பயிற்சி பத்திரிகையாளர்களுக்கும், ஊடகவியலா ளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே பத்திரிகை உலக நண்பர்கள் கட்டாயம் பங்குபெறவேண் டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இம்மாநாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் தரமான குறும் படங்கள், ஆவணப்படங்கள் தொடர்பான பிரக்ஞையை வளர்ப்பதற்காக குறும்பட அரங்கும் நடைபெறுகின்றன. முன்னணி படைப்பாளியும் தமிழகத்தில் பத்ம ஸ்ரீ விருது மற்றும் இலக்கிய விருதுகளைப் பெற்ற மூத்த படைப்பாளி ஜெயகாந்தனின் வாழ்வையும், பணிகளையும் சித்தரிக்கும் ஆவணப் படமும் காண்பிக்கப் படவிருக்கிறது.

இதனை தயாரித்து இயக்கியிருக்கும் கலைஞர்கனடாமூர்த்தி சிங்கபூர் பொது நூலகத்தில் தற்போது பணியாற்றுகிறார். இலங்கையரான இவர் ஜெயகாந்தனின் நீண்டகால நண்பராவார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கருத்துரைகளும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுவர் இலக்கிய அரங்கில் அவுஸ்திரேலியாவில் பிறந்து தமிழ் குழந்தைகள் தமிழ் பேசி நடித்தபாப்பா பாரதிஎன்னும் குழந்தை நாடகமும் நடைபெறவுள்ள இதனை நாடக கலைஞர் எழுத்தாளர் மாவை நித்தியானந்தன் தயாரித்து வருகிறார்.

இம்மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களை 0112586013 begin_of_the_skype_highlighting              0112586013      end_of_the_skype_highlighting என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com