Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்க் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்

(சுஐப் எம். காசிம், பி. வீரசிங்கம்)

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால அங்கத்தவரான நீங்கள் அக்கட்சியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பாக கூறமுடியுமா?

பதில் : தொழிற்சங்கத் தலைவராக இந்த நாட்டுக்கு அறிமுகமான எனக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. என்னை சுதந்திரக் கட்சியோடு இணைத்தவர் காலஞ்சென்ற பதியுதீன் மஹ்மூத் அவர்களே.

பதியவர்களும் நானும் இக்கட்சியின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு நல்கி னோம். பதிக்கும் பண்டாரநாயக்க குடும்பத்துக்குமிடை யிலான உறவு மிக மிகச் சிறப்பானது. பதியுத்தீன் சமூக, சமயப் பற்று மிக்கவராக இருந்தமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. நானும் அவ்வாறே என் சேவையைத் தொடர்ந்தேன்.

இந்த சந்தர்ப்பத்திலே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது. பண்டாரநாயக்க அவர்கள் சுடப்பட்டார். கட்சியின் தலைமைப் பொறுப்பைக் கையேற்குமாறு ஸ்ரீமாவோ அவர்களை கட்சி வேண்டி நின்றது.

எனினும் அம்மையார் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த இழுபறிநிலை அப்போது ஐ. நா. இலங்கைப் பிரதிநிதியாக இருந்த பதியுதீனுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர் உடனடியாக நாடு திரும்பினார். பதியவர்கள் பல்வேறு காரணங்களை அம்மையாருக்கு உருக்கமாக எடுத்துரைத்து அவரைச் சம்மதிக்க வைத்தார். அவ்வாறே தலைமைத்துவம் ஸ்ரீமாவோ அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

நான் ஓர் இடதுசாரிக் கொள்கையுடையவன். பீற்றர் கெனமனுடன் சேர்ந்து தொழிலாளர் நலன்பேண உழைத்துள்ளேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் அமர்ந்திருந்த காலங்களில் எல்லாம் ஆட்சித் தலைவர்கள் என்னை மதித்துப் பேணி கெளரவமாக நடத்தினர். அன்றிலிருந்து இன்று வரை சுதந்திரக் கட்சியின் அபிமானியாகவே இருக்கின்றேன்.

கேள்வி : நீங்கள் அமைச்சராக, பிரதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளீர்கள். தற்போது ஆளுநராகவும பணிபுரிகின் றீர்கள். இருந்த போதும் தொழிற்சங்க வாதியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள் ளீர்கள். தொழிலாளர் நலனில் உங்களுக்கு அக்கறை ஏற்படக் காரணம் என்னவென்று கூறுவீர்களா?

பதில் : உலகிலே மக்கள் வாழ உணவு ஜீவாதாரப் பொருளாக அமைந்துள்ளது. அதை உற்பத்தி செய்பவர்கள் விவசாயிகள்.

வாழ்வுக்கு வேண்டிய மற்றும் அடிப்படைத் தேவைகளான உடை, வீடு, வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் உற்பத்தி செய்பவர்கள் தொழிலாளர்கள், விவசாயியின் தொழிலாளியும் தான் உலக இயக்கத்தின் உயிர்நாடி எனலாம்.

விவசாயிகள் கடின உழைப்புக்கேற்ற பயன் விளைவு மூலம் கிடைக்கின்றது. ஆனால் தொழிலாளியின் கடின உழைப்புக்கான வேதனத்தை முதலாளிமார் ஒழுங்காக வழங்காமையே பிணக்குகளுக்கு காரணம்.

முதலாளிமாரின் பேராசை, தொழிலாளர் மீது சுமத்தப்படும் வேலைப்பளு, உழைப்புக்கான ஊதியத்தை குறைத்தல், தொழிலாளியை மனிதாபிமானத்தோடு நடத்தாமை, நோய்வாய்ப்பட்ட போது உதவாமை போன்ற நடவடிக்கைகள் முதலாளி, தொழிலாளிகளுக்கிடையிலே முரண்பாட்டை உருவாக்குகின்றன.

இத்தகைய பிரச்சினையும் கொடுமையும் காலாகாலமாக இருந்து வருகின்றது. இந்த அநீதியை இல்லாதொழிக்கவே தொழிற்சங்கங்கள் உருவாகின.

