Contact us at: sooddram@gmail.com

 

இயற்கை அனர்த்தங்களின் போது அரசாங்கத்தை கண்டிப்பது நியாயமற்றது

இயற்கை அனர்த்தங்கள், சீரற்ற காலநிலை ஆகியன ஒரு நாட்டை மாத்திரம் குறி வைத்து தாக்குவதில்லை. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியன்று, இலங்கை உட்பட ஆசிய நாடுகளையும், தூர கிழக்கு நாடுகளையும் தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்திய சுனாமி பேரலையும், அதுபோன்றே இய ற்கை அன்னையின் சீரற்றத்தின் ஒரு கைங்கரியமாக விளங்கியது. அன்று, சுனாமி ஏற்பட்ட போது, எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தை எதற்கெடுத்தாலும் குற்றம் குறை சொல்பவர்களும், அன்றைய ஜனா திபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்காவின் மீதோ, அல்லது அவரது அரசாங்கத்தின் மீதோ குற்றம் சாட்டி அரசியல் இலாபம் திரட்ட முற்படவில்லை.

ஆயினும், இலங்கையில் கடந்த சுமார் 4, 5 மாதங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினாலும், பெரு மழையினாலும் பொது மக்களின் சகஜ வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்ப டும் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங் கமே இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற பொறுப்பற்ற முறையில், எவ்வித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரு வதை நாம் சமீபகாலமாக அவதானித்து வருகிறோம்.

உலகின் செல்வந்த நாடான அவுஸ்திரேலியாவிலும் தற்போது பெரு வெள்ளத்தினால், பெரும் இழப்புக்களும், அழிவுகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த நாட்டின் தனி மனித வருமானம் 30,000 அவுஸ் திரேலிய டொலர்களாக இருந்தாலும், இந்த பொருளாதார வளம் பெற்ற நாடு கூட, பெரு வெள்ள அனர்த்தத்திலிருந்து மீண்டும் நாட் டில் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டு உதவியை இன்று, கையேந்தி நிற்கிறது. அதுபோன்று, உலகின் செல்வந்த நாடான அமெரிக்காவையும், இயற்கை அனர்த்தங்களான சூறாவளிகள், பெரு வெள்ளங்கள், கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருகின்றன. ஈரானில் பனி மழை பொழிந்து கொட்டுவதால், அங்கு கடந்த பல நாட்களாக மக்களின் சகஜ வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

உலகில் பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் இன்னுமொரு நாடான ஜேர்மனியிலும் பெரு வெள்ளம், பனிமழை, சீரற்ற கால நிலை ஆகிய அனர்த்தங்கள் தற்போது பெரும் அழிவுகளை ஏற் படுத்திய வண்ணம் இருக்கின்றது. அதுபோன்று, இலத்தீன் அமெரி க்க நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும் இயற்கை அன்னையின் சீற் றத்தினால், பெரும் அழிவுகளையும் பாதிப்புக்களையும் இன்று எதிர் நோக்கிய வண்ணம் இருக்கின்றன.

உலகில் இவ்விதம் இயற்கை அனர்த்தங்களும் மக்களின் சகஜ வாழ் க்கை பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் அந்தந்த நாடுகளின் மக்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது, குற்றச்சாட்டுக்களை சுமத்துவது இல்லை. அரசாங்கத்தின் நிவாரணப் பணிகளின் வேகம் பல்வேறு காரணங்களினால், குறைவாக இருந்தால், அவர்கள் ஜனநாயக ரீதி யில் தங்கள் முறைப்பாடுகளை செய்வதுண்டு.

ஆனால், இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள், பெருவெள்ளம், பெருமழை ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் அரசாங்கத்திற்கு உதவிகளை செய்து, அனுசரணை புரி வதற்கு பதில், எதிர்க்கட்சிகளும் வெளிநாடுகளில் உள்ள அரசாங் கத்திற்கு எதிரான தீயசக்திகளும் உடனடியாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், போலிப் பிரச்சாரங்களையும் மேற்கொள் ளத் தவறுவதில்லை.

சில தினங்களுக்கு முன்னர், கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு களினாலும், கருங்கற்பாறை ஒன்று இடிந்து விழுந்ததனாலும் பலர் மாண்டுபோன கவலைக்குரிய சம்பவத்தையும் முன்வைத்து அரசி யல் லாபம் திரட்ட எதிர்க்கட்சிகள் முயற்சிகளை செய்கின்றன.

கடந்த சில மாதங்களாக நாடெங்கிலும் பெய்து கொண்டிருக்கும் பெரு மழையினால் நன்கு நிர்மாணிக்கப்பட்ட ஏ9 வீதி உட்பட்ட பல பிர தான வீதிகளும், குறுக்கு வீதிகளும், முற்றாக பழுதடைந்து பல இட ங்களில் சிறு குளங்களைப் போன்று காட்சியளிப்பதையும் நாம் அவ தானித்து இருக்கிறோம்.

கால நிலை சீரடையும் வரையில் ஒரு அர சாங்கத்தினால் உடனடியாக அந்த பாதைகளை செப்பனிட்டு பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது என்ற யதார்த்தத்தை நன்கு உணர் ந்துள்ள போதிலும், எதிர்க்கட்சியினர் விரைவில் நடைபெறவுள்ள உள் ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை குறிக்கோளாக வைத்து, அர சாங்கத்தின் மீது பிழை கண்டுபிடித்து, அரசியல் லாபம் திரட்ட முற் படும் முயற்சிகளை ஜனநாயகத்தின் மீது, பூரண நம்பிக்கை வைத்து ள்ள பொது மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு, எதிர்க்கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.

அதுபோன்றே, காலத்திற்கு காலமும், பண்டிகை காலத்திலும், சீரற்ற கால நிலையினாலும், உணவுப் பண்டங்கள் உட்பட பாவனைப் பொரு ட்களின் விலை அதிகரிப்பதும் அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் நாளாந்தம் ஏற்படும் ஒரு சகஜ நிலையாகும்.

இலங்கையில் மாத்திரம் நாம் மேலே முன்வைத்த காரணங்களினால், விலைவாசி உயரும் போது, எமது எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை தாக் கிப் பேசுவதில் பின் நிற்பதில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்டுக்களை பார்த்து, மனம் தள ர்ந்து விடாது.

எமது நாட்டு மக்களின் வேதனைகளையும், குறைக ளையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத் துக் கொண்டிருக்கிறது. இதனால் தான் நத்தார் பண்டிகை காலத்தி லும், புத்தாண்டு பண்டிகை காலத்திலும் கோழி இறைச்சி, முட்டை, தேங்காய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பை கட்டுப் படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com