Contact us at: sooddram@gmail.com

 

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே; புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது-வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே, புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது! நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது. இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். பணத்துக்காகவும் பதவிக்காகவும் வர்த்தக நோக்கங்களுக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது. கடந்த 30 வருடங்களாக புலிகள் பண பலத்தையும் ஆயுத பலத்தையும் வைத்துப் போராடித் தோற்றுப் போன நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசினால் எதனைத்தான் சாதிக்க முடியுமெனக் கேள்வி எழுப்புகிறார்.

வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவருமான வரதராஜப் பெருமாள். இன்றைய அரசியல் நிலை தொடர்பில் இணையத்தளத்துடன் இன்று கருத்துப் பரிமாற்றம் செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இன்று அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதனை நாம் வரவேற்கிறோம். ஆனால், ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் பேசினால் நன்றாகவிருக்கும். அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசக் கூடாது என்பதல்ல கருத்து. யார் குற்றினாலும் அரிசியானால் சரியே. இன்றைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுமா என்று நாம் கேட்டபோது, அரசியலில் சாத்திரம் சொல்வது சரியல்ல.. என்று பதிலளித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகள் ஊடான ஆட்சி முறை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையுமா என்று நாம் கேட்போது, இல்லை எனப் பதிலளித்த அவர், நிறைந்த அதிகாரத்தைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பே இங்கு உருவாக்கப்பட வேண்டும் எனப் பதிலளித்தார்.

மாகாண சபை மூலமான அதிகாரப் பகிர்வு போதாது என்பது கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் செயற்படும் மாகாண சபைகளின் செயற்பாடுகள் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் இதனையே இன்று தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழ் மக்களுக்கான தீர்வாக மட்டுமல்லாது சிங்கள மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகவும் நிறைந்த அதிகாரத்தைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பே இலங்கைக்கு இன்று தேவை என்றார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் நாம் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த வரதராஜப்பெருமாள், அவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் துன்பம் தரக் கூடியவர்களாகச் செயற்படக் கூடாது.

இங்கு வாழும் தமிழ் மக்களுக்குப் பலமானவர்களாகவும் வளம் சேர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படுகிறார்களே எனக் கேட்டபோது பதிலளித்த அவர், அது அவர்களின் ஜனநாயக உரிமையல்லவா? எனப் பதிலளித்தார். இலங்கையில் எத்தனையோ கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனவே எனக் கூறினார். ஆனால், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது.

இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பணத்துக்காகவும்
பதவிக்காகவும் வர்த்தக நோக்கத்துக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.

(நன்றி: பூந்தளிர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com