அன்று சிக்காக்கோ நகரிலே முதலாளிமாருக்கெதிராக எழுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றன. தொழில்சட்டங்களும் உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டன. தொழிலாளரை நினைவு கூரவே மே தினம் எனும் தொழிலாளர் தினம் இன்றும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையிலே பண்டாரநாயக்க ஆட்சியிலே தான் மே தினம் முதலாவதாக அனுஷ்டிக்கப்பட்டது. நம் நாட்டிலே ஆண்களும் பெண்களுமான தோட்டத் தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர்.

நம்நாட்டு வருமானத்தில் பெரும்பகுதியை ஈட்டித் தரும் தேயிலை உற்பத்தித் தொழிலில் ஈடுபடும் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். நாட்டின் நலன் காக்க உழைக்கும் இவர்களின் சம்பளம், வேலை நேரம், ஓய்வூதியம், வாழ்க்கை வசதிகள் தொடர்பான சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்க தொழிற்சங்கங்கள் தலையிட வேண்டியுள்ளன.

நம் நாட்டில் பல்வேறு தொழிற் சங்கங்கள் செயல்படுகின்றன. நான் இடதுசாரிக் கொள்கையையுடையவன் என்பதால் தொழிலாளர் மீது அக்கறை கொள்ளும் மனப்பாங்கு ஏற்பட்டது.

கேள்வி : உங்களது தொழிற்சங்க ஈடுபாடு பற்றி கூறுவீர்களா?

பதில் : 1957 ஆம் ஆண்டு ‘ஸ்ரீலங்கா சுதந்திர சங்கம்’ எனும் தொழிற்சங்கத்தை நானும் லக்ஷ்மன் ஜயக்கொடியும் இணைந்து உருவாக்கினோம். இந்தச் சங்கத்தின் இணைச் செயலாளர்களாகப் பணியாற்றிய நாம் தொழிலாளர் நலனைப் பேண பல்வேறு போராட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம்.

அன்று தொடங்கிய எனது தொழிற்சங்கப் போராட்டம் இன்று வரை தொடர்கின்றது. நான் அமைச்சராக இருந்த காலத்திலும் கவர்னராக இருக்கும் காலத்திலும் தொழிற் சங்கப் போராட்டத்தை கைவிடவில்லை.

தொழிலாளர் நலனுக்காக எனது பட்டம், பதவிகளை மதிக்காது போராட்டத்தில் இன்னும் ஈடுபடுகின்றேன். என் வாழ்நாளில் சுமார் 50க்கு மேற்பட்ட மேதினங்களை நான் முன்னின்று நடத்தியுள்ளேன்.

கேள்வி : போராட்டங்களில் நீங்கள் ஈடுபட்ட காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட துன்ப துரயங்கள் பற்றிக் கூறுவீர்களா?

பதில் : ஆம். பல போராட்டங்களில் அவமதிக்கப்பட்டேன். அடி, உதை, வாங்கினேன். காயப்பட்டும் இருக்கின்றேன். உயிருக்காகவும் போராடி இருக்கின்றேன்.

மனிதாபிமானமற்ற தாக்குதலால் இன்று இதய நோயாளியாகி விட்டேன். பலமுறை சிறைவாசம் அனுபவித்தேன். தொழிலாளர் நலன் காக்கப் பணிபுரிந்து சொத்துக்கள் பலவற்றை இழந்துள்ளேன். போராட்டம் உச்சக் கட்டம் அடைந்த நிலையில் எனது உறவினர் சிலரையும் இழக்க நேர்ந்தது.

90 ஆம் ஆண்டு மேதின ஊர்வலத்தில் எனது மைத்துனர் செய்யத் முஹம்மட் மசூர் கொல்லப்பட்டார். 91 ஆம் ஆண்டு மேதின ஊர்வலத்தில் எனது சகோதரர் ஷேக் சஹீட் கொல்லப்பட்டார்.

இவைகள் எனது நெஞ்சை உருக்கும் சம்பவங்கள். என்னைப் போலவே ஜனாதிபதி மஹிந்த அவர்களும் வாசுதேவ நாணயக்கார அவர்களும் தொழிற் சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்களே.

கொண்ட கொள்கை மாறாது தொழிலாளர் நலன் காக்கும் பணியில் இத்தகைய கசப்பான அனுபவங்களையும் பெற நேர்ந்தது.

