Contact us at: sooddram@gmail.com

 

பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரசாங்கம் தற்போதுள்ள சட்டங்களை மேலும் பலப்படுத் துவதற்கு தீர்மானம் எடுத்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.  தற்போது இலங்கையிலுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மாத்தறை பெரிய ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் வைத்தியர் எம். ஏ. எஸ். சி. சமரகோன் அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று உலகின் லத்தீன் அமெரிக்கா நாடுகள், இந்தியா, ஆபிரிக்கா நாடுகள் ஆகியவற்றில் உச்சகட்டத்தில் நிலைபெற்று விளங்குகிறது. இதனால், நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பெண்கள் உலகெங்கிலும், உயிரிழக்க வேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது.

இந்தியாவில் கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற சம்பிரதாயம் நிலவி வந்ததனால், அப்பாவி இளம் பெண் களும் கணவனின் உடலுடன் தீயில் சங்கமித்து விடும் அவலம் பிரித்தானிய ஆட்சியின் போது, அங்கு இருந்தது. இது மனித உரிமைக்கு எதிரான குற்றச்செயல் என்றும், இதுவும் பெண்களுக்கு எதிரான இன்னுமொரு வகையான வன்முறை என்றும் கருதிய பிரித்தானிய ஆட்சியாளர்கள், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் உடன்கட்டை ஏறும் பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அத்துடன் சில மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மணமான பெண் அல்லது ஒரு இளம்பெண் இரகசிய பாலியல் சேர்க்கையில் இன்னுமொரு ஆணுடன் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட கசையடிகள், கட்டாய சிறைத்தண்டனை அல்லது கற்களால் எறிந்து மரணிக்கச் செய்தல் போன்ற தண்டனைகளையும் கொடுக்கப்பட்டன.

ஆயினும், இன்று மனித உரிமைகள், பெண் உரிமை போன்ற நிலைப் பாடுகளின் அடிப்படையில் இத்தகைய தண்டனைகள் குறைந்து வருகின்றன. இந்தியாவில் எதிர்பார்க்கும் சீதனத்தை கொடுக்க தவறிய மணப்பெண்களும் இவ்விதம் கணவனின் குடும்பத்தினால் அடித்து, துன்புறுத்தி கொலையும் செய்யப்படுவதுண்டு. இன்று, இந்திய அரசாங்கம் இது விடயத்தில் அதிக ஆர்வம் காட்டி, அத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை, சிறைத்தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை விதித்து வருகிறது.

பொது இடங்களில் தனியாக நடமாடும் அப்பாவி பெண்களை கேலி செய்து, அவளது அங்கங்களை தொட்டு, அவமானப்படுத்தும் ஒழுக்கமற்ற இளைஞர்களை கைது செய்து, தண்டிப்பதிலும் இந்திய பொலிஸார் தீவிரகவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்கென ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் குறிப்பாக, தமிழ் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ளன.

பெண்களுக்கு தங்களின் பிறப் புரிமையான ஜனநாயக உரிமைகளை வழங்குவதிலும், சில நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் தான் இலங்கை உட்பட, பல்வேறு ஆசிய ஏன் மேற்கத்தைய நாடுகளில் கூட, பெண்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றங்களில் பிரதிநிதித் துவப்படுத்துவதற்கு உரிய வாய்ப்புக்கள் கொடுக்கப்படுவதில்லை.

இந்தியா, இந்த விடயத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்திய அரசாங்கம் இந்திய பாராளு மன்றத்திலும் ஏனைய மாநில ஆட்சிமன்றங்களிலும உள்ளூராட்சி மன்றங்களிலும், பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. ஆயினும், இலங்கை இது விடயத்தில் இன்னமும பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இப்போது, பாராளு மன்றம் உட்பட ஏனைய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெண்களுக்கு 5 சதவீத பிரதிநிதித்துவமே கொடுக் கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஆண்களின் அதிகாரம் வலுப்பெற்றிருப்பதே இதற்கான பிரதான காரணமாகும். ஆனாலும், இப்போது, அரசியல் கட்சிகளின் அதி காரத்தை தங்கள் கைவசம் வைத் திருக்கும் ஆண்வர்க்கம் இந்த கட்டுப் பாட்டை தளர்த்தி இப்போது பெண்க ளுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு கூடு தலான வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு மனமாற்றம் அடைந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.

மீண்டும் நாம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். பெண்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு ஆண்களின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் கடைப்பிடித்து வரும்மித்துறு பியசதிட்டம் இப்போது நாடெங் கிலும் உள்ள ஆஸ்பத்திரிகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மாத்தறை பெரிய ஆஸ்பத்திரியில் மாத்திரம் 2007ஆம் ஆண்டில், ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையத்தின் ஊடாக, வன்முறைகளினால் பாதிக் கப்பட்ட 1500க்கும் மேற்பட்ட அப் பாவி பெண்களுக்கு உளவியல் ரீதியி லான ஆலோசனைகள் வழங்குதல், வைத்திய சிகிச்சைகள் அளித்தல், பொலிஸாரின் மூலம் அவர்களுக்கு கொடுமை செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு அளித்தல் போன்ற நல்ல பல திட்டங்கள் அமுலாக்கப் பட்டுள்ளன.

இத்தகைய முயற்சிகளுக்கு எங்கள் நாட்டிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்களும் பெரியளவில் உதவி செய்து வருகின்றன. அவை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு உதவும் சமூகத் தொண்டர்களுக்கு பயிற்சி பாசறைகளை நடத்துதல், அவை தொடர்பான நூல்களை எழுதுதல், இவ்விதம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான வசிப்பிட வசதிகளை செய்து கொடுத்தல், அப்பெண்களுக்கு வாழ்வாதார வசதிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு சமூகத் தொண்டுகளை நிறைவேற்றி, அரசாங்கத்திற்கு இதுவிடயத்தில் பூரண ஆதரவை அளித்து வருவது பாராட்டுக்குரிய விடயமாகும்.

ஒவ்வொரு ஆணும், தன்னுடைய தாய், தன்னுடைய உடன்பிறப்புக்கள் பெண்கள் என்பதை மனதில் கொண்டு, பெண் வர்க்கத்திற்கு மதிப்பையும், மரியாதையையும், பாதுகாப்பையும் கொடுக்க ஆரம்பித்தால் மாத்திரமே, எங்கள் நாட்டிலிருந்து பெண்களை வன்முறையிலிருந்து நிரந்தரமாக விடுவிக்க முடியும். அந்த நல்ல தினம் வரும் வரையில் நாம் நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் பொறுமையாக காத்திருப்பது அவசியமாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com