கேள்வி : இந்த ஆட்சியிலே மேல்மாகாண ஆளுநராக இருக்கும் நீங்கள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி பற்றி என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில் : தொழிற்சங்கவாதியான நான் ஆட்சி மாறி வந்த போதெல்லாம் பல்வேறு அரசியல் தலைவர்களோடு பழக நேர்ந்தது. எனினும் என்னை மிகவும் கவர்ந்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த அவர்களே. அவர் ஒரு தலைசிறந்த தேசியவாதி. பிறந்த பொன்னாட்டை பெற்ற அன்னை போல நேசிப்பவர்.

தெளிவான சிந்தனை கொண்டவர். தீர்க்கதரிசனம் கொண்டவர். காரியங்களை திட்டமிட்டு திறம்படச் செய்யும் ஆற்றல் பெற்றவர். இன, மத பேதமற்றவர். எல்லா மக்களையும் மதிப்பவர். அவரது கடந்த கால நடவடிக்கைகள் தொழிலாளர் நலனை ஒட்டியதாக அமைந்தன.

அவரது கொள்கைகளும் நடவடிக்கைகளும் 90 சதவீதமான நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் இரண்டு காரணங்களுக்காகவே இலங்கைக்கு விஜயம் செய்ததாக அன்று கூறினார்.

ஒன்று ஸ்ரீமாவோ அம்மையார் மீதுள்ள மதிப்பு நிலை. மற்றையது மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்து வருவதையிட்டு ஏற்பட்ட உயர் மதிப்பும் பிணைப்பும் என்று கூறினார். எனவே தான் அத்தகைய தலைவருக்கு நெருக்கமாக விருந்து மக்கள் பணி செய்கின்றேன்.

கேள்வி : பயங்கரவாதப் போரை ஒழிக்க ஜனாதிபதி ஆற்றிய பணிகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : 30 ஆண்டுகளாக பயங்கரவாதம் நாட்டை சீரழித்து வந்துள்ளது. உயிரழிவும் உடமை அழிவும் ஏற்பட்டது. கடந்த 30 ஆண்டுகளிலும் ஆட்சியிலிருந்த அரசுகள் பயங்கரவாதத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை.

ஆரம்ப காலத்திலே இந்த நாசகார இயக்கம் வளர்ச்சி பெறாதிருந்தது. அப்போது கூட அவர்களை ஒழித்துக்கட்ட நமது கடந்தகால அரசுகள் தவறிவிட்டன. இடைப்பட்ட 30 ஆண்டுகளிலும் இந்த இயக்கம் பாரிய வளர்ச்சி பெற்றது. படை பலம் கொண்டு விளங்கியது. சர்வதேச ரீதியாக பிரபலம் பெற்றது.

இலங்கை அரச படைகளுக்குச் சமமான படைப்பலம் எம்மிடம் உண்டு என்று மார்தட்டியது. இயக்கத்தின் பிரசாரகர்களும் ஆதரவாளர்களும் புலிகளின் படைப்பலம் பற்றி விளம்பரம் செய்து கொண்டே இருந்தனர்.

உலகிலுள்ள பல நாடுகள் இந்த இயக்கத்தோடு மோதி வெற்றிபெற முடியாதென்று நம்பத் தொடங்கின. எனினும் இந்தப் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் சொந்த நாட்டின் புதல்வர்களே என்ற காரணத்தினால் பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணையுங்கள், இனப்பிரச்சினை தொடர்பாக கலந்து பேசி முடிவுக்கு வருவோம் என ஜனாதிபதி பல தடவை அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோள்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டன. பொறுத்தது போதும் பொங்கியெழும் தருணம் வந்துவிட்டது என்ற எண்ணத்தில் மாவிலாற்றில் தொடங்கிய போர் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்றது.

சர்வதேச பயங்கரவாதத்தை வீரமிக்க நம் நாட்டுப் படைகள் மூலம் வெற்றிகொண்ட பெருமை ஜனாதிபதி அவர்களுக்கே உரியது.

அவரது அரசும் நாட்டுப் பற்றுள்ள ஆதரவாளர்களும் வழங்கிய ஒத்துழைப்பு இந்த தருணத்தில் நினைவு கூரப்பட வேண்டியவையே. சரித்திர நாயகனான ஜனாதிபதி நாட்டு மக்களால் போற்றப்படுகின்றார். இன்று நம் நாட்டிலே அமைதி நிலவுகின்றது.

சமாதானம் தழைத்துள்ளது. அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. போர்க்காலத்திலே போரை நிறுத்துமாறு மேற்கத்தேய வல்லரசுகள் அழுத்தம் கொடுத்தபோதும் ஜனாதிபதி அடிபணியவில்லை. தாய் நாட்டின் விடுதலைக்கு தன்னுயிரையும் கொடுக்கத் தயார் என்று வீர முழக்கம் செய்து யுத்தத்தை வெற்றி கொண்டார்.

கேள்வி : தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கை பற்றி நீங்கள் என்ன கருதுகின்aர்கள்?

பதில் : தமிழரின் உரிமை கோரி அரசியலில் ஈடுபட்ட தமிழ்க் கூட்டமைப்பு புலிகள் பலம் பெற்ற காலகட்டத்தில் அவர்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் பாராளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் விளம்பரப்படுத்தும் ஓர் அமைப்பாகவே செயற்பட்டதே தவிர சொந்தமாகத் தமது எண்ணங்களைத் தெரிவிக்கும் ஒரு கட்சியாக இயங்கவில்லை.

புலிகள் ஒழிந்த பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் சிறிய மாற்றம் ஏற்பட்ட போதும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

போர் முடிந்த பின்னரான அமைதிச் சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களின் மீள்கட்டமைப்பு தொடர்பாக அரசு உள்ளன்போடும் அனுதாபத்தோடும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரியவில்லை.

இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. இன ஐக்கியத்தை வலுப்படுத்தவும் இன ஒருமைப்பாடு தொடர்பான ஆரோக்கியமான நிலைமையை ஏற்படுத்தவும் அவர்களது கருத்துக்கள் உதவுவதாக இல்லை. புலிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு செயற்பட்ட காலகட்டம் போலவே தற்போது ஏதோ ஒரு புற அழுத்தத்துக்கு ஆட்பட்டு இயங்குவது போலத் தெரிகின்றது.

‘யுத்தத்தின் பின்னர் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தும் இந்தச் சூழலில் அவர்களது நிம்மதிச் சூழலைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் தீய சக்திகள் பல தொழிற்படுகின்றன.

இவ்வித முரண்பாடான நடவடிக்கைகளுக்கு தமிழ்க் கூட்டமைப்பு துணைபோகக் கூடாது என்பதே என் வேண்டுகோள்.

கேள்வி : ஐ. தே. கவில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

பதில் : உங்கள் சொந்த இலாபங்களுக்காக சமூகத்தை தாரை வார்க்காதீர்கள். எந்தக் காலமும் எத்தகைய நன்மையையும் முஸ்லிம்களுக்குச் செய்யாத இந்தக் கட்சியால் சமூகத்துக்கு எத்தகைய பயனும் இல்லை என்பதை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள். இந்தக் கட்சியில் இருந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்ற மாயையை ஏற்படுத்தாதீர்கள்.

கேள்வி : அரசுடன் எதிரும் புதிருமாக இருந்த மு. கா. இன்று அரசுடன் இணைந்திருக்கின்றதே?

பதில் : மு. கா. என்று நீங்கள் கூறும்போது எனக்கு அஷ்ரப் அவர்களின் அழகிய தோற்றம் கண்முன்னே தெரிகின்றது. அவரோடு அன்பு கடந்த பிணைப்பு எனக்கு இருந்தது. காலத்துக்கு ஏற்றவாறு சிந்தனைத் தெளிவுடன் கருமமாற்றும் திறமை மிக்க தலைவர் அவர். அவரின் இழப்பு நம் நாட்டு அரசியலுக்கு மட்டுமின்றி முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே நான் கருதுகின்றேன்.

முஸ்லிம்களுக்கென ஒரு கட்சி வேண்டும் என அஷ்ரப் மு. கா. வை அமைத்தாலும் முஸ்லிம்களின் நலன் காக்க அரசுடன் இணைந்து பல சந்தர்ப்பங்களில் செயல்பட்டிருக்கின்றார். ஒப்பறிவு, ஆளுமை, பேச்சாற்றல், இனிமையாகப் பழகும் தன்மை கொண்ட ஒரு தலைவர் இனி நமக்கு கிடைப்பாரா? இறைவனுக்குத்தான் தெரியும். அவருக்குப் பின்னரான கட்சி சில காலம் அரசுடன் இணைகின்றது. பல காலம் வெளியே நிற்கின்றது. இருந்த போதும் இப்போதாவது இணைந்திருப்பது சந்தோசமே.

மேல் மாகாண ஆளுநர்

அலவி மெளலானா